search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓணம் பண்டிகை"

    • முதல் பரிசு ரூ.25 கோடி பாலக்காடு வாளையாரில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்தது.
    • தமிழகத்தை சேர்ந்தவர் எடுத்துச் சென்ற லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்த விவரம் மட்டும் தெரிந்திருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. இவை தவிர பண்டிகை நாட்களையொட்டி சிறப்பு பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு ஓணம் பண்டிகையையொட்டி ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலுக்காக 85 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதில் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தது. இது கடந்த ஆண்டு ஓணம் பம்பர் விற்பனையை விட 9 லட்சம் அதிகமாகும்.

    ஓணம் பம்பர் முதல் பரிசு ரூ.25 கோடியாகும். 2-ம் பரிசு ரூ.1 கோடி வீதம் 20 பேருக்கும், 3-ம் பரிசு ரூ.50 லட்சம் வீதம் 20 பேருக்கும், இவை தவிர மொத்தம் 5 லட்சத்து 35 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மொத்த பரிசு தொகை ரூ.125 கோடியே 54 லட்சம் ஆகும். இதில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் லாட்டரி பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஓணம் பம்பர் குலுக்கல் முடிவுகள் நேற்று முன்தினம் பிற்பகல் வெளியிடப்பட்டது.

    இதில் முதல் பரிசு ரூ.25 கோடி பாலக்காடு வாளையாரில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்தது. அந்த லாட்டரி எண் TE 230662 ஆகும். ஆனால் முதல் பரிசு ரூ.25 கோடி பெற்ற அதிர்ஷ்டசாலி யார்? என்பது தெரியாமல் இருந்தது.

    தமிழகத்தை சேர்ந்தவர் எடுத்துச் சென்ற லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்த விவரம் மட்டும் தெரிந்திருந்தது. இந்தநிலையில் நேற்று திருப்பூரை சேர்ந்த நடராஜன் உள்பட 4 பேர் ஒன்றாக சேர்ந்து எடுத்த டிக்கெட்டுக்கு ரூ.25 கோடி பரிசு விழுந்த தகவல் தெரிய வந்தது.

    அதாவது அந்த டிக்கெட்டுடன் 4 பேரும் நேற்று திருவனந்தபுரம் லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு நேரில் வந்து பரிசு வினியோக பிரிவில் ஒப்படைத்தனர். பாலக்காட்டில் சிகிச்சை பெற்று வந்த நபரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு திருப்பூர் திரும்பும் வழியில் வாளையாரில் எடுத்த 3 டிக்கெட்டில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.25 கோடி முதல் பரிசு கிடைத்ததாக அவர்கள் லாட்டரி அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.

    • ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டது.
    • நண்பர்கள் இருவரும் தகராறு நடக்கும்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி நடத்தப்பட்டு வருகிறது. ஓணம், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின்போது பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்படுவது வழக்கம். அதில் பரிசுகள் கோடிகள் மற்றும் லட்சங்களில் கொடுக்கப்படும் என்பதால் லட்சக்கணக்கானோர் லாட்டரி சீட்டுகளை வாங்குவார்கள்.

    தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டது. விற்பனைக்காக மொத்தம் 85 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. அவற்றில் 74.51 லட்சம் லாட்டரி சீட்டுகள் விற்பனையாகின. அவற்றுக்கான குலுக்கல் நேற்று நடந்தது.

    தங்களுக்கு பரிசு விழுமா? என்ற ஆவலில் லாட்டரி சீட்டு வாங்கிய அனைவரும் நேற்று காலை முதலே எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தேவலக்கரை பகுதியை சேர்ந்த தேவதாஸ்(வயது37) என்பவர் பம்பர் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருந்தார்.

