என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மறைவு"
- அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்துள்ளார்.
- ஹாலிவுட் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
'கேப்டன் மார்வல்' படத்தில் காரெல் டென்வர்ஸ்க்கு தந்தையாக நடித்தவர் கென்னெத் மிட்ச்செல் (49).
இவர் 5 வருடங்களுக்கும் மேலாக அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்ளெரோசிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்துள்ளார்.
இந்நிலையில், கென்னெத் மிட்சசெல் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலமானார்.
இவரின் மறைவுக்கு ஹாலிவுட் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.
- அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில், கடந்த 4ம் தேதி தன் நண்பர் மற்றும் ஓட்டுநருடன் சுற்றுப்பயணம் சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.
இதில், வெற்றி துரைசாமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமானார். இவரை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீட்கப்பட்டது.
வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தவர் விஜயகாந்த்.
- சினிமாவில் சிகரம் தொட்டு அரசியலுக்கு காலடி வைக்கும் போது கூட மதுரை மண்ணில் தான் விஜயகாந்த் முதல் அரசியல் மாநாட்டை தொடங்கி கட்சி பெயரையும் அறிவித்தார்
ஒருவனின் மரணத்தில்... குழந்தை அழுதால் அவன் நல்ல தகப்பன்..., மனைவி அழுதால் அவன் நல்ல கணவன்..., ஆனால் அந்த ஊரே அழுதால் அவன் தான் தலைவன்...!!
இது ரமணா படத்தில் நடிகர் விஜயகாந்த் பேசிய பஞ்ச் டயலாக். எப்போதுமே பஞ்ச் டயலாக் பேசுவதில் ரஜினிக்கு போட்டியாக விஜயகாந்த் படங்களிலும் குறையிருக்காது. தனது ரசிகர்களை மகிழ்விக்க அரசியல் நெடி கலந்த பஞ்ச் டயலாக்குகள் பேசுவதில் விஜயகாந்த்துக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்று சொல்லலாம்.
சிறு வயது முதலே தான் வளர்ந்த மதுரை மண்மீது அளவற்ற பாசம் கொண்டவர் தான் விஜயகாந்த். 1991 ஆம் ஆண்டு வெளிவந்த மாநகர காவல் திரைப்படத்தில் "வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை" என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரசித்தம் பெற்றது என்றால் மிகையில்லை.
சினிமாவில் சிகரம் தொட்டு அரசியலுக்கு காலடி வைக்கும் போது கூட மதுரை மண்ணில் தான் விஜயகாந்த் முதல் அரசியல் மாநாட்டை தொடங்கி கட்சி பெயரையும் அறிவித்தார். அந்த அளவுக்கு தன்னை வளர்ந்த மதுரை மண்ணை தாயாக நேசித்தவர் விஜயகாந்த். அவரது ஆரம்ப கால வாழ்க்கையின் சில பிளாஷ் பேக், இதோ...
அழகர்சாமி- ஆண்டாள் தம்பதிக்கு பிறந்த விஜயராஜ் மதுரை தெற்கு வாசல் பகுதியில் பள்ளி படிப்பை தொடர அவரது தந்தை கீரைத்துரை பகுதியில் ரைஸ்மில் நடத்தி வந்தார். விஜயராஜூக்கு படிப்பு சரியாக வராததால் பத்தாம் வகுப்போடு பள்ளிக் கூடம் செல்வதற்கு குட்பை சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நேரத்தில் தன் தந்தை நடத்தி வந்த ரைஸ்மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்தார் விஜயராஜ். அப்போதே அவருக்கு சினிமா மீது அளவற்ற மோகம் இருந்தது. பகலில் ரைஸ் மில்லில் வேலை பார்த்துவிட்டு இரவுகளில் சினிமா கொட்டகைகளில் படம் பார்ப்பதில் ஆர்வம் கொண்டார் அதிலும் எம்.ஜி. ஆர். படங்களை விரும்பி பார்த்து வந்தார் விஜயராஜ்
எம்.ஜி.ஆர். போல நாமும் பிற்காலத்தில் நடிகராக, தலைவராக வரவேண்டும் என்று உத்வேகம் அப்போதே அவருக்குள் முளைவிட தொடங்கியது இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தனது வாலிப நண்பர்களுடன் அவ்வப்போது பேசிக் கொண்டும், இரவு நேரங்களில் பார்த்த சினிமாவின் கதைகளை அப்படியே அவர்களுக்கு பாடம் எடுப்பது போல ஒப்பிப்பதும் அவரது அன்றாட வழக்கமாக இருந்தது .
இந்த நேரத்தில் அவரது நண்பர்கள் மதுரை கரிமேடு பகுதியில் உள்ள ஒரு ஸ்டு டியோ இருக்கிறது அதன் பெயரே ராசி. அந்த ஸ்டுடியோவில் போய் படம் எடுத்தால் நீ சினிமாவுக்கு போய்விடலாம் என்று ஆசை காட்டினார்கள். எப்போதும் சினிமா வாய்ப்புக்காக கனவு கண்ட விஜயராஜுக்கு அது நன்றாக தோன்றி யது. இந்த வாய்ப்பை கெட்டி யாக பிடித்துக் கொள்ள விரும்பினார் விஜயராஜ்.
