search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "union cabinet"

    மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள இணை மந்திரிகளுக்கான துறைகளின் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் பல்வேறு எம்.பி.க்கள் அமைச்சரவையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

    இந்நிலையில், மத்திய இணை மந்திரிகளுக்கான துறைகளின் விவரம் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு:



    பகன் சிங் குலாஸ்தே - எஃகுத்துறை
    அஷ்வினி குமார் சவுபே - சுகாதாரம் மற்றும் நலத்துறை
    அர்ஜூன் ராம் மேக்வால் - பாராளுமன்ற விவகார துறை, கனரக தொழிற்சாலை, பொதுத்துறை நிறுவனம்
    ஜெனரல் வி.கே.சிங் (ஓய்வு) - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை
    கிரிஷன் பால் - சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்
    தான்வே ராவ்சாகேப் தாதாராவ் - நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொதுத்துறை
    கிஷன் ரெட்டி -உள்துறை
    பர்ஷோத்தம் ரூபாலா - வேளாண் மற்றும் விவசாயிகள் நலம்
    ராம்தாஸ் அத்வாலே - சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்
    சாத்வி நிரஞ்சன் ஜோதி- நகர்ப்புற வளர்ச்சி
    பாபுல் சுப்ரியோ -சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்
    சஞ்சீவ் குமார் பால்யன் - விலங்குகள் நலம், மீன்வளத்துறை
    தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ் - மனிதவள மேம்பாடு, தொலை தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொடர்பு 
    அனுராக் சிங் தாக்கூர் - நிதித்துறை, கம்பெனிகள் விவகாரம்
    அங்காடி சுரேஷ் சன்னபசப்பா -ரெயில்வே துறை
    நித்யானந்த் ராய் - உள்துறை
    ரத்தன் லால் கட்டாரியா - ஜல் சக்தி, சமூக நீதி, அதிகாரமளித்தல்
    முரளீதரன்- வெளியுறவு துறை, பாராளுமன்ற விவகாரம்
    ரேணுகா சிங் சருதா - பழங்குடியின விவகாரம்
    சோம் பர்காஷ்- வணிகம், தொழிற்துறை
    ராமேஸ்வர் தேலி -உணவு பராமரிப்பு
    பிரதாப் சந்திர சாரங்கி - குறு, சிறு, நடுத்தர தொழிற்துறை, விலங்குகள், மீன்வளம்
    கைலாஷ் சவுத்ரி - வேளாண் மற்றும் விவசாயிகள் நலம்
    தேவஸ்ரீ சவுத்ரி- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
    பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 பேருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
    சென்னை:

    மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பதவி ஏற்க உள்ளது.

    ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பல வெளிநாட்டுத் தலைவர்கள் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வர இருப்பதால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே புதிய அமைச்சரவையில் யார்- யாரை மத்திய மந்திரிகளாக சேர்த்துக் கொள்ளலாம் என்று மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி தனிப்பட்ட முறையில் 303 இடங்களைக் கைப்பற்றி இருப்பதால் மத்திய மந்திரி சபையில் முக்கியமான, பெரும்பாலான மந்திரிகள் பா.ஜனதாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

    என்றாலும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியினரையும் மத்திய மந்திரி சபையில் இடம்பெற செய்ய மோடி முடிவு செய்துள்ளார். எனவே சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க., அகாலி தளம், லோக் ஜனசக்தி, அப்னா தளம் ஆகிய கட்சிகள் மத்திய மந்திரி சபையில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

    பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் சிவசேனா 18 எம்.பி.க்களை வைத்துள்ளது. கடந்த தடவை 3 மந்திரி பதவி பெற்ற சிவசேனா இந்த தடவை 4 மந்திரி பதவிகளை கேட்கிறது. 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 மந்திரி பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

    ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 எம்.பி.க்களும், சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும், அப்னா தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும் உள்ளனர். இந்த மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆல் ஜார்க்கண்ட் ஸ்டூடன்ட்ஸ் யூனியன், ராஜஸ்தானில் லோக் தந்திரிக் கட்சி, நாகலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற முன்னணி, மிசோரமில் மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தலா 1 இடத்தில் வென்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு மத்திய மந்திரி சபையில் இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் 38 இடங்களில் அ.தி.மு.க. மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அ.தி.மு.க.வுக்கு மத்திய மந்திரி சபையில் ஒரு இடம் கொடுக்க மோடி முடிவு செய்துள்ளார். அந்த ஒருவர் யார் என்பதை தெரிவிக்கும்படி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் கூறியுள்ளனர்.


