search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு சிறுதானியம் வழங்கும் விழா
    X

    விவசாயிகளுக்கு சிறுதானியம் வழங்கும் விழா

    • விவசாயிகளுக்கு சிறுதானியம் வழங்கும் விழா நடந்தது.
    • சீட்ஸ் நிறுவன செயல் அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு சீட்ஸ் நிறுவனம் நபார்டு வங்கி சார்பாக சர்வதேச சிறுதானிய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    சீட்ஸ் செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ராஜ சுரேஷ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண்மைத் துறை துணை இயக்குநர் நாச்சி யார் விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் அருப்புக் கோட்டை வேளாண் ஆராயச்சி மைய தொழில் நுட்ப வல்லுனர்கள் செல்வ ராணி, சிவக்குமார், ஆகியோர் சிறுதானிய பயிர் சாகுபடி குறித்து பேசினார்கள். இதற்கான ஏற்பா டுகளை சீட்ஸ் நிறுவன செயல் அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.

    Next Story
    ×