என் மலர்
நீங்கள் தேடியது "மதுரை"
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
- விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பாடும்.
மதுரை:
மதுரை தெற்கு கோட்டம் எல்லீஸ் நகர் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
இதனால், இத்துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் எல்லீஸ் நகர் மெயின்ரோடு, டி.என்.ஹெச்.பி அபார்ட்மென்ட், (எம்,ஹெச்,டி.ஆர் ஹெச் ப்ளாக்), டி.என்.எஸ்.சி.பி அபார்ட்மெண்ட் (ஏ-ஹெச் ப்ளாக்), போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் ஹாஸ்பிடல் ரோடு, மஹபூப்பாளையம், அன்சாரி நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, டி.பி. ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெரு, எஸ்.டி.சி ரோடு முழுவதும், பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம் சிலபகுதிகள், சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டேசன் (ரவுண்டானா), வசந்த நகர், ஆண்டாள் புரம், அக்ரிணி அபார்ட்மென்ட், வசுதரா அபார்ட்மென்ட், பெரியார் பேருந்து நிலையம், ஆர்.எம்.எஸ். ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி மற்றும் மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை, 70 அடி ரோடு, எல்லீஸ் நகர், தாமஸ் காலனி, பாரதியார் 1 முதல் 5 தெருக்கள், சாலைமுத்து நகர், போடி லைன், எஸ்.பி.ஐ. 2-வது காலனி, பொற்குடம், சத்தியமூர்த்தி நகர், அரசு போக்குவரத்து கழகம், அருன் நகர், கிரீன் லீவ்ஸ் அபார்ட்மென்ட், நேரு நகர், காவியன் அபார்ட்மென்ட் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் திருப்பாலை, மகாத்மா காந்தி நகர் ஆகிய துணை மின்நிலையங்களிலும் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இத்துணை மின்நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யா நகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், பி.டி.காலனி, பாமா நகர், பொறியாளர் நகர், ட்வடு காலனி, சொட்டிகுளம், சண்முகா நகர், விஜய் நகர், கலைநகரின் ஒரு சில பகுதிகள், மீனாட்சி நகர், ஈ.பி. காலனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம், காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மதுரை பெருநகர் வடக்கு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- செந்தில்குமார் அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.
- செந்தில்குமாரின் டீக்கடையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் மது அருந்தி வந்துள்ளனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 36). அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணமாகி காவியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே டீக்கடை நடத்தி வருகிறார். தினமும் அதிகாலையில் இவரே கடை திறப்பது வழக்கம். அதன்படி செந்தில்குமார் இன்று காலை கடையை திறக்க சென்றார்.
அப்போது அங்கு வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் செந்தில் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர்.
இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அதனை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த கொலை குறித்து தகவலறிந்த சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செந்தில்குமாரின் டீக்கடையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் மது அருந்தி வந்துள்ளனர். மேலும் அவர்கள் அந்த வழியாக செல்பவர்களிடம் தகராறு செய்து வந்தததாக கூறப்படுகிறது. இதனை செந்தில்குமார் கண்டித்து இங்கு மது அருந்தக்கூடாது என எச்சரித்துள்ளார். இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் போதை கும்பல் செந்தில்குமாரை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்ப டுத்தி உள்ளனர்.
கொலையான செந்தில்குமார் சாமநத்தம் ஊராட்சி துணை தலைவராக இருந்துள்ளார். மேலும் திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகனிடம் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ரஜினி ரசிகரான அல்போன்ஸ் வெறும் 5 ரூபாய்க்கு பரோட்டா வழங்கி வருகிறார்.
- இவரது சேவை சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.
மதுரையில் தீவிர ரஜினி ரசிகரான அல்போன்ஸ் வெறும் 5 ரூபாய்க்கு பரோட்டா வழங்கி வருகிறார். இவரது சேவை சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.
இந்நிலையில், தன்னுடைய ரசிகர் ஒருவர் 5 ரூபாய்க்கு பரோட்டா விற்று சேவை செய்து வருவதை அறிந்தரஜினிகாந்த் அவரை சந்திக்க ஆசைபட்டார். அவரை குடும்பத்துடன் வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து அல்போன்ஸ் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை சந்தித்தனர். அப்போது அல்போன்ஸிற்கு ரஜினிகாந்த் தங்க சங்கிலி அணிவித்து கௌரவித்தார். அவருடன் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
- தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உதவி மேலாளர் ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர்.
- கரும்புகை மண்டலம் ஏற்பட்டதால் அவரும் அலுவலக கதவு அருகே மயங்கி கிடந்துள்ளார்.
