என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "TTV Dinakaran"
அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததால் கடும் அதிருப்தி அடைந்த நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விலகினார்.
கொள்கைக்கு எதிராக அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததாக புகார் கூறிய நடிகர் ரஞ்சித், கடந்த வாரம் வரை முதலமைச்சருக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது அவர்களோடு கூட்டணி வைப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.
இது குறித்து நடிகர் ரஞ்சித் கூறுகையில், இளைஞர்கள் எதிர்ப்பார்க்கும் தலைவர், நல்ல தலைமை தேவை என்பதால் தினகரன் கட்சியில் இணைந்ததாக தெரிவித்தார். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவரை தேர்வு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
நடிகர் ரஞ்சித் அமமுகவில் இணைந்தது இன்ப அதிர்ச்சியாக உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #ActorRanjith #TTVDinakaran
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
குக்கர் சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை. குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும். சின்னம் பெரிய விஷய மல்ல. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
மக்கள் தேர்தல் சின்னத்தை வைத்து மட்டும் வாக்களிக்கவில்லை. மக்களுக்கு யார் சேவை செய்கிறார்களோ அவர்களுக்குதான் வாக்களிக்கிறார்கள்.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது 29 அமைச்சர்களும், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் என எல்லோருமே தேர்தல் பணி செய்தனர். ஆனால், மக்கள் யாரும் இரட்டை இலைக்கு வாக்களிக்கவில்லை. குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனர்.
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல வருகிற பாராளு மன்ற தேர்தலிலும் தமிழக மக்கள் சேவை செய்பவர்களுக்கே வாக்களிப்பார்கள். சின்னம் என்பது பெரியவிஷயம் கிடையாது. மக்களுக்கு சேவை செய்யும் எங்களை போன்ற வேட்பாளர்களுக்குத்தான் வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள்.
குக்கர் சின்னம் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுள்ளோம். அந்த சின்னம் எங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி குறித்து எங்களுடன் சில கட்சிகள் பேசி வருகிறார்கள். இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும், 11 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் தொடர்பாகவும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கில் 11 எம்.எல். ஏ.க்களின் பதவி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.
அப்படி வந்தால் தமிழக சட்டசபை தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறும். இதனால் அரசுக்கு செலவு மிச்சம். நேற்று இரவு நான் உளுந்தூர்பேட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தேன். அப்போது அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
நான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரோ அல்லது அம்மாவோ அல்ல. நடிகர் விஜயோ, அஜீத்தோ அல்ல. ஆனால், நான் செல்லும் பகுதிகளில் மக்கள் எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
மக்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். தேர்தலில் எங்களுக்கு எந்த சின்னம் ஒதுக்கினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #parliamentelection #admk #cooker
தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று அ.ம.மு.க. கட்சியின் திருப்பரங்குன்றம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வி.வேட்டையன் தி.மு.க. வில் இணைந்தார். அவருடன் அந்த கட்சியின் மாவட்ட விவசாய அணி, துணை அமைப்பாளர் பி.முத்துசமி, நிலையூர் கிளைச்செயலாளர் முருகன் ஆகியோரும் இணைந்தனர்.
அப்போது தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.மூர்த்தி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK
அ.ம.மு.க. கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-
தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு கருத்து கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். இது ஜனநாயக நடை முறைகளை கேலிக்கூத் தாக்குவதாகும்.
திருவாரூரில் அ.ம.மு.க. வெற்றிபெறும் என்ற கள யதார்த்தத்தை உணர்ந்தே இந்த விஷயத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கைகோர்த்துள்ளன. இதற்கு சரியான தண்டனையை எப்போது தேர்தல் வந்தாலும் இந்த 2 கட்சிகளுக்கும் வழங்க திருவாரூர் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ElectionCommission #TTVDinakaran
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிராமப்புற மாணவர்களுக்கு இது பெரும் சுமையை ஏற்படுத்தும். ஏற்கனவே, நீட் என்கின்ற அடியிலிருந்து மீளாத அதிர்ச்சியில் நாம் உள்ள நிலையில், தற்போது தேசிய மருத்துவ ஆணையம் என்ற பேரிடியை நம் தலையில் இறக்க மத்திய அரசு தீர்மானித்துவிட்டது. எல்லா அதிகாரங்களையும் மாநிலத்திடமிருந்து பறித்து விழுங்கவேண்டும் என மத்திய அரசு நினைப்பது கண்டனத்திற்குரியது. அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் தடுக்கவேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.#TTVDinakaran
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
செல்போன் மற்றும் கணினி தகவல்களை கண்காணிக்கவும், இடைமறிக்கவும், சோதனையிடவும் மத்திய அரசு பல்வேறு உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு வானளாவிய அதிகாரம் கொடுத்திருப்பது கண்டனத்துக்குரியது.
