search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி"

    • கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார்.
    • மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது.

    இவைகளை சாப்பிடுவதற்காக கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான எறுமை மாடுகள் மார்க்கெட்டுக்கு படையெடுக்கின்றன. இப்படி வரும் நூற்றுக்கணக்கான மாடுகளால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. இப்படி பிடிக்கப்படும் மாடுகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, "கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை அவிழ்த்துவிடக்கூடாது. அதுபோன்று அவிழ்த்து விடப்படும் மாடுகளுக்கு முதல்முறை அபராதம் விதிக்கப்படும்

    2-வது முறையாக பிடிபடும் மாடுகளை உரிமை யாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கமாட்டோம். அந்த மாடுகள் நிச்சயமாக ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை இனி மார்க்கெட் பகுதிக்கு வர விடமாட்டோம் என்று அதிகாரிகளிடம் உறுதி அளித்து எழுதி கொடுத்துள்ளனர்.

    இருப்பினும் மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி மார்க்கெட்டுக்குள் வரும் மாடுகளை பிடிக்க ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கயிறு மற்றும் தடியுடன் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றி வருகிறார்கள்.

    • தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • பேரிடர் ஏற்படும் போதெல்லாம் கோவை மாவட்ட மக்கள் உதவி வருகிறார்கள்.

    கோவை:

    மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. 1 அரை லட்சம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிக்கின்றனர்.

    அவர்களுக்கு தேவையான உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    1.045 டன் பால் பவுடர், 1.5 டன் அரிசி, 1 டன் காய்கறிகள், 25 ஆயிரம் நாப்கின்கள், 1090 படுக்கை விரிப்புகள், 3 ஆயிரம் மெழுகுவர்த்தி, 13 ஆயிரம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 2,700 பிரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டது.

    இவை அனைத்தும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்டோர் பார்வையிட்டு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் இருந்து நிவாரண பொருட்கள் லாரி மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த பொருட்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    பேரிடர் ஏற்படும் போதெல்லாம் கோவை மாவட்ட மக்கள் உதவி வருகிறார்கள். தொண்டு நிறுவனங்கள், மாநகராட்சி மற்றும் அரசு ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

    உணவு பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்களை கொண்ட தனி விமானம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை சென்றதும் அங்கு மண்டலவாரியாக பிரித்து சரியான முறையில் வினியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரத்திற்கான வரைவோலை வழங்கப்படும்.
    • சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும்அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம்.

    திருப்பூர்:

    பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்பட உள்ளது.

    சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும்அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம். https://www.tnhorticulture.tn.gov.inஎன்ற தோட்டக்கலைத்துறை இணையதளத்தின் மூலமாகவும், வட்டாரதோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் விண்ணப்பங்களை பெற்று க்கொள்ளலாம்.

    அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், நீர்மேலாண்மை மற்றும் முறையான மண்வளமேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்ற காரணிகளின் அடிப்படையில மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் சிறந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    விருது பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரத்திற்கான வரைவோலை வழங்கப்படும். மேலும் தகவலுக்குஅனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

    • பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை
    • பெங்களூருவில் இருந்து வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு

    கோவை,

    ேகாவையில் மேட்டுப்பாளையம் ரோட்டில் எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி மார்க்கெட், அண்ணா காய்கறி மார்க்கெட், கோவை தியாகி குமரன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டுகளுக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூர் பகுதிகளில் இருந்து வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைக்காய்கறிகளும் வருகின்றன.

    இதுதவிர கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான கிணத்துக்கடவு, பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் உள்பட பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். ெமாத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கோவை டி.கே.மார்க்கெட்டுக்கு பெங்களூர் பகுதியில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி, வெண்டைக்காய் உள்பட பல காய்கறிகள் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன.

    தற்போது மார்க்கெட்டில் சில காய்கறிகளின் விலை வழக்கத்தை விட சற்று உயர்ந்து காணப்படுகிறது. நேற்று வரை கிலோ ரூ.20க்கு விற்பனையாகி வந்த தக்காளி இன்று ரூ.5 உயர்ந்து கிலோ ரூ.25க்கு விற்பனையாகி வருகிறது.