மதுரை:
மதுரை மேலவெளி வீதியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 17-ந்தேதி அலுவலகத்தின் 2-வது மாடியில் மாலை நேரத்தில் புதிய எல்.ஐ.சி. பாலிசி அறிமுக கூட்டம் நடந்தது. இதில் முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி, உதவி மேலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள், ஏஜெண்டுகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்தபின் அனைவரும் சென்ற நிலையில் கல்யாணி நம்பி, ராமகிருஷ்ணன் ஆகியோர் புறப்பட தயாரானபோது திடீரென அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
இதில் அலுவலக அறையில் ராம கிருஷ்ணன் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய படி கிடந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அலுவலகத்திற்குள் இருக்கையின் அடியில் முதுநிலை கிளை மேலாளர் கல்யாணி நம்பி உடல் கருகி இறந்து கிடந்தார்.
போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி தீ விபத்து வழக்காக பதிவு செய்தனர்.
இந்த நிலையில் கல்யாணி நம்பியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பவத்தன்று எனது செல்போனில் தொடர்பு கொண்ட எனது தாயார் என்னை காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..., போலீசாரை வரழையுங்கள் என்று சில நொடிகள் கதறினார். ஆனால் அங்கு சென்று பார்த்தபோது உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது அலுவலக அறை இரும்பு சங்கிலியால் பூட்டப்பட்டிருந்தது என்று அவரது மகன் லட்சுமி நாராயணன் போலீசில் புகார் செய்திருந்தார்.
இதையடுத்து கடந்த டிசம்பர் 17-ந்தேதி இரவு நடந்த எல்.ஐ.சி. கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர்.
தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உதவி மேலாளர் ராமகிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
மருத்துவ சிகிச்சையில் இருந்த ராம கிருஷ்ணனிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெண் மேலாளரை பெட்ரோல் ஊற்றி ராமகிருஷ்ணன் எரித்தது தெரியவந்தது.
விபத்து தொடர்பான காப்பீடு திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கல்யாணி நம்பிக்கு புகார் கிடைத்தது.
இந்த முறைகேட்டில் அங்கு உதவி மேலாளராக பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக ராமகிருஷ்ணனிடம், கல்யாணி நம்பி விசாரணை நடத்தி உள்ளார்.
அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கல்யாணி நம்பியை தாக்கவும் ராம கிருஷ்ணன் முயன்றுள்ளார். ஆனாலும் முறைகேட்டு தொகையை உடனடியாக அலுவலக கணக்கில் செலுத்துமாறு கண்டிப்புடன் கல்யாணி நம்பி கூறியதாக தெரிகிறது. மேலும் தாமதமானால் முறைகேடு தொடர்பாக போலீசில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இதனால் ராம கிருஷ்ணனுக்கு, மேலாளர் கல்யாணி நம்பி மீது கடும் ஆத்திரம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கூட்டம் முடிந்ததும் கல்யாணி நம்பி, ராமகிருஷ்ணனிடையே முறைகேடு தொடர்பாக மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை வெடித்துள்ளது. அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், அங்கு ஜெனரேட்டர் பயன் பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த பெட்ரோலை எடுத்து வந்து அலுவலக அறையில் இருந்த கல்யாணி நம்பி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அலுவலக அறையும் பூட்டி உள்ளார். இதனால் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த கல்யாணி நம்பி சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார்.
இந்த விஷயத்தில் தன் மீது சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது போன்று அனைவரும் நம்புவதற்காக அறைக்கு வெளியே மற்ற பகுதிகளிலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ராமகிருஷ்ணன் மீதும் தீப்பிடித்தது. அங்கு கரும்புகை மண்டலம் ஏற்பட்டதால் அவரும் அலுவலக கதவு அருகே மயங்கி கிடந்துள்ளார்.
இந்த நிலையில் தான் பொதுமக்கள் அவரை மீட்டுள்ளனர். ஆனால் கல்யாணி நம்பி அலுவலகத்திற்குள் இருந்ததாலும் தீ பரவி கரும் புகை சூழ்ந்திருந்ததாலும், மீட்க வந்தவர்களால் அவரை கண்டுபிடிக்க முடியாததால் தீயில் கருகி பலியாகி விட்டார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தீ விபத்தாக வழக்குப்பதிவு செய்திருந்த முதல் தகவலறிக்கையை மாற்றி கொலை வழக்காக திலகர் திடல் போலீசார் மாற்றினர். இந்த வழக்கில் உதவி மேலாளர் ராம கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.
- 11 காளைகளை அடக்கி பாசிங்காபுரத்தைச் சேர்ந்த தர் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இப்போட்டியை, இன்று காலை சுமார் 7:00 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
சுமார் 1,100 காளைகளும், ஏறத்தாழ 600 மாடுபிடி வீரர்களும் இப்போட்டியில் களமிறங்கி உள்ளனர். போட்டி மொத்தம் 10 முதல் 12 சுற்றுகள் நடைபெற்றது.
இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கி சிறந்த வீரருக்கான ரூ.8 லட்சம் மதிப்பிலான காரை கருப்பாயூரணி கார்த்தி பரிசாக தட்டிச்சென்றுள்ளார்.
