search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை
    X

    தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை

    • ராமநாதபுரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும்.
    • பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு கலெக்டர் கூறியுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் தக்காளி உற்பத்தி மற்றும் வரத்து குறைவின் காரண மாக. கடந்த சில நாட்களாக விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. இந்த திடீர் விலை உயர்வால் பாதிக்கப் பட்டுள்ள பொதுமக்களின் நிலையை உணர்ந்த முதல் அமைச்சர் இந்த தற்காலிக விலையேற்றத்தில் இருந்து பொதுமக்களை காக்கவும் விலை ஏற்றத்தை கட்டுப் படுத்தவும் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள் முதல் செய்து உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டு மென உத்தரவிட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ராமநாதபுரம் உழவர் சந்தையில் டான்ஹோடா விற்பனையகம் மூலம் சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தனி நபருக்கு அதிகபட்ச மாக 1 கிலோ வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் தக்காளியினை பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×