search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bullock Cart Race"

    • போட்டியில் விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 57 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
    • சின்ன மாட்டு வண்டி போட்டியை விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    பூஞ்சிட்டு, சின்னமாடு என 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மதுரை, ராமநா தபுரம், விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 57 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. முதலாவதாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியை விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 2-வது பூஞ்சிட்டு மாடு முதல் சுற்றில் நடைபெற்ற போட்டியை மூர்த்தி தொடங்கி வைத்தார். பூஞ்சிட்டு மாடு 2-வது சுற்றை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுமதி இம்மானுவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது. வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த இந்த மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை சாலையின் இரு புறமும் நின்று ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

    • போட்டியானது சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக விளாத்திகுளம் - குளத்தூர் சாலையில் நடைபெற்றது.
    • சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் இடத்தை சண்முகாபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டி பிடித்தது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 63-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியானது சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக விளாத்திகுளம் - குளத்தூர் சாலையில் நடைபெற்றது. இதில் முதலாவதாக நடைபெற்ற சிறிய மாட்டு வண்டி பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    25 மாட்டு வண்டிகள் கலந்து கொண்ட சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் இடத்தை சண்முகாபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டியும், 2-வது இடத்தை ஏ.எம். பட்டி ரவி மாட்டு வண்டியும், 3-வது இடத்தை ஓட்டப்பிடாரம் கணேசன், சக்கம்மாள்புரம் தாவீது மாட்டு வண்டியும் பிடித்தன.

    வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளருக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 38 வண்டிகள் கலந்து கொண்டன. விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் கூடி நின்று மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் கிராம சமுதாய தலைவர் முருகன், செயலாளர் செல்வம், பொருளாளர் முத்துப்பாண்டி, துணைத் தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சுமதி இம்மானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சின்னமனூரில் ஏர் உழவன் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக முதலாம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடத்தப்பட்டது.
    • மேகமலை செல்லும் சாலையில் மாடுகள் 7 கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பியது.

    சின்னமனூர்:

    சின்னமனூரில் ஏர் உழவன் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக முதலாம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடத்தப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தில் இளம் சிட்டு, புள்ளிமான் சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான் சிட்டு, தேன் சிட்டு, கரிச்சான் என 6 பிரிவின்கீழ் சுமார் 150க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    சின்னமனூர் மேகமலை செல்லும் சாலையில் மாடுகள் 7 கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பியது. முதல்பரிசு 25 ஆயிரம் வழங்கப்பட்டது. மற்ற வண்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் வெற்றிபெற்ற மாடுகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம் சின்னமனூர் இரட்டை மாட்டு வண்டி நலச்சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. போட்டியை அ.இ.அ.தி.மு.க. தேனி மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாலாமணி மார்பன் ெகாடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் சின்னமனூர் நகர் பொறுப்பாளர்பிச்ச ைக்கனி, மாவட்ட பிரதிநிதி மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பந்தயத்தினை சாலையோரம் இருபுறங்களிலும் பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

    • கன்னிமார்கூட்டம் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
    • போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 31 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள கன்னிமார்கூட்டம் கிராமத்தில் காளியம்மன், பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சின்ன மாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 31 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

    மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    • துலுக்கன்குளம் - வேம்பாரில் நடந்த சின்ன மாட்டு வண்டி போட்டிக்கு 10 கிலோமீட்டர் வெற்றி இலக்காக நியமிக்கப்பட்டது.
    • பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முருகன் தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே துலுக்கன்குளம் கிராமத்தில் சந்தி மரிச்ச அம்மன், கருப்பசாமி கோவில் ஆடி கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடை பெற்றது. துலுக்கன்குளம் - வேம்பாரில் நடந்த சின்ன மாட்டு வண்டி போட்டிக்கு 10 கிலோமீட்டர் வெற்றி இலக்காக நியமிக்கப்பட்டது. போட்டியை மார்க்கண் டேயன் எம்.எல்.ஏ. கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    இதனையடுத்து பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. 6 கிலோ மீட்டர் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட போட்டியை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய லாளர் முருகன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மோ கன், இளைஞர் அணி தொ குதி அமைப்பாளர் சடை யாண்டி, தொண்ட ரணி அமைப்பாளர் ரெஸ்லி, கோவில்பட்டி ஒன்றிய செய லாளர் மாடசாமி, இளைஞர் அணி துணை செயலாளர் சண்முகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இதில் நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

