search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bulls"

    • ஈஷா யோக மையத்தில் மார்ச் 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • முதல்கட்டமாக 200 மீட்டர் பந்தயப் போட்டி நடைபெற்றது.

    'தமிழ் தெம்பு' திருவிழாவின் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோக மையத்தில் ரேக்ளா பந்தயப் போட்டி இன்று (மார்ச் 17) விறுவிறுப்பாக நடைபெற்றது.

    200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் முதல் இடம் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

    தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றி கொண்டாடும் 'தமிழ் தெம்பு' என்னும் 9 நாள் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

    நிறைவு நாளான இன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக திகழும் மாட்டு வண்டிப் போட்டி (ரேக்ளா பந்தயம்) ஆதியோகி முன்பு நடத்தப்பட்டது. ஈஷாவில் முதல்முறையாக நடந்த ரேக்ளா போட்டியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    இதற்காக, கோவை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவே ஈஷாவிற்கு வருகை தந்தனர்.

    முதல்கட்டமாக 200 மீட்டர் பந்தயப் போட்டி நடைபெற்றது. தொடக்க புள்ளியில் இருந்து கொடி அசைத்த உடன் 2 நாட்டு மாடுகளுடன் கூடிய ரேக்ளா வண்டி மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்தது. ஒரு வண்டி பந்தய கோட்டை அடைந்த பின்னர் அடுத்த வண்டி அனுமதிக்கப்பட்டது. 

    ஒவ்வொரு நாட்டு மாடுகளும் காண்போரை அசர வைக்கும் வகையில் எல்லை கோட்டை நோக்கி சீறி பாய்ந்தன. 200 மீட்டர் போட்டி நிறைவு பெற்ற பின்னர் 300 மீட்டர் போட்டி நடத்தப்பட்டது. இவ்விழாவை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

    இரண்டு பிரிவிலும், முதல் இடம் பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

    2-ம் பரிசாக ரூ.50,000, 3-ம் பரிசாக ரூ.25,000, 4-ம் பரிசாக ரூ.15,000 வழங்கப்பட்டது. இதுதவிர 5 முதல் 15 வரையிலான இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.3,000-ம், 16 முதல் 30 வரையிலான இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.2,000-ம் பரிசு தொகையாக வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

    • ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி அடக்கினர்.
    • ஜல்லிக்கட்டு போட்டியின் போது 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி அடுத்த சோகத்தூர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தருமபுரி சேலம், புதுக்கோட்டை, மதுரை, கிருஷ்ணகிரி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி அடக்கினர்.

    இதில் தன்னை அடக்க வந்த வீரர்களை காளைகள் தூக்கி வீசியது. போட்டியில் காயம் அடைந்தவர்ளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், மிக்சி, மின்விசிறி, ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    இந்த ஜல்லிகட்டில் சுமார் 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டை பொதுமக்கள் மற்றும் ஜல்லிகட்டு ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியின் போது 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றதையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • பயமறியாத திமிழ் தழுவிய காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    டால்மியாபுரம்:

    கல்லக்குடி பேரூராட்சியில் இன்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியினை ஆர்.டி.ஓ. சிவசுப்பிரமணியன், லால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கம், தாசில்தார் முருகன், கல்லக்குடி பேரூரட்சி செயல் அலுவலர் கணேசன் முன்னிலையில், தொடங்கி வைத்தார்.

    திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, ஊட்டத்தூர் ஊராட்சி மன்ற இந்திரா அறிவழகன், அன்பழகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர், ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. மாடு பிடி களமானது எந்த வித வளைவுகளும் இன்றி நேர் பாதையாக அமைந்ததால், காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியில் வந்து, வீரர்களை சுழற்றி அடித்து நேராக புயலென விரைந்து சென்று கெத்து காட்டின.

    காளைகள் கெத்து காட்டினால் வீரர்கள் சும்மா இருப்பார்களா? சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடிக்க 450 வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் களமிறக்கப்பட்டனர். இவர்கள் அணி அணியாக மாடு பிடி களத்திற்குள் வந்து புயலென வாடி வாசலை விட்டு வெளியில் வந்த காளைகளை, லாவகமா மதில்களை தழுவி, தங்களின் புஜ பலத்தால் காளைகளை வீரர்கள் அடக்கினர்.