    இதேபோல் பெரிய வெங்காயம் நேற்று கிலோ ரூ.40க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ.20 உயர்ந்து, ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.

    கோவை மார்க்கெட்டில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    பெரிய வெங்காயம்-ரூ.60, சின்னவெங்காயம்-ரூ.100, வெண்டைக்காய்-ரூ.40, தக்காளி-ரூ.25, கத்தரிக்காய்-ரூ.30, கேரட்-ரூ.50, மாங்காய்-ரூ.100, முருங்கைக்காய்-ரூ.120, பீன்ஸ்-ரூ.90, பீர்க்கங்காய்-ரூ.50, காலிபிளவர்-ரூ.30, எலுமிச்சை-ரூ.90க்கு விற்பனையாகிறது.

    இதேபோல் வெள்ளரி-ரூ.30, அரசாணிகாய்-ரூ.15, பாகற்காய்-ரூ.30, மிளகாய்-ரூ.40, உருளை-ரூ.40, சிறுகிழங்கு-ரூ.80, சேனைகிழங்கு-ரூ.60, கருணை கிழங்கு-ரூ.70, சேம்பு-ரூ.80, இஞ்சி-ரூ.120க்கு விற்பனையாகி வருகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கோவை மார்க்கெட்டுக்கு பெங்களூருவில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு வரும்.

    தற்போது அங்கு விளைச்சல் பாதித்துள்ள தால் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் கோவை மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து, ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்து விற்பனையாகி வருகிறது என்றார்.

    • வாழை இலை, கரும்பு, மஞ்சள் விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
    • உழவர் சந்தைகளில் ஆயுத பூஜையையொட்டி காய்கறி விற்பனை களைகட்டியது.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தைகளில் ஆயுத பூஜையையொட்டி காய்கறி விற்பனை களைகட்டியது. முதலில் பூசணிக்காய், பின்னர் பூ, பழம், காய்கள் வரத்து அதிகரித்தது. கடந்த 20-ந் தேதி முதல் வாழை இலை, கரும்பு, மஞ்சள் விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

    காய்கறி விளைச்சல் அதிகரிப்பால் சந்தைகளில் காய்கறி வரத்தும் அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக விற்பனை சூடுபிடித்தது. கடந்த 22-ந்தேதி வடக்கு உழவர் சந்தை வரத்து 31 டன்னும், தெற்கு உழவர் சந்தையில் 86 டன்னும் விற்பனைக்கு வந்தது.

    வழக்கமாக வடக்கு உழவர் சந்தையில் 24 டன்னும், தெற்கு உழவர் சந்தையில் 75 டன்னும் விற்பனைக்கு வரும். காய்கறி வரத்து அதிகமாக இருந்த போதிலும் விற்பனையும் அதிகரித்தது. காய்கறிகளின் விலையும் உயரவில்லை. கடந்த வார விலையே தொடர்ந்தது.

    • காய்கறி, உணவுக்கழிவு மூலம் பயோ கியாஸ் தயாரிக்கப்பட்டது.
    • இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்று கூறினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் காய்கறி, உணவுக்கழிவு மூலம் எரிவாயு தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு விரைவில் தொடங்கபட இருக்கிறது.

    மறவமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி யில்300-க்கும் மேற்பட்ட மாண வர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு விறகு அடுப்பில் சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது. இதன்மூலம் உண்டாகும் புகையால் சமையலர்கள் பாதிக்கப்படு கின்றனர்.

    இதனை போக்க ஊராட்சி சார்பில் தூய்மை பாரதம் திட்டத்தில் பள்ளி வளாகத்தில் ரூ.15 லட்சத்தில் காய்கறி, உணவுக்கழிவு களில் இருந்து தயாரிக்கும் பயோ கேஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் இருந்து கிடைக்கும் எரிவாயு மூலம் சத்துணவு சமைக்கப் பட உள்ளது. நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 200 முதல் 250 கிலோ காய்கறி, உணவுக் கழிவு மூலம் 3 மணி நேரத்துக்குரிய எரிவாயு கிடைக்கும். இதை பயன்படுத்தி பள்ளிகளில் சத்துணவு சமைக்கலாம்.

