search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vegetables"

    • ஒரே நாளில் விரதம், உணவு சாப்பிடுவது மாறி மாறி பின்பற்றும் ஒரு முறையாகும்.
    • ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

    ஒரே நாளில் விரதம், உணவு சாப்பிடுவது இரண்டையும் மாறி மாறி பின்பற்றும் ஒரு முறையாகும். இதில் உங்களுக்கு பிடித்த எல்லா வகை உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய அன்றாட கலோரி தேவைக்குள் இருந்தால் போதுமானது. அதேசமயம் அது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

    இன்டர்மிட்டண்ட் டயட்டில் இருப்பவர்கள் செய்யும் மிகமுக்கியமான தவறு என்ன தெரியுமா? ஒரு நாளைக்கு 8-12 மணி நேரம் சாப்பிடாமல் இருக்க வேண்டும். அவ்வளவு தானே என்று ஏதோவொரு வேளையில் சாப்பிடுவது, 12 மணி நேரம் விரதம் இருப்பது என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தைப் பின்பற்றுவார்கள். அது மிகவும் தவறு.

    இன்டர்மிட்டண்ட் டயட்டில் விரதத்தை பின்பற்ற உணவு முறை இருக்கிறது. அதில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். அதை தான் நீங்கள் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு டயட் விண்டோவை பின்பற்றக் கூடாது. உதாரணத்துக்கு 16 மணிநேரத்தை தேர்வு செய்கிறீர்கள் என்றால் 16 மணி நேர விரதமும் 8 மணி நேரம் உணவு நேரமாகவும் இருக்க வேண்டும். இதுதான் இன்டர்மிட்டண்ட் விரதத்தின் முதல் படி.

    இதற்குமுன் நீங்கள் எந்தவித டயட்டையும் பின்பற்றியதே இல்லை. புதிதாக முயற்சி செய்கிறீர்கள் என்றால் எடுத்தவுடனே இன்டர்மிட்டண்ட் டயட்டுக்குள் நுழைவது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். அதனால் எடுத்தவுடனே தீவிரமான டயட்டுக்குள் நுழைய வேண்டும் என்று நினைக்காதீர்கள். அப்படி செய்தால் சில நாட்களிலேயே அதில் இருந்து வெளியே வந்துவிடுவீர்கள்.

    புதிதாக டயட்டுக்குள் வர நினைப்பவர்கள் முதல் வாரத்தில் 12 -12 மணி நேர் என்று தொடங்கி அப்படியே படிப்படியாக அதை 16-௮ விண்டோவுக்குள் நுழைய முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு கடினமாக இருக்காது.

    எந்த டயட்டை பின்பற்றினாலும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக இன்டர்மிட்டண்ட் டயட்டில் நீண்ட நேரம் விரதம் இருக்க வேண்டியிருக்கும். அதனால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும். அதனால் வழக்கமாக குடிக்கும் தண்ணீரின் அளவைக் காட்டிலும் இன்டர்மிட்டண்ட் டயட்டுக்குள் நுழையும்போது அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இன்டர்மிட்டண்ட் டயட்டை பொருத்தவரையில் இந்த நேரத்தில் தான் சாப்பிட வேண்டும் என்கிற நேரக்கட்டுப்பாடு தான் இருக்கிறது. உணவுக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. பிடித்த உணவுகளை சாப்பிடலாம். அதனாலேயே நிறைய பேர் நொறுக்குத்தீனி, ஸ்நாக்ஸ் என்று சாப்பிடுகிறார்கள். அதனால் கலோரிகள் அதிகமாகுமே தவிர பலன் கிடையாது.

    அதனால் உணவு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் எவ்வளவு ஊட்டச்சத்து அடர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு நல்லது. அதனால் காய்கறிகள், பழங்கள், புரதங்கள், முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்கும்படியான உணவுகளைத் தேர்வு செய்வது நல்லது.

    விரதத்தை தொடங்கியதும் அதற்கு உங்களுடைய உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை கண்காணிக்க வேண்டியது முக்கியம். ஒருவேளை டயட்டில் உங்களுக்கு ஏதேனும் அசவுகரியங்கள் ஏற்பட்டால், குறிப்பாக தலைசுற்றல், மயக்கம், உடல் சோர்வு, அதிகப்படியான பசி ஆகியவை இருந்தால் உங்களுடைய மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அதற்கு ஏற்றபடி உங்களுடைய டயட் முறையில் மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.