    அதனை தனது நண்பரான அஜித் (39)என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தார். நேற்று குலுக்கல் தினம் என்பதால், தனது லாட்டரி சீட்டை தேவதாஸ கேட்டிருக்கிறார். ஆனால் அஜித் தர மறுத்திருக்கிறார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது அஜித், தன்னிடம் இருந்த கத்தியால் தேவதாசை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த தேவதாஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே தேவதாஸ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அஜித்தை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட தேவதாஸ் மற்றும் அவரை கொன்ற அஜித் ஆகிய இருவரும் விறகு வெட்டும் தொழிலாளியாக இருந்துள்ளனர்.

    நண்பர்களான இவர்கள் இருவரும் தகராறு நடக்கும்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடிபோதையில் ஆத்திரத்தில் தேவதாசை கத்தியால் குத்தி அஜித் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

    • ஓணம் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • மேற்பார்வையாளர் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் அருகே உள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் ஓணம் பண்டி கையை முன்னிட்டு கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    முன்னதாக கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் இ.எம். அப்துல்லா கலை யரங்கத்தில் மத நல்லிணக்க ஒற்றுமைகளை வெளிப் படுத்தும் அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி னர்.

    முன்னதாக கல்லூரியின் தாளாளர் செல்லதுரை அப்துல்லா மற்றும் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல் தலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்தனர்.தொடர்ந்து கல்லூரி முதல்வர் பாலகி ருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் குத்துவிளக்கு ஏற்றி, வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். இதில் சிறந்த கோலங்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழ ங்கப்பட்டன. அதன் பின்னர் மாண விகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. நிகழ்ச்சியை (ஐ.கி.யூ.ஏ.சி.) பிரிவின் தலைவர் அன்வர் ஷாகின் ஒருங்கி ணைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வை யாளர் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர். 

    • சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    ஓணப்பண்டிகை தொடர் விடுமுறை முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான கேரளா சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதற்கிடையில் கேரளாவில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களின் கூட்டமும் கன்னியாகுமரியில் அலைமோதுகிறது. கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இதற்காக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். ஆனால் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் அங்கு வெகு நேரமாக சுற்றுலா பயணிகள் காத்து இருந்தனர். பின்னர் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு பிறகு தான் படகு போக்குவரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர். இன்று காலை வழக்கத்தை விட அதிக அளவு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு வந்தனர். ஆனால் திருவள்ளுவர் சிலையில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் படடகில் பயணம் செய்யும் போதும் கடற்கரையில் இருந்த படியும் செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், விவேகானந்த படத்தில் உள்ள பாரத மாதாகோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சிகூடம், மீன் காட்சிசாலை, வட்டக் கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளைபீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • கேரள மாநிலத்தில் அரசு மதுபான கழகம் சார்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • ஓணம் திருநாளுக்கு முந்தைய நாளான 28-ந்தேதி ஒரு நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் ரூ.116 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஜாதி, மத, இன பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடப்படும் இந்த பண்டிகையால் மாநிலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்படும்.

    இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கடந்த 20-ந்தேதி தொடங்கி கொண்டாடப்பட்டு வந்தது. நேற்று முன்தினம்(29-ந்தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் மதுபானங்கள் விற்பனை அதிகளவில் நடந்துள்ளது.

    கேரள மாநிலத்தில் அரசு மதுபான கழகம் சார்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 320-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள், 500-க்கும் மேற்பட்ட ஓட்டல் பார்களில் உள்நாட்டு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த கடைகள் மற்றும் பார்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாகி இருக்கிறது. ஓணம் பண்டிகை தொடங்கிய கடந்த 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான 8 நாட்களில் மாநிலம் முழுவதும் ரூ.665கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

    கடந்த ஆண்டு(2022) இதேபோல் 8நாளில் ரூ.624 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.41 கோடி அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது.

    ஓணம் திருநாளுக்கு முந்தைய நாளான 28-ந்தேதி ஒரு நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் ரூ.116 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது. அன்றைய தினம் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலகுடா பகுதியில் உள்ள ஒரு கடையில் ரூ.1.06 கோடிக்கும், கொல்லம் ஆசிராமம் பகுதியில் உள்ள ஒரு கடையில் ரூ.1.01 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

    அதேபோன்று சங்கனாச்சேரியில் உள்ள ஒரு கடையில் ரூ.95.78கோடிக்கும், சேர்தலாவில் உள்ள ஒரு கடையில் ரூ.93.76 கோடிக்கும், பையனூரில் உள்ள ஒரு கடையில் ரூ.91.67 கோடிக்கும் , சாலக்குடியில் உள்ள ஒரு கடையில் ரூ.88.59 லட்சத்துக்கும் மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது.

