குறைந்த விலைக்கு நகைகள் அடகு வைப்பு

தேவகோட்டை அருகே குறைந்த விலைக்கு நகைகள் அடகு வைக்கப்பட்டது. அந்த நகைகள் இந்த வழக்கில் தொடர்புடையதா? என்று தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
குறைந்த விலைக்கு நகைகள் அடகு வைப்பு
Published on

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி தாய், மகளை கொலை செய்து 60 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளை யடித்தனர். இவர்களது அருகில் தூங்கிய வேலுமதி மகன் மூவரசன் என்ற 13 வயது சிறுவனின் மண்டையை உடைத்து படுகாயப்படுத்தி விட்டு குற்றவாளிகள் தப்பி விட்டனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த கோரச்சம்பவம் பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரையும் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கு சம்பந்தமாக தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் 8 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையின் போது 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

இந்த வழக்கில் ெதாடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. தற்போது விசாரணை தீவிரமடைந்து முக்கிய நபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கி இருப்ப தாக தெரிகிறது. எனவே போலீசார் அவர்கள் மீது ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருடப்பட்ட நகைகள் குறித்து தேவகோட்டை நகை கடை பஜாரில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் தனிப்படையினர் விசா ரணை நடத்தினர். அதில் இந்த வழக்கில் முக்கிய நபர் மூலமாக நகைக்க டைகளில் பல லட்சம் மதிப்பிலான நகை களை குறைந்த விலைக்கு அடகு வைத்தது தெரியவந்தது. அந்த நகைகள் இந்த வழக்கில் தொடர்புடையதா? என்று தனிப்படையினர் விசாரணை 

X

Maalai Malar
www.maalaimalar.com