இந்த விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு தவறு செய்திருந்தால் அதை திருத்த வேண்டுமே தவிர அதைக் காரணம் காட்டி பா.ஜ.க. அரசும் தவறு செய்வதை ஏற்க இயலாது. குற்றங்களைத் தடுக்க போதிய சட்டங்களும், அதிகாரங்களும் உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு ஏற்கனவே இருக்கும்போது இந்த உத்தரவு தேவையற்றது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மீது கைவைக்கும் செயல் இது. ஆகவே, மத்திய அரசு உடனடியாக இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVDinakaran
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கஜா புயலால் நிர்க்கதியாக்கப்பட்ட மக்களுக்கு எத்தனை எத்தனையோ உதவிடும் உள்ளங்கள் ஓடோடி வந்து உதவி புரிந்ததை, 11 நாட்கள் அப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாராண உதவிகளை வழங்கியபோது நேரில் கண்டேன்.
தொடக்கத்திலிருந்தே மேம்போக்காகவும், விளம்பரத்துக்காகவும் பழனிசாமி அரசு மறு சீரமைப்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக வெறும் வெற்றுப் பேட்டிகளை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தது.
தற்போது, 27 வகையான நிவாரண பொருட்களை கொடுக்கிறோம் என்று சொன்ன அரசு, அதை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக பத்திரிக்கை செய்தி வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
அரசு இயந்திரம் எந்த அளவிற்கு முறைகேடுகளுக்கு துணைபோயுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான், அந்நிவாரண பொருட்களை பேக்கிங் செய்யும் பணிக்கு அரசு ஊழியர்களை விடுத்து, சத்துணவு முட்டை ஊழலில் சிக்கிய, கிருஸ்டி குழுமத்திற்கு சொந்தமானது என்று சொல்லப்படும், பேக்கிங் அன்டு மூவர்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு, அப்பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
இப்பணியின்போது நிவாரணப் பொருட்களை மக்களுக்கு கொடுக்காமல் பணியாளர்களே எடுத்துக்கொண்டதோடு, 42 டன் அளவு ரவை மற்றும் 20 டன் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை கள்ளத்தனமாக விற்பனை செய்துள்ளதாகவும், இன்னும் முழுமையாக நிவாரண உதவிகள் மக்களிடம் போய் சேரவில்லை எனவும் அப்பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கறையற்ற தனத்தோடும், மக்களை ஏளனமாக பார்க்கும் எண்ணம் கொண்ட ஒரு அரசு தமிழகத்தில் அமைந்திருப்பது மிகப்பெரிய துரதிர்ஷ்டவசமானது. இது விரைவில் அகற்றப்பட வேண்டும்.
மனசாட்சியும், மனித நேயமும் அற்றுப்போன ஒரு செயலை இந்த அரசாங்கம் செய்திருப்பதாக வரும் செய்திகள் யாராலும் தாங்கிக் கொள்ளமுடியாத ஒன்று, இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த விரிவான விசாரணையை பழனிசாமி அரசு மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவருக்கும் அரசின் நிவாரண உதவிகள் முறையாக சென்று சேருவதை பழனிசாமி அரசு உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு தினகரன் கூறி உள்ளார். #GajahStorm #EdappadiPalanisamy #TTVDinakaran
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கஜா புயலால் பேரழிவை சந்தித்துள்ள நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களிலும், பாதிக்கப்பட்ட கிராமங்களிலும் சந்தித்தேன்.
கஜா புயலானது பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்த போதும், குறைந்தபட்சம் பத்து நாட்களாவது முகாம்களில் மக்கள் தங்கும்படி நேரும் என்பதை முன்கூட்டியே யோசித்து முறையான திட்டமிடல் இல்லாததால், அம்முகாம்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கான பால், ஜெனரேட்டர், மருத்துவ வசதி போன்ற முன்னேற்பாடுகளை இந்த அரசு செய்யத்தவறிவிட்டது என்பதை அறிய முடிந்தது.
போதிய அளவில் நடமாடும் மருத்துவ முகாம்கள் செயல்பாட்டில் இருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால், செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு சுகாதார குழுவைக் கூட பார்க்க முடியவில்லை என்று எங்களிடம் மக்கள் புலம்புகின்றனர்.
இதனிடையே, பாதிப்புகளுக்குள்ளான பகுதிகளில் இறந்துபோன கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்ய இயலாததாலும், மீட்பு பணிகளை விரைந்து செயல்படுத்தாததாலும் அனைத்து பகுதிகளிலும் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய ஆரம்பித்துள்ள இந்த சூழலை மனதில்கொண்டு தொற்று நோய் பரவாமல் தடுக்கவேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறது.
