search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvarur By election"

    திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர். #ThiruvarurByElection #SC
    புதுடெல்லி:

    தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது.

    இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. 10-ந் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்ககோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கஜா புயலால் திருவாரூர் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இதே போல சுப்ரீம் கோர்ட்டிலும் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி வைக்ககோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மாரிமுத்து என்பவர் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபில் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் முறையிட்டார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டோ அவசரமாக விசாரிக்க மறுத்து விட்டது.


    இதேபோல இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளரும், மேல்சபை எம்.பி.யுமான டி.ராஜா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இடைத்தேர்தல் அறிவிப்பு தொடர்பாக மத்திய அரசு வெளியிட உள்ள அரசாணைக்கு தடை விதிக்க கோரியும் அவர் கோரி இருந்தார்.

    டி.ராஜா சார்பில் சல்மான் குர்ஷித் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

    ஏற்கனவே அவசரமாக விசாரிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ள நிலையில் மீண்டும் அவசரமாக விசாரிக்க கோருவதா? என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. #ThiruvarurByElection #SC
    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #ThiruvarurByElection #MadrasHC
    சென்னை:

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் என்.ஜி. ஆர். பிரசாத் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

    அம்மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருவாரூர் எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    கஜா புயலினால், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு நிவாரண பணிகள் நடந்து வருகிறது. புயலின் பாதிப்பில் இருந்து அப்பகுதி இன்னும் முழுமையாக மீளவில்லை.



    அதனால், திருவாரூர் தொகுதியில் நிவாரண பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது. இதனால் மிகப்பெரிய முறைகேடு நடைபெறும்.

    தேர்தலில் ஆளும் கட்சிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். எனவே, திருவாரூர் தொகுதிக்கான தேர்தலை நடத்த தடை விதிக்கவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தடையில்லை என்று கூறி, தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும் திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மற்றொரு வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க  உத்தரவிட்டு பிப். 7-தேதிக்கு  விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  #ThiruvarurByElection #MadrasHC
    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளதால் மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. #thiruvarurelection

    திருவாரூர்:

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 31-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

    இதன் அடிப்படையில் தேர்தல் செலவின கட்டுப்பாடுகளை கண்காணிக்க சட்டமன்ற தொகுதி வாரியாக 9 பறக்கும் படைகள், 6 நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் திருவாரூர் தொகுதியில் மட்டும் கங்களாஞ்சேரி, கானூர், சோழங்கநல்லூர், கிளரியம் , உத்திரங்குடி, வடபாதிமங்கலம், குடிதாங்கி சேரி, செல்லூர் உள்பட 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த சோதனை சாவடிகளில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 போலீசார் கொண்ட குழுவினர் தொடர்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தெரிவித்துள்ளார். அதன்படி திருவாரூரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவாரூர் அருகே காணூரில் உள்ள சோதனை சாவடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.  #thiruvarurelection

    திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #ThiruvarurByElection
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் ஒரு தொகுதிக்கு தானே வருகிறது. மற்ற தொகுதிகளுக்கு எப்படி வரும். திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சரவணன் வழக்கு போட்டு அங்கு தேர்தல் வரவிடாமல் செய்துள்ளார். மற்ற 19 தொகுதிகளுக்கும் தேர்தல் வர வேண்டும் என நினைக்கிறேன்.

    தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு ஜனவரி 25 வரை காலம் உள்ளது. அதற்கு முன்னர் எப்படி 18 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதியை அறிவிக்க முடியும்.

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தடை கேட்டு கபில்சிபில் மூலம் உச்சநீதிமன்றத்தில் யாரோ வழக்கு தொடுத்துள்ளதை பார்க்கும்போது அதற்கு பின்னணியில் யார் இருப்பார்கள் என்பது தெரியும். தேர்தலை வேண்டாம் என்று நினைப்பவர்கள், தேர்தலை கண்டு பயப்படுகிறவர்கள் தான் இதனை செய்துள்ளார்கள்.

    எல்லா தரப்பினரும் ஏமாற்றப்படுகிற நிலையில் தான் தற்போது தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறது. தேர்தல் வந்தால் இந்த ஆட்சி நீடிக்குமா? என்று தெரிந்து விடும். அதனால்தான் இடைத்தேர்தல் வர வேண்டும் என நான் சொல்கிறேன்.

    இடைத்தேர்தல் வரும் போது யார், என்ன என்பது தெரிந்துவிடும். அதற்காகத்தான் தேர்தல் வர வேண்டும் என நானும் காத்திருக்கிறேன்.

    இடைத்தேர்தல் நிச்சயம் நடக்கும்என நான் நினைக்கிறேன். திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். நாளை நிர்வாகிகள் கூட்டம் போட்டுள்ளோம். அதன்பிறகு வேட்பாளர் யாரென்று அறிவிப்போம்.

    பொதுமேடையிலோ, சட்டமன்றத்திலோ குரலை உயர்த்தி முதல்-அமைச்சர் பேசினால், அவர் உண்மையை பேசவில்லை, சமாளிக்கிறார் என்று அர்த்தம். கேபினட் முடிவெடுத்துவிட்டதால் ஸ்டெர்லைட் ஆலை திறக்க முடியாது என்று ஆட்சியாளர்கள் கூறியபோது மேல்முறையீடு சென்றால் ஆலை திறப்பை தடுக்க முடியாது என எல்லோரும் சொன்னோம்.

