search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்புதல்"

    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும்.
    • தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிக்காக 93 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தேர்தலுக்காக மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர், தாசில்தார், துணை தாசில்தார், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் என 93 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இதில் இளநிலை உதவியாளர் டைப்பிஸ்டு, எழுத்தர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு அரசின் வழக்கமான ஊதியத்தை வழங்கலாம் என்று தேர்தல் துறை அனுமதித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசின் தேர்தல் துறையில் பணியாற்ற கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்தலின்போது பல் வேறு வகையான பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டி உள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும். அதிலும் வாக்குப்பதிவு முடிவடைந்து ஓட்டு எண்ணி முடிக்கப்படும் வரை வேலைகள் மிக அதிகமாகிவிடும்.

    இதை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக 93 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சில பணியிடங்களுக்கு அரசின் ஊதியத்தை நியமிக்க முடியாத பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • தினமும் 6மணி நேரத்திற்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்கும் அடுத்த ஆறு மணி நேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும்.
    • கடல் உயிரினங்கள் முட்டையிட ஏரிக்கு வராததால் மீன்பிடித்தல் குறைந்து வருகிறது.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இதனை நம்பி சுற்றி உள்ள ஏராளமான மீனவ கிராமமக்கள் மீன்பிடித்து வருகிறார்கள். பழவேற்காட்டில் கடலும் ஏரியும் சந்திக்கும் இடமான முகத்துவாரம் வழியாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். 150-க்கும் மேற்பட்ட வகையான மீன்கள், இறால், நண்டுகள் கிடைத்து வருகின்றன.

    தினமும் 6மணி நேரத்திற்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்கும் அடுத்த ஆறு மணி நேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும். அப்போது கடல் வாழ் உயிரினங்கள் நீர் ஏற்றத்தின் போது ஏரிக்குள் நுழைவதும் இனப்பெருக்கம் செய்து விட்டு கடலுக்குள் வெளியேறுவதும் இயற்கையாக நடக்கும் நிகழ்வு ஆகும். இந்நிலையில் பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது .இதனால் கடல் நீர் ஏரிக்கும் ஏரி நீர் கடலுக்கும் செல்வது தடைபட்டதோடு ஏரியின் ஆழம் குறைந்து காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ரூ.27 கோடியில் திட்டமிடப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் மத்திய வனவிலங்கு துறை அனுமதி கொடுக்காததால் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. இதனால் தற்போது முகத்துவார பகுதி முழுவதும் மணலால் அடைபட்டு மீனவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதற்கிடையே பழவேற்காடு முகத்துவார பகுதியில் கற்கள் கொட்டி முகத்துவார சுவர் கட்ட மத்திய வனவிலங்கு வாரியம் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 17-ந்தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரிய கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முகத்துவாரத்தின் இருபுறமும் தலா 160 மீட்டர் மற்றும் 150 மீட்டர் என 2 சுவர்களைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

    எனவே விரைவில் பழவேற்காடு முகத்துவார பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, முகத்துவாரத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது. நீர் பரிமாற்றம் இல்லாததால், கடல் உயிரினங்கள் முட்டையிட ஏரிக்கு வராததால் மீன்பிடித்தல் குறைந்து வருகிறது. முகத்து வார பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என்றார்.

    • குடிநீர் திட்டத்துக்காக ரூ.1752 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளித்தது.
    • கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்றுவரும் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிடும் பொருட்டு அதற்கான பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 8 பேரூ ராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சி களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.1752.73 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த திட்டம் முடிவுறும் தருவாயில் தற்கால மக்கள் தொகையின்படி 11.39 லட்சம் பொதுமக்களுக்கு 49.83 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும். சிங்கம்பு ணரி பேரூராட்சி பகுதிக்குட் பட்ட தேனம்மாள்பட்டியில் 146 லட்சம் லிட்டர் கொள்ள வுள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியையும், 1118 மிமீ இரும்பு குழாய் பதிக்கும் பணியையும் மற்றும் காரைக்குடி நகராட்சிக்குட் பட்ட தி.சூரக்குடியில் பிர தான மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவைகளின் கட்டுமான நிலைகள் மற்றும் தரம் ஆகியவைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