    இந்த நிலையில் அ.தி.மு.க. தரப்பில் 2 மத்திய மந்திரி பதவிகளை தருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த இரு மந்திரி பதவிகளில் ஒரு பதவி, தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமாருக்கு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இலாகாவை பெற காய்களை நகர்த்தி வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான வைத்திலிங்கம் மத்திய மந்திரி பதவி பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். டெல்லி மேல்- சபையில் எம்.பி. ஆக இருக்கும் வைத்திலிங்கத்தை மத்திய மந்திரியாக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார்.

    பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ள போதிலும் மேல்-சபையான மாநிலங்கள் அவையில் தற்போது அ.தி.மு.க.வுக்கு 13 எம்.பி.க்கள் உள்ளனர். வருகிற ஜூலை மாதம் மேல்-சபை தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. மேல்-சபை எம்.பி.க்களின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும்.

    டெல்லி மேல்-சபையில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் இல்லை. எனவே மேல்-சபையில் அ.தி.மு.க.வின் தயவு பாரதிய ஜனதாவுக்கு தேவை என்ற நிலை உள்ளது. மேல்- சபையில் 12 எம்.பி.க்களை வைத்திருப்பதால் அ.தி.மு.க.வுக்கு இரண்டு மத்திய மந்திரிகள் தருவதுதான் நியாயமானதாக இருக்கும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    இந்த வாதத்தை பாரதிய ஜனதா ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அ.தி.மு.க.வுக்கு இரு மந்திரி பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில் வைத்திலிங்கம், ரவீந்திரநாத்குமார் இருவரும் மந்திரி ஆவார்கள். அவர்கள் இருவருக்கும் ராஜாங்க இலாகா கொடுக்கப்படலாம்.

    இதற்கிடையே டாக்டர் அன்புமணியையும் மேல்- சபை எம்.பி. என்ற அந்தஸ்துடன் மத்திய மந்திரியாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. மீண்டும் அவருக்கு சுகாதாரத் துறையை பெற காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன. ஆனால் பா.ம.க.வின் விருப்பத்தை பாரதிய ஜனதா நிறைவேற்றுமா? என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
    டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. 

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அதில் அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி.

    பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு மோடியை கேட்டுக் கொண்டார்.
    16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதில் பாஜக மட்டும் 302 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. 

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தற்போதைய அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    முன்னாள் ராணுவ அமைச்சரும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் நாளை இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது. #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    புதுடெல்லி;

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார். கோவா மற்றும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பிறகு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அவருக்கு கணையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றவாறு தனது இல்லத்தில் இருந்தபடி முதல் மந்திரி பணிகளை கவனித்து வந்தார் மனோகர் பாரிக்கர்,

    இதற்கிடையே, இன்று மாலை உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மனோகர் பாரிக்கர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் ராணுவ அமைச்சரும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் நாளை காலை 11 மணியளவில் இரங்கல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
     
    மேலும், மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி நாளை துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும், தேசிய தலைநகரம் மற்றும் மாநில தலைநகரங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. #UnionCabinet #DearnessAllowance
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால், அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயருகிறது.

    கடந்த ஜனவரி 1 முதல், முன்தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகிறது.

    அகவிலைப்படி உயர்வு காரணமாக, நாடு முழுவதும் உள்ள சுமார் 48 லட்சத்து 41 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 62 லட்சத்து 3 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார்.

