search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருத்வாரா"

    பாகிஸ்தானில் உள்ள கர்தார்புர் குருத்வாராவுக்கு சீக்கியர்கள் செல்ல வசதியாக சர்வதேச எல்லைவரை சாலை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. #UnionCabinet #Development #Gurdwara #Kartarpur
    புதுடெல்லி:

    சீக்கிய மத குருக்களில் முதன்மையானவர் குருநானக். அவர், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள கர்தார்புரில் சமாதி அடைந்ததாக கருதப்படுகிறது. அங்கு கட்டப்பட்ட குருத்வாராவில் அவருக்கு சமாதி எழுப்பப்பட்டு உள்ளது. சீக்கியர்கள் அங்கு புனிதப்பயணம் செல்வது வழக்கம்.

    ஆனால், அங்கு செல்லும் சாலை மோசமாக உள்ளது. ஆகவே, புதிய சாலை அமைக்க பாகிஸ்தானை வற்புறுத்தும் வகையில், பஞ்சாபில் இருந்து சர்வதேச எல்லைவரை சாலை அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.



    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் மாவட்டம் தேரா பாபா நானக்கில் இருந்து சர்வதேச எல்லைவரை சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். அவர் மேலும் கூறி இருப்பதாவது:-

    இது, இந்தியா-பாகிஸ்தான் உறவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியமான முடிவு. மத்திய அரசு நிதியில் இந்த சாலை அமைக்கப்படும். அதுபோல், சர்வதேச எல்லையில் இருந்து கர்தார்புர் குருத்வாராவரை சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருமாறு பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தப்படும். இதன்மூலம் ஆண்டு முழுவதும் சீக்கியர்கள் அங்கு எளிதாக சென்று வர முடியும்.

    அடுத்த ஆண்டு, குருநானக்கின் 550-வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், இது சீக்கியர்களுக்கு உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வானிலை ஆய்வை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு தற்போது அமல்படுத்தி வரும் 9 துணை திட்டங்களை 2020-ம் ஆண்டுவரை தொடர மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கப்பட உள்ளது.

    மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் சாதிகளை உட்பிரிவு செய்வது பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.ரோகிணி தலைமையிலான ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. அதன் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு மே 31-ந் தேதிவரை நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இது, இந்த ஆணையத்துக்கு 4-வது கால நீட்டிப்பு ஆகும்.  #UnionCabinet #Development #Gurdwara #Kartarpur
    ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி உறுதியளித்துள்ளார். #AfganSikhAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சமீபத்தில் ஐ.எஸ் அமைப்பினர் ஜலாலாபாத் பகுதியில் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் அதிபரை சந்திக்க சீக்கியர்கள் குழு சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்தது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, குருத்வாராவுக்கு சென்று இறந்த சீக்கியர்களுக்காக அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து, வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். #AfganSikhAttack
    பாகிஸ்தானில் குருத்வாராவுக்கு சென்ற இந்திய சீக்கிய யாத்ரீகர்களை சந்திக்கச் சென்ற உயர் தூதருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். #Pakistan #GurdwaraPanjaSahib
    சண்டிகர்:

    19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு அஞ்சலி லாகூரில் உள்ள குருத்வாரா தேரா சாகிப் ஆலயத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜூன் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் வாழும் சீக்கிய மதத்தினர் பாகிஸ்தான் சென்றுள்ளனர். அதற்காக 300 சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசாவும், சிறப்பு ரயில் சேவையும் பாகிஸ்தான் அரசு அறிவித்து இருந்தது.

    இதற்கிடையே, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற சீக்கிய யாத்ரீகர்களை காண சென்ற இந்திய வெளியுறவுத் துறை  உயர் அதிகாரி அஜய் பிசாரியாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்த சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகி பதிலளிக்குமாறு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை உயர் தூதருக்கு சம்மன் அளித்துள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் குருத்வாராவுக்கு சென்ற இந்திய சீக்கிய யாத்ரீகர்களை சந்திக்கச் சென்ற உயர் தூதருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானின் இந்த செயல் புதுடில்லிக்கு எதிரான குருட்டுத்தனமான மற்றும் முட்டாள்தனமான வெறுப்புணர்வே காரணம். சீக்கிய யாத்ரீகர்களை உயர் அதிகாரி சந்திக்க அனுமதி மறுத்த பாகிஸ்தானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். #Pakistan #GurdwaraPanjaSahib
    பாகிஸ்தானில் குருத்வாராவுக்கு சென்ற இந்திய சீக்கிய யாத்ரீகர்களை சந்திக்கச் சென்ற உயர் தூதருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. #Pakistan #GurdwaraPanjaSahib
    இஸ்லாமாபாத்:

    19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு அஞ்சலி லாகூரில் உள்ள குருத்வாரா தேரா சாகிப் ஆலயத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜூன் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் வாழும் சீக்கிய மதத்தினர் பாகிஸ்தான் சென்றுள்ளனர். அதற்காக 300 சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசாவும், சிறப்பு ரயில் சேவையும் பாகிஸ்தான் அரசு அறிவித்து இருந்தது.

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறையின் உயர் அதிகாரி அஜய் பிசாரியா, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற சீக்கிய யாத்ரீகர்களை காண குருத்வாரா சென்றுள்ளார். அங்கு செல்வதற்காக அவர் ஏற்கனவே அனுமதியும் பெற்றிருந்தார். ஆனால், சீக்கிய யாத்ரீகர்களை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகி பதிலளிக்குமாறு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை உயர் தூதருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. #Pakistan #GurdwaraPanjaSahib
    ×