search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Low Price"

    • பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை திடீரென அதிகரித்து வருகிறது.
    • ஈரோடு பூண்டு மண்டிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில் வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை திடீரென அதிகரித்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக ஈரோடு வ.உ.சி. காய்கறி சந்தைக்கு தமிழகம், கர்நாடக, காஷ்மீர் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் வரக்கூடிய பூண்டு மூட்டை வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்த பூண்டு கடந்த வாரம் ஒரு கிலோ 400 ரூபாய் அதிகரித்து விற்பனையானது. இதனால் மொத்தம் வியாபாரம் மற்றும் சில்லரை வியா பாரம் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

    சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் தாக்கம் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

    இந்நிலையில் இன்று ஈரோடு பூண்டு மண்டிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பூண்டின் விலை கிலோ ரூ.100 வரை குறைந்து உள்ளது. இன்று ஒரு கிலோ பூண்டு சில்லரை விற்பனையில் ரூ.300-க்கு விற்பனையானது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறும்போது,

    விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக கடந்த வாரம் பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று முதல் மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ பூண்டு கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.300-க்கு விற்பனை ஆகிறது. இன்னும் சில நாட்களில் ராஜஸ்தானில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கி விடும். இதனால் அடுத்த வாரம் பூண்டின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

    • எங்கள் கடையில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணம் வெடிக்கக் கூடிய பசுமை பட்டாசுகள் ஏராளம் உள்ளன.
    • குறைந்த விலையில் விதவிதமான பட்டாசுகள் வாங்குவதற்கு எங்கள் கடைக்கு வாருங்கள்.

    சென்னை:

    பாண்டிபஜார் எஸ்.ஜி. தமிழரசனின் பட்டாசு கடை நடத்தும் பாபா சுரேஷ் பட்டாசு கடைகள் இந்த ஆண்டு தி.நகரில் 3 இடங்களிலும், வடபழனியில் ஒரு இடத்திலும் மொத்தம் 4 இடங்களில் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

    பாண்டிபஜார் தணிகாசலம் ரோடு, ஜி.என்.செட்டி ரோடு கண்ணதாசன் சிலை அருகில், கோபால கிருஷ்ணன் தெரு மற்றும் வடபழனி துரைசாமி ரோடு (ஜே.ஆர்.கே.பள்ளி அருகில்) பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு ஸ்டாண்டர்டு ரக பட்டாசுகள் ஏராளம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பசுமை ரக பட்டாசுகளும் எண்ணற்ற ரகங்களில் கிடைக்கிறது.

    2 ஆயிரம் வாலா பட்டாசுகள், 5,000, 10,000 வாலா பட்டாசுகள், அணுகுண்டு, கம்பி மத்தாப்புகள், சரவெடிகள், புஸ்வானம், துப்பாக்கி வெடிகள், மியூசிக் வெடிகள், சூரிய காந்தி யானை வெடிகள், சிறுவர்கள் வெடிக்கும் வெடிகள், தரசக்கரம், ராக்கெட் வெடிகள் குறைந்த விலையில் விற்கப்படுகிறது

    கடையை நிர்வகிக்கும் தமிழரசனின் மருமகன் பாண்டிபஜார் பாபா சுரேஷ் கூறியதாவது:-

    எங்கள் கடையில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணம் வெடிக்கக் கூடிய பசுமை பட்டாசுகள் ஏராளம் உள்ளன.

    இந்த வகை பட்டாசுகளுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. ஸ்டாண்டர்டு ரக பட்டாசுகள் பல ரகங்களில் எண்ணற்ற வகையில் வர வழைத்துள்ளோம். குறைந்த விலையில் விதவிதமான பட்டாசுகள் வாங்குவதற்கு எங்கள் கடைக்கு வாருங்கள். மனம் விரும்பும் பட்டாசுகளை வாங்கிச் செல்லுங்கள் தீபாவளியை கொண்டாட எங்களது கடையை தேர்ந்தெடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.
    • பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.65 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ130வரையிலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.85வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    தினசரி 70டன் வரை விற்பனைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து திடீரென பாதியாக குறைந்து போனதால் அதன் விலை அதிகரித்தது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பெரிய வெங்காயத்தின் அறுவடை தொடர்ந்து தாமதமாகி வருவதால் வெங்காயத்தின் வரத்து குறைந்து அதன் விலை திடீரென 2 மடங்கு வரை உயர்ந்தது.

    இந்நிலையில் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் அதிகளவில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வர தொடங்கி உள்ளன. இன்று மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.

    இதையடுத்து தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. இன்று மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.65 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.