நேராக கரிமேடு பகுதியில் உள்ள ஸ்டூடியோவுக்கு சென்றார். ஸ்டுடியோவின் உரிமையாளரான ஆசைத்தம்பியை சந்தித்து தன்னை அறிமுகம் செய்தார் விஜயராஜ் அப்போது அவரும் மதுரைக்கார வாலிபரின் ஆசைக்கு பச்சை கொடி அசைத்து தானும் உதவுவதாக கூறினார். ஆசை தம்பிக்கு பல்வேறு பணிகள் இருந்த காரணத்தால் இரவு 11 மணிக்கு மேல் வரும்படி விஜயராஜியிடம் கூறி அனுப்பி வைத்தார். விஜயராஜ் சோர்ந்து விடவில்லை பகலில் ரைஸ்மிலில் பணிபுரிந்து விட்டு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அந்த ஸ்டூடியோவில் விதவித மாக போஸ்களை கொடுத்து தன்னை ஒரு திரை கலைஞ ராக உருவாக்க அடித்தள மிட்டார். ஆசைத்தம்பி எடுத்த நள்ளிரவு நேர ஸ்டில்கள் தான் விஜயராஜின் சினிமா ஆசைக்கு கை கொடுத்து வாய்ப்புக்கு வலுசேர்க்கும் வரப்பிரசாதமாக அமைந்தது.
இந்த படங்களை எடுத்து கொண்டு பல சினிமா கம்பெனிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் டைரக்டர்கள் என்று ஏறி இறங்கினார் விஜயராஜ். 1979-ம் ஆண்டு "இனிக்கும் இளமை" படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் தான் ரஜினி காந்த், கமலஹாசனுக்கு போட்டியாக விஜயராஜ் உருவெடுத்தார். அவரது நண்பர்களின் ஆலோசனைப்படி தனது பெயரையும் விஜயகாந்த் என்று மாற்றிக் கொண்டு திரையுலகத்தில் தடம் பதித்தார். அவர் தொட்ட சிகரம் மலைப்பானது. தனது நிறத்தால், உடல் தோற்றத்தால் தமிழ் திரையுலகில் பல்வேறு அவமானங்களையும் சந்திக்க விஜயகாந்த் தவறவில்லை. அவமானத்தை அவார்டாக மாற்றி மாபெரும் சாதனையை தமிழ் திரை உலகில் நிகழ்த்தினார் என்றால் அது விஜயகாந்த் ஒருவரால் தான் முடியும். ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தவர் விஜயகாந்த்.
சினிமா துறை மட்டுமல்ல அரசியலிலும் மாபெரும் வெற்றியை விஜயகாந்த் பெற்றார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகி எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்தார். வாழ்நாளில் பலருக்கு ஏணியாக வாழ்ந்த வர். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வாசகத்தை பட்டித் தொட்டி எங்கும் ஒலிக்க செய்தவர் விஜயகாந்த். இவரது மரணம் மதுரை மண்ணில் நீங்காத சோக அலையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முதல் மது ரையின் அனைத்து பகுதிக ளிலும் விஜயகாந்தின் சோக கீத திரை இசை அவரது நினைவை ஒலித்தபடி உள்ளன. அவனியாபுரம் பகுதியில் அவரது ரசிகர்கள் மொட்டை அடித்து மண்ணின் மைந்தனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் விஜயகாந்தின் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
படிப்பு வராவிட்டாலும் வந்த நடிப்பை ஒரு வாய்ப்பாக பிடித்து தமிழக திரையுலக மற்றும் அரசியல் வரலாற்றில் விஜயகாந்த் பிடித்த இடம் மகத்தானது யாரும் குறை சொல்ல முடியாத பொது வாழ்க்கைக்கு சொந்தக்கார ரான இந்த "நல்லவன்" புகழ் இம்மண்ணில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் காலமானார்.
- சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார்.
பூந்தமல்லி:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் இன்று காலமானார். அவர் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அட்கோ நகர் பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார். அதில் குடியேற ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டின் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொய்வடைந்த நிலையில் மீண்டும் வீடு கட்டும் பணிகள் வேகம் எடுத்தது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த வீட்டில் பால் காய்ச்சப்பட்டதாகவும் விஜயகாந்த் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டில் விஜயகாந்த் வசிக்க வேண்டும் என தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில் அந்த ஆசை நிறைவேறாமலே போனது.
- நாளை சேலம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருந்தார்.
- 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
தஞ்சாவூர்:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா என்ற பெயரில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தஞ்சையில் உள்ள வீட்டில் சசிகலா தற்போது தங்கியுள்ளார். கடந்த நான்கு நாட்களாக அவர் தஞ்சையில் இருந்தபடி திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் அவர் நாளை சேலம் மாவட்ட த்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருந்தார்.
ஆனால் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து நாளை துக்க நாளாக அனு சரிக்கப்படுகிறது.
இதனால் நாளை சேலம் மாவட்ட சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக நாளை மறுநாள் அதாவது 12-ந் தேதி திங்கள் கிழமை அன்று சேலம் மாவட்டத்திற்கும், 13-ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஈரோடு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்