இதேபோல், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் 2வது இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து, 11 காளைகளை அடக்கி பாசிங்காபுரத்தைச் சேர்ந்த தர் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தில் நின்று மிரட்டிய ஏவிஎம் பாலாவின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த காளைக்கான முதல் பரிசை வென்ற காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த காளைக்கான 2வது பரிசை வென்ற காளையின் உரிமையாளரான புதுக்கோட்டையை சேர்ந்த தமிழ்செல்வனுக்கு பைக் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த காளைக்கான 3வது பரிசை வென்ற காளையின் உரிமையாளரான மதுரையை சேர்ந்த கென்னடிக்கு இ-பைக் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
- போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார்.
- கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்
திருச்சியில் கடந்த 2-ந்தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருச்சியிலிருந்து நடைபயணம் தொடங்கிய வைகோ புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடைபயணத்தை மேற்கொண்டார். அவருடன் துரை வைகோ எம்.பி., மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100 தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாள்தோறும் வைகோ 15 முதல் 17 கிலோ மீட்டா் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு வைகோ வந்தார். அப்போது கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் உத்தங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றைய பயணத்தை முடித்துக் கொண்டார்.
தொடர்ந்து இன்று 11-வது நாள் நடைபயணமாக காலை ஒத்தக்கடையில் இருந்து மதுரை நகரை நோக்கி தனது நிறைவு நடைபயணத்தை வைகோ தொடங்கினார்.
இன்று மாலை மதுரை ஓபுளா படித்துறையில் வைகோ தனது நடை பயணத்தை நிறைவு செய்கிறார்.
இந்நிலையில், மதுரையில் சமத்துவ நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வரவேற்றார்.
அண்ணா நகர், தெப்பக்குளம், கீழ வெளி வீதி வழியாக செல்லும் அவர் இன்று மாலை 6 மணிக்கு தனது பயணத்தை நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
- கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
- மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
இதனிடையே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இரு நகரங்களிலும் இல்லை என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்தது.
20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, போபால், இந்தூர் போன்ற பிற நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர், "கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்படவில்லை. நிலம் எடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டன. விரிவான திட்ட அறிக்கை மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
- அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டுக்கான தேதி அட்டவணையை அறிவித்தார்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையன்று நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையில் மூர்த்தி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் ஆகியோரும் பங்கேற்றனர்.
அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டுக்கான தேதி அட்டவணையை அறிவித்தார்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் 17-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள்.
- இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வரவேற்பை பெற்றுள்ளன.
உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ். டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
அவ்வகையில் மதுரை புனித மரியன்னை பேராலயத்தில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது
கிறிஸ்மஸ் விழாவில் மீனாட்சி அம்மன் வேடத்தில் சிறுமியும், திருப்பரங்குன்றம் முருகன் வேடத்தில் சிறுவனும் பங்கேற்று கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வரவேற்பை பெற்றுள்ளன.
- புதிய பாலிசி அறிமுகம் தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினர்.
- தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அலுவலக உதவி நிர்வாக அதிகாரி ராம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை ரெயில் நிலையம் எதிரே உள்ள கட்டிடத்தின் 2 ஆம் தளத்தில் எல்.ஐ.சி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் புதிய பாலிசி அறிமுகம் தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்திவிட்டு இரவு 8.30 மணி அளவில் ஊழியர்கள் வீட்டுக்கு கிளம்பும்போது அலுவலகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
தீ பரவத் தொடங்கியதை அடுத்து ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடினர். ஆனால் சிலர் மட்டும் கட்டிடத்தின் உள்ளே சிக்கினர்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடுமையாக போராடி தீயை அனைத்து உள்ளே சிக்கியர்வைகளையும் மீட்டனர்.
ஆனால் நெல்லையை சேர்ந்த எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி (55) இந்த விபத்தில் துரதிஷ்டவசமாக உடல் கருகி உயிரிழந்தார். மேலும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அலுவலக உதவி நிர்வாக அதிகாரி ராம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏசி மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- பிரம்மாண்டமான கீழடி அருங்காட்சியகம்.
- உலகத் தரத்தில் ஹாக்கி மைதானம்.
தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும், வளர்ச்சியின் ஒளி பெருகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்.
பிரம்மாண்டமான கீழடி அருங்காட்சியகம்.
உலகத் தரத்தில் ஹாக்கி மைதானம்.
இவைதான் நமது திராவிட மாடல் பேசும் மதுரைக்கான வளர்ச்சி அரசியல்..
எய்ம்ஸ் வராது; மெட்ரோ ரெயில் தராது; கீழடி ஆய்வறிக்கையை மறைக்கும் பா.ஜ.க. பேசும் …….. அரசியல்.
தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும்! வளர்ச்சியின் ஒளி பெருகும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மகாலிங்கம் அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற வாசலில் தற்கொலை செய்துள்ளார்.
- காவலர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐகோர்ட் மதுரை கிளை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் மகாலிங்கம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற வாசலில் தற்கொலை செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் தனது தற்கொலைக்கு காரணம் யாரும் இல்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மகாலிங்கம் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






