search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுதானியம்"

    • கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.
    • விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் ருத்ராட்சங்கள் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே ராதாநல்லூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 ஆயிரத்து எட்டு ருத்ராட்சங்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்காக பிரத்தியேகமாக அயோத்தியில் இருந்து மொத்தமாக 5 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு அரசின் விதிமுறைகளை பின்பற்றி 10 அடி உயர உத்திர விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் புறத்தில் நூலை கொண்டு ருத்ராட்சங்களை கோர்த்து விநாயகர் முழுமையாக அலங்கரிக்கப்படுகிறார்.

    இந்து மகா சபா வைச் சேர்ந்த தொண்டர்கள் கடந்த 15 நாட்களாக இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு தயார் செய்யப்படும் விநாயகர் சிலை கும்பகோணத்தில் வைக்கப்படும் என்றும் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் ருத்ராட்சங்கள் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்றும் இந்து மகாசபையினர் தெரிவித்துள்ளனர்.

    • பயிர் சாகுபடி சார்ந்த விவசாயிகளுக்கான காரீப் பருவத்திற்கான முதல் கட்ட தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது
    • உரச் செலவை குறைத்து இயற்கை முறையில் உரங்கள் பெற திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துதல், மகசூலை அதிகரிக்க தானிய நுண்ணூட்டம் இடுதல் பற்றியும் விரிவாக கூறினார்.

    திருப்பூர்:

    உடுமலையை அடுத்த எலையமுத்தூர் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி சார்ந்த விவசாயிகளுக்கான காரீப் பருவத்திற்கான முதல் கட்ட தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி வரவேற்புரை ஆற்றியதுடன் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து உரைத்தார்.

    பயிற்சியில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன் கலந்து கொண்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.  

    அப்போது அவர் கூறுகையில், தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து விவரங்களையும், அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும், கோடை உழவு செய்யும் முறை மற்றும் பயன்கள் பற்றி கூறினார். மேலும் குறுகிய கால தானியம் மற்றும் தட்டு மகசூல் தரவல்ல கோ (எஸ்) -32 ரக சோளத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றியும் விதை, வேர் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் விதை நேர்த்தி, உரச் செலவை குறைத்து இயற்கை முறையில் உரங்கள் பெற திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துதல், மகசூலை அதிகரிக்க தானிய நுண்ணூட்டம் இடுதல் பற்றியும் விரிவாக கூறினார்.

    • விவசாயிகளுக்கு சிறுதானியம் வழங்கும் விழா நடந்தது.
    • சீட்ஸ் நிறுவன செயல் அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு சீட்ஸ் நிறுவனம் நபார்டு வங்கி சார்பாக சர்வதேச சிறுதானிய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    சீட்ஸ் செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ராஜ சுரேஷ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண்மைத் துறை துணை இயக்குநர் நாச்சி யார் விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் அருப்புக் கோட்டை வேளாண் ஆராயச்சி மைய தொழில் நுட்ப வல்லுனர்கள் செல்வ ராணி, சிவக்குமார், ஆகியோர் சிறுதானிய பயிர் சாகுபடி குறித்து பேசினார்கள். இதற்கான ஏற்பா டுகளை சீட்ஸ் நிறுவன செயல் அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.

    • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சிறுதானிய தனி அரங்கை திறந்து வைத்தார்.
    • சிறுதானியங் களில் செய்யப்பட்ட உணவு வகைகள் நன்மை குறித்து மகளிர் திட்ட பணியாளர்கள் எடுத்துரைத்தனர்.

    தொப்பூர், 

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்ட ஆடிப்பெருக்கு விழாவில் மகளிர் திட்டம் சார்பில் சிறுதானிய பயன்பாடுகள் குறித்த தனி அரங்கை அமைச்சர் திறந்து வைத்தார்.

    அவற்றில் சிறுதானியங் களில் செய்யப்பட்ட உணவு வகைகள் காட்சிப் படுத்தப்பட்டு அவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு, மகளிர் திட்ட பணியாளர்கள் எடுத்துரைத்தனர்.

