search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளிப்பட்டறை தொழிலாளி மர்ம சாவு
    X

    வெள்ளிப்பட்டறை தொழிலாளி மர்ம சாவு

    • ராஜா (வயது 38). இவர் சிவதாபுரத்தில் உள்ள குமரேசன் என்பவருக்கு சொந்தமான வெள்ளி பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
    • மாலை 7 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற ராஜா, இரவு 8 மணி அளவில் மீண்டும் வெள்ளி பட்டறைக்கு வந்துள்ளார். இந்த நிலையில், சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி ராஜா மயங்கி விழுந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தம்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் ராஜா (வயது 38). இவர் சிவதாபுரத்தில் உள்ள குமரேசன் என்பவருக்கு சொந்தமான வெள்ளி பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    நேற்று மாலை 7 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற ராஜா, இரவு 8 மணி அளவில் மீண்டும் வெள்ளி பட்டறைக்கு வந்துள்ளார். இந்த நிலையில், சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி ராஜா மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், உடனடியாக ராஜாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜாவை பரிசோதித்த டாக்டர்கள் ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கொண்ட லாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×