என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Byமாலை மலர்5 Nov 2018 11:46 AM GMT (Updated: 5 Nov 2018 11:46 AM GMT)
ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்தது தொடர்பாக டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். #ADMK #MinisterUdhayakumar #TTVDinakaran
மதுரை:
அமைச்சர் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசியல் பண்பாடு இல்லாமல் அமைச்சர்களை பட்டப்பெயர் சூட்டி இழிவாக, மலிவாக பேசி வந்த தினகரன் தான் ஏதோ மன்னர் பரம்பரையில் இருந்து வந்தது போல நினைத்துக் கொண்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை தொடங்கி அம்மாவால் அரசியலில் வளர்த்து எடுக்கப்பட்டவர்களை தரம் தாழ்ந்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
தனி நபர் தாக்குதல், மிரட்டல் போன்றவற்றையே பொழுதெல்லாம் கடைப்பிடிக்கும் தினகரன் இவற்றை எல்லாம் அவர் சென்று வந்த சென்னை மத்திய சிறை, கடலூர் சிறை, திகார் சிறை போன்ற இடங்களில் கற்றுக்கொண்ட பண்பாக இருக்கலாம்.
ஆனால் புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் பின்பற்றி நடக்கக்கூடிய நாங்கள் அத்தகைய இழிவான அரசியலை என்றைக்கும் மேற்கொண்டது இல்லை.
இந்நிலையில் பசும்பொன் தேவர் திருமகனாரின் குருபூஜைக்கு சென்று வந்த தினகரன் அந்த புண்ணிய திருத்தலத்தில் கேவலமான அரசியல் யுக்தியை கையில் எடுத்து அங்கு வைக்கப்பட்ட பேனர்களை அடித்து நொறுக்கி கிழிக்க வைத்து அதனை ரசித்தார் என்றால் தினகரனின் வக்கிர புத்திக்கு இதுவே சான்று ஆகும்.
மக்கள் முகம் சுளிக்கும் அந்தகாரியத்தை செய்து விட்டு அதனை பொதுமக்களின் மீதுபழி போட்டது தினகரனின் கிரிமினல் தனத்திற்கு சாட்சியாகும். இப்படி அரசியலில் அடிப்படை நாகரித்தையே சிதைக்கிற வேலையில் ஈடுபட்டு வருபவர் அவ்வப்போது அவர் அம்மாவின் மீதுகொண்டு இருக்கும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிகாட்டி வருகிறார்.
தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும் போது அம்மாவின் புனித பெயரால் வரும் நமது அம்மா நாளேட்டை நமது பாட்டி, நமது கொள்ளு பாட்டி என்று எல்லாம் அடை மொழி போட்டு அவர் அம்மாவின் மீது இருக்கும் எரிச்சலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அது மட்டுமல்லாது அம்மாவை அவமரியாதை செய்துள்ளார். அவர் பயன்படுத்திய சொற்களுக்குகாக டி.டி.வி.தினகரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MinisterUdhayakumar #TTVDinakaran
அமைச்சர் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசியல் பண்பாடு இல்லாமல் அமைச்சர்களை பட்டப்பெயர் சூட்டி இழிவாக, மலிவாக பேசி வந்த தினகரன் தான் ஏதோ மன்னர் பரம்பரையில் இருந்து வந்தது போல நினைத்துக் கொண்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை தொடங்கி அம்மாவால் அரசியலில் வளர்த்து எடுக்கப்பட்டவர்களை தரம் தாழ்ந்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
தனி நபர் தாக்குதல், மிரட்டல் போன்றவற்றையே பொழுதெல்லாம் கடைப்பிடிக்கும் தினகரன் இவற்றை எல்லாம் அவர் சென்று வந்த சென்னை மத்திய சிறை, கடலூர் சிறை, திகார் சிறை போன்ற இடங்களில் கற்றுக்கொண்ட பண்பாக இருக்கலாம்.
ஆனால் புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் பின்பற்றி நடக்கக்கூடிய நாங்கள் அத்தகைய இழிவான அரசியலை என்றைக்கும் மேற்கொண்டது இல்லை.
இந்நிலையில் பசும்பொன் தேவர் திருமகனாரின் குருபூஜைக்கு சென்று வந்த தினகரன் அந்த புண்ணிய திருத்தலத்தில் கேவலமான அரசியல் யுக்தியை கையில் எடுத்து அங்கு வைக்கப்பட்ட பேனர்களை அடித்து நொறுக்கி கிழிக்க வைத்து அதனை ரசித்தார் என்றால் தினகரனின் வக்கிர புத்திக்கு இதுவே சான்று ஆகும்.
மக்கள் முகம் சுளிக்கும் அந்தகாரியத்தை செய்து விட்டு அதனை பொதுமக்களின் மீதுபழி போட்டது தினகரனின் கிரிமினல் தனத்திற்கு சாட்சியாகும். இப்படி அரசியலில் அடிப்படை நாகரித்தையே சிதைக்கிற வேலையில் ஈடுபட்டு வருபவர் அவ்வப்போது அவர் அம்மாவின் மீதுகொண்டு இருக்கும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிகாட்டி வருகிறார்.
தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும் போது அம்மாவின் புனித பெயரால் வரும் நமது அம்மா நாளேட்டை நமது பாட்டி, நமது கொள்ளு பாட்டி என்று எல்லாம் அடை மொழி போட்டு அவர் அம்மாவின் மீது இருக்கும் எரிச்சலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அது மட்டுமல்லாது அம்மாவை அவமரியாதை செய்துள்ளார். அவர் பயன்படுத்திய சொற்களுக்குகாக டி.டி.வி.தினகரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MinisterUdhayakumar #TTVDinakaran
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X