என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் குவிந்த வியாபாரிகள்
- தாமரை பூ ரூ.15-க்கு விற்பனை
- மரிக்கொழுந்து ரூ.120-க்கு விற்பனையானது.
கன்னியாகுமரி :
கேரளாவில் கொண்டா டப்படும் முக்கிய பண்டிகை களில் ஓணம் பண்டிகையும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டா டப்படுகிறது. வழக்கமாக ஓணம் பண்டிகையை 10 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
வீடுகள் முன்பு அத்த பூ கோலமிட்டு பெண்கள் ஓணம் பண்டிகையை வரவேற்பார்கள். ஓணம் பண்டிகை இன்று தொடங்கி யதையடுத்து குமரி மாவட் டத்தில் உள்ள தோவாளை பூ மார்க்கெட்டில் கேரள வியாபாரிகள் ஏராளமா னோர் குவிந்திருந்தனர். மேலும் திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும் ஏரா ளமானோர் தோவாளை பூ மார்க்கெட்டிற்கு இன்று வந்திருந்தனர். இதனால் காலையிலேயே தோவாளை பூ மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.
பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகளும் பொதுமக்க ளும் போட்டி போட்டு வாங்கினார்கள். இதனால் வியாபாரம் களை கட்டி இருந்தது.
கேரள வியாபாரிகள் கலர் பூக்களை விரும்பி வாங்கி சென்றனர். கேந்தி, அரளி, வாடாமல்லி, கொழுந்து, மரிக்கொழுந்து, பட்டன் ரோஸ், தாமரை, துளசி உள்ளிட்ட பூக்களை வாங்கி சென்றனர். இதனால் வழக்கத்தை விட பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. பிச்சி பூ கிலோ ரூ.500-க்கும் மல்லிகை ரூ. 700-க்கும் விற்கப்பட்டது. தோ வாளை அரளி ரூ.150, சேலம் அரளி ரூ.150, கோழிப்பூ ரூ.60,
மஞ்சள் கேந்தி ரூ.50, சிவப்பு கேந்தி ரூ.60, வாடாமல்லி ரூ.70, செவ்வந்தி ரூ.300, சம்பங்கி ரூ.700, கொழுந்து ரூ.100, மரிக்கொழுந்து ரூ.120-க்கு விற்பனையானது.
தாமரை பூவின் விலை கணிசமான அளவு உயர்ந் துள்ளது. ஒரு தாமரைப்பூ 15-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை குறைந்து காணப் பட்ட நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ள தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓணம் பண்டிகை மற்றும் சுப முகூர்த்த தினத்தை யொட்டி இந்த மாதம் முழுவதும் பூக்கள் விலை வழக்கத்தை விட சற்று உயர்ந்திருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள் ளனர். ஓணம் பண்டிகை தொடங்கியதையடுத்து இன்னும் கேரளாவில் இருந்து ஏராளமான வியா பாரிகள் தோவாளை பூ மார்க்கெட்டிற்கு வரு வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் குமரி மாவட் டத்தில் உள்ள பல்வேறு வீடுகளிலும் ஓணம் பண்டி கையையொட்டி தினமும் அத்தப்பூ கோலம் போடப் படும். பள்ளி, கல்லூரிகளி லும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டா டப்படுவதை யடுத்து பூக்கள் வியாபாரம் இன்னும் ஒரு வாரத்திற்கு சூடு பிடித்திருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்