    இதேபோல் பீன்ஸ், அவரைக்காய், கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் குறைந்து உள்ளது. மொத்த விற்பனையில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.50-க்கும், அவரைக்காய் ரூ.40-க்கும், ஊட்டி கேரட் ரூ.20-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.10-க்கும் விற்கப்படுகிறது.

    • உடன்குடி வட்டார பகுதியில் அதிகமாக உற்பத்தியாகும் பொருட்களில் முருங்கைகாயும், தேங்காயும் மிக முக்கியமான பொருளாகும்.
    • விவசாயிகளிடம் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.4 என்றும், ரூ.5 என்றும் வியாபாரிகள் கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் அதிகமாக உற்பத்தியாகும் பொருட்களில் முருங்கைகாயும், தேங்காயும் மிக முக்கியமான பொரு ளாகும். இந்த இரண்டும் இப்போது விலை இல்லாமல் உள்ளது. விவசாயிகளிடம் முரு ங்கைக்காய் ஒரு கிலோ ரூ.4 என்றும், ரூ.5 என்றும் வியா பாரிகள் கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர். தேங்காய் ஒரு கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்கின்ற னர். இது உற்பத்தி செலவை விட வருமா னம் மிகவும் குறைவாக இருப்ப தாக விவசாயிகள் கூறுகி ன்றனர்.

    ஏற்றுமதி செய்தாலும் விலை இல்லை என விவசா யிகள் கூறுகின்றனர். தொ டர்ந்து உற்பத்தி செய்யும் விவ சாயி களுக்கு உதவி த்தொகை மற்றும் ஊக்க த்தொகை சலுகை விலையில் பல்வேறு விவசாய பொருட்க ளை வேளாண்மை துறை மூலமாக அரசு வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

    • விளைவதற்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம்.
    • விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்க வேண்டும்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் சின்ன வெங்கயம் அதிக அளவில் பயிரிட்டிருந்ததால், விரைவாக அவற்றை எடுத்து மார்க்கெட்டுகளில் விற்பனை செய்தனர்.

    இந்நிலையில் திடீரென கடந்த 2 நாட்களாக சின்ன வெங்காயம் விலை ரூ.70 ஆக குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். செங்கோட்டையை அடுத்த இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கரிசல் குடியிருப்பு, சிவராம பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் செய்யவேண்டிய சின்ன வெங்காயம் சாகுபடியானது தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குறைந்துவிட்டது. அங்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ள சுமார் 500 ஏக்கர் அளவிலான நிலங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் நெல்லுக்கு அடுத்தப்படியாக சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்கிறோம். 2 மாத பயிரான சின்ன வெங்காயத்துக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும்.

    விளைவதற்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம். ஒரு ஏக்கருக்கு உழுவது, பயிரிடுவது, பூச்சிக்கு மருந்து அடித்தல், உரம் களையெடுத்தல், மழை பொய்த்தால் விலைக்கு வாங்கி தண்ணீர் பாய்ச்சல் உள்ளிட்ட வகையில் அறுவடை வரை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை கூடுதலாக செலவாகிறது.

    அதற்கு தகுந்த மாதிரி அறுவடை தொடங்கிய காலத்தில் சென்ற மாதம் விலை ரூ.140 வரை விலை கிடைத்ததால் லாபகரமாக இருந்த நிலையில் தற்போது அறுவடை முடிந்த சின்ன வெங்காயம் ரூ.70-க்கும் விலை போகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். மழை காலங்களில் உரிய முறையில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் தக்காளி உட்பட மொத்தம் 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் இன்று காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.
    • தற்போது தக்களியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் தக்காளி உட்பட மொத்தம் 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் இன்று காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.

    ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்த மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து போனதால் கடந்த மாத இறுதியில் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது.

    ஒரு கிலோ தக்காளி ரூ.130ஐ கடந்து விற்கப்பட் டது. தற்போது தக்களியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது. மொத்த விற்பனையில் அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்து விற்கப்படுகிறது.

