search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanga tamilselvan"

    • தங்க தமிழ்ச்செல்வனுடன் பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமாரும் உடன் சென்றார்.
    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரியகுளம்:

    பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனது மகள் திருமணத்துக்கான அழைப்பிதழ் கொடுக்க அவரது வீட்டிற்கு சென்றார்.

    தங்க தமிழ்ச்செல்வத்தின் மகள் டாக்டர் சாந்திக்கும், சுப்பிரமணியனுக்கும் வருகிற 20-ந்தேதி திருமணம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருமண அழைப்பிதழை வழங்க தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றார். அவரை ஓ.பன்னீர்செல்வம் இன்முகத்துடன் வரவேற்றார்.

    தங்க தமிழ்ச்செல்வனுடன் பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமாரும் உடன் சென்றார். அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் மகள் திருமணத்துக்காக ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு தங்க தமிழ்ச்செல்வன் சென்றது இரு கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போடிக்கு எந்தஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
    • கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் போடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற ஞாயிற்றுக்கிழமை போடியில் ரூ.100 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள முல்லை பெரியாறு-கொட்டக்குடி கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் போடிக்கு வருகை தருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் குடிநீர் பிரச்சினையில் தன்னிறைவு அடையும். போடி சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அழைப்பு விடுக்கப்படும். அவர் வருவதும், வராமல் இருப்பதும் அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

    போடி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற பிறகு அவர் எத்தனை முறை ஊருக்கு வந்து மக்களை சந்தித்துள்ளார் என்பது இப்பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றுப்போன நான்தான் அடிக்கடி போடி தொகுதிக்கு வந்து மக்கள் நலத்திட்டங்களை பார்வையிட்டு செயல்படுத்தி வருகிறேன்.

    15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போடிக்கு எந்தஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தற்போது அவர் கேரளாவில் ஆயில் மசாஜ் எடுத்து வருகிறார். கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணி தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னம், பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை என்று அதன் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இது குறித்து தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னம், பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. இதை முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும். வருங்காலத்தில் தோல்வி ஏற்படாதவாறு கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

    இதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டம் 1-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிப்போம்.



    எங்களின் பிரசாரங்களை மக்கள் ரசிக்கவில்லை என்பது இந்த தேர்தலில் தெரிகிறது. என்னை பார்க்கும் பொதுமக்கள் ‘உங்களுக்குத்தான் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன் என்று கூறுகிறார்கள். கிராமங்களில் என்னை மக்கள் அ.தி.மு.க. கட்சிக்காரராகவே பார்க்கிறார்கள். இரட்டை சிலை சின்னம் மக்கள் மனதில் பதிந்துவிட்ட சின்னமாகவே உள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தோல்வியை வைத்து எதிர்காலத்தை முடிவு செய்து விட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்களை அ.தி.மு.க.வுக்கு இழுக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வருகிறதே? என்று கேட்டதற்கு தங்க தமிழ்ச்செல்வனுக்கு கிராக்கி இல்லாமல் இருக்குமா? என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

    அரசியல் பாதை என்பது நிதானமாக இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.

    அ.தி.மு.க.வில் பதவி கிடைத்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உடைக்க நீங்கள் தயாராக இருப்பதாக செய்திகள் வருவது குறித்து கேட்டதற்கு அது உண்மையல்ல. எனது அரசியல் பாதை தெளிவாக உள்ளது. அதன்படி செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.
    பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க பதவி ஏற்பார் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
    தேனி:

    தேனியில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேனி பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மக்கள் பணத்துக்கு மயங்கி விட்டனர். நாங்களும் பணம் கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும். காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றிருந்தால் கூட எனக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    இனி வரும் தேர்தல்களில் பணம் கொடுத்தால் மட்டுமே மக்களை வாக்களிக்க வைக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகி விட்டது. இத ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. தமிழகம் முழுவதும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற போது தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது எப்படி? இது தேர்தல் ஆணையத்தின் ஆசியால்தான் நடந்துள்ளது. இந்தியாவில் தேர்தல் ஆணையம் உள்ளதா? என்பதே சந்தேகமாக உள்ளது.


    இந்த வெற்றியின் மூலம் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தனக்குள்ள செல்வாக்கை பிரதமர் மோடியிடம் தெரிவிப்பார். அதன் மூலம் பா.ஜனதா ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.

