search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி தொகுதியில் வென்ற ஓபிஎஸ் கேரளாவில் ஆயில் மசாஜ் எடுத்து வருகிறார்- தங்க தமிழ்ச்செல்வன் சாடல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    போடி தொகுதியில் வென்ற ஓபிஎஸ் கேரளாவில் ஆயில் மசாஜ் எடுத்து வருகிறார்- தங்க தமிழ்ச்செல்வன் சாடல்

    • 15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போடிக்கு எந்தஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
    • கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் போடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற ஞாயிற்றுக்கிழமை போடியில் ரூ.100 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள முல்லை பெரியாறு-கொட்டக்குடி கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் போடிக்கு வருகை தருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் குடிநீர் பிரச்சினையில் தன்னிறைவு அடையும். போடி சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அழைப்பு விடுக்கப்படும். அவர் வருவதும், வராமல் இருப்பதும் அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

    போடி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற பிறகு அவர் எத்தனை முறை ஊருக்கு வந்து மக்களை சந்தித்துள்ளார் என்பது இப்பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றுப்போன நான்தான் அடிக்கடி போடி தொகுதிக்கு வந்து மக்கள் நலத்திட்டங்களை பார்வையிட்டு செயல்படுத்தி வருகிறேன்.

    15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போடிக்கு எந்தஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தற்போது அவர் கேரளாவில் ஆயில் மசாஜ் எடுத்து வருகிறார். கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணி தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×