    இதுகுறித்து ஊராட்சித் தலைவர் அன்பழகன் கூறுகையில், சத்துணவு சமைக்கும் போது கிடைக்கும் காய்கறி கழிவுகள், மாணவர்கள் சாப்பிட்ட பின்னர் கிடைக் கும் உணவுக்கழிவுகள், இதுதவிர சந்தைகளில், குப்பைகள் சேகரிக்கும் போது கிடைக்கும் காய்கறி, உணவு கழிவுகள் போன்றவை பயன்ப டுத்தி எரிவாயு தயாரிக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்று கூறினார்.

    • பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாகவே உள்ளது.
    • பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாகவே உள்ளது. குறிப்பாக 'பீக்அவர்ஸ்' நேரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல பல மணி நேரம் ஆகும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலில் வாகனம் சிக்கும் போது அதில் இருக்கும் பயணிகள் அலுவல் வேலைகளை செய்வது போன்ற காட்சிகள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி இருந்தன.

    இந்நிலையில் தற்போதும் அதுபோன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதாவது பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் நேரத்தை வீண் செய்யக்கூடாது என திட்டமிட்டு 3 கவர்களில் வைத்திருந்த காய்கறிகளை உறிக்க தொடங்கி உள்ளார். மேலும் அதனை புகைப்படமாக எடுத்து தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார். அவரது இந்த படம் வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • காய்கறிகளின் விலை விபரங்களை வியாபாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
    • தானியங்கி வானிலை ஆய்வு மையத்தை ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    சீர்காழி வட்டத்திற் குட்பட்ட வைத்தீஸ்வரன் கோயில், எடக்குடி வடபாதி, தென்னலக்குடி, கடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மை , உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வேளாண் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வைத்தீஸ்வரன்கோயில் துணை வேளாண் விரிவாக்க மையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விதை இருப்பு விவரங்களை கேட்டறிந்தார். விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் இடுபொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா என வேளாண்மை துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, வைத்தீஸ்வரன் கோயில் விதை சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விதை சுத்திகரிப்பு பணியினை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக தரமான விதைகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தார்.

    பின்னர் எடக்குடி வடபாதி கிராமத்தில் விவசாயி ஒருவர் பயிரிடப்பட்டுள்ள பருத்திக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையுமா என்பதனை வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, தென்னலக்குடி கிராமத்தில் தானியங்கி வானிலை ஆய்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீர்காழியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையினை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் மற்றும் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகளின் விலை விபரங்கள் வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். உழவர் சந்தை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதனையும் ஆய்வு செய்தார். மேலும் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழிசை மூவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    இவ்வாய்வின்போது, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், துணை இயக்குனர் (வேளாண் வணிகம்); வெற்றிவேலன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் , வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், தோட்டக்கலைத்துறை குமரேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • காய்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்தது
    • பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளி யின் விலை ஏறுமுக மாக இருந்து வருகிறது. குமரி மாவட்டத்தி லும் தக்காளி யின் விலை அதிகமாக உள்ளது.

    தக்காளியின் விலை அதிகரித்து வருவதையடுத்து அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண் டது. ரேஷன் கடைகளில் தக்காளி சப்ளை செய் யப்பட்டு வந்தது. நாகர்கோவில் நகரில் ஒரு சில ரேசன் கடைகளில் சில நாட்கள் மட்டுமே தக்காளி சப்ளை செய்யப் பட்டு வந்த நிலையில் தற்போது அங்கு தக்காளி சப்ளை செய்யப் படவில்லை. நாகர்கோவில் மார்க்கெட்டு களில் தக்காளி யின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது.

    ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோ ரூ.10 உயர்ந்து ரூ.140 ஆனது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தக்காளி விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம் வெளியூர்களில் இருந்து வரும் தக்காளிகளின் வரத்து குறைவாக உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் இருந்து வழக்கமாக வரக்கூடிய தக்காளியை விட மிக குறை வான அளவில் தக்காளிகள் விற்பனைக்கு வருகிறது.

    உள்ளூர் பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு வரவில்லை. இதனால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரி கள் தெரிவித்துள்ளனர். பூண்டு விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ. 180-க்கு விற்கப்பட்ட பூண்டு நேற்று ரூ.200 ஆக உயர்ந்தது. இன்று மேலும் ரூ.20 உயர்ந்து கிலோ ரூ.220-க்கு விற்பனை ஆனது. கேரட், பீன்ஸ் விலைகள் கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.

    பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட் டது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்து உள்ளது. நாகர்கோவில் மார்க்கெட் டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    கேரட் ரூ.75, பீன்ஸ் ரூ.100, கத்தரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30, சேனை ரூ.70, மிளகாய் ரூ.80, தக்காளி ரூ.160, இஞ்சி ரூ.280, பூண்டு ரூ.220, சின்ன வெங்காயம் ரூ.120, தடியங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.50-க்கு விற்கப்பட்டது.

    காய்கறி விலை உயர்வால் இல்லத்தரசிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தக்காளியை பொறுத்த மட்டில் அதன் பயன்பாட்டை குறைத்து வருகிறார்கள். முன்பு ஒரு கிலோ தக்காளியை வாங்கி செல்லும் பொதுமக்கள் தற்போது 100 கிராம் தக்காளியை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • ஓமலூர் வட்டார தோட்டக்கலை அதிகாரிகள், கிராமங்களில் காய்கறி சாகுபடியை அதிகரிக்க செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சிறு, குறு விவசாயிகளை ஊக்கப்படுத்தி குறுகிய கால பயிர்களான காய்கறிகள், கீரைகளை சாகுபடி செய்ய ஊக்கபடுத்தி வருகின்றனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் தோட்டக்கலை துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஓமலூர் வட்டார தோட்டக்கலை அதிகாரிகள், கிராமங்களில் காய்கறி சாகுபடியை அதிகரிக்க செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறு, குறு விவசாயிகளை ஊக்கப்படுத்தி குறுகிய கால பயிர்களான காய்கறிகள், கீரைகளை சாகுபடி செய்ய ஊக்கபடுத்தி வருகின்றனர்.

    காய்கறி சாகுபடி குறைந்தது

    ஆனால் கடந்த ஓராண்டாக ஓமலூர் வட்டார விவசாயிகள் பணப் பயிர்களையே அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். அதனால் தற்போது தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் காய்கறி சாகுபடி குறைந்து, விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    பயிற்சி

    இந்த நிலையில் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள், கீரைகள் சாகுபடி செய்வதற்கான பயிற்சி முகாமை ஓமலூர் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை நடத்தியது. இந்த முகாமில் பொது மக்கள் தங்களது வீடுகளில் மாடி தோட்டம் மற்றும் வீட்டு தோட்டம் அமைத்து காய்கறிகள் சாகுபடி செய்ய பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் இயற்கையான முறையில் சாகுபடி செய்து நஞ்சில்லாத காய்கறிகளை அறுவடை செய்து சாப்பிடலாம் என அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். மாடி தோட்டம் மற்றும் வீட்டு தோட்டம் அமைக்க தேவையான பைகள், விதைகள், நார் கழிவுகள், செடிகளின் நாற்றுகள், உயிர் உரங்கள் ஆகிய அனைத்தும் அடங்கிய ஒரு தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், மாடி தோட்ட தொகுப்புகளை வாங்கி சென்று வீடுகளில் காய்கறிகள் சாகுபடி செய்து, வீட்டிற்கு தேவையான காய்கறிகளை விளைவித்து பயனடையலாம். மேலும் அதிகளவில் சாகுபடி செய்து விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உதவிகள்