    இன்டர்மிட்டண்ட் டயட்டை பொருத்தவரையில் உங்களுடைய விரத நேரமும் சரி, உணவு எடுக்கும் நேரங்களும் ஒரே சீராக இருப்பது நல்லது. எட்டு மணி நேரத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பதற்காக ஒவ்வொரு நாள் காலை உணவும் ஒவ்வொரு வேளையில் சாப்பிடுவது போன்ற தவறுகளை செய்யாதீர்கள். அப்படி செய்யும்போது உடல் அதிகமாக குழம்பிவிடும்.

    8 மணி நேரத்துக்குள் உணவு எடுத்துக் கொள்ளும் நேரத்தையும் திட்டமிட்டு பின்பற்றுவது இன்டர்மிட்டண்ட் டயட்டில் மிக முக்கியம். இன்டர்மிட்டண்ட் விரதத்தை பின்பற்றினால் போதும் உடலில் எல்லா வித நல்ல மாற்றங்களும் நடந்து விடும் என்று மற்ற எந்த விஷயத்தையும் பின்பற்றாமல் இருப்பது தவறு.

    ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மிக அவசியம். தினசரி உடற்பயிற்சி, ஜங்க் உணவுகளை தவிர்த்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதலை தவிர்த்தல், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை மிக முக்கியம்.

    • இடுக்கி மாவட்டம் மூணாரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நிரம்பி வருகின்றன.
    • கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வேலை மற்றும் பல்வேறு பொருட்கள் வாங்குவதற்காக கேரள மக்கள் தினமும் உடுமலைக்கு வருகின்றனர்.

    தற்போது கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. இதனால் பண்டிகைக்காக தேவையான பொருட்களை வாங்குவதற்காக கேரள மக்கள் உடுமலையில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக உடுமலை உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கடை வீதிகளில் கேரள மக்கள்-வியாபாரிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை வாங்கி வருகின்றனர்.

    கேரள மாநிலம் மறையூர், காந்தலூர், மூணாறு செல்லும் பஸ்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக 9/6 செக்போஸ்ட் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்காக தனியார் ஜீப்புகளில் பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். இடுக்கி மாவட்டம் மூணாரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நிரம்பி வருகின்றன. அங்குள்ள ஓட்ட ல்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஓணம் பண்டிகை விருந்துக்காக காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், வெல்லம், பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்கி விற்பனை செய்வதற்காக மாநில எல்லையோரம் கடை வைத்துள்ள வியாபாரிகள் உடுமலையில் குவிந்து, மூட்டை மூட்டையாக பொருட்களை வாங்கி சென்றனர். ஓணம் பண்டிகை கொண்டாட கேரள மாநிலம் செல்வதற்காக குவிந்த பொது மக்களால் உடுமலை பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள வாழ் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாற்றங்கால்கள் உரிமம் பெறாமல் நாற்றுகளை விற்பனை செய்யக் கூடாது.
    • நாற்றுகள் வாங்குபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பண்ணைகளில் வாங்கி பயனடையலாம்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983, பிரிவு 3-ன் படி காய்கறி நாற்றுகள் விற்பனை செய்யும் நாற்றங்கால்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நாற்றங்கால்கள் உரிமம் பெறாமல் நாற்றுகளை விற்பனை செய்யக் கூடாது.

    தென்காசி மாவட்டத்தில் நாற்று பண்ணைகளில் காய்கறி செடிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உரிமம் பெறாமல் நாற்று பண்ணை அமைத்துள்ள வர்கள் மற்றும் அமைக்க இருப்பவர்கள் விற்பனை உரிமம் பெற விண்ணப்ப படிவம் 'அ'வில் இரு நகல் களில் பூர்த்தி செய்து ரூ. 1000-க்கு உரிய கணக்கில் இணையதளம் மூலம் செலுத்தி தேவையான ஆவணங்களுடன் நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    இணையதளத்தில் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டு நாற்றுப் பண்ணை அமைந்துள்ள பகுதி கட்டிட வரைபடம், சொந்த இடமாக இருந்தால் சொத்து வரிரசீது நகல், வாடகை இடமாக இருந்தால் ஒப்பந்தபத்திரம், அதன் நிலவரி ரசீது, ஆதார் கார்டு நகல், 3 பாஸ்போர்ட் புகைப் படம் ஆகியவற்றுடன் விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். காய்கறி நாற்றுகள் வாங்குபவர்கள் அங்கீகரி க்கப்பட்ட நாற்று பண்ணைகளில் மட்டும் வாங்கி பயனடையலாம். உரிமம் பெறாத நாற்று பண்ணைகளில் நாற்றுக்களை வாங்கி ஏமாற வேண்டாம்.

    உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் நாற்று பண்ணை உரிமையாளர்கள் மீது விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் படி நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் தக்காளி உட்பட மொத்தம் 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் இன்று காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.
    • தற்போது தக்களியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் தக்காளி உட்பட மொத்தம் 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் இன்று காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.

    ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்த மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து போனதால் கடந்த மாத இறுதியில் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது.

    ஒரு கிலோ தக்காளி ரூ.130ஐ கடந்து விற்கப்பட் டது. தற்போது தக்களியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது. மொத்த விற்பனையில் அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்து விற்கப்படுகிறது.

    நேற்று 40 லாரிகளில் இருந்த தக்காளியின் வரத்து இன்று 35லாரிகளாக குறைந்து உள்ளது. இதனால் இன்று மொத்த விற்பனையில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.90-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் வரத்து குறைவால் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் விலை தற்போது படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.70-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.210-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பச்சை காய்கறிகளான கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பெரிய வெங்காயம் விலையும் சரிந்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.20-க்கும், சில்லரை விற்பனையில் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இனி வரும் நாட்களில் மழை பாதிப்பு ஏதுமின்றி உற்பத்தி நடக்கும் பட்சத்தில் தக்காளி உள்ளிட்ட பச்சை காய்கறிகள் விலை அடுத்த வாரத்தில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மண்புழு இயற்கை உரமிட்டு கீரை, தர்பூசணி மற்றும் காய்கறி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    • அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட கீரை, காய்கறி, பழங்களை அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நெல்லை:

    பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சியில் பசுமை முன்மாதிரி கிராமத்தை உருவாக்கும் முயற்சியில் மக்கும் குப்பைகளை கொண்டு மண்புழு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் மண்புழு இயற்கை உரமிட்டு கீரை, தர்பூசணி மற்றும் காய்கறி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட கீரை, காய்கறி, பழங்களை அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவி அனுராதா ரவிமுருகன் கலந்து கொண்டு ஊராட்சிக்கு உட்பட்ட மேலூர், வடக்கூர், கே.டி.சி. நகர் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு நேரடியாக சென்று கீரை, தர்ப்பூசணிகளை வழங்கினார்.

    அப்போது ஊராட்சி செயலர் சுபாஷ், வார்டு உறுப்பினர்கள் பலவேசம், இசக்கி பாண்டி, ராஜாமணி, மக்கள் நலப்பணியாளர் மாரியம்மாள், பணித்தள பொறுப்பாளர் சோபனா, அங்கன்வாடி ஆசிரியைகள் சீதாலட்சுமி, ராஜலட்சுமி, களத்தி உதவியாளர்கள் ரோஸ்லின், காவேரி, பாளை மத்திய ஒன்றிய தி.மு.க. ஆதி திராவிடர் நல அணி அமைப்பாளர் செல்லப்பா மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    • அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதன் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.
    • மளிகை பொருட்களின் விலை 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

    பெரம்பலூர்,

    மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். அதிலும் பட்ஜெட் போட்டு வாழ்க்கையை நடத்தும் குடும்பங்களுக்கு இது கலக்கத்தையே உண்டாக்கி விடும். இதன் விளைவு, சமையலில் மளிகை பொருட்களின் அளவு குறையும். அப்படி ஒரு நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே காய்கறி-பழங்களின் விலை உயர்வால் நொந்துபோன மக்களுக்கு, மளிகை பொருட்களின் திடீர் விலையேற்றம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் பொதுமக்களின் தேவைைய கருதி ஆந்திரா, கேரளா, மராட்டியம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதன் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

    குறிப்பாக துவரம் பருப்பு விலை கடந்த வாரத்தில் கிலோ ரூ.120 அளவில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பை பொறுத்தவரையில் மராட்டியத்தில் இருந்தே பெருமளவு சரக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அங்கிருந்து உக்ரைன் நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெருமளவு அனுப்பி வைக்கப்பட்டு வருவதால், இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்கின் அளவு குறைந்திருக்கிறது.

