என் மலர்
நீங்கள் தேடியது "Bulls"
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.
- 11 காளைகளை அடக்கி பாசிங்காபுரத்தைச் சேர்ந்த தர் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இப்போட்டியை, இன்று காலை சுமார் 7:00 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
சுமார் 1,100 காளைகளும், ஏறத்தாழ 600 மாடுபிடி வீரர்களும் இப்போட்டியில் களமிறங்கி உள்ளனர். போட்டி மொத்தம் 10 முதல் 12 சுற்றுகள் நடைபெற்றது.
இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கி சிறந்த வீரருக்கான ரூ.8 லட்சம் மதிப்பிலான காரை கருப்பாயூரணி கார்த்தி பரிசாக தட்டிச்சென்றுள்ளார்.
இதேபோல், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் 2வது இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து, 11 காளைகளை அடக்கி பாசிங்காபுரத்தைச் சேர்ந்த தர் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தில் நின்று மிரட்டிய ஏவிஎம் பாலாவின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த காளைக்கான முதல் பரிசை வென்ற காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த காளைக்கான 2வது பரிசை வென்ற காளையின் உரிமையாளரான புதுக்கோட்டையை சேர்ந்த தமிழ்செல்வனுக்கு பைக் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த காளைக்கான 3வது பரிசை வென்ற காளையின் உரிமையாளரான மதுரையை சேர்ந்த கென்னடிக்கு இ-பைக் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
- ஜல்லிக்கட்டு போட்டி மொத்தம் 10 முதல் 12 சுற்றுகளாக நடைபெறுகிறது.
- படுகாயம் அடைந்த 19 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பு.
உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்போட்டியை, இன்று காலை சுமார் 7:00 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
சுமார் 1,100 காளைகளும், ஏறத்தாழ 600 மாடுபிடி வீரர்களும் இப்போட்டியில் களமிறங்கி உள்ளனர். போட்டி மொத்தம் 10 முதல் 12 சுற்றுகளாக நடைபெறுகிறது.
இந்நிலையில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காவலர்கள், வீரர்கள், காளை உரிமையாளர்கள் என 48 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதில், வீரர்கள் 17 பேர், காளை உரிமையாளர்கள் 12 பேர், பார்வையாளர்கள் 15 பேர், காவலர்கள், தீயணைப்பு வீரர் என 4 பேர் காயமடைந்துள்ளனர்.
காளை முட்டியதில் படுகாயம் அடைந்த 19 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- வடமாடு விடும் விழாவினை அரசு வழிகாட்டுதலுக்குட்பட்டு நடத்துவது குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
- விதிமீறல்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் பாதுகாப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விடும் விழாவினை அரசு வழிகாட்டுதலுக்குட்பட்டு நடத்துவது குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
பின்னர் கலெக்டர் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா அரசு விதிகளின்படி நடத்தப்படுவதற்கான முழு பொறுப்பும் விழாக்குழுவினரைச் சார்ந்ததாகும்.
ஜல்லிக்கட்டு விழா அமைப்பாளர்களின் சில முக்கியமான கடமைகள் மற்றும் பொறுப்புகள் பின்வருமாறு:-
ஜல்லிக்கட்டு விழா நிகழ்வுகளை நடத்துவதற்கு அமைப்பாள ர்கள் முன்அனுமதியை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடமிருந்து பெறுவார்கள்.
ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கான கோரிக்கை முன்கூட்டியே எழுத்துப்பூர்வமாக நிகழ்வின் நடத்தப்படவுள்ள தேதியைக் குறிப்பிட்டு முறையான ஆவணங்களுடன் குறைந்தது 15 நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு விழாவின்போது நடைபெறும் அனைத்து நிகழ்விற்கும் தாங்களே பொறுப்பு என்னும் உறுதி மொழியும், முழு நிகழ்வும் தேசிய மயமாக்கப்பட்ட நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளதற்கான
விழாக்குழுவினரால் சமர்ப்பிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு விழாவில் அனுமதிக்கப்பட உள்ள அதிகபட்ச காளைகளின் எண்ணிக்கை, மற்றும் பங்கேற்க எதிர்பார்க்கப்படும் காளைகளின் உத்தேசப் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்திய பிராணிகள் நல வாரியம் வழங்கி உள்ள பல வகைகள் போதுமான எண்ணிக்கையில் நிறுவப்பட வேண்டும்.
விதிமீறல்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் பாதுகாப்பு கேமராக்கள் அல்லது வெப் கேம்கள், வாடிவாசல் உள்ளிட்ட அரங்கின் முக்கிய இடங்களில் அமைக்கப்பட வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தின் விருப்பப்படி அனுமதிக்கப்படும் கோவில் காளைகளை வாடிவாசல் அருகில் தனி பாதை வழியாக அனுப்பலாம். அந்த கிராம கோவில் காளைகளை மாடுபிடி வீரர்கள் யாரும் தழுவுதல் கூடாது.
பாக்கு வைத்து அழைக்கப்படும் காளைகளுக்கு தனியாக காளைகள் தங்குமிடம் அமைக்கப்பட வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் விவரங்களை thanjavur.tn.nic.in என்ற இணையதளத்தில் விழா நடைபெறும் 3 நாட்களுக்கு முன் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
- 2 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஆதினமிளகி அய்யனார் முத்துமணிஅய்யா கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 252 காளைகளும், 70 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். காளைகள் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு சேர், பீரோ, அண்டா, சைக்கிள் போன்ற பரிசுகளும் அமைச்சர் சார்பில் வழங்கப்பட்டது.
