search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டுக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது- தங்க தமிழ்ச்செல்வன்
    X

    ஓட்டுக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது- தங்க தமிழ்ச்செல்வன்

    ஒரு வாக்குக்கு ரூ.4 ஆயிரம் அல்ல ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #AMMK #ThangaTamilselvan
    மதுரை:

    திருப்பரங்குன்றத்தில் அ.ம.மு.க. சார்பில் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் கூறியதாவது:-

    4 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வினருக்கு பண பலம் மட்டுமே உள்ளது. மக்கள் ஆதரவு இல்லை.

    பணத்தை கொடுத்து அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் அவர்களால் டெபாசிட் கூட பெற முடியாது.

    ஒரு தொகுதிக்கு அவர்கள் ரூ.500 கோடி செலவு செய்வதாக தெரிகிறது. ஒரு வாக்குக்கு ரூ.4 ஆயிரம் அல்ல ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. இந்த தேர்தலோடு அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும்.

    தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. ஜெயலலிதா ஆட்சி எனக் கூறி தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு ஊழல் ஆட்சியே நடத்தி வருகிறது.



    முதல்வர் பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புதிய தலைமையை மக்கள் தேடி வருகிறார்கள். பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு உள்ளது. அதனால் தான் அந்த வழக்கில் அரசு தீவிரம் காட்டவில்லை.

    தி.மு.க. தொண்டர்களே ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது.

    நடந்து முடிந்த 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், நடக்க உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AMMK #ThangaTamilselvan
    Next Story
    ×