search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
    X

    மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

    • மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
    • 2 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஆதினமிளகி அய்யனார் முத்துமணிஅய்யா கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 252 காளைகளும், 70 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். காளைகள் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு சேர், பீரோ, அண்டா, சைக்கிள் போன்ற பரிசுகளும் அமைச்சர் சார்பில் வழங்கப்பட்டது.

    இந்த போட்டிக்கான ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் சுரேஷ் கருப்பையா அம்பலம், லேனா பெரிய தம்பி அம்பலம், மஞ்சரி லட்சுமண் ஆகியோர் செய்திருந்தனர். இந்த மஞ்சுவிரட்டில் 2 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    Next Story
    ×