    • அஷ்டாபிஷேகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் சபரி நகரில் உள்ள நவசபரி ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    காலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம் நடைபெற்றது. மேலும் அத்தப்பு கோலம் வரையப்பட்டு ஓணம் பூஜைகள் நடைபெற்றது.

    இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும், சபரி சாஸ்தா சமிதி குழுவினரின் பஜனையும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு ஹரிவராசனம் பாடல் பாடி கோவில் நடை சாத்தப்பட்டது. இதில் ராணிப்பேட்டை சிப்காட் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும்.
    • பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா நடத்தப்படாததை கண்டித்து பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் தக்கலையில் உள்ளது பத்மநாபபுரம் அரண்மனை. கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அரண்மனையை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனையையும் பார்வையிட வருவார்கள்.

    பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடங்கும்போது இங்கும் பண்டிகை தொடங்கிவிடும். பண்டிகை நாட்களில் அரண்மனை முன்பு ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கும். அதில் ஆடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

    ஆனால் பத்மநாபபுரம் அரண்மனையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை. மேலும் ஓணம் பண்டிகையான நேற்று அரண்மனை திறக்கப்படவில்லை. அரண்மனை வாசல் இழுத்து மூடப்பட்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் நேற்று வழக்கம் போல் ஏராளமான சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் அரண்மனை மூடப்பட்டிருந்தால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆண்டுதோறும் ஓணம் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கொண்டாடப்படாதது பத்மநாபபுரம் பகுதி மக்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா நடத்தப்படாததை கண்டித்து பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரண்மனை வாசல் முன்பு திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பத்மநாபபுரம் நகராட்சி துணை தலைவர் உண்ணி கிருஷ்ணன், கவுன்சிலர்கள் வினோத், நாகராஜன், பா.ஜ.க. பிரமுகர்கள் குமரி ரமேஷ், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போதிய நிதி இல்லாததால் இந்த ஆண்டு ஓணம் விழா கொண்டாடப்படவில்லை என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரும் ஆண்டுகளில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா வழக்கம் போல் கொண்டாட கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    • கோழிக்கோடு மாவட்டம் மேரிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் ஜிப்சி ஜோசப்.
    • ஜிப்சியின் கணவர் ஜோசப் ரிபாலோ மலப்புரம் மாவட்ட சமூக நல அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அதில் இருந்தே மாநிலம் முழுவதும் ஓணம் கொண்டாட்டங்கள் நடந்தபடி இருந்தது.

    இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் பங்கேற்ற முன்னாள் விளையாட்டு வீராங்கனை சுருண்டு விழுந்து இறந்தார். கோழிக்கோடு மாவட்டம் மேரிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் ஜிப்சி ஜோசப் (வயது52).

    முன்னாள் தேசிய கைப்பந்து வீராங்கனையான இவர் மலப்புரம் மாவட்ட வேளாண்மை துறை அலுவலகத்தில் நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் தான் மேரிக்குன்னு பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடந்த ஓணம் கொண்டாட்டத்தில் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

    அங்கு நடத்தப்பட்ட இசை நாற்காலி போட்டியில் பங்கேற்று விளையாடியபோது ஜிப்சி திடீரென சுருண்டு விழுந்தார். சுயநினைவின்றி காணப்பட்ட அவர் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

