search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் படிப்படியாக நடைபெறும் - ஆர்.பி.உதயகுமார்
    X

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் படிப்படியாக நடைபெறும் - ஆர்.பி.உதயகுமார்

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் படிப்படியாக நடைபெறும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். #AIIMS #RTI #Madurai #UnionCabinet

    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் மதுரை தோப்பூரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேர்வு செய்தோம்.

    4 வழிச்சாலை, ரெயில் நிலையம், மின்சார வசதி மற்றும் மருத்துவமனை அமையும் நிலத்துக்கு எந்த வில்லங்கமும் இருக்கக் கூடாது உள்ளிட்ட 5 நிபந்தனைகளை மத்திய அரசு விதித்தது.


    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டோம். மத்திய அரசு இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து அதன் பின்னர் படிப்படியாக பணிகள் நடைபெறும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், சுகாதாரத்துறை செயலாளரும் இது தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #AIIMS #RTI #Madurai #UnionCabinet

    Next Story
    ×