    விளாத்திகுளம்:

    காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. போட்டியை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஒட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசான ரூ.50 ஆயிரத்து ஒன்றை மகாவிஷ்ணு குமரட்டி யாபுரம்-ராமசுப்பு, டி.சுப்பையாபுரம் ஆகிய மாட்டு வண்டிகள் தட்டி சென்றது. எட்டையபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார் முதல் பரிசாக ரூ.50ஆயிரத்து ஒன்றை, வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு, பரிசுத்தொகை மற்றும் சில்வர் அண்டா பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    • பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு 16 கிலோமீட்டர் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
    • கடம்பூர் கருணாகராஜா மாட்டு வண்டி முதலிடம் பிடித்து 2 பவுன் தங்க செயினை பரிசாக பெற்றது.

    எட்டயபுரம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் எட்டயபுரம் நகர தி.மு.க சார்பில் இன்று காலை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடந்தது.

    போட்டியில் பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு 16 கிலோமீட்டர் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியில் மொத்தம் 10 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    போட்டியை விளாத்தி குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கடம்பூர் கருணாகராஜா மாட்டு வண்டி முதலிடம் பிடித்து 2 பவுன் தங்க செயினை பரிசாக பெற்றது.

    சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டி 2-வது இடம் பிடித்து 1½ பவுன் தங்க செயினை பெற்றது. 3-வது இடம் பிடித்த நெல்லை மாவட்டம் வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டிக்கு ஒரு பவுன் தங்க செயினும், 4-வது இடம் பிடித்த மதுரை அவனியாபுரம் மோகன் சாமி குமார் மாட்டு வண்டிக்கு ரூ.5 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

    தொடர்ந்து நடந்த சிறிய மாட்டு வண்டி போட்டியில் 22 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிக்கு 4½ கி.மீ. தூரம் நிர்ணயிக்கப் பட்டது. போட்டிகளை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் ஆகி யோர் கொடித்து தொடங்கி வைத்தனர்.

    போட்டியில் முதலிடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ஒரு பவுன் தங்க செயினும், 2-வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ¾ பவுன் தங்க செயினும், 3-வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ½ பவுன் தங்க செயினும் 4-வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ரூ.5 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டன.

    இதில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், எட்டய புரம் பேரூர் செயலாளர் பாரதி கணேசன், கோவில் பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், எட்டயா புரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன், விளாத்திகுளம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் மணி கண்டன், மைக்கேல் ராஜ், தி.மு.க. வார்டு செயலாளர் சின்னப்பர், ராம்குமார் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சின்ன மாடு பிரிவில் 9 மாடுகள் பங்கேற்றது.
    • 5 கிலோமீட்டர் தூரம் கொண்ட பூஞ்சிட்டு பிரிவில் முதல் பரிசு ரூ.15 ஆயிரத்தை ஏ.எம். பட்டியை சேர்ந்த ஜெயசூர்யா மாட்டு வண்டி பெற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தில் உள்ள சந்தன மாரியம்மன், மாடசாமி கோவில் ஆனி மாத கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் விருசம்பட்டி-விளாத்திகுளம் சாலையில் நடத்தப்பட்டது. மாட்டுவண்டி பந்தயத்தை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சின்ன மாடு பிரிவில் 9 மாடுகள் பங்கேற்றது. இதில் முதல் பரிசு ரூ.20 ஆயிரத்தை சக்கம்மாள்புரத்தை சேர்ந்த கமலா மாட்டுவண்டியும், 2-வது பரிசு ரூ.15 ஆயிரத்தை மாமுநயினார்புரத்தைசேர்ந்த முஜின் பிரணவ் மாட்டு வண்டியும், 3-வது பரிசு ரூ.10 ஆயிரத்தை ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த முகிலன் மாட்டு வண்டியும், 4-வது பரிசு ரூ.5 ஆயிரத்தை சக்கம்மாள்புரம் தாவீது- அரசரடி கதிர்வேல் பாண்டியன் மாட்டுவண்டியும் பெற்றது.