இந்த போட்டிக்கான ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் சுரேஷ் கருப்பையா அம்பலம், லேனா பெரிய தம்பி அம்பலம், மஞ்சரி லட்சுமண் ஆகியோர் செய்திருந்தனர். இந்த மஞ்சுவிரட்டில் 2 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியை விழா கமிட்டி சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது.
- சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்து கண்டு களித்தனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் மண்டபம் திறப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பூஞ்சிட்டு மற்றும் சிறியமாடு என 2 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை விழா கமிட்டி சார்பில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
பூசனூர் கிராமத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்து கண்டு களித்தனர். இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுத்தொகை மற்றும் பரிசுக்கோப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
- ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.
- காவல் ஆய்வாளர் கலாவாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டியில் பூங்குன்ற நாயகி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. சிவகங்கை , திருப்பத்தூர், பொன்னமராவதி, கீழச்சிவல்பட்டி, திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 208 காளைகளும், 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
போட்டியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். இந்த போட்டியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்க முற்பட்டனர்.
இதில் காளைகள் வீரர்களை தூக்கி வீசியது. காளைகள் முட்டியதில் 11 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை 24 அரை கிராமமக்கள் செய்திருந்தனர். கோட்டாட்சியர் பால்துரை, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கலாவாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.
- மானாமதுரை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்ததில் 20 வீரர்கள் காயமடைந்தனர்.
- ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரைஅருகே உள்ள பெரும்பச்சேரி சமய கருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மேட்டுமடை, பெரும்பச்சேரி கிராம மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடந்தது.
சமய கருப்பணசுவாமி கோவிலில் பூஜைகள் நடத்தி ஜல்லிக்கட்டு தொடங்கி வைக்கப்பட்டது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட
400-க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சேர், சில்வர் அண்டா, சைக்கிள், வெள்ளிக்காசு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று சிறப்பாக களமாடிய சிறந்த காளைகளுக்கும், அதிக காளைகளை பிடித்த வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் காளைகளை அடக்க முயன்ற 20 வீரர்கள் காயமடைந்தனர்.
மானாமதுரை வட்டாட்சியர் ராஜா மேற்பார்வையில் நடந்த இந்த ஜல்லிக்கட்டில் காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வெற்றி பெறுபவர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு பரிசாக 10 கிராம் வெள்ளி வழங்கப்பட உள்ளது
- இலக்கை நோக்கி காளைகள் சீறிப் பாய்ந்தது பொதுமக்களை பரவசப்படுத்தியது.
உடுமலை:
முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடுமலையை அடுத்துள்ள குருவப்பநாயக்கனூரில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் இலக்கை நோக்கி காளைகள் சீறிப் பாய்ந்தது பொதுமக்களை பரவசப்படுத்தியது.
போட்டிகள் குறித்து திமுக., மாவட்ட அவைத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., இரா. ஜெயராமகிருஷ்ணன் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளம் மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதியில் இந்த ஆண்டு முழுவதும் ரேக்ளா பந்தயம் நடைபெறும்.
இதில் 18 வினாடிகளுக்குள் வரும் மாட்டு வண்டி வீரர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு பரிசாக 10 கிராம் வெள்ளி வழங்கப்பட உள்ளது என்றார்.
- போட்டியை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- இதில் நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
விளாத்திகுளம்:
காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. போட்டியை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஒட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசான ரூ.50 ஆயிரத்து ஒன்றை மகாவிஷ்ணு குமரட்டி யாபுரம்-ராமசுப்பு, டி.சுப்பையாபுரம் ஆகிய மாட்டு வண்டிகள் தட்டி சென்றது. எட்டையபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார் முதல் பரிசாக ரூ.50ஆயிரத்து ஒன்றை, வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு, பரிசுத்தொகை மற்றும் சில்வர் அண்டா பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
- கீழக்கரை அருகே மேலவலசை கிராமத்தில் 263-வது ஆண்டு எருதுகட்டு விழா நடந்தது.
- 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அடுத்துள்ள காஞ்சிரங்குடி மேலவலசை கிராமத்தில் பொன்னும் சிறை எடுத்த அய்யனார் கோவிலில் 263-ம் ஆண்டு எருதுகட்டு விழா நடைபெற் றது.
இதில், 55 கிராமங்களில் இருந்து 55 காளைகள் போட் டியில் பங்கேற்றது. பின்னர் மைதானத்தில் அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக களத் தில் அவிழ்த்து விடப்பட் டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு அடக்கினர்.
இதனை காண பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில், மாடு முட்டியதில் காயமடைந்தவர்கள் ஆம்பு லன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச் சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை கோவில் டிரஸ்டி மேலவலசை கிழவன் தலைமையிலான விழாக் கமிட்டி யினர் சிறப்பாக செய்திருந் தனர்.
- 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார்.
- 10 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 10 சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார். இவருக்கு, தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கினார்.
இதற்கிடையே, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 51 பேர் காயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த , 10 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
25 காளை உரிமையாளர்கள், 22 மாடுபிடி வீரர்கள், 2 பார்வையாளர்களை, 2 போலீசார் என 51 பேர் காயமடைந்துள்ளனர்.
- போட்டியில் 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
- வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் மற்றும் செபஸ்தியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
சிறப்பு திருப்பலிக்கு பின் தொடங்கப்பட்ட ஜல்லிக்கட்டில் காளைகள் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை,கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது. அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது.
இதே போல் சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வாருங்கள் பார்ப்போம்... என்று கூறுவது போல் நின்று அருகில் வந்த காளையர்களை விரட்டியத்து பந்தாடியது. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் திமிலை இறுகப் பற்றி அனைத்து வெற்றி வாகை சூடினர். இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில் சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயம், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
போட்டியில் 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.