    இதுவே துவரம் பருப்பின் விலையேற்றத்துக்கு காரணம். வரும் நாட்களில் துவரம் பருப்பின் விலை இன்னும் உயரவே வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் மிளகாய் தூள், சீரகம், சோம்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. போக்குவரத்து, வண்டி -ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிச்சந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

    அரியலூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் கூறும் போது:- விலை உயர்வால் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காய்கறி விளையும் உயர்ந்துள்ள நிலையில், முக்கிய உணவுப் பொருளான அரிசி விலையும் உயர்திருப்பது பொதுமக்களுக்கு சிரமத்தை அளித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் வழக்கமாக வாங்கும் ெபாருட்களின் அளவைவிட குறைவாக வாங்கி செல்கின்றனர். இந்த திடீர் விலை உயர்வை கட்டுப்படுத்தி அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலைகளை குறைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

    • துவரம் பருப்பு தொடங்கி அனைத்து மளிகை பொருட்களுமே கடுமையாக விலை உயர்ந்துள்ளது.
    • காய்கறிகளின் விலை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு மாதமோ அல்லது 2 மாதமோ ஆகலாம்.

    தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது.

    ஒரு கிலோ தக்காளியின் விலை சில்லரை விற்பனை செய்யும் மளிகை கடைகளில் 110 -ஐ தாண்டி இருக்கும் நிலையில் மற்ற காய்கறிகளின் விலையும் 100 ரூபாயை நெருங்கியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விலை உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் காய்கறிகளை பார்த்து பார்த்து வாங்கி பாதுகாத்து பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தக்காளிப்பழம் இல்லாமல் சாம்பார் வைப்பது சாத்தியமா? என்கிற குழப்பமான கேள்வியோடு குடும்பத் தலைவிகள் சமீப காலமாக தக்காளி பழத்தை தவிர்த்து விட்டே சாம்பார் வைத்து வருகிறார்கள்.

    தக்காளி பழத்தை போன்று கத்தரிக்காய், பீன்ஸ், கேரட், சின்ன வெங்காயம் போன்ற பச்சை காய்கள் அனைத்தின் விலையுமே சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    இதனால் ¼ கிலோ அளவுக்கு காய்கறி வாங்க வேண்டும் என்றால் 25 ரூபாய் செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு குடும்பத் தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒரு நாளைக்கு சாம்பார் வைக்க வேண்டும் என்றால் குறைந்தது 100 ரூபாய் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த விலை ஏற்றத்துக்கு பக்கத்து மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து முற்றிலுமாக குறைந்து போனதே காரணம் என்கிறார்கள் காய்கறி மொத்த வியாபாரிகள்.

    தமிழகத்தின் காய்கறி தேவையை ஆந்திரா, கர்நாடக மாநிலங்களே பூர்த்தி செய்து வருகின்றன. தமிழகத்தில் விவசாயத் தொழில் தேய்ந்து போன நிலையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் லாரி லாரியாக கோயம்பேட்டில் குவியும் காய்கறிகளே சென்னை மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    ஆனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் இருந்து காய்கறிகளின் வரத்து குறைந்து போனதால் கடந்த ஒரு மாத காலமாக இந்த விலை உயர்வு நீடித்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தை பொறுத்தவரையில் விவசாயம் என்பது பெயரளவுக்கு மட்டுமே நடைபெறுவதாகவும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் விவசாய பணி என்பது மிகவும் குறைவாகவே நடைபெறுவதாகவும் வியாபாரிகள் கூறுகிறார்கள்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் 50-ல் இருந்து 60 ரூபாய் வரையில் விற்கப்படும் ஒரு காய்கறியின் விலை மளிகை கடைக்கு விற்பனைக்காக வரும்போது மேலும் உயர்ந்து விடுகிறது.

    லாரி வாடகை, கூலி என அனைத்தையும் கொடுத்து விட்டு சில்லறை கடைகளில் பொதுமக்களின் கைக்கு போய் காய்கறிகள் சேரும்போது அதன் விலை 80 லிருந்து 90 ஆக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாகவே பொதுமக்கள் அதிக விலை கொடுத்து காய்கறிகளை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள்.

