search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "warriors"

    • கால்நடை மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
    • காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, அண்டா, கட்டில், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டி ஏழை காத்த அம்மன், வல்லடிகார சுவாமி கோவில் திருவிழாவையொட்டி வருடம் தோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது.

    இணையதளம் வழியாக தேனி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், சேலம், கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதியில் இருந்து 4500 காளைகள், 2100 மாடு பிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். தகுதி அடிப்படையில் காளைகள் மற்றும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி 720 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதே போல் கால்நடை மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    பின்னர் ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளையை யாரும் பிடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்தன.

    இதனை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் போக்கு காட்டியது. அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, அண்டா, கட்டில், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதே போல் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். முன்னதாக உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி சின்னமனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    • போட்டியில் 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
    • வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் மற்றும் செபஸ்தியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    சிறப்பு திருப்பலிக்கு பின் தொடங்கப்பட்ட ஜல்லிக்கட்டில் காளைகள் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை,கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது. அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது.

    இதே போல் சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வாருங்கள் பார்ப்போம்... என்று கூறுவது போல் நின்று அருகில் வந்த காளையர்களை விரட்டியத்து பந்தாடியது. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் திமிலை இறுகப் பற்றி அனைத்து வெற்றி வாகை சூடினர். இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில் சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயம், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

    போட்டியில் 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மணிமண்டபம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • இடஒதுக்கீடு போராட்டத்தில் மரணித்த 21 சமூக நீதி போராளிகளுக்கு அரங்கம் அமைக்க ஆய்வு மேற்கொண்டார்.

    விழுப்புரம்:

    உயர்கல்வித்துறை அமைச்சர்பொன்முடி , மாவட்ட கலெக்டர் பழனி,தலைமையில், விக்கிரவாண்டி எம்.எல்ஏ. புகழேந்தி , விழுப்புரம் எம்.எல்.ஏ டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில், விழுப்புரம் மாவட்டம், இடஒதுக்கீடு போராட்டத்தில் மரணித்த 21 சமூக நீதி போராளிகளுக்கு அரங்கமும், முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தலைவர் ஆ.கோவிந்தசாமிக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் விழு ப்புரம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் வழுதரெட்டி கிராமத்தில், ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மணிமண்டபம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் பொன்முடி கூறியதாவது ,

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் 2.9.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைத் தொடரில், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் 1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நீதி தியாகிகள் அரங்கம் அமைத்திட அறிவித்தார்கள்.

    மேலும், 6.9.2021 சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில், 2021- 2022 -ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையின் போது செய்தித்துறை அமைச்சர், முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தனிப்பெரும் தலைவரும், அண்ணா மற்றும் கருணாநிதி அமைச்ச ரவையில் சிறப்புடன் பணியாற்றியவருமானஆ.கோவிந்தசாமி யின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைத்திட அறிவித்தார். அதனடிப்படையில், விழுப்பு ரம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வழுதரெட்டி கிராமத்தில், ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான 1.12.0 ஹெக்டேர் பரப்பாவில் மணிமண்டபம் அமைப்பது தொடர்பான வரைபடம் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ெபான்முடி கூறினார்.

    ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் முன்னாள் நகர சபை தலைவர் ஜனகராஜ் மாநில தி.மு.க. விவசாய பிரிவு அமைப்பாளர் அன்னியூர் சிவா ,வருவாய் கோட்டாட்சியர் குமாரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்)சிவா, உதவி செயற்பொறியாளர் விஜயா, உதவி பொறியாளர் பாலாஜி, விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)கலையாமணி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்புல்லாணி அருகே சமத்துவ எருதுகட்டு விழா நடந்தது.
    • பல கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் கமிட்டியின் நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் தாதனேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் 57-ம் ஆண்டு சமத்துவ எருது கட்டு விழா நடந்தது. இதை ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக காளைகளின் கழுத்தில் வடமாடு கயிறு கட்டப்பட்டு மைதானத்தை சுற்றி வந்தன. இந்த மாடுகளை வீரர்கள் ஆர்வத்துடன் அடக்க முயன்றனர். ஆனால் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் மாடுகள் ஒவ்வொன்றும் திமிறியபடி மைதானத்தை சுற்றி வலம் வந்தன. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் 30-க்கும் மேற்பட்ட காளைகள் இந்த சமத்துவ எருது கட்டு விழாவில் கலந்து கொண்டன. எருதுகட்டு விழாவில் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்தர், ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எருதுகட்டு விழாவில் வெற்றி பெற்ற காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

    எருது கட்டு விழா ஏற்பாடுகளை பொக்கனாரேந்தல், பள்ளபச்சேரி, பால்கரை, முத்து வீரப்பன் வலசை, ராஜ சூரியமடை, கோவிந்தநேந்தல், திருப்புல்லாணி இந்திரா நகர், அச்சடிபிரம்பு, ஆனைக்குடி, வீரன் வலசை, தெற்குதரவை, கொடிக்குளம், வித்தானூர், எல்.கருங்குளம், ஆர்.காவனூர், ராமநாதபுரம் இந்திரா நகர் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் கமிட்டியின் நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளை மாடுகள் பங்கேற்றன.
    • போட்டியில் 4 பிரிவுகளில் ஒவ்வொரு சுற்றுக்கும் 40 வீரர்கள் களம் இறக்க பட்டு வீரர்கள் மாட்டை அடக்கினர்.

    விளாத்திகுளம்:

    தமிழகத்தின் தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது கட்டு திருவிழாவானது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாகுளம் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளை மாடுகள் பங்கேற்றன.

    இக்கிராமத்தில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த பாரம்பரிய திருவிழாவானது, கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக‌ கடந்த 4 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு புகழ்பெற்ற எருது கட்டு திருவிழா வெகு விமர்சியாக தொடங்கியது. 24 மாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் 4 பிரிவுகளில் ஒவ்வொரு சுற்றுக்கும் 40 வீரர்கள் களம் இறக்க பட்டு வீரர்கள் மாட்டை அடக்கினர்.

    முன்னதாக வீரர்கள் மற்றும் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னரே ஆடுகளத்தில் இறக்கினர். இந்த எருது விடும் விழாவை காண வெளியூர்களில் இருந்து வந்த பொதுமக்கள், பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினார்.

    ×