search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ள தடுப்பு பணி டெண்டரில் முறைகேடு- தினகரன் குற்றச்சாட்டு
    X

    வெள்ள தடுப்பு பணி டெண்டரில் முறைகேடு- தினகரன் குற்றச்சாட்டு

    சென்னை மாநகராட்சியில் புயல் வெள்ள தடுப்பு பணி டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதற்கு டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சியில் புயல் வெள்ள நீர் வடிகால் கட்டுமான பணிகளுக்காகவும் மற்றும் சாலைகள் அமைப்பதற்காகவும் கோரப்பட்ட ரூபாய் 740 கோடி மதிப்பிலான டெண்டரில், மிகப்பெரிய முறைகேட்டில் மாநகராட்சியின் முக்கிய அதிகாரிகள் கூட்டாக ஈடுபட்டிருப்பதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

    மழைக்காலங்களில் புயல் வெள்ள பாதிப்புகளால் மக்கள் தங்களது உடைமைகளை இழப்பதும், பல நேரங்களில் உயிர் சேதங்கள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

    இதனை தடுக்கும் பொருட்டு, மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வதும், நீர் நிலைகளை முறையாக பராமரிப்பதும், விரிவுபடுத்துவதும் அவசியமான ஒன்று. அவ்வாறு மக்களின் வாழ்வாதாரத்தோடு ஒன்றிய பணிகளில் முறைகேடுகள் நடைபெற அனுமதிக்கும் அரசானது, மக்களின் நலனை சிறிதும் சிந்திக்காத மக்கள் விரோத அரசு என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.

    திரும்பும் திசையெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு, காணும் காட்சியெல்லாம் நிர்வாக அவலம், இதுதான் பழனிசாமி ஆட்சியின் சாதனை. ஊழல் புகார் மயமான ஆட்சியில் மக்கள் நலன் புதைகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது என் பதைத்தான் இச்செய்தி காட்டுகிறது.

    மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் உள்ளாட்சித்துறையில் பூதாகரமாக எழுந்து வரும் தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கள், அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் நடைபெறுவதைத்தான் எடுத்துரைக்கிறது. ஊழல் குற்றசாட்டுக்கு தொடர்ந்து உள்ளாகிவரும் உள்ளாட்சித்துறைக்கும், அதனை தடுக்கத் தவறும் பழனிசாமி அரசுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran
    Next Story
    ×