    இந்த காய்கறிகள் அனைத்தும் மே மாதம் வரையில் கிலோ 10 ரூபாய்க்கே விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

    ஆனால் அடுத்தடுத்து பெய்த மழை சேதங்களால் ஆந்திரா, கர்நாடகாவில் விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு விளைச்சல் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுவே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதிக அளவில் உணவு பொருட்கள் கிடைக்கும்போது அதனை சேமித்து வைத்திருந்தால் இதுபோன்ற பாதிப்புகள் இருந்திருக்காது என்கிற குற்றச்சாட்டையும் வியாபாரிகள் முன்வைக்கிறார்கள்.

    எனவே வரும் காலங்களில் காய்கறிகள் கிடைக்கும்போது அதனை எத்தனை நாட்கள் சேமித்து வைக்க முடியுமோ அத்தனை நாட்கள் சேமித்து வைக்க வேண்டும் என்பதே வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ள கோரிக்கையாகவும் உள்ளது. இந்த விலை உயர்வு என்பது இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர்.

    ஊட்டியில் இருந்து கேரட் மட்டுமே 70 சதவீதம் அளவுக்கு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருகிறது. மற்றபடி தமிழகத்தில் இருந்து வரும் காய்கறிகளின் அளவு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

    தென் மாவட்டங்களில் இருந்து முருங்கைக்காய் மட்டுமே போதுமான அளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. வேறு எந்த காய்கறிகளும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து கோயம்பேடுக்கு அதிகமாக வருவதில்லை என்பதையும் வியாபாரிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

    தமிழகத்தில் விவசாயத்தொழில் வெகுவாக குறைந்து போனதே இதற்கு காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இப்படி காய்கறி தேவைக்காக வெளி மாநிலங்களையே நம்பி இருக்கும் நிலையில் அங்கு முற்றிலுமாக விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டு விட்டால் தற்போது இருப்பதை விட அதிக விலை உயர்வை நாம் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் வியாபாரிகள்.

    காய்கறி விலை இப்படி விண்ணை முட்டும் அளவுக்கு கூடிக்கொண்டே செல்லும் நிலையில் மளிகை பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. துவரம் பருப்பு தொடங்கி அனைத்து மளிகை பொருட்களுமே கடுமையாக விலை உயர்ந்துள்ளது. இப்படி காய்கறி, மளிகை பொருட்களின் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    ஒரு கிலோ தக்காளி ரூ.110-ல் இருந்து ரூ.120 வரை மளிகை கடைகளில் விற்பனையாவதால் அதனை வாங்கி சமையலுக்கு பயன்படுத்த தயங்கி வருகிறார்கள். இதேபோன்று சாம்பார் வெங்காயத்தின் விலையும் ஒரு மாதத்துக்கும் மேலாக ரூ.100-ஐ தாண்டியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பச்சை மிளகாய், பீன்ஸ், முள்ளங்கி என அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தனை காய்கறிகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் காய்கறிகளின் விலை எப்போது குறையும் என்கிற எதிர்பார்ப்பும் ஏக்கமும் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் எழுந்துள்ளது. பல வீடுகளில் தக்காளி, சாம்பார் வெங்காயத்தை மறந்தே போய் விட்டனர். தக்காளிப் பழத்துக்கு பதில் புளியையும், சாம்பார் வெங்காயத்துக்கு பதில் பல்லாரியையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    காய்கறிகளின் விலை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு மாதமோ அல்லது 2 மாதமோ ஆகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அதுவரை தாக்குப் பிடிப்பது எப்படி? என்கிற கேள்வியும் ஏழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.

    • நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் பெரும்பாலான காய்கறிகளின் விலை ரூ.100-ஐ கடந்து விற்பனையானது.
    • மிளகாய் நேற்றைய விலையில் இருந்து குறைந்து கிலோ ரூ.90-க்கு விற்பனையானது.

    நெல்லை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் பெரும்பாலான காய்கறிகளின் விலை ரூ.100-ஐ கடந்து விற்பனையானது. உள்ளூர்களில் இருந்து காய்கறிகள் வராத தால், வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்வதால் ஏற்படும் செலவு தான் காய்கறிகளின் விலையேற்றத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று மொத்த மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.135 வரை விற்பனையானது. இதனால் வியாபாாரிகள் அதனை கடைகளுக்கு வாங்கி சென்று சில்லறை விற்பனையாக கிலோ ரூ.150 வரை விற்றனர். மேலும் மிளகாய் கிலோ ரூ.100 வரையிலும், பீன்ஸ் ரூ.120-க்கும் விற்பனையான நிலையில் இன்று அவற்றின் விலையும் சற்று குறைந்துள்ளது. இன்று கிலோ ரூ.90-க்கு விற்கப்பட்டது.