    நேற்று 40 லாரிகளில் இருந்த தக்காளியின் வரத்து இன்று 35லாரிகளாக குறைந்து உள்ளது. இதனால் இன்று மொத்த விற்பனையில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.90-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் வரத்து குறைவால் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் விலை தற்போது படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.70-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.210-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பச்சை காய்கறிகளான கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பெரிய வெங்காயம் விலையும் சரிந்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.20-க்கும், சில்லரை விற்பனையில் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இனி வரும் நாட்களில் மழை பாதிப்பு ஏதுமின்றி உற்பத்தி நடக்கும் பட்சத்தில் தக்காளி உள்ளிட்ட பச்சை காய்கறிகள் விலை அடுத்த வாரத்தில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும்.
    • பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு கலெக்டர் கூறியுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் தக்காளி உற்பத்தி மற்றும் வரத்து குறைவின் காரண மாக. கடந்த சில நாட்களாக விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. இந்த திடீர் விலை உயர்வால் பாதிக்கப் பட்டுள்ள பொதுமக்களின் நிலையை உணர்ந்த முதல் அமைச்சர் இந்த தற்காலிக விலையேற்றத்தில் இருந்து பொதுமக்களை காக்கவும் விலை ஏற்றத்தை கட்டுப் படுத்தவும் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள் முதல் செய்து உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டு மென உத்தரவிட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ராமநாதபுரம் உழவர் சந்தையில் டான்ஹோடா விற்பனையகம் மூலம் சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தனி நபருக்கு அதிகபட்ச மாக 1 கிலோ வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் தக்காளியினை பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குறைந்த விலையில் செழிப்பு உரம் விற்பனை செய்யப்படுகிறது.
    • மாணவர்கள் மண்புழு உர படுக்கை முறையை அமைத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் விவேகானந்தா கல்லூரியுடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி விலங்கியல் துறை மாணவர்கள் மண்புழு உர படுக்கை முறையை அமைத்துள்ளனர்.

    இதன் மூலம் மக்கும் கழிவுகளை நன்கு மக்க வைத்து அதனுடன் தினசரி கடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மக்கிய டீ தூள், காய்ந்த சாணம் ஆகியவற்றை அடுக்கடுக்காக கலந்து தொட்டிகளில் நிரப்பி வெல்லம் கரைசல் தெளித்து மண்புழுக்களை வளர்ப்பதற்கான மண்புழு உரத் தொட்டியில் நன்கு ஈரப்பதம் ஏற்படுத்தி தற்போது உரம் தயாரிக்கப் பட்டு வருகிறது.

    இவ்வாறு தயாரிக்கப் படும் உரத்திற்கு செழிப்பு என அரசால் பெயரிடப்பட்டு மதுரை மாவட்டத்தில் முதல் முறையாக செழிப்பு உரம் விற்பனை செய்வதற்கான வேளாண்மை துறை உரிமம் சோழவந்தான் பேரூராட்சி பெற்றுள்ளது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயி களுக்கும் மண்புழு உரம் கிலோ ரூ.5-க்கு மிக குறைந்த விலையில் பேரூராட்சி தலைவர் ஜெய ராமன், செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த உரத்தின் தரம் குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பகுப்பாய்வு செய்து மிகச்சிறந்த உரம் என தர சான்றிதழும் பெறப்பட் டுள்ளது.

    எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் அரசு தயாரிக்கும் இந்த உரத்தினை குறைந்த விலைக்கு வாங்கி விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெறலாம் என பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேவகோட்டை அருகே குறைந்த விலைக்கு நகைகள் அடகு வைக்கப்பட்டது.
    • அந்த நகைகள் இந்த வழக்கில் தொடர்புடையதா? என்று தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி தாய், மகளை கொலை செய்து 60 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளை யடித்தனர். இவர்களது அருகில் தூங்கிய வேலுமதி மகன் மூவரசன் என்ற 13 வயது சிறுவனின் மண்டையை உடைத்து படுகாயப்படுத்தி விட்டு குற்றவாளிகள் தப்பி விட்டனர்.

    தமிழகத்தையே உலுக்கிய இந்த கோரச்சம்பவம் பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரையும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த வழக்கு சம்பந்தமாக தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் 8 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையின் போது 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

    இந்த வழக்கில் ெதாடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. தற்போது விசாரணை தீவிரமடைந்து முக்கிய நபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கி இருப்ப தாக தெரிகிறது. எனவே போலீசார் அவர்கள் மீது ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருடப்பட்ட நகைகள் குறித்து தேவகோட்டை நகை கடை பஜாரில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் தனிப்படையினர் விசா ரணை நடத்தினர். அதில் இந்த வழக்கில் முக்கிய நபர் மூலமாக நகைக்க டைகளில் பல லட்சம் மதிப்பிலான நகை களை குறைந்த விலைக்கு அடகு வைத்தது தெரியவந்தது. அந்த நகைகள் இந்த வழக்கில் தொடர்புடையதா? என்று தனிப்படையினர் விசாரணை 

    • பெண்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றி சென்று விடுகின்றனர்.
    • குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய வரும் நபர்களை நம்பி ஏமாற வேண்டும்.