    7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகள் அடிப்படையில் வகுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
    செல்போன் எண், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க சட்ட திருத்தங்கள் கொண்டுவர மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. #AadhaarCard
    புதுடெல்லி:

    நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட பெஞ்ச் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்தது. இருப்பினும், செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் அல்ல என்று கூறியது.

    இந்நிலையில், செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மீண்டும் சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெலிகிராப் சட்டத்திலும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.



    இதன்படி, புதிய செல்போன் இணைப்பு (சிம்கார்டு) பெறவும், வங்கி கணக்கு தொடங்கவும் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து ஆதார் எண்ணை அளிக்கலாம். இது, அவர்களின் விருப்பத்தை பொறுத்தது ஆகும். #AadhaarCard
    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1200 கோடி நிதி ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்னும் ஒரு சில நாட்களில் அளிக்க இருக்கிறது. #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பதவியில் இருந்தபோது 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி தமிழ்நாட்டில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் தலைமையில் தமிழகம் வந்த உயர்மட்டக் குழுவினர், குறிப்பிட்ட 5 இடங்களுக்கும் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

    ஆனால், அதன்பிறகு தொடர் நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் மத்திய அரசு இருந்துவந்ததால், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக கோர்ட்டில் பொது நல வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி டெல்லியில் மத்திய குழு கூடி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கியது.

    அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது. இந்த நிலையில், கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின நிதி குழு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிதி வழங்க ஒப்புதல் வழங்கியது. அதன் அடிப்படையில், அடுத்த சில நாட்களில் மத்திய அமைச்சரவை கூடி ரூ.1,200 கோடி நிதியளிக்க ஒப்புதல் அளிக்க இருக்கிறது.  #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    பாகிஸ்தானில் உள்ள கர்தார்புர் குருத்வாராவுக்கு சீக்கியர்கள் செல்ல வசதியாக சர்வதேச எல்லைவரை சாலை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. #UnionCabinet #Development #Gurdwara #Kartarpur
    புதுடெல்லி:

    சீக்கிய மத குருக்களில் முதன்மையானவர் குருநானக். அவர், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள கர்தார்புரில் சமாதி அடைந்ததாக கருதப்படுகிறது. அங்கு கட்டப்பட்ட குருத்வாராவில் அவருக்கு சமாதி எழுப்பப்பட்டு உள்ளது. சீக்கியர்கள் அங்கு புனிதப்பயணம் செல்வது வழக்கம்.

    ஆனால், அங்கு செல்லும் சாலை மோசமாக உள்ளது. ஆகவே, புதிய சாலை அமைக்க பாகிஸ்தானை வற்புறுத்தும் வகையில், பஞ்சாபில் இருந்து சர்வதேச எல்லைவரை சாலை அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.



    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் மாவட்டம் தேரா பாபா நானக்கில் இருந்து சர்வதேச எல்லைவரை சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். அவர் மேலும் கூறி இருப்பதாவது:-

    இது, இந்தியா-பாகிஸ்தான் உறவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியமான முடிவு. மத்திய அரசு நிதியில் இந்த சாலை அமைக்கப்படும். அதுபோல், சர்வதேச எல்லையில் இருந்து கர்தார்புர் குருத்வாராவரை சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருமாறு பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தப்படும். இதன்மூலம் ஆண்டு முழுவதும் சீக்கியர்கள் அங்கு எளிதாக சென்று வர முடியும்.

    அடுத்த ஆண்டு, குருநானக்கின் 550-வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், இது சீக்கியர்களுக்கு உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வானிலை ஆய்வை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு தற்போது அமல்படுத்தி வரும் 9 துணை திட்டங்களை 2020-ம் ஆண்டுவரை தொடர மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கப்பட உள்ளது.

    மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் சாதிகளை உட்பிரிவு செய்வது பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.ரோகிணி தலைமையிலான ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. அதன் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு மே 31-ந் தேதிவரை நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இது, இந்த ஆணையத்துக்கு 4-வது கால நீட்டிப்பு ஆகும்.  #UnionCabinet #Development #Gurdwara #Kartarpur
    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். #PChidambaram #AIIMS #MaduraiAIIMS
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்று நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-

    மாவட்டம்தோறும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 20-ந்தேதி காளையார்கோவிலில் நடக்கிறது.

    செயல் வீரர்களின் கூட்டங்களில் தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அந்த குழுவின் தலைவராக நான் உள்ளேன்.

    தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொதுமக்களின் கருத்துக்களை பதிவு செய்ய தனியாக வலைதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசிற்கு தேவையான 126 போர் விமானங்கள் வாங்குவதற்கு காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை தற்போதைய அரசு ரத்து செய்துள்ளது. ஆனால் 36 ரபேல் விமானங்கள் வாங்க பா.ஜனதா அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

    கடந்த ஆட்சியில் முடிவு செய்யப்பட்ட விலையை காட்டிலும் 9 சதவீதம் குறைவான விலைக்கு ரபேல் விமானங்களை வாங்குவதாக பா.ஜனதா அறிவித்தது. விலை குறைவு என்றால் அதனை கூறுங்கள் என்று கேட்டால் தெரிவிக்க மறுக்கிறார்கள். மேலும் குறைவான விலைக்கு விமானங்கள் வாங்குவது என்றால் அதிக விமானங்களை வாங்க வேண்டியதுதானே? ஏன் குறைத்து வாங்குகிறீர்கள்?.

    ராணுவ அமைச்சகம் பற்றி அதன் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதுவும் தெரியவில்லை. பா.ஜனதாவின் 4 ஆண்டு கால ஆட்சியில் 3 பேர் ராணுவ அமைச்சராக மாற்றப்பட்டுள்ளனர். யாரும் உருப்படியான எந்த காரியத்தையும் செய்யவில்லை. இந்த அரசு அடக்கு முறை கொள்கையை கையாண்டு வருகிறது.

    தொடர்ச்சியாக அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் சரிந்து வருவது பொருளாதார வீழச்சிக்கு வழிவகுக்கும். இதுபற்றி நான் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறேன்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கலாம். குற்றவாளிகள் நிற்க முடியாது என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை வரவேற்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கக்கூடாது என்ற நிலை வந்தால் தற்போதைய பா.ஜனதா அரசு அனைத்து காங்கிரஸ் தலைவர்கள் மீதும் குற்றத்தை சுமத்தி இருக்கும்.


    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தேர்தல் கமி‌ஷனால் தடுக்க முடியாதது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது.

    இந்தியாவில் வாக்குச் சீட்டு முறை தேர்தல் தான் தேவை என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் மறுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PChidambaram #AIIMS #MaduraiAIIMS
    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் படிப்படியாக நடைபெறும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். #AIIMS #RTI #Madurai #UnionCabinet

    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் மதுரை தோப்பூரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேர்வு செய்தோம்.

    4 வழிச்சாலை, ரெயில் நிலையம், மின்சார வசதி மற்றும் மருத்துவமனை அமையும் நிலத்துக்கு எந்த வில்லங்கமும் இருக்கக் கூடாது உள்ளிட்ட 5 நிபந்தனைகளை மத்திய அரசு விதித்தது.


    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டோம். மத்திய அரசு இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து அதன் பின்னர் படிப்படியாக பணிகள் நடைபெறும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், சுகாதாரத்துறை செயலாளரும் இது தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #AIIMS #RTI #Madurai #UnionCabinet

    தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்த விவரம் கேட்கப்பட்ட நிலையில், மதுரையில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #AIIMS #RTI #Madurai #UnionCabinet
    மதுரை:

    மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். 2 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட துவங்கும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை இயக்கத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

    அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக இதுவரை நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை எனவும் அந்த பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆய்வறிக்கை பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில் அடுத்தக்கட்ட பணிகளை மத்திய அரசு துவங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். #AIIMS #RTI #Madurai #UnionCabinet
    ×