    இன்றைய நிலவரப்படி டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மிளகாய் நேற்றைய விலையில் இருந்து குறைந்து ரூ.90-க்கு விற்பனையானது. பீன்ஸ் விலையும் ரூ.80 முதல் ரூ.100 என்ற நிலையில் விற்கப்பட்டது. பாவூர்சத்திரம் மார்க்கெட்டி லும் காய்கறிகள் வரத்து இருந்ததால் அங்கும் விலை சற்று குறைய தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து நயினார்குளம் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரி கணேசன் கூறுகையில், பாவூர்சத்திரம், மானூர் களக்குடி, உக்கிரன்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தற்போது தக்காளி வர ஆரம்பித்துள்ளது. இதனால் இனி தக்காளியின் விலை சற்று குறைய தொடங்கும் என்று நம்பலாம்.

    அதே நேரத்தில் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தக்காளி வரத்து அதிகமாகவே உள்ளது. எனவே இன்று காய்கறிகள் விலை சற்று குறைந்துள்ளது. கேரட்-ரூ.70, முட்டை கோஸ்-28, பீட்ரூட்-50, அவரை-70, உருளை-25, கத்தரி-45 என்ற விலையில் விற்பனையாகிறது என்றார்.

    மார்க்கெட் வியாபாரி அழகேசன் கூறுகையில், அவரைக்காய் ஒட்டன்சத்திரம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சற்று அதிகமாக வர ஆரம்பித்துள்ளது. நேற்று மிளகாய் ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது.

    அதே நேரம் உருட்டு வகையான மிளகாய் இன்று ரூ.95-க்கு விற்பனையானது. நேற்று இதன் விலை ரூ.135-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.40 வரை குறைந்துள்ளது. அதேபோல் நேற்று 30 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.2,900 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.2,500 ஆக குறைந்துள்ளது என்றார்.

    பாளை மார்க்கெட்

    அதே நேரத்தில் பாளை மார்க்கெட்டில் இன்று தக்காளி, மிளகாய் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தக்காளி மொத்த வியாபாரிகளுக்கு ரூ.90 முதல் ரூ.100 வரையும், சில்லறைக்கு ரூ.110-க்கும் விற்பனை ஆகிறது.

    இஞ்சி விலை ெமாத்த வியாபாரிகளுக்கு கிலோ ரூ.200 ஆகவும், சில்லறைக்கு ரூ.220 வரையும் விற்கப்படுகிறது. இதேபோல பீன்ஸ், அவரைக்காய் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது என்றார்.

    • 150 முதல் 200 கிராம் காலை உணவு மற்றும் 100 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்க வேண்டும்.
    • காலை உணவுத்திட்டம் தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்து உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

    மாணவ-மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வர வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல், வருகையை அதிகரித்தல் போன்ற நோக்கத்திற்காக இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    காலை உணவுத்திட்டம் தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்து உள்ளது. காலை உணவாக காய்கறிகள் சேர்த்து ஊட்டச்சத்துடன் வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை காய்கறி சாம்பாருடன் ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடியும் புதன் கிழமை காய்கறி சாம்பாருடன் ரவா பொங்கல், வெண்பொங்கல் வழங்கப்படுகிறது.

    வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா வினியோகிக்கப்படுகிறது. வெள்ளிக் கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி, ரவா கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு மாணவருக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப்பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி அல்லது ரவை, கோதுமை ரவை, சேமியா வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் உள்ளூரில் அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம், உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் சேர்க்க வேண்டும்.

    150 முதல் 200 கிராம் காலை உணவு மற்றும் 100 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்க வேண்டும். ஒரு வாரத்தில் குறைந்தது. 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்ககூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    • தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்து வரும் மழையால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
    • பீன்ஸ் ஒரு கிலோ ரூ.130-க்கும், அவரைக்காய் ரூ.100-க்கும் விற்பனை ஆகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்து வரும் மழையால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்து கடந்த சில நாட்களாக அதன் விலை கிடு, கிடுவென அதிகரித்து உள்ளது.