    குடிநீர் திட்டப்பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் நிர்வாக பொறியாளர் நிர்மலா, திட்டக்கோட்ட உதவி நிர்வாக பொறியாளர் ஜான்சிராணி, மானாமதுரை திட்டக்கோட்ட உதவி நிர்வா பொறியாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நம் நாட்டில் மருத்துவ ரீதியான கருக்கலைப்பு மேற்கொள்ள சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
    • குழுவினர் விண்ணப்பங்களை ஆய்வு செய்து உரிய காரணங்கள் இருந்தால் கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து உரிய முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

    திருப்பூர்:

    நம் நாட்டில் மருத்துவ ரீதியான கருக்கலைப்பு மேற்கொள்ள சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கென தனி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் ஒரே ஒரு வாரியம் செயல்படுவதால், உரிய நேரத்தில் விண்ணப்பங்களுக்கு முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது.

    மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கருக்கலைப்பு அனுமதி வழங்குவதற்கென தனி வாரியம், குழு அமைக்க சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதன்படி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தலைமையில், மகப்பேறு மற்றும் பெண்கள் நல டாக்டர், பச்சிளம் குழந்தைகள் நலன் நிபுணர், கதிரியக்கவியல், குழந்தைகள் இதய நலன் மற்றும் நரம்பியல் ஆகிய துறைத்தலைவர்கள், மனநல ஆலோசகர், மருத்துவமனை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாரிய குழுவினர் விண்ணப்பங்களை ஆய்வு செய்து உரிய காரணங்கள் இருந்தால் கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து உரிய முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    • தொழில் நிறுவனங்களின் 721 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
    • இறுதி ஒப்புதல் இணைய வழியிலேயே பதிவிறக்கம் செய்யலாம்.

    மதுரை

    மதுரை கோர்ட்யாட் மேரியாட் விடுதியில் இன்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில், தொழில் மற்றும் வர்த்த கத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ் முன்னி லையில் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங் களைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் பிரிதிநிதி கள் பங்கேற்ற தொழில் நிறுவ னங்களுக்கான இணையவழி ஒற்றை சாளர முனையம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலெக்டர் அனீஷ்சேகர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்காகவும், தொழில் நிறுவனங்களின் வணிக மேம்பாட்டிற்காகவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தொழில் தொடங்குவதை எளிமையாக்க இணையவழி ஒற்றை சாளர முனையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒற்றை சாளர முனையத்தில் 200-க்கும் மேற்பட்ட அனுமதிகள் 25-க்கும் மேற்பட்ட அரசுத்து றை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த ஒற்றை சாளர முனையத்தின் மூலம் விண்ணப்பத்தில் உள்ள குறைகளை களைய ஒரே முறை குறைநிவர்த்தி வினவல் அனுப்பப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

    இறுதி ஒப்புதல் இணைய வழியிலேயே பதிவிறக்கம் செய்யலாம். உரிய கால வரம்பிற்குள் வழங்க ப்படாத ஒப்புதல்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட கால அளவிற்கு பிறகு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதப் படும்.

    ஒற்றை சாளர முனை யத்தின் செயலாக்கத்திற்கு பிறகு தமிழ்நாட்டின் வணிக வசதியாக்கல் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே ஒப்புதல் பெறும் நடைமுறை கள் தெளிவுபடுத்த ப்பட்டுள் ளது. இணைய வழியில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதால் கால விரையம் தவிர்க்கப்படு கிறது.

    ஒற்றை சாளர முனை யத்தின் மூலம் தமிழ்நாட்டில் 18 ஆயிரம் விண்ணப்பங்கள் துரிதமாக பரிசீலிக்கப்பட்டு 15 ஆயிரம் விண்ணப்பங் களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் 865 விண்ணப்பங்கள் துரிதமாக பரிசீலிக்கப்பட்டு 771 விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள் ளன. தொழில் நிறுவனங்கள் வசதிக்காக செயல்படுத்தப் பட்டு வரும் இந்தத் திட்டத்தை தொழில் முனை வோர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் கணேசன் (மதுரை) மாரிமுத்து (ராமநாதபுரம்) உள்பட அரசு அலுவலர்கள், மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.
    • முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: -