    இவ்விழாவில் மகளிர் திட்ட இயக்குனர் முகமது நசீர், உதவி திட்ட அலுவலர்கள் கார்த்தி கேயன், முருகேசன், வட்டார மேலாளர் பிரதீப், மற்றும் ரமேஷ் மாவட்ட பயிற்றுநர் வட்டார ஒருங்கிணைப் பாளர் வெற்றி வேல் மற்றும் வட்டார ஒருங்கிணைப் பாளர் ஜான்சி ராணி, கண்ணகி, லலிதா, தமிழ்ச்செல்வி, விஜய லட்சுமி, செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தருமபுரி மாவட்ட கலெக்டரக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • சிறுதானிய உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHG), உற்பத்தியாளர் குழுக்கள் (NRLM Portal)-லில் பதிவு பெற்றிருந்தல் வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டு ள்ளது.

    2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட முடிவு செய்துள்ளது.

    அதன்படி தருமபுரி மாவட்ட கலெக்டரக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவானது சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசு சிறுதானிய உணவு வகைகளை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    சிறுதானிய உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHG), உற்பத்தியாளர் குழுக்கள் (NRLM Portal)-லில் பதிவு பெற்றிருந்தல் வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு "ஏ" அல்லது "பி" சான்று பெற்றிருக்க வேண்டும்.

    உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு சிறுதாளிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.

    மேலும், இது குறித்து விரிவான விவரங்களை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை அணுகி தெரிந்துக் கொள்ளலாம். மேலும், நாளை 21.07.2023 வெள்ளிக்கிழமைக்குள் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மகளிர் குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும்.
    • வருகிற 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 2023-24 சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமும், சிறுதானிய உணவு பழக்க வழக்கங்களை அதிகப்படுத்தும் வண்ணமும் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    பெறப்படும் விண்ணப்பங்களை மாவட்ட அளவிலான குழுவினால் கூர்ந்தாய்வு செய்யப்படும்.

    மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு , உற்பத்தியாளர் குழுக்கள் , கூட்டமைப்பு மட்டுமே தேர்வு செய்யப்படும்.

    தகுதியுள்ள சுயஉதவிக் குழுக்கள் இல்லை எனில் சம்மந்தப்பட்ட குழு கூட்டமைப்பு தீர்மானத்தின் அடிப்படையில் அருகாமையில் உள்ள வேறு மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தேர்வு செய்யப்படும்.

    மகளிர் குழு துவங்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்றிறுக்க வேண்டும். NRLM MIS இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

    கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு A அல்லது B சான்று பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும்.

    சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறு தானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.

    விண்ணப்பிக்கும் தகுதியான கிராமப்புற சமுதாய அமைப்புகள் தொடர்புடைய ஊராட்சி

    ஒன்றியத்தைச் சார்ந்த வட்டார இயக்க மேலாளரை தொடர்புகொண்டு வரும் 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல் தூற்றுவது முதல் சாக்கு மூட்டையில் நெல்லை நிரப்பி தைப்பது வரை முழுவதும் எந்திரங்களை பயன்படுத்த முடிவு.
    • புதிய நியாய விலைக் கடைகளை உருவாக்குவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்ட மேற் கூரையுடன் கூடிய நெல்சேமிப்பு தளங்களை உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு துறை கூடுதல் தலைமைச் செயலர்
    ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நெல் சேமிப்புக் கிடங்கில் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து இழப்பு ஏற்படு வதைத் தடுப்பதற்காகத் தமிழகத்தில்
    213 இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் அமைக்கப்பட்டன. இதை இன்னும் மேம்படுத்துவது தொடர்பாக பணியாளர்களிடம் கலந்தாலோசனை செய்தோம். இதன் மூலம் பக்கவாட்டில் தார்பாய் மட்டும் போட்டால் போதும் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் அருகே பஞ்சநதிக ்கோட்டையில் ரூ. 1 கோடி மதிப்பில் பரிசோதனை அடிப்படையில் நெல் கொள்முதல் பெருநிலையம் அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.

    இதில், 400 டன்கள் கொள்ளளவு கொண்ட அனைத்து பணிகளுமே தானியங்கி மூலம் செயல்படுத்தும் விதமாக முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் நெல் தூற்றுவது முதல் சாக்கு மூட்டையில் நெல்லை நிரப்பி தைப்பது வரை முழுவதும் எந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்தப் பரிசோதனை வெற்றி பெற்றால், தொடர்ந்து இத்திட்டம் அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்லப்படும்.தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு 2.31 லட்சம் மெட்ரிக் டன்கள் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இதுவரை 35.73 லட்சம் மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 4.41 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 7 ஆயிரத்து 891 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

    விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களில் அறுவடைப்பணிகள் நடைபெறுகின்றன.தமிழகத்தில் 35 ஆயிரத்து 941 நியாய விலைக் கடைகள் நடத்தப்படுகின்றன. புதிய நியாய விலைக் கடைகளை உருவாக்குவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    கூட்டுறவுத் துறை மூலம் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு விவசாயக் கடனாக ரூ. 13 ஆயிரத்துக்கு 442 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு தமிழக முதல்வர் ரூ. 14 ஆயிரம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளார்.

