என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்லியம்மன் கோவிலில் விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு ஹோமம்
    X

    செல்லியம்மன் கோவிலில் சண்டி ஹோமம் நடந்தது.

    செல்லியம்மன் கோவிலில் விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு ஹோமம்

    • விவசாயம் செழிக்க வேண்டி விளைச்சலில் ஒரு பகுதியை காணிக்கையாக வழங்கின்றனர்.
    • 5 டன் காய்கறிகள், பழங்கள், 108 மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு கேள்வி நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் தெற்கு பொய்கை நல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் செழிக்க வேண்டி விளைச்சலில் ஒரு பகுதி பொருட்களை விவசாயிகள் காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

    இந்நிலையில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையக்கூடிய கத்திரிக்காய், மாங்காய், வெண்டைக்காய், பாகற்காய், கீரை பனங்கிழங்கு, எலுமிச்சை, நார்த்தங்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து ராட்சத யாககுண்டம் அமைத்து சுமார் 5 டன் காய்கறிகள் பழங்கள், 108 மூலிகை பொருட்கள் 2000 லிட்டர் நெய் கொண்டு 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாக கேள்வி நடத்தினர்.

    அதை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது

    தொடர்ந்து தங்கள் கிராமத்தில் விளைவிக்கக் கூடிய காய்கறிகள் திருவாரூர் கும்பகோணம் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், காய்கறி விவசாயம் செழிக்க வேண்டியும் இயற்கையிடமிருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய தொடர்ந்து 10வது ஆண்டாக இந்த காய்கறி சண்டிஹோமம் நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×