    5 கிலோமீட்டர் தூரம் கொண்ட பூஞ்சிட்டு பிரிவில் முதல் பரிசு ரூ.15 ஆயிரத்தை ஏ.எம். பட்டியை சேர்ந்த ஜெயசூர்யா மாட்டு வண்டியும், 2-வது பரிசு ரூ.10 ஆயிரத்தை இந்திரா நகர் பாப்பா -பல்லாகுளம் சஷ்டிகா தங்கப்பாண்டி மாட்டுவண்டியும், 3-வது பரிசு ரூ.8 ஆயிரத்தை விளாத்திகுளம் காசிலட்சுமி- ராமச்சந்திராபுரம் மதுமிதா மாட்டு வண்டியும் பெற்றது. மாட்டுவண்டி பந்தயத்தை காண சாலை ஓரங்களில் கூடி நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    • புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டு போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
    • போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 41 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

    விளாத்திகுளம்:

    சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    இதில் புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டு போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நடமாடு, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 41 ஜோடி மாடுகள் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக ரொக்கப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு சீறி பாய்ந்த காளைகளை இருபுறமும் நின்று பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    நிகழ்ச்சியில் புதூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மும்மூர்த்தி, தனலட்சுமி டிம்பர்ஸ் உரிமையாளர் வாசுதேவன், சோலைசாமி, மருது பாண்டியன் மற்றும் விழா கமிட்டியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 35 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், ஒட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டியினர் சார்பில் பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள அயன்விருசம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள எல்லம்மாள் தேவி, கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

    இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 35 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. போட்டியானது 3 பிரிவுகளாக நடைபெற்றது. இந்த மாபெரும் பந்தயத்தை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செண்பகவல்லி கருப்பசாமி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    பின்னர் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், ஒட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டியினர் சார்பில் பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    மேலும் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இரு புறமும் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்து கண்டு களித்தனர். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் செண்பகவல்லி கருப்பசாமி, கிளை செயலாளர் ராமசாமி உட்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியை விழா கமிட்டி சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது.
    • சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்து கண்டு களித்தனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் மண்டபம் திறப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பூஞ்சிட்டு மற்றும் சிறியமாடு என 2 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை விழா கமிட்டி சார்பில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

    பூசனூர் கிராமத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை ஏராளமான பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்து கண்டு களித்தனர். இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுத்தொகை மற்றும் பரிசுக்கோப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    • பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.
    • முதலாவதாக நடை பெற்ற சிறிய மாட்டு வண்டி போட் டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தில் பெத்தனாச்சி அம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    இதில் நெல்லை, தென்காசி, விருதுநகர்,தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டி வேம்பார் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.

    சிறய மாட்டு வண்டி களுக்கு வெற்றி இலக்காக 10 கிலோமீட்டர் தூரமும், பெரிய மாட்டு வண்டிகளுக்கு 8 கிலோமீட்டர் தூரம் வெற்றி இலக்காகவும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளுக்கு 6 கிலோமீட்டர் தூரம் வெற்றி இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது.

    முதலாவதாக நடை பெற்ற சிறிய மாட்டு வண்டி போட் டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடி யசைத்து தொடங்கி வைத்தார். இதில் 38 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    2-வது போட்டியாக பெரிய மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 3-வதாக பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 15 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    சிறிய மாட்டுவண்டி போட்டியில் முதல் பரிசை புதியம்புத்தூர் விஜயகுமார் மாட்டு வண்டியும், பெரிய மாட்டு வண்டியில் முதல் பரிசை கடுகுசந்தை மோகன் மாட்டு வண்டியும், பூஞ்சிட்டு பந்தயத்தில் கயத்தாறு சரவணன் மாட்டு வண்டியும் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளருக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது. விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

    நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்ன மாரி முத்து, வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல்,சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×