    நிகழாண்டு உலக சிறுதானிய ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, நீலகிரி உள்பட 2 மாவட்டங்களில் கேழ்வரகு சாகுபடி தொடங்கப் படுகிறது. கேழ்வரகை நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாகவும், மற்ற சிறுதானிய பயிர்களைக் கூட்டுறவு மூலமாகவும் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை பதிவாகாமல் போகும் நிலையில், அவர்களைத் திருப்பி அனுப்பாமல், அதற்கென உள்ள படிவத்தை நிறைவு செய்து கொடுத்து, பொருட்களைச் பெற்றுச் செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் பிரபாகரன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • சிறுதானியங்களின் பயன்கள் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
    • சிறப்பு விருந்தினராக ஊராட்சிதலைவர் ராமலெட்சுமி கலந்து கொண்டார்.

    செய்துங்கநல்லூர்:

    தமிழக அரசு 2022-2023-ம் நிதி ஆண்டை சிறு தானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் சிறுதானியங்களின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள செக்காரக்குடி கிராமத்தில் கருங்குளம் வட்டார வேளாண்மைத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் சிறுதானிய பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வழிகாட்டுதலின் படி நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் ராமலெட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலை குழுமம் விவசாய தொழில்நுட்பங்களை கலைநிகழ்ச்சி மூலம் கூறினர். உதவி வேளாண் அலுவலர் திருவேணி, அட்மா தொழில்நுட்ப மேலாளர் ராஜலெட்சுமி, முத்துசங்கரி, மகேஸ்வரி, சலோமியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • போட்டிகளில் வெற்றி பெற்றமாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
    • சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி செயிண்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சீர்மிகு சிறுதானிய உணவு பெருவிழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றமாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி மற்றும் செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன்,ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இவை அதிகஆற்றலை தரக்கூடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்துள்ளது.நீங்கள் கட்டாயம் சிறுதானிய உணவுகளை எடுத்து ஆரோக்கியமாக இருக்கவேண்டும். பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் ஒரு குடும்பம் ஆரோக்கியமாகஅமையும். அந்த வகையில் அனைவரும் சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொண்டுஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் (3-ம் மண்டலம்)கோவிந்தசாமி, (4-ம் மண்டலம்) இல.பத்மநாபன், மருத்துவர் சிவராமன், கிட்ஸ்கிளப் சேர்மன் மோகன்கார்த்திக், கல்லூரி செயலாளர்குழந்தை தெரசா, கல்லூரி முதல்வர் மேரிஜாஸ்பின், பள்ளி மாணவிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.
    • பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களில் உணவு தயாரித்து வழங்கும் போராட்டம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிரான பேரியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார்.

    ஒருங்கிணைப்பாளர்கள் தனபதி , வேணு ராஜசேகர், தங்க குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் , செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.

    இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்த மாதம் 15 ஆம் தேதி சத்து மிகுந்த பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் உணவுகளை தயாரித்து வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போராட்டம் நடத்த வேண்டும்.

    பாரம்பரிய அரிசி சிறுதானியங்களை கட்டுபடியான விலையில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மேல்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் வேலுமணி, ரவிச்சந்திரன், பாரதிதாசன், விக்னேஷ், அரு சீர் தங்கராசு, அருண் சுபாஷ், செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • கோடை உழவு செய்தால் மண் வளம் பெருகுவதோடு மழை நீரை சேமிக்க முடியும்.
    • முகாமிற்கான ஏற்பாடுகளை உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலர்கள் செய்திருந்தனர்.

    உடுமலை :

    உலக சிறுதானியங்கள் ஆண்டை கொண்டாடும் வகையில், உடுமலை வேளாண் துறை சார்பில், ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது.உடுமலையிலுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் அபிவிருத்திக்கான கருத்து கண்காட்சி அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் தேவி தலைமை வகித்தார்.

    உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட, மாவட்ட ஆலோசகர் அரசப்பன் பேசியதாவது:- நாம் அன்றாடம் நமது உணவில் அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்கிறோம். இதிலிருந்து கார்போஹைட்ரேட் சத்து மட்டுமே அதிகமாக கிடைக்கிறது. ஆனால் மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், விட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களான சோளம், கம்பு, ராகி, சாமை, திைன, வரகு மற்றும் குதிரைவாலி ஆகியவற்றில் மிகவும் அதிகமாக உள்ளது.

    எனவே ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்களை நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ரகங்களான, சோளம் கோ-32, கம்பு தன் சக்தி ரகங்களை பயிரிட்டால், அதிக மகசூல் மற்றும் வருவாய் கிடைக்கும். இதில், அதிக அளவு ஊட்டசத்துக்கள், விட்டமின்கள் உள்ளன. கோடை உழவு செய்தால் மண் வளம் பெருகுவதோடு மழை நீரை சேமிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் சிறுதானியபயிர்கள் சாகுபடிக்கு விதைநேர்த்தி, ஊட்டமேற்றிய தொழுவுரம், உயிர் உரம், நுண்ணூட்டச்சத்து மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லிகள் குறித்தும், அவற்றை பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கினார்.இம்முகாமில் ஊட்டச்சத்து மிக்க தானியங்களான சோளம், கம்பு பயிர்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து, விரிவாக எழுதப்பட்டுள்ள விவசாயிகளுக்கான கையேட்டினை வெளியிட்டார்.

    உடுமலை வட்டாரத்தில் செயல்படுத்தப்படும், மானிய திட்டங்கள் குறித்து துணை வேளாண் அலுவலர் கோவிந்தராஜன் விளக்கினார். முகாமிற்கான ஏற்பாடுகளை உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலர்கள் செய்திருந்தனர். 

    • ஓட்ஸ் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும்.
    • சத்து, எடை குறைப்பு என்ற பெயரில் நம் ஊர் உணவையே மறந்து விட்டோம்.

    வேகமாக ஓடும் உலகில் காலை உணவை தவிர்ப்பதை காரணம் காட்டி பல ரெடி டு ஈட் உணவுகள் நுழைந்து விட்டன. கார்ன் ஃப்ளேக்ஸ், கப் நூடுல்ஸ், பாதி சமைத்த உணவுகளாக மாறிவிட்டது. அதிலும் சத்து, எடை குறைப்பு என்ற பெயரில் நம் ஊர் உணவையே மறந்து விட்டோம்.

    அப்படி தொடங்கியது தான் ஓட்ஸ் மோகம். போலந்து, ஆஸ்திரேலியா, மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் விளைவது தான் ஓட்ஸ். அதை இங்கே இறக்குமதி செய்ய அதன் நன்மைகளை அடுக்கி விட்டனர்.

    இதன் விளம்பரங்களை கண்டு நாமும் சமையல் அறையில் அதற்கு ஓர் இடத்தை கொடுத்து விட்டோம்.

    ஓட்ஸ் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும். இது உடல் ஆரோக்கியத்துக்கான நல்ல விஷயம். எடை குறைப்புக்கு ஓட்ஸை உட்கொள்வது நல்லது தான். ஆனால் அது விரைவில் செரிமானம் ஆவதால், பசிக்கு நாம் அதிகம் சாப்பிட வாய்ப்பும் உள்ளதாம். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகிவிடுமே!

    அதற்கு சுவை இல்லாததால் சக்கரை ,ஸ்ட்ராபெரி, வாழை என ஃப்ளேவர்களை சேர்த்து விட்டனர். சுவைக்காகப் பல விஷயங்களை அதிகமாக ஓட்ஸோடு சேர்த்தால், ஓட்ஸின் பயன் முழுமையாக உடம்புக்குக் கிடைக்காது.

    அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸை விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது. சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம்.

    அதைவிட கம்பு, சோளம், திணை, வரகு, சாமை போன்ற நம் நாட்டு தானியங்கள் எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை. இவற்றில் உடலுக்கு தேவையான அனைத்து புரதச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. விலையும் குறைவு!

    100 கிராம் கம்பில், 42 கிராம் கால்சியம் சத்து உள்ளது, உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் எளிதில் குறைக்கும். ராகி உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும்.

    எது எப்படியோ எப்பவும் வீட்டில் எண்ணெய் இல்லாமல் ஃப்ரெஷாக செய்யப்படும் இட்லிக்கு இணை எதுவுமில்லை. அவற்றில் கிடைக்கும் சத்துக்கள் வேறேதிலுமில்லை.

    ×