    திமிழ் உள்ள திமிரல், பாய்ந்து வந்து, காளைகள் வீரர்களை சிதறடித்தபோது, உன் திமிழ் பிடித்து, தமிரை அடக்குகிறேன் பார் என்று காளையர்கள் வீரம் காட்டிய போதும், பார்வையாளர்கள் மெய் சிலிர்த்து உற்சாகமாக கரகோஷம் எழுப்பி, கத்திய சத்தம் விண்ணை பிளந்தது. சிறப்பாய் சீற்றம் காட்டிய காளையின் உரிமையாளர்களுக்கும், பயமறியாத திமிழ் தழுவிய காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடை பெற்றதோடு, மாடுகள் காயமடைந்தால் சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். மேலும் காயமடையும் இளைஞர்களுக்கு சிசிக்கை அளிப்பதற்காக அவசர கால ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்களும் தயார் நிலையில் இருந்தனர். கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றதையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • எருது விடும் விழாவில், சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற, 20 பேர் காயமடைந்தனர்.
    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் எருதாட்டத்தை கண்டு கழித்தனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே தியாகரசனப்பள்ளியில், எருது விடும் விழா நடந்தது. சூளகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் மொத்தம், 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.

    விழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, கிடா வெட்டி சிறப்பு. பூஜை நடந்தது. அதன்பின் விழா திடலில் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.

    அவற்றை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தடுக்குகளை இளைஞர்கள் எடுத்தனர்.

    காளைகள் சீறிப்பாய்ந்த போது, அடக்க முயன்ற இளைஞர்கள் மற்றும் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என, 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அவர்கள், சூளகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் எருதாட்டத்தை கண்டு கழித்தனர்.

    விழாவில், 20,000க்கும் மேற்பட்டோர் திரண்டதால், சூளகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கால்நடை மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
    • காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, அண்டா, கட்டில், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டி ஏழை காத்த அம்மன், வல்லடிகார சுவாமி கோவில் திருவிழாவையொட்டி வருடம் தோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது.

    இணையதளம் வழியாக தேனி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், சேலம், கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதியில் இருந்து 4500 காளைகள், 2100 மாடு பிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். தகுதி அடிப்படையில் காளைகள் மற்றும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி 720 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதே போல் கால்நடை மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    பின்னர் ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளையை யாரும் பிடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்தன.

    இதனை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் போக்கு காட்டியது. அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, அண்டா, கட்டில், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதே போல் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். முன்னதாக உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி சின்னமனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    • போட்டியில் 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
    • வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் மற்றும் செபஸ்தியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    சிறப்பு திருப்பலிக்கு பின் தொடங்கப்பட்ட ஜல்லிக்கட்டில் காளைகள் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை,கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது. அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது.

    இதே போல் சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வாருங்கள் பார்ப்போம்... என்று கூறுவது போல் நின்று அருகில் வந்த காளையர்களை விரட்டியத்து பந்தாடியது. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் திமிலை இறுகப் பற்றி அனைத்து வெற்றி வாகை சூடினர். இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில் சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயம், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

    போட்டியில் 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார்.
    • 10 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

    உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 10 சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார். இவருக்கு, தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கினார்.

    இதற்கிடையே, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 51 பேர் காயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த , 10 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    25 காளை உரிமையாளர்கள், 22 மாடுபிடி வீரர்கள், 2 பார்வையாளர்களை, 2 போலீசார் என 51 பேர் காயமடைந்துள்ளனர்.

    • கீழக்கரை அருகே மேலவலசை கிராமத்தில் 263-வது ஆண்டு எருதுகட்டு விழா நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அடுத்துள்ள காஞ்சிரங்குடி மேலவலசை கிராமத்தில் பொன்னும் சிறை எடுத்த அய்யனார் கோவிலில் 263-ம் ஆண்டு எருதுகட்டு விழா நடைபெற் றது.