    திருப்பூர் :

    கடந்த சில நாட்களாக குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்வதாக கூறி வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பணத்தை ஏமாற்றும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதில் வடமாநில இளைஞர்கள் உள்பட ஒருசிலர் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் சென்று, குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக நைசாக பேச்சு கொடுக்கின்றனர். பின்னர் ஏதாவது மூளைச்சலவை செய்து பெண்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றி சென்று விடுகின்றனர். இதுபோன்ற ஒருசில சம்பவங்கள் திருப்பூரில் நடைபெற்றுள்ளது.

    எனவே வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், அதுபோன்று குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய வரும் நபர்களை நம்பி ஏமாற வேண்டும். சந்தேகப்படும்படியாக அந்த நபர்கள் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும்திருமுருகன்பூண்டி போலீசார் பெண்கள் உள்பட பொதுமக்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிவுரையுடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

    • நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
    • இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் முட்டை தொழிலுக்கு பெயர் பெற்று திகழ்கிறது நாமக்கல். இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் முட்டை விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 4½ கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கு பணியாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்கின்றனர். இந்த முட்டை கொள்முதல் விலையானது தற்போது திருவிழா பண்டிகை காலங்களில் தேவையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1-ந் தேதி ரூ.4.10 -க்கு முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    இது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் கொள்முதல் விலை 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் நாமக்கல் முட்டை விற்பனையை நிர்ணய ஆலோசனை குழு 30 காசு குறைத்து விற்க பரிந்துரைக்கிறது. அதன்படி ஒரு முட்டையை 480 காசுக்கே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஆனால் ஹைதராபாத் மண்டலத்தில் கொள்முதல் விலை 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட அதே விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

    இதனால் விலை குறைவாக உள்ள தமிழக முட்டைக்கு அதிக அளவில் ஆர்டர் வழங்குகின்றனர் .தினமும் 10 லோடு என 35 லட்சம் முட்டைகள் இங்கிருந்து மும்பை, கல்கத்தா போன்ற வட மாநிலங்களில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வட மாநிலங்களில் கொள்முதல் விலையை உயர்த்தும்போது தமிழகத்திலும் முட்டை விலை உயர்த்தப்படுகிறது. இனிவரும் நாட்களிலும் முட்டை விலை உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களுக்கு சிறந்த முறையில் சிற்றுண்டி மற்றும் உணவு வகைகள் உண்ணக் கிடைக்கின்றன.
    • இச்சாலையோர கையேந்தி பவன்களில் விரும்பி உண்ணும் வாடிக்கையாளராகி உள்ளார்கள்

    திருவையாறு:

    திருவையாறு நகரின் மையப் பகுதியான தெற்கு வீதி மற்றும் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ள ஓடத்துறைத் தெரு ஆகிய கடைத் தெருக்களில் ஏற்கனவே பாரம்பரியமாகவும் சமீப காலங்களில் தொடங்கி நடந்து. வருவதுமான டிபன் மற்றும் சாப்பாடு ஓட்டல்கள் நிறைய உள்ளன.

    இந்த ஓட்டல்கள் மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களுக்கு சிறந்த முறையில் சிற்றுண்டி மற்றும் உணவு வகைகள் தாராளமாக உண்ணக் கிடைக்கின்றன. இந்நிலையில் சமீப காலமாக திருவையாறு நகரத்துக்கு வெளியே விளாங்குடி வழியாக அரியலூர், வடுகக்குடி வழியாக கல்லணை மற்றும் காருகுடி வழியாக.

    கும்பகோணம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் குடியிருப்பு ஏதும் இல்லாத சாலையோரங்களில் தோன்றியுள்ள டிபன் கடைகளில் விரும்பிச் சாப்பிடுபவர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.

    சாலையில் செல்லும் மணல் லாரி டிரைவர் மற்றும் கிளீனர்களும், ஆட்டோ மற்றும் கார்களில் செல்லும் பயணிகளும் டிராபிக் இடையூறு இல்லாமல் வண்டிகளை ஓரமாக நிறுத்திவிட்டு விலை குறைவாகவும், சுவை மிகுதியாகவும் வீட்டுமுறைத் தயாரிப்பில் சுடச்சுடக் கிடைக்கும் எளிய வகை டிபன்களை சாலையோரக் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டுச் செல்கிறார்கள்.

    மேலும், அருகிலுள்ள கிராமங்களில் இருந்து பாதசாரியாக சாலையில் நடந்தும் சைக்கிளிலும் இருசக்கர வாகனங்களிலும் செல்பவர்கள் இச்சாலையோர கையேந்தி பவன்களில் விரும்பி உண்ணும் வாடிக்கையாளராகி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×