    எங்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் கொடுத்தது தேர்தல் தோல்விக்கு மற்றொரு காரணமாக அமைந்து விட்டது. இந்த சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. தேர்தலில் எனக்கும் எங்களது கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றி. தோல்வியால் சோர்ந்து போகவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட அமேதியில் தோற்றுப் போயுள்ளார். இதே போல் தமிழகத்தில் தமிழிசை, எச்.ராஜா, அன்புமணி ராமதாஸ் போன்றோரும் தோற்றுப் போயுள்ளனர். தோல்வியில் இருந்து துவண்டு விடாமல் மீண்டும் எங்களது பயணம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    எனது அறையில் நடந்த சோதனை பாரபட்சமானது. அமைச்சர்களின் அறைகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்திற்காக அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் தங்கி இருந்து பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் தங்கி இருந்த விடுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து தங்க தமிழ்ச்செல்வன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-


    நான் இல்லாத நேரத்தில் எனது அறையில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி உள்ளனர். இது மிகவும் பாரபட்சமானது. திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்வதற்காக அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் லாட்ஜூகளில் தங்கி உள்ளனர். அவர்களின் அறைகளில் ஏன் சோதனை நடத்தவில்லை.

    காவல்துறை வாகனங்களிலும் பணம் கடத்தப்படுகிறது. எனவே அந்த வாகனங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அ.ம.மு.க. ஆட்சி டி.டி.வி.தினகரன் தலைமையில் அமைக்கப்படும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #AMMK #Thangatamilselvan
    திருப்பரங்குன்றம்:

    அ.ம.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திருப்பரங்குன்றத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாரணாசியில் பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தபோது வாக்கு எந்திரம் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதோ என்று சந்தேகித்து கேள்வி எழுப்பினோம்.

    தற்போது தேனியில் 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்திருப்பது குறித்து கலெக்டர், இது இயல்பான நிகழ்வு மட்டுமே என்று கூறியதன் அடிப்படையில் விளக்கம் கேட்டு வருகிறோம்.

    எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அமைந்த ஜானகி அம்மாளின் ஆட்சியை கலைத்தனர்.

    தற்போது எடப்பாடி ஆட்சியை கலைப்பதற்கு அனைத்து கட்சியினரும் கரம் நீட்டுவது இயல்பானது.

    இதனை கூட்டணி சேர்ந்து இருப்பது என்று கூறுவது தவறு. கலகத்தில் பிறப்பதுதான் நீதி. கலங்காதே... மயங்காதே... என்று எம்.ஜி.ஆரே கூறியுள்ளார்.

    சாமானியர்கள் முதற்கொண்டு இதுவரையில் எங்களிடம் ஆர்வமாக 22 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெற்றால் ஆட்சி கலைக்கப்படுமாயின் நிச்சயமாக பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்களித்து இருப்போம் என்று உற்சாகமாக தெரிவித்து வருகின்றனர்.

    வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஆட்சி கலைக்கப்படும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அ.ம.மு.க. ஆட்சி டி.டி.வி.தினகரன் தலைமையில் அமைக்கப்படும்.

    எடப்பாடி பழனிசாமி அரசு 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததும் நிச்சயமாக மெஜாரிட்டியை காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் தள்ளப்படும். அப்போது ஆட்சியை கலைப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும், உதிரிக் கட்சிகளும் இயல்பாகவே கை கொடுப்பது தான் நிதர்சனமான உண்மை. அதற்கு கூட்டணி என்ற பெயர் இல்லை.

    ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க. மிக மோசமான நிர்வாகம் மற்றும் பா.ஜ.க.வின் அடிமையாகவே செயல்பட்டு வருகின்றன. வருகிற 23-ந் தேதிக்குப் பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்.

    23-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு 22 தொகுதிகளிலும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி தோற்ற பின் நம்பிக்கை தீர்மானம் ஆளுநரிடம் கூற வேண்டும். யாராக இருப்பினும் எங்களது நிலைப்பாடு, எடப்பாடி தலைமைக்கு எதிரானதாக இருக்கும்.

    அ.தி.மு.க. 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஆட்சியை தொடரட்டும். ஆனால் எப்படி 22 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ளது?

    அ.தி.மு.க.வின் சகாப்தம் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பே இல்லை.