கிணற்றில் நீர் இருக்கிறது. ஆனால், அதை நீர் தொட்டிக்கு மேலேற்ற மின்சார வசதியில்லை. தனிநபர் வீடுகளில் மட்டுமல்ல, ஊர் பொது குடிநீர் தொட்டிக்கும் இதுதான் நிலைமை. இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டிய உள்ளாட்சித் துறையின் செயல்பாடு மக்களை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது.
வேளாண் தொழிலையே நம்பி வாழ்ந்துக் கொண்டிருக்கும் டெல்டா பகுதி மக்களின் பாதிப்பை பார்வையிடவோ, மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை அறியவோ வேளாண்மைத்துறை மற்றும், கிராம நிர்வாக அதிகாரிகளையாவது உடனடியாக கிராமங்களுக்கு அனுப்பி கணக்கீடு பணியை விரைந்து செய்திட வருவாய்த் துறையும் முன்வரவில்லை.
எனவே, வெறுமனே புள்ளி விவரங்களை மட்டுமே வெளியிடுவதை நிறுத்தி விட்டு, வருவாய், மின்சாரம், சுகாதாரம், உள்ளாட்சி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் என்னென்ன பாதிப்பு இருந்தது? எங்கே, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்பதை தனித்தனியாக வெளிப்படையாக ஒரு வெள்ளை அறிக்கை மூலம் வெளிப்படுத்தி மக்களுக்கும், எதிர்கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை போக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
அரும்பாடுபட்டு வளர்த்தெடுத்த தென்னை, வாழை, கரும்பு, நெல் போன்ற பயிர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் புயலுக்கு பலியானதை அம்மக்களால் இன்னும் மறக்க முடியவில்லை. மக்கள் விரும்பாத திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் உபயோகமில்லாத பணிகளுக்கு நிதியை அள்ளி இறைக்கும் அரசு, இயற்கை பேரிடரால் வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கும் மக்களுக்கு உரிய நிவாரணத்தை கொடுக்க மறுக்கிறது.
ஒவ்வொரு புயல்வரும் போது மாநில அரசுக்கு தேவையான உதவிகளைச் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று சொல்வதும்; ஆனால், மாநில அரசு கேட்கும் நிதியை உரிய நேரத்தில் தராமல் தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வஞ்சிப்பதும் மத்திய அரசின் வாடிக்கையாக இருக்கிறது. மத்திய அரசோடு இணக்கமாக இருந்து மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை பெற்றுத்தருவதாக சொல்லிக் கொள்ளும் இந்த அரசு ஏன் இடைகால நிவாரணம் கேட்கவில்லை?
பசிக்கு உணவு இல்லை, உடுத்த உடை இல்லை, படுத்துறங்க வீடூ இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, இருட்டில் ஒளியேற்றிட மெழுகுவர்த்தி இல்லை, இப்படி அத்தியா வசிய பொருட்கள் எதுவும் இல்லாமல், நிம்மதியும் இல்லாமல், வாழ்வாதாரத்தை புயலுக்கு காவு கொடுத்துள்ள அப்பாவி மக்களுக்கு ஏனென்று கேட்க அரசுமில்லை என்று வெம்பி அழும் ஓலங்களே போகுமிட மெல்லாம் கேட்க முடிகின்றது.
இதனை உணராமல், எதிர்க்கட்சியினர் தூண்டி விடுவதால்தான் மக்கள் போராடுகிறார்கள் என்று வெட்டி அரசியல் செய்வதும், கேள்வி கேட்பவர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியதாகும்.
மேலும், மக்கள் விரோத அரசு என்று முத்திரை பெற்ற பின், மற்ற மாநிலங்களைப் போல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டுமென சொல்வது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
ஆகவே, இனியாவது பழனிசாமி அரசு தங்களது பொறுப்பை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆக்கபூர்வமான பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDinakaran #AMMK #GajaCyclone
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியில் புயல் வெள்ள நீர் வடிகால் கட்டுமான பணிகளுக்காகவும் மற்றும் சாலைகள் அமைப்பதற்காகவும் கோரப்பட்ட ரூபாய் 740 கோடி மதிப்பிலான டெண்டரில், மிகப்பெரிய முறைகேட்டில் மாநகராட்சியின் முக்கிய அதிகாரிகள் கூட்டாக ஈடுபட்டிருப்பதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மழைக்காலங்களில் புயல் வெள்ள பாதிப்புகளால் மக்கள் தங்களது உடைமைகளை இழப்பதும், பல நேரங்களில் உயிர் சேதங்கள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதனை தடுக்கும் பொருட்டு, மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வதும், நீர் நிலைகளை முறையாக பராமரிப்பதும், விரிவுபடுத்துவதும் அவசியமான ஒன்று. அவ்வாறு மக்களின் வாழ்வாதாரத்தோடு ஒன்றிய பணிகளில் முறைகேடுகள் நடைபெற அனுமதிக்கும் அரசானது, மக்களின் நலனை சிறிதும் சிந்திக்காத மக்கள் விரோத அரசு என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.