    ஜிப்சியின் கணவர் ஜோசப் ரிபாலோ மலப்புரம் மாவட்ட சமூக நல அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓணம் கொண்டாட்டத்தில் முன்னாள் விளையாட்டு வீராங்கனை சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • நேஷனல் அகாடமியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • மாணவி களுக்கு அத்தப்பூ கோல போட்டியும் அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி களும் நடைபெற்றது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி யில் ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் தலைமை வகித் தார். கல்லூரி ஆசிரியர்கள் மது, மோனிஷா, சாந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சதக் கத்துல்லா வரவேற்றார். ஒணம் பண்டிகையொட்டி கல்லூரியில் மாணவி களுக்கு அத்தப்பூ கோல போட்டியும் அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி களும் நடைபெற்றது.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கபட்டன. முடிவில் ஆசிரியர் பூவிழி நன்றி கூறினார்.

    • செய்யது ஹமீதா கலை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராஜ சேகர் கலந்து கொண்டார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்லூரி மாணவிகள் அனைவரும் புத்தாடை அணிந்து வந்து கல்லூரி வளாகத்தில் அத் தப்பூ கோலமிட்டு உற்சாகத்து டன் ஓணம் பண்டிகை கொண்டாடினர். நிகழ்ச்சி யில் கல்லூரி முதல்வர் ராஜ சேகர் கலந்து கொண்டு பேசுகையில், ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஓணம் திருவிழா இன்றும் மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருவதோடு இந்திய கலாசார நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது என்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற் பாடுகளை தகவல் தொழில் நுட்பத்துறை தலைவர் மலர், வணிகவியல் துறை தலை வர் யமுனா, அனைத்து மகளிர் பேராசிரியர்களும் மாணவிகளும் செய்திருந்தனர். முகமது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் முகமது யூசுப், நிர்வாக இயக்குநர் ஹாமிது இப்ராகிம், செயலர் ஷர்மிளா, நிர்வாக இயக்குனர் கள் கலந்து கொண்டு ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    • ஓணம் பண்டிகை பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
    • மாணாக்கர்களும் ஆசிரியர்களும் பாரம்பரிய ஆடை அணிந்திருந்தார்கள்.

    மார்த்தாண்டம் :

    கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. பள்ளித்தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். இயக்குநர் இலக்கியா, முதுநிலை முதல்வர், முதல்வர் மற்றும் துணைமுதல்வர் முன்னிலை வகித்தனர், கவுரவ விருந்தினர்களாக வெள்ளறடை ஆர்.எம். தேவி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் மோகன், தென்காசி எஸ்.எம்,ஏ கல்விக்குழுமத்தின் இயக்குனர் டாக்டர் ராஜ்குமார், கரிக்ககம் ஸ்ரீ குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் டைட்டன்ஸ், ஒலிம்பியன்ஸ், ஸ்பார்டன்ஸ் என மூன்று குழுக்களாகப் பிரிந்து அத்தப்பூ கோலமிட்டார்கள். மாணாக்கர்களும் ஆசிரியர்களும் பாரம்பரிய ஆடை அணிந்திருந்தார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

    • ஓண வில்கள் சுவாமி முன்பு சமர்பிக்கப்பட்டது
    • அர்ச்சகர்கள் ஓணவில்களை ஏந்தி ஸ்ரீபலி விக்கிரகங்கள் அருகில் சென்றனர்

    திருவட்டார் :

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஓணப்பண்டிகை நாளில் கேரளா முறைப்படி ஓணவில் பெருமாளுக்கு சமர்ப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு இந்நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. ஓண வில்கள் சுவாமி முன்பு சமர்பிக்கப்பட்டது. பின்னர் அர்ச்சகர்கள் ஓணவில்களை ஏந்தி ஸ்ரீபலி விக்கிரகங்கள் அருகில் சென்றனர். இதையடுத்து ஸ்ரீ பலி விக்கிரகங்களுடன் மேள தாளம் முழங்க ஓணவில்களுடன் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தனர்.

    தொடர்ந்து ஓணவில்கள் கிருஷ்ணசாமி சன்னதியிலும், ஆதிகேசவப்பெருமாள் சன்னதியிலும் வைக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன் குமார் செய்திருந்தார்.

    ×