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் அறிவது, தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

    இக் கூட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதியுதவியாக (கல்வியுதவி தொகை) 1 முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2,000-மும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.4,000-மும், 9 முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.5,000-மும், 11 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.6,000-மும் உயர்த்தி வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு ரகுவுக்கு திருமணம் நடந்தது.
    • அன்று காலையில் ரகுவின் மனைவி, பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்ததை ரகுவின் நண்பர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    திருவனந்தபுரம்:

    ஒவ்வொரு வாலிபர்களுக்கும் வீட்டின் அருகிலும், பள்ளி, கல்லூரியிலும் நெருங்கிய நண்பர்கள் இருப்பது வழக்கம்.

    அந்த வாலிபர், படிப்பு முடிந்து ஒரு வேலையில் சேர்ந்தாலும் நெருக்கமான நண்பர்களை சந்தித்து அவர்களுடன் அரட்டை அடிப்பதில் அவருக்கு கிடைக்கும் ஆனந்தமே தனி. இரவு 9 மணி ஆனாலும் கூட இந்த அரட்டை கச்சேரிக்கு முடிவு இருக்காது.

    இவை எல்லாம் அந்த வாலிபருக்கு திருமணம் ஆகும்வரை மட்டுமே சாத்தியம். அதன்பின்பு இரவு தொடங்கியதும் அவர் வீட்டுக்கு சென்று விடவேண்டும். இல்லையேல் பெற்றோர் கண்டிப்பார்கள். அடுத்து மனைவியிடம் இருந்து அன்பு கட்டளை பிறக்கும்.

    வீட்டில் நான் தனியாக இருக்கிறேன். எனவே இரவானதும் வீட்டுக்கு வந்து விடுங்கள் என்ற மனைவியின் கட்டளை, அந்த வாலிபரை கொஞ்சம், கொஞ்சமாக நண்பர்களிடம் இருந்து பிரித்து விடும்.

    அதன்பிறகு எங்காவது, எப்போதாவது தான் நண்பர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போதும் ஹாய்... ஹாய் என்ற பேச்சுடன் அவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள். அப்போது அந்த நண்பர்களின் மனதில் ஓடும் எண்ணம், திருமணமானால் எல்லாம் மாறிவிடும் என்பதே ஆகும்.

    உலக நடைமுறையான இந்த நிகழ்வுகளில் இருந்து மாற பாலக்காடு, மலையக்கோடு பகுதியை சேர்ந்த ரகு என்பவரின் நண்பர்கள் முடிவு செய்தனர்.

    ரகுவுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம். ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி வரை நண்பர்களுடன் அமர்ந்து அரட்டை அடிக்காவிட்டால் அவருக்கு தூக்கம் வராது. அவருக்கு பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்தனர். நிச்சயதார்த்த விழாவில் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

    அவர்கள் ரகுவின் மனைவியாக போகும் பெண்ணை சந்தித்து பேசினர். அப்போது ரகு தங்களின் நெருங்கிய நண்பன் என்று கூறியதோடு, தங்களுடன் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி வரை அரட்டை அடித்துவிட்டு தான் வீட்டுக்கு போவான் என்று கூறினர். திருமணத்திற்கு பிறகும் அவனை தங்களுடன் அரட்டை அடிக்க அனுமதிக்க வேண்டும் என்று அன்பு கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ரகுவின் மனைவியாக போகும் பெண் ஒப்புக்கொண்டார். அப்போது, அவரிடம் பேசிய நண்பர்கள், இப்போது ஒப்பு கொள்வீர்கள், திருமணமானதும் மாறிவிடுவீர்கள் என்று கலாய்த்தனர். அதற்கு அந்த பெண் அப்படியெல்லாம் இல்லை என்றார்.

