மதுரை எல்லீஸ் நகர், திருப்பாலை பகுதிகளில் நாளை மின்தடை

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பாடும்.
மதுரை எல்லீஸ் நகர், திருப்பாலை பகுதிகளில் நாளை மின்தடை
Published on

மதுரை:

மதுரை தெற்கு கோட்டம் எல்லீஸ் நகர் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இதனால், இத்துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் எல்லீஸ் நகர் மெயின்ரோடு, டி.என்.ஹெச்.பி அபார்ட்மென்ட், (எம்,ஹெச்,டி.ஆர் ஹெச் ப்ளாக்), டி.என்.எஸ்.சி.பி அபார்ட்மெண்ட் (ஏ-ஹெச் ப்ளாக்), போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் ஹாஸ்பிடல் ரோடு, மஹபூப்பாளையம், அன்சாரி நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, டி.பி. ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெரு, எஸ்.டி.சி ரோடு முழுவதும், பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம் சிலபகுதிகள், சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டேசன் (ரவுண்டானா), வசந்த நகர், ஆண்டாள் புரம், அக்ரிணி அபார்ட்மென்ட், வசுதரா அபார்ட்மென்ட், பெரியார் பேருந்து நிலையம், ஆர்.எம்.எஸ். ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி மற்றும் மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை, 70 அடி ரோடு, எல்லீஸ் நகர், தாமஸ் காலனி, பாரதியார் 1 முதல் 5 தெருக்கள், சாலைமுத்து நகர், போடி லைன், எஸ்.பி.ஐ. 2-வது காலனி, பொற்குடம், சத்தியமூர்த்தி நகர், அரசு போக்குவரத்து கழகம், அருன் நகர், கிரீன் லீவ்ஸ் அபார்ட்மென்ட், நேரு நகர், காவியன் அபார்ட்மென்ட் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திருப்பாலை, மகாத்மா காந்தி நகர் ஆகிய துணை மின்நிலையங்களிலும் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இத்துணை மின்நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யா நகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், பி.டி.காலனி, பாமா நகர், பொறியாளர் நகர், ட்வடு காலனி, சொட்டிகுளம், சண்முகா நகர், விஜய் நகர், கலைநகரின் ஒரு சில பகுதிகள், மீனாட்சி நகர், ஈ.பி. காலனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம், காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மதுரை பெருநகர் வடக்கு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com