திரும்பும் திசையெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு, காணும் காட்சியெல்லாம் நிர்வாக அவலம், இதுதான் பழனிசாமி ஆட்சியின் சாதனை. ஊழல் புகார் மயமான ஆட்சியில் மக்கள் நலன் புதைகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது என் பதைத்தான் இச்செய்தி காட்டுகிறது.
மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் உள்ளாட்சித்துறையில் பூதாகரமாக எழுந்து வரும் தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கள், அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் நடைபெறுவதைத்தான் எடுத்துரைக்கிறது. ஊழல் குற்றசாட்டுக்கு தொடர்ந்து உள்ளாகிவரும் உள்ளாட்சித்துறைக்கும், அதனை தடுக்கத் தவறும் பழனிசாமி அரசுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.
தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் அந்த 18 தொகுதிகளுக்கும் ஏற்கனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.
தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி தொடர்பான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரும் அரசியலில் ஈடுபட்டு இருப்பதால் தேர்தலில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழக காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கூறுகையில், தி.மு.க.வுடனான எங்கள் கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. இந்த கூட்டணியில் மற்ற கட்சிகள் சேர விரும்பினால் அதுபற்றிய இறுதி முடிவை காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “அ.தி.மு.க.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் எங்களைப் பொறுத்தவரை ஒன்றுதான். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மக்கள் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து போராடி வருகிறோம்.
இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் கூறுகையில், “தினகரன், அ.தி.மு.க. தலைமை பதவிக்கான போட்டியில் மோதிக் கொண்டு இருக்கிறார். அதில் உடன்பாடு ஏற்பட்டு ஒருமித்த கருத்து உருவானால் அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்து விடுவார். நாங்கள் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம். எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும்” என்றார். #TTVDinakaran #DMK #Congress #Communist
அமைச்சர் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசியல் பண்பாடு இல்லாமல் அமைச்சர்களை பட்டப்பெயர் சூட்டி இழிவாக, மலிவாக பேசி வந்த தினகரன் தான் ஏதோ மன்னர் பரம்பரையில் இருந்து வந்தது போல நினைத்துக் கொண்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை தொடங்கி அம்மாவால் அரசியலில் வளர்த்து எடுக்கப்பட்டவர்களை தரம் தாழ்ந்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
தனி நபர் தாக்குதல், மிரட்டல் போன்றவற்றையே பொழுதெல்லாம் கடைப்பிடிக்கும் தினகரன் இவற்றை எல்லாம் அவர் சென்று வந்த சென்னை மத்திய சிறை, கடலூர் சிறை, திகார் சிறை போன்ற இடங்களில் கற்றுக்கொண்ட பண்பாக இருக்கலாம்.
ஆனால் புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் பின்பற்றி நடக்கக்கூடிய நாங்கள் அத்தகைய இழிவான அரசியலை என்றைக்கும் மேற்கொண்டது இல்லை.
இந்நிலையில் பசும்பொன் தேவர் திருமகனாரின் குருபூஜைக்கு சென்று வந்த தினகரன் அந்த புண்ணிய திருத்தலத்தில் கேவலமான அரசியல் யுக்தியை கையில் எடுத்து அங்கு வைக்கப்பட்ட பேனர்களை அடித்து நொறுக்கி கிழிக்க வைத்து அதனை ரசித்தார் என்றால் தினகரனின் வக்கிர புத்திக்கு இதுவே சான்று ஆகும்.
மக்கள் முகம் சுளிக்கும் அந்தகாரியத்தை செய்து விட்டு அதனை பொதுமக்களின் மீதுபழி போட்டது தினகரனின் கிரிமினல் தனத்திற்கு சாட்சியாகும். இப்படி அரசியலில் அடிப்படை நாகரித்தையே சிதைக்கிற வேலையில் ஈடுபட்டு வருபவர் அவ்வப்போது அவர் அம்மாவின் மீதுகொண்டு இருக்கும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிகாட்டி வருகிறார்.
தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும் போது அம்மாவின் புனித பெயரால் வரும் நமது அம்மா நாளேட்டை நமது பாட்டி, நமது கொள்ளு பாட்டி என்று எல்லாம் அடை மொழி போட்டு அவர் அம்மாவின் மீது இருக்கும் எரிச்சலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அது மட்டுமல்லாது அம்மாவை அவமரியாதை செய்துள்ளார். அவர் பயன்படுத்திய சொற்களுக்குகாக டி.டி.வி.தினகரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MinisterUdhayakumar #TTVDinakaran
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்