search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் தொடர் பொதுக்கூட்டம்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் தொடர் பொதுக்கூட்டம்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

    • பிறந்த நாளை மக்கள் பயன்பெறும் வகையிலும் ஏழை எளியோருக்கு உதவிடும் வகையிலும் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
    • திருப்போரூர் மற்றும் குன்றத்தூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

    சென்னை:

    மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மார்ச்-1 முதல் மார்ச் 25-ந் தேதி வரை தொடர்ந்து பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச்-1 வருகிறது. அவரது பிறந்த நாளைமக்கள் பயன்பெறும் வகையிலும் ஏழை எளியோருக்கு உதவிடும் வகையிலும் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

    மார்ச்-1 முதல் மார்ச் 25 வரை மாவட்டம் முழுவதும் தொடர் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. 1-ந் தேதி காலை அனைத்து கிளைக் கழகங்களிலும் கொடியேற்றி இனிப்பு வழங்கப்படும். அன்று பகல் 12 மணிக்கு மாவட்டத்தில் உள்ள 37 ஆதரவற்றோர் இல்லங்களிலும் அறுசுவை உணவு வழங்கப்பட உள்ளது. பரனூர் தொழு நோயாளிகளுக்கு உணவு, உடை வழங்கப்பட உள்ளது.

    மார்ச்-1 அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காலை 10 மணிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும், பல்லாவரம் வடக்கு பகுதி தி.மு.க. சார்பில் பகல் 12 மணிக்கு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் திருப்போரூர் மற்றும் குன்றத்தூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. மார்ச் -2ந் தேதி திண்டுக்கல் லியோனி பொதுக்கூட்டம் பல்லாவரம் வடக்கு பகுதி, 3-ந் தேதி கம்பம் செல்வேந்திரன் கந்திரி கரிகாலன், செங்கல்பட்டு நகரம், 4-ந் தேதி நாஞ்சில் சம்பத், செங்கை தாமஸ்-ஆலந்தூர் தெற்கு பகுதி.

    5-ந் தேதி சுப.வீர பாண்டியன், வெ.அன்புவாணன்-குன்றத்தூர் தெற்கு ஒன்றியம், 6-ந் தேதி புதுக்கோட்டை விஜயா ஆரணி மாலா- ஸ்ரீபெரும்புதூர், 7-ந் தேதி கோவி செழியன், மலர் மன்னன், பம்மல் தெற்கு பகுதி, 8-ந் தேதி நெல்லிக் குப்பம் புகழேந்தி, பிரபாகரன்- திருப்போரூர் தெற்கு ஒன்றியம், 9-ந் தேதி சபாபதி மோகன், ஒப்பிலா மணி- செம்பாக்கம் வடக்கு, 10-ந் தேதி ஈரோடு இறைவன் தேவபாலன்-செம்பாக்கம் தெற்கு.

    11-ந் தேதி சைதை சாதிக், அரங்கநாதன்-மறைமலை நகர், 12-ந் தேதி தமிழன் பிரசன்னா, செங்கை சந்தானம்-பல்லாவரம் தெற்கு, 13-ந் தேதி ராஜீவ் காந்தி, பரிதி இளம் சுருதி- ஆலந்தூர் வடக்கு, 14-ந் தேதி மதிவதனி, கவிஞர் நன்மாறன்-குன்றத்தூர் 15ந் தேதி குத்தாலம் கல்யாணம், போடிகாமராஜ்-திருக்கழுக்குன்றம், 16-ந் தேதி கரூர் முரளி, சிவா, - காட்டாங்குளத்தூர், 17-ந் தேதி சேலம் சுஜாதா, நாகம்மை- தாம்பரம் கிழக்கு, 18-ந் தேதி காரமடை நாக நந்தினி, குடியாத்தம் புவியரசி-கண்டோன் மென்ட். 19-ந் தேதி கவிஞர் தமிழ்தாசன், தமிழ் சாதிக்- பம்மல் வடக்கு 20-ந் தேதி சைதை சாதிக், எழும்பூர் கோபி-குன்றத்தூர் நகரம். 21-ந்தேதி ஈரோடு இறைவன், காம்ராஜ்- ஸ்ரீபெரும்புதூர், 22-ந் தேதி ராஜீவ் காந்தி, முரசொலி மூரத்தி-மாங்காடு 23-ந் தேதி தமிழன் பிரசன்னா- திருவொற்றியூர் கருணா நிதி-காட்டாங்குளத்தூர், 24-ந் தேதி கான்ஸ்டைன் ரவீந்திரன், தாம்பரம் ஜின்னா ஸ்ரீபெரும் புதூர், 25-ந் தேதி கோவி செழியன், வண்ணை புகாரி-புனித தோமையார் மலை ஒன்றியம்.

    பொதுக்கூட்ட மேடைகளில் ஆங்காங்கு உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகளும் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறி உள்ளார்.

    Next Story
    ×