என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "worker"
- நேற்று முன்தினம் காலையில், ரமேஷ் அவரது மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டையில் தேங்காய் உரிப்பதற்காக சென்றார்.
- ஆத்தூர் - ராசிபுரம் சாலையில் ஆயில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சில்லி கடை எதிரில் சென்றபோது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கமாக மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா தாண்டாக்கவுண்டம் பாளையம் அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 31). தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் காலையில், ரமேஷ் அவரது மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டையில் தேங்காய் உரிப்பதற்காக சென்றார். வேலையை முடித்துவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அவர் ஆத்தூர் - ராசிபுரம் சாலையில் ஆயில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சில்லி கடை எதிரில் சென்றபோது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கமாக மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் ரமேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த ரமேஷின் மனைவி தமிழரசி (28), ரமேஷின் தம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த ரமேஷை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையொட்டி, விபத்தில் இறந்த ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சவக்கிடங்கில் வைத்தனர்.
விபத்து பற்றி ரமேஷின் மனைவி தமிழரசி ஆயில்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சிவா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த ரமேஷுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
- தொழிலாளியின் கூரை வீடு எரிந்து நாசமானது.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.
மயிலாடுதுறை:
சீர்காழி அருகே எடமணல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆமபள்ளம் கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது38).
கூலித் தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு முகேஷ்குமார் குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
அப்போது பலத்த காற்று வீசியதால் வீடு முழுவதும் எரிந்து நாசமானது.
இதில் வீட்டில் இருந்த பீரோ, நகை, பணம், உடைகள், உணவுப் பொருள்கள், கட்டில், மெத்தை, சைக்கிள், டிவி, ப்ரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமானது.
இது குறித்த தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கூரை வீட்டில் எப்படி தீப்பிடித்தது? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ராஜ்குமார் தூத்துக்குடி கே.வி.கே நகரை சேர்ந்த மாரிசெல்வம் மற்றும் முத்துகுமார் ஆகியோருடன் சிப்காட் வளாகத்தின் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றனர்.
- இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அவரது தாய் பேச்சியம்மன் (68) சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). தூத்துக்குடி கே.வி.கே நகரை சேர்ந்த மாரிசெல்வம் மற்றும் முத்துகுமார் ஆகியோருடன் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தின் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றனர்.
அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது 30 அடி உயரத்தில் இருந்து சீட்டு உடைந்து ராஜ்குமார் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு இருந்த டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அவரது தாய் பேச்சியம்மன் (68) சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் சிப்காட்டில் உள்ள நிறுவனத்தில் 30 அடி உயரத்தில் பழைய மேற்கூறைகளை அகற்றி புதிததாக மற்றும் பணியில் எனது மகன் ராஜ்குமார் நண்பர்களுடன் ஈடுபட்டி ருந்த போது பாதுகாப்பு உபகரணங்களான ஏணி, ஹெல்மட், ரோப் ஆகியவற்றை கேட்டுள்ளார். அதற்கு நிறுவனத்தினர் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கிடையாது, விருப்பம் இருந்தால் வேலை செய்யும் படி கூறியுள்ளனர்.
குடும்ப சூழ்நிலை காரண மாக எனது மகனும் மற்றும் 2 நபர்களும் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் 30 அடி உயரத்தில் வேலை செய்துள் ளார்கள்.அப்போது எனது மகன் சீட் உடைந்து கீழே விழுந்து இறந்துள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மீது நடவடி க்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.
இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ராஜா (வயது 38). இவர் சிவதாபுரத்தில் உள்ள குமரேசன் என்பவருக்கு சொந்தமான வெள்ளி பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
- மாலை 7 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற ராஜா, இரவு 8 மணி அளவில் மீண்டும் வெள்ளி பட்டறைக்கு வந்துள்ளார். இந்த நிலையில், சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி ராஜா மயங்கி விழுந்தார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தம்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் ராஜா (வயது 38). இவர் சிவதாபுரத்தில் உள்ள குமரேசன் என்பவருக்கு சொந்தமான வெள்ளி பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை 7 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற ராஜா, இரவு 8 மணி அளவில் மீண்டும் வெள்ளி பட்டறைக்கு வந்துள்ளார். இந்த நிலையில், சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி ராஜா மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், உடனடியாக ராஜாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜாவை பரிசோதித்த டாக்டர்கள் ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கொண்ட லாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.
- திருமணமான 9 மாதத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
- இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது.
விருதுநகர்
ராஜபாளையம் அருகேயுள்ள தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி(வயது31). தொழிலாளியான இவருக்கும், லட்சுமி என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பால்பாண்டிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை.
இதனால் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்துகொள்ள முடியவு செய்தார். சம்பவத்தன்று இரவு மனைவிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு வீட்டின் தனியறைக்கு சென்ற பால்பாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுமார் 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி சாலையை கடக்க முயன்றார்.
- அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி, எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூர் பகுதியில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி, எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மலயகவுண்டம் பட்டியை சேர்ந்த கார்த்திக் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு சுமார் 40 வயது இருக்கும். தாடியுடன் இருந்த அவர் கருப்பு நிறத்தில் சட்டை அறிந்திருந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக பரமத்திவேலூர் வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி நான்கு வழி சாலையில் இருந்து தண்டையார் குளம் செல்வதற்கு பிரிவு சாலை உள்ளது. இன்று காலை இந்த பிரிவு சாலையில் கீழ்புறம் இருந்து பணகுடி ஊருக்கு கரையடி காலனியை சேர்ந்த தொழிலாளி ஹரிகிருஷ்ணன் ( வயது 60) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திருச்சியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் ஹரி கிருஷ்ணன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ஹரிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் லாரி மற்றும் மோட்டார் சைக்கிளை பணகுடி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்