    பீன்ஸ் ஒரு கிலோ ரூ.130-க்கும், அவரைக்காய் ரூ.100-க்கும் விற்பனை ஆகிறது. இதேபோல் பச்சை மிளகாய், இஞ்சி விலையும் எகிறி உள்ளது. பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.100-க்கும், இஞ்சி ரூ.210-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்து உள்ளதால் வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது. இதனால் காய்கறிகளை குறைத்து இல்லத்தரசிகள் வாங்குகிறார்கள். காய்கறி விலை அதிகரிப்பால் குடும்ப தலைவிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக விலை குறைந்து இருந்த தக்காளியின் விலையும் உயரத்தொடங்கி உள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கும், சின்ன வெங்காயம் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கர்நாடகா, ஆந்திராவில் பெய்த மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று வியாபாரிகள் கூறினர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் காய்கறி விலை (கிலோவில்) வருமாறு:-

    உஜாலா கத்தரிக்காய்-ரூ.40, வரி கத்தரிக்காய்-ரூ.25, பன்னீர் பாகற்காய்-ரூ.50, சுரக்காய்-ரூ.20, நைஸ் கொத்தவரங்காய்-ரூ.80, பட்டை கொத்த வரங்காய்-ரூ.35, வெண்டைக்காய்-ரூ.35, முருங்கைக்காய்-ரூ.30, பீன்ஸ்-ரூ.100, ஊட்டி கேரட்-ரூ.60, முட்டை கோஸ்-ரூ.15, காலி பிளவர் ஒன்று-ரூ.17.

    • காய்கறிகள் மற்றும் பழங்கள் என ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை நடக்கிறது.
    • 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 600 முதல் 645 விவசாயிகள், 145 முதல் 163 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் என ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை நடக்கிறது. இதன் மூலம் 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    உழவர் சந்தைகள் தொடர்பாக கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறும்போது, 'உழவர் சந்தையில் காய்கறி, பழங்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 485 விவசாயிகள் பழைய அட்டைகளை புதுப்பிக்க ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு நடக்–கிறது. 939 பழைய அட்டைகளின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை 6 ஆயிரத்து 743 கிலோ காய்கறிகள் இருப்பு வைத்து 284 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். நடமாடும் உழவர் சந்தை திட்டத்தில் 6 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானியம் வழங்கி நான்கு சக்கர வாகனங்களில் காய்கறி, பழங்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகள் மூலமாக ரூ.310 கோடி மதிப்புள்ள 1 லட்சத்து 13 ஆயிரத்து 447 டன் அளவு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 லட்சத்து 55 ஆயிரம் விவசாயிகளும், 1 கோடியே 10 லட்சத்து 93 ஆயிரம் நுகர்வோரும் பயனடைந்துள்ளனர் என்றார்.

    நிலத்தடி நீர் மட்டம் குறைவால் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். தரத்தின் அடிப்படையில், வெண்டை கிலோ, 30-40 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது.
    குடிமங்கலம்:

    குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. மேலும், பி.ஏ.பி., பாசனத்துக்கு, மக்காச்சோளமும், மானாவாரியாக, கொத்தமல்லி, கொண்டைக்கடலை அதிக பரப்பில், சாகுபடி செய்யப்படுகிறது.

    நிலத்தடி நீர் மட்டம் குறைவால் அப்பகுதி விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டாமல், இருந்தனர்.இந்நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால், நிலத்தடி நீர் மட்டம் அப்பகுதியில் உயர்ந்தது. இதையடுத்து சிறு, குறு விவசாயிகள் காய்கறி சாகுபடிக்கு ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.அவ்வகையில் கொத்தமல்லி தழை, பொரியல் தட்டை, தக்காளி, கத்தரி, பீட்ரூட், வெண்டை உள்ளிட்ட காய்கறி சாகுபடி பரப்பு குடிமங்கலம் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வழக்கமாக, கோடை காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, கிணறு மற்றும் போர்வெல்களில் வரத்து பாதிக்கும். எனவே, காய்கறி சாகுபடி மேற்கொள்வதில்லை. இந்தாண்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன், கோடை கால மழையும் கைகொடுத்து வருவதால் அனைத்து காய்கறி சாகுபடியிலும் நல்ல விளைச்சல் உள்ளது என்றனர்.

    குடிமங்கலம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெண்டை விற்பனைக்காக உடுமலை சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. தரத்தின் அடிப்படையில், வெண்டை கிலோ, 30-40 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது. சீரான விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

    ×