    உடனே நண்பர்கள் அப்படியானால் ஒரு 50 ரூபாய் பத்திரம் வாங்கி வருகிறோம், அதில் திருமணமானாலும் இரவு 9 மணி வரை கணவரை அவரின் நண்பர்களுடன் அரட்டை அடிக்க அனுமதிப்பேன், அடிக்கடி போன் போட்டு தொந்தரவு செய்யமாட்டேன் என்று எழுதி கையெழுத்திட்டு தாருங்கள் என்றனர். இதை கேட்டு முதலில் அதிர்ந்தாலும் அந்த பெண், கணவரின் நண்பர்கள் கூறியபடி எழுதி பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்தார்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரகுவுக்கு திருமணம் நடந்தது. அன்று காலையில் ரகுவின் மனைவி, பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்ததை ரகுவின் நண்பர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    அந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி பலரது பாராட்டையும் குவித்து வருகிறது. இப்படியும் நண்பர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    • நெல் மூட்டைகளை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பாததால் தேங்கியது.
    • குறுவை சாகுபடி நடைப்பெற்றுளதால் நடமாடும் கொள்முதல் நிலையங்களை தொடக்கி அதிகப்படுத்திட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொது ச்செயலாளர் சாமி.நடராஜன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தில் ஒரு பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதி ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    மேட்டூர் அணையில் இந்தாண்டு முன்கூட்டியே நீர் திறக்கப்பட்டதால் அரசு நிர்ணயித்த இலக்கையும் தாண்டி குறுவை சாகுபடி பரப்பளவு அதிகமாக செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை போதுமான அளவு திறக்கப்படவில்லை.

    திறக்கப்பட்டநிலைய ங்களிலும் விவசாயிக ளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படாததால் நெல்மூட்டைகள் ஒவ்வொரு மையங்களிலும் தேங்கிக்கிடக்கிறது.

    எனவே விவசாயிகள் கோரக்கூடிய இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

    கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைப்பெ ற்றுளதால் நடமாடும் கொள்முதல் நிலையங்களை துவக்கி அதிகப்படுத்திட வேண்டும்.

    தற்போது விவசாயிகளிடம் உள்ள முக்கிய பிரச்சனையான 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது என்பது ஏற்புடையதல்ல மழைக்காலம் என்பதால் தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சங்கத்தின் மாநிலதுணை செயலாளரும், மயிலாடுதுறை மாவட்ட செயலா ளருமான துரைராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் சிம்சன், குணசுந்தரி, மாவட்ட பொருளாளர் செல்லப்பா ஆகியோர் உடனிருந்தனர்.

    பெரு நிறுவனங்கள் திவால் ஆகும் போது வராக்கடன்களை திரும்ப செலுத்த வகை செய்யும் திவால் சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். #PresidentKovind
    புதுடெல்லி:

    பெரு நிறுவனங்கள் தொழிலில் நொடிந்து திவாலாகும் போது, அதன் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள், கடன் கொடுத்தவர்கள் ஆகியோரும் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் முற்றிலும் முடங்கும் சூழல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காகவும், அதில் தொடர்புடையவர்களுக்கு உரிய நிதி ஆதாயங்கள் கிடைக்க வகை செய்வதற்காகவும் திவால் சட்டம் கொண்டுவரப்பட்டது. 

    ஆனால், அதில் உள்ள சில அம்சங்களை தவறாகப் பயன்படுத்தி பலர் ஆதாயமடைவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு திவால் அவசரச் சட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்டது.

    திவாலான நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தை அணுக அதில் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட ஒரு நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டால், அதன் உரிமையாளர், மற்றொரு நிறுவனத்தின் வாயிலாக அதை ஏலம் எடுக்க அதில் தடை விதிக்கப்பட்டுள்ளது.



    புதிய சட்டத்தின்படி, வாராக் கடன்களை திருப்பிச் செலுத்திய பிறகே நலிவடைந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏலத்தில் பங்கெடுக்க அனுமதிக்கப்படுவர். இத்தகைய கட்டுப்பாடுகளால் திவால் சட்டத் திருத்தத்தை எவரும் தவறாகப் பயன்படுத்த இயலாத சூழல் உருவாகியுள்ளது. 

    இந்த அவசர சட்டம் மூன்று மாதங்களில் காலாவதி ஆகிவிடும் என்பதால், கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் திவால் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இது நிரந்தர சட்டமாகியுள்ளது.
    ×