    இதில், 55 கிராமங்களில் இருந்து 55 காளைகள் போட் டியில் பங்கேற்றது. பின்னர் மைதானத்தில் அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக களத் தில் அவிழ்த்து விடப்பட் டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு அடக்கினர்.

    இதனை காண பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதில், மாடு முட்டியதில் காயமடைந்தவர்கள் ஆம்பு லன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச் சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை கோவில் டிரஸ்டி மேலவலசை கிழவன் தலைமையிலான விழாக் கமிட்டி யினர் சிறப்பாக செய்திருந் தனர்.

    • போட்டியை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இதில் நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

    விளாத்திகுளம்:

    காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. போட்டியை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஒட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசான ரூ.50 ஆயிரத்து ஒன்றை மகாவிஷ்ணு குமரட்டி யாபுரம்-ராமசுப்பு, டி.சுப்பையாபுரம் ஆகிய மாட்டு வண்டிகள் தட்டி சென்றது. எட்டையபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார் முதல் பரிசாக ரூ.50ஆயிரத்து ஒன்றை, வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு, பரிசுத்தொகை மற்றும் சில்வர் அண்டா பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    • வெற்றி பெறுபவர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு பரிசாக 10 கிராம் வெள்ளி வழங்கப்பட உள்ளது
    • இலக்கை நோக்கி காளைகள் சீறிப் பாய்ந்தது பொதுமக்களை பரவசப்படுத்தியது.

    உடுமலை:

    முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடுமலையை அடுத்துள்ள குருவப்பநாயக்கனூரில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் இலக்கை நோக்கி காளைகள் சீறிப் பாய்ந்தது பொதுமக்களை பரவசப்படுத்தியது.

    போட்டிகள் குறித்து திமுக., மாவட்ட அவைத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., இரா. ஜெயராமகிருஷ்ணன் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளம் மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதியில் இந்த ஆண்டு முழுவதும் ரேக்ளா பந்தயம் நடைபெறும்.

    இதில் 18 வினாடிகளுக்குள் வரும் மாட்டு வண்டி வீரர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு பரிசாக 10 கிராம் வெள்ளி வழங்கப்பட உள்ளது என்றார்.

    • மானாமதுரை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்ததில் 20 வீரர்கள் காயமடைந்தனர்.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரைஅருகே உள்ள பெரும்பச்சேரி சமய கருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மேட்டுமடை, பெரும்பச்சேரி கிராம மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடந்தது.

    சமய கருப்பணசுவாமி கோவிலில் பூஜைகள் நடத்தி ஜல்லிக்கட்டு தொடங்கி வைக்கப்பட்டது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட

    400-க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

    பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சேர், சில்வர் அண்டா, சைக்கிள், வெள்ளிக்காசு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று சிறப்பாக களமாடிய சிறந்த காளைகளுக்கும், அதிக காளைகளை பிடித்த வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் காளைகளை அடக்க முயன்ற 20 வீரர்கள் காயமடைந்தனர்.

    மானாமதுரை வட்டாட்சியர் ராஜா மேற்பார்வையில் நடந்த இந்த ஜல்லிக்கட்டில் காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்பதால் காங்கயம் இன நாட்டுமாடுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    குண்டடம்:

    குண்டடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் விவசாயம் மற்றும் கால்நடைகளை மூலதனமாக கொண்டு வாழ்கை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் புகழ் பெற்ற காங்கயம் இன நாட்டுமாடுகளை அதிகளவில் வளர்த்து வந்தனர்.

    இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட வறட்சி மற்றும் ரேக்ளா பந்தயத்தடை ஆகியவற்றினால் குண்டடம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நாட்டு மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்றனர்.

    இந்த நிலையில் ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்பதால் காங்கயம் இன நாட்டுமாடுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. மேலும் ரேக்ளா பந்தயத்தில் பரிசுபெறும் காளைகள் ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.

    இதனால் குண்டடம் பகுதி விவசாயிகள் அதிகமானோர் மீண்டும் நாட்டுமாடுகளை வளர்க்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் நாட்டு காளைகளை ரேக்ளா பந்தயத்திற்கும், ஜல்லிக்கட்டுக்கும் பயிற்சிகள் அளித்து வருகிறார்கள்.

    ×