    மாடி தோட்டம் மற்றும் வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து பொதுமக்கள் தரப்பில் பல்வேறு சந்தேகங்கள் கேட்கப்பட்டது. அப்போது அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மழைக்காலங்களில் உருளைக்கிழங்கு கேரட், பீன்ஸ் ஆகியவற்றில் நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • பேசிலோமைசீஸ் கலவையை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 கிலோ தொழுவூரத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் பருவமழைக்காலம் நடக்கிறது. இதனால் பயிர்களில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அபாயம் அதிகம் உள்ளது. எனவே அங்கு உள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்களை ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் மேலாண்மை மூலம் தற்காத்து கொள்வது எப்படி என்பது தொடர்பாக கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர், திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேலாண்மை அறிவியல் நிலைய அதிகாரிகள் செயல்விளக்கம் செய்து காட்டினர்.

    அப்போது மழைக்காலங்களில் உருளைக்கிழங்கு கேரட், பீன்ஸ், முட்டைக்கோசு மற்றும் சைனீஸ் காய்கறி ஆகியவற்றில் நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே ட்ரைக்கோ டெர்மா உள்ளிட்ட நுண்ணுயிர் கலவைகளை ஒரு ஏக்கருக்கு 2 புள்ளி வீதம் 5 கிலோவை, 200 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயல் முழுவதும் தெளித்து வந்தால், நோய் வரும் முன்பாகவே தற்காத்து கொள்ளலாம்.

    அதேபோல நோய் எதிர்ப்பு திறன் மிகுந்த பயிர் வகைகளை பயிரிடுவது, பரிந்துரைக்கப்பட்ட அளவில் பூஞ்சன கொல்லிகளை சரியான கால இடைவெளியில் பயன்படுத்தி ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.

    அதிலும் குறிப்பாக கேரட், உருளைக்கிழங்கு பயிர்களில் மிகவும் சவாலாக உள்ள நூல் புழுக்களை பேசிலோமைசீஸ் கலவையை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 கிலோ தொழுவூரத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.

    மேலும் வரப்பு ஓரங்களில் கடுகு, செண்டுமல்லி ஆகிய பூச்சிகளை கவரும் பொறிபயிர்கள் பயிரிட்டு, அங்கு ஏக்கருக்கு 2 எண்கள் சோலார் விளக்கு பொறி, லிட்டருக்கு 12 எண்கள் மஞ்சள் ஒட்டு பொறிகளை பயன்படுத்தி ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை களை செய்தால், விவசாயிகள் செலவினங்களை குறைத்து பயனடைய முடியும் என்று அதிகாரிகள் நேரடி செயல் விளக்கம் மூலம் பயிற்சி அளித்தனர்.

    • கடந்த இரண்டு மாதத்திற்கு முன் காய்கறிகளுக்கு உரிய விலை இல்லாமல் விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.
    • காய்கறிகளின் விலை சந்தையில் ஏற்றம், இறக்கத்தின் போது சராசரி விலை கிடைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தருமபுரி,

    காய்கறி பொருட்களை ரேசன் கடையில், குறைந்த விலையில், குடும்ப அட்டை தாரருக்கு வழங்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதாவிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    மத்திய அரசின் மோசமான கொள்கையே விலை உயர்வுக்கு காரணம். கடந்த இரண்டு மாதத்திற்கு முன் காய்கறிகளுக்கு உரிய விலை இல்லாமல் விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.

    தக்காளி உள்ளிட்ட சிலகாய்களுக்கு உரிய கட்டுப்படியான விலை கிடைக்காததால் தோட்டத்திலேயே தக்காளியை அழித்தனர். தற்போது தக்காளி உயர்வுக்கு பருவநிலை ஒரு காரணமாக உள்ளது.

    காய்கறிகளின் விலை சந்தையில் ஏற்றம், இறக்கத்தின் போது சராசரி விலை கிடைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு காய்கறிகள் விலை சராசரியாக கிடைக்க ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரருக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, முன்னாள் மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி, மாவட்ட தலைவர் ஜெயா, நகரசெயலாளர் நிர்மலாராணி, உள்ளிட்டா நிர்வாகிகளுடன் மனு கொடுத்தனர்.

    ×