என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையை கடக்க முயன்றபோது மினிலாரி மோதி தொழிலாளி படுகாயம்
    X

    சாலையை கடக்க முயன்றபோது மினிலாரி மோதி தொழிலாளி படுகாயம்

    • சுமார் 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி சாலையை கடக்க முயன்றார்.
    • அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி, எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூர் பகுதியில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி, எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மலயகவுண்டம் பட்டியை சேர்ந்த கார்த்திக் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு சுமார் 40 வயது இருக்கும். தாடியுடன் இருந்த அவர் கருப்பு நிறத்தில் சட்டை அறிந்திருந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக பரமத்திவேலூர் வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×