    அண்ணா பாதையில் மறப்போம் மன்னிப்போம் என்ற நிலை இருந்தால் மக்கள் ஒரு நாள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும் மறக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #AMMK #Thangatamilselvan
    பாரதிய ஜனதாவில் இணைவேனா? என தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். #ThangaTamilselvan #Panneerselvam
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஒரு நிருபர் பாரதிய ஜனதாவில் நீங்கள் சேரபோவதாக கூறப்படுகிறதே? என்று கேட்டார்.

    இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஓ.பன்னீர்செல்வம் நான் பாரதிய ஜனதாவில் சேரப்போவது என்பது அடிமுட்டாள் தனமான கருத்து என்று கோபத்துடன் பதில் அளித்தார். தொடர்ந்து இந்த கேள்வியை எழுப்பியபோது ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன். திரும்ப... திரும்ப... இதுபற்றி கேட்கிறீர்களே? யார் உங்களை தூண்டி விட்டு இப்படி கேட்க சொல்கிறார்கள்? என்று கூறினார்.

    அப்போது அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார் என அ.ம.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #ThangaTamilselvan #Panneerselvam
    தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார் என தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #ThangaTamilselvan #Panneerselvam

    மதுரை:

    மதுரையில் அ.ம.மு.க. வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது. அவர்கள் அமைத்துள்ள கூட்டணி மெகா கூட்டணி அல்ல. மக்கள் வெறுக்கும் அணி.

    எனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி படுதோல்வி அடையும். அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் தோல்வி பயம் வந்து விட்டது. இதனால் அவர்கள் கோபத்துடன் பேசி வருகிறார்கள்.

    மதுரையில் பேட்டி அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கோபமாக பேசி இருக்கிறார். இது ஏற்புடையதல்ல. ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.


    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிறபோது அ.தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை தழுவும்.

    இதனால் அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார்.

    தற்போது தேர்தல் விதிமுறை அமலில் உள்ளன. ஆனால் தோல்வி பயம் காரணமாக தேர்தல் விதிமுறைகளையும் மீறி விட்டு அமைச்சர்களும், அரசு கொறடாவும் சபா நாயகரை சந்தித்து பேசி உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #Panneerselvam

    ஒரு வாக்குக்கு ரூ.4 ஆயிரம் அல்ல ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #AMMK #ThangaTamilselvan
    மதுரை:

    திருப்பரங்குன்றத்தில் அ.ம.மு.க. சார்பில் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் கூறியதாவது:-

    4 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வினருக்கு பண பலம் மட்டுமே உள்ளது. மக்கள் ஆதரவு இல்லை.

    பணத்தை கொடுத்து அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் அவர்களால் டெபாசிட் கூட பெற முடியாது.

    ஒரு தொகுதிக்கு அவர்கள் ரூ.500 கோடி செலவு செய்வதாக தெரிகிறது. ஒரு வாக்குக்கு ரூ.4 ஆயிரம் அல்ல ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. இந்த தேர்தலோடு அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும்.

    தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. ஜெயலலிதா ஆட்சி எனக் கூறி தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு ஊழல் ஆட்சியே நடத்தி வருகிறது.



    முதல்வர் பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புதிய தலைமையை மக்கள் தேடி வருகிறார்கள். பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு உள்ளது. அதனால் தான் அந்த வழக்கில் அரசு தீவிரம் காட்டவில்லை.

    தி.மு.க. தொண்டர்களே ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது.

    நடந்து முடிந்த 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், நடக்க உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AMMK #ThangaTamilselvan
    ஆண்டிப்பட்டியில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும், அ.ம.மு.க.விற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #LoksabhaElections2019 #AMMK #ThangaTamilselvan
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நேற்று ஆண்டிப்பட்டியில் தேர்தல் அதிகாரிகள் ரூ.1.48 கோடி பணத்தை பறிமுதல் செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

    அந்த பணத்திற்கும், அ.ம.மு.க.விற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அ.தி.மு.க.வும், தேர்தல் ஆணையமும் இணைந்து ஜோடித்த நாடகம்தான் இது.

    அந்த வணிகவளாகம் அ.தி.மு.க பிரமுகர் அமரேஷ் என்பவருக்கு சொந்தமானது. அவ்வாறு இருக்கும்போது அவரது இடத்தில் நாங்கள் பணம் பதுக்கி வைக்க முட்டாள்களா? ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் ரூ.150 கோடி அளவுக்கு வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தார். இதுகுறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.



    பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தேனி பாராளுமன்ற தொகுதி மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த முயற்சி எடுக்கப்படுகிறதா என்பதற்கு விளக்கம் சொல்ல முடியாது.

    தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியமும் இல்லை. தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.க.வினரே இதுபோன்ற புகாரை பரப்பி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #LoksabhaElections2019 #AMMK #ThangaTamilselvan
    தேனி தொகுதியில் தனக்கும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும் இடையே தான் போட்டி நிலவுவதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #ThangaTamilselvan #ADMK #EVKSElangovan
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

    தினகரன் கட்சியில் முக்கிய பிரமுகராக உள்ள இவர் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இப்போது எம்.பி. தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்த தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    3 பேருமே பிரபல நபர்கள் என்பதால் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக தேனி உள்ளது.

    தேர்தல் போட்டி தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. அதுவும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் அந்த கட்சிக்கு மக்களிடம் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பொதுமக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் இப்போது எங்களையே ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் கட்சியில் மிகவும் ஜுனியர். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் என்ற ஒரே காரணத்தினால் அவரை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

    நான் அ.தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை அ.தி.மு.க.வில் முக்கிய பிரமுகராக இருந்தவர். அவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் சீனியர்.



    டி.டி.வி.தினகரனால் தான் ஓ.பன்னீர்செல்வம் அரசியலிலும், அரசிலும் முன்னுக்கு வந்தவர். இப்போது அவருக்கு எதிராகவே மாறி இருக்கிறார். இது அவருக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும்.

    இந்த தொகுதியில் உள்ள நிலைமை எனக்கு சாதகமாக இருக்கிறது. டி.டி.வி.தினகரன் இந்த தொகுதி எம்.பி.யாக இருந்து சிறப்பான சேவைகளை செய்தார். அவர் எல்லா தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றார்.

    இப்போது இங்குள்ள நிலவரப்படி அ.தி.மு.க. தனது செல்வாக்கை இழந்து விட்டது. அவர்கள் எல்லாம் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக மாறி விட்டார்கள். எனக்கும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. களத்திலேயே இல்லை.

    ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க.வை நாங்கள் தோற்கடித்தோம். அதுபோன்ற நிலை இங்கும் ஏற்படும். இந்த தொகுதியில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அவர்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது. கடந்த தேர்தலில் 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றது. அதே வேட்பாளரை இப்போது ஏன் நிறுத்தவில்லை?

    ஓ.பன்னீர்செல்வம் குடும்ப அரசியலை எதிர்ப்பதாக கூறுகிறார். ஆனால் தனது மகனை வேட்பாளராக்கி இருக்கிறார். தனது தம்பியை ஆவின் சேர்மனாக்கி இருக்கிறார்.

    இவ்வாறு தங்க தமிழ்ச் செல்வன் கூறினார். #LokSabhaElections2019 #ThangaTamilselvan #ADMK #EVKSElangovan
    தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி நீதிமன்றத்தை அணுகி முறையீடு செய்ய உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #LSPolls #Thangatamilselvan
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பரிசீலனை முடிவடைந்த நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் வேட்புமனு தாக்கலின் போது அளித்த சொத்து பட்டியலில் விஜயானந்த் நிறுவனத்தில் அவரும், அவரது சகோதரி கவிதாபானு, சகோதரர் ஜெயபிரதீப் ஆகியோர் இயக்குனர்களாக இருப்பதை மறைத்துள்ளார். மேலும் இந்நிறுவனத்தின் பெயரில் ரூ.24 லட்சம் மதிப்பிலான இடம் உள்ளதையும், இந்நிறுவனத்தின் சார்பில் ரூ.3.15 கோடி மதிப்பிலான காற்றாலை உள்ள தகவலையும் மறைத்துள்ளார். இது சட்டப்படி குற்றம்.

    இதனை ஆதாரப்பூர்வமாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்தேன். ஆனால் அதிகாரி என்ன காரணத்தாலோ மனுவை ஏற்றுக் கொண்டுள்ளார். எங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். நீதிமன்றத்தை அணுகி முறையீடு செய்ய உள்ளோம். எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Thangatamilselvan
    ×