search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "portfolio"

    மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள இணை மந்திரிகளுக்கான துறைகளின் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் பல்வேறு எம்.பி.க்கள் அமைச்சரவையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

    இந்நிலையில், மத்திய இணை மந்திரிகளுக்கான துறைகளின் விவரம் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு:



    பகன் சிங் குலாஸ்தே - எஃகுத்துறை
    அஷ்வினி குமார் சவுபே - சுகாதாரம் மற்றும் நலத்துறை
    அர்ஜூன் ராம் மேக்வால் - பாராளுமன்ற விவகார துறை, கனரக தொழிற்சாலை, பொதுத்துறை நிறுவனம்
    ஜெனரல் வி.கே.சிங் (ஓய்வு) - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை
    கிரிஷன் பால் - சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்
    தான்வே ராவ்சாகேப் தாதாராவ் - நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொதுத்துறை
    கிஷன் ரெட்டி -உள்துறை
    பர்ஷோத்தம் ரூபாலா - வேளாண் மற்றும் விவசாயிகள் நலம்
    ராம்தாஸ் அத்வாலே - சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்
    சாத்வி நிரஞ்சன் ஜோதி- நகர்ப்புற வளர்ச்சி
    பாபுல் சுப்ரியோ -சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்
    சஞ்சீவ் குமார் பால்யன் - விலங்குகள் நலம், மீன்வளத்துறை
    தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ் - மனிதவள மேம்பாடு, தொலை தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொடர்பு 
    அனுராக் சிங் தாக்கூர் - நிதித்துறை, கம்பெனிகள் விவகாரம்
    அங்காடி சுரேஷ் சன்னபசப்பா -ரெயில்வே துறை
    நித்யானந்த் ராய் - உள்துறை
    ரத்தன் லால் கட்டாரியா - ஜல் சக்தி, சமூக நீதி, அதிகாரமளித்தல்
    முரளீதரன்- வெளியுறவு துறை, பாராளுமன்ற விவகாரம்
    ரேணுகா சிங் சருதா - பழங்குடியின விவகாரம்
    சோம் பர்காஷ்- வணிகம், தொழிற்துறை
    ராமேஸ்வர் தேலி -உணவு பராமரிப்பு
    பிரதாப் சந்திர சாரங்கி - குறு, சிறு, நடுத்தர தொழிற்துறை, விலங்குகள், மீன்வளம்
    கைலாஷ் சவுத்ரி - வேளாண் மற்றும் விவசாயிகள் நலம்
    தேவஸ்ரீ சவுத்ரி- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
    காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டதால் கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. #KarnatakaMinistry #Portfolio #Congress #JDS
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத் தேர்தலில் 78 இடங்கள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ம.ஜ.க தலைவர் குமாரசாமி கடந்த மே 23-ம் தேதி அன்று முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால், அம்மாநில அமைச்சரவையில் எந்த கட்சிக்கு என்னென்ன துறைகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் இடையே நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

    இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டதால் கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 

    அதன்படி, கர்நாடக அமைச்சரவையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 12 துறைகளும், காங்கிரஸ் கட்சிக்கு 22 துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிதித்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரம், சுற்றுலா, கூட்டுறவு, போக்குவரத்து உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.



    இதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு உள்துறை, நீர்ப்பாசனம், சுகாதாரம், வேளாண், வனம், விளையாட்டு, வருவாய், சமூக நலத்துறை, ஊரக, நகர்ப்புறத்துறை உள்ளிட்ட 22 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    இதையடுத்து, விரிவாக்கம் செய்யப்பட்ட துறைகளின் மந்திரிகள் பதவியேற்கும் விழா வரும் 6-ம் தேதி நடைபெறும் என முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார். #KarnatakaMinistry #Portfolio #Congress #JDS
    ×