    தமிழகத்திற்கு தாமிர ஆலையே வேண்டாம் என கொள்கை முடிவெடுத்து அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு மிகவும் வேண்டியவர்களாக இருக்கிறார்கள். வாரவாரம் அமைச்சர்கள் விமானத்தில் டெல்லிக்கு பறந்து கொண்டுள்ளார்கள். ஆனால் இவர்களால் ஒன்றுமே பெற முடியவில்லையே.

    மத்தியில் இருப்பவர்கள் சொல்லும் பேச்சை கேட்டு அதனை செயல்படுத்தும் சேவகர்களாக தானே இருக்கிறார்களே தவிர, இவர்கள் கேட்கும் எதுவும் முதலாளியிடமிருந்து வருவதில்லை என்பது நன்றாக தெரிகிறது.

    சட்டமன்ற தேர்தல் வந்தால் பழனிசாமி, பன்னீர் செல்வத்தினால் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். பணம் கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க தயாராக இல்லை என்பதும் தெரியும். இருக்கும்வரை பதவியில் இருக்கலாம் என ஒரு குரூப் நினைப்பதால் இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது.

    திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும்.

    ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றி பேசினார். அதன் பிறகு அதனை விட்டுவிட்டார். இப்போது சி.வி.சண்முகம் ஆரம்பித்துள்ளார். அவர் பேசுவதற்கெல்லாம் நான் பதில்சொல்ல விரும்பவில்லை. அமைச்சராக அவர் பேசவில்லை. அவர் தெளிவாக இருந்து நிதானத்தில் பேசினாரா? என தெரியவில்லை.

    அமைச்சரவை கூட்டமே நடக்கவில்லை. நான்தான் சாட்சி என கூறுகிறார். ஆனால், தலைமைச் செயலாளர் கடிதத்தில் அக்டோபர் 19-ந்தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது என உள்ளது. எல்லோரையும் மிரட்டுவது போல பேசுகிறார். சுகாதாரத்துறை செயலாளர் அவருக்கு தெரிந்த உண்மையை சொல்கிறார்.

    அதுபோல காலை 10 மணி ஆனவுடன் செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர், விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் உண்மை வெளிவரும் என்கிறார். அப்படியெனில் ஐ.ஏ.எஸ். ஆபீசர்களை இவர்கள் மிரட்டுகிறார்களா? ஆட்சியாளர்களை விசாரிக்க வேண்டிய காலம் வரப்போகிறது.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக திடீரென்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார். இப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    ஜெயலலிதா மருத்துவமனைக்கு உயிருடன் வந்தார். அங்கு உயிருடன் தான் சிகிச்சை பெற்று வந்தார் என்பது ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. தற்போது ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோகிராம் செய்திருக்கலாமோ என்று பேசிக் கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது. கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டதால்தான் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறுவதை நாம் பார்க்கிறோம்.

    ஆர்.கே.நகரில் டெபாசிட் போனது போல திருவாரூரி லும் போய் விடக் கூடாது என்பதற்காகத் தான் எதையாவது பேசி ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran #ThiruvarurByElection
    திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி மாரிமுத்து தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. #ThiruvarurByElection #SupremeCourt
    புதுடெல்லி:

    திருவாரூர் தொகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு(நேற்று) ஆஜராகி, கஜா புயல் நிவாரண பணிகள் திருவாரூரில் இன்னும் நிறைவு அடையவில்லை என்றும், அந்த தொகுதியில் புயலின் பாதிப்பால் பலரும் தங்கள் உடைமைகளையும் ஆவணங்களையும் இழந்து இருப்பதால் பலர் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த முடியாமல் போகும் என்றும், எனவே, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் முறையீடு செய்தார்.



    அதற்கு நீதிபதிகள், இது குறித்து மனு தாக்கல் செய்யுமாறும், அதன்பிறகு அதன் அவசர தன்மை குறித்து முடிவெடுப்பதாகவும், தற்போது உடனடியாக அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து, திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி மாரிமுத்து தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் முன்பு வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் முறையிட்டார். ஆனால், அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த வழக்கை நீதிபதி எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட அமர்வு விரைவில் விசாரிக்கும் என்று கூறப்படுகிறது.  #ThiruvarurByElection #SupremeCourt
    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. அலுவலகத்தில் விருப்ப மனு பெற தொண்டர்கள் குவிந்தனர். #ThiruvarurByElection #DMK #ADMK
    சென்னை:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் நாளை தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

    போட்டியிட விரும்புகின்ற கட்சி தொண்டர்கள் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கும்படி அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் அறிவித்து இருந்தன.

    இதனால் அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் இரு கட்சி அலுவலகத்திலும் இன்று குவிந்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் ரூ.25 ஆயிரம் செலுத்தி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி அறிவிக்கப்பட்டிருந்தது. கட்சி அலுவலகத்திற்கு வந்த தொண்டர்கள் திருவாரூர் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் திருவாரூர் தொகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமது அஷ்ரப், கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர்செல்வம் உள்பட 22 பேர் மனு கொடுத்தனர். நாளை 3-ந்தேதி வரை மனுக்கள் பெறப்படுகின்றன. 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது.

    தி.மு.க. சார்பில் இன்று விண்ணப்ப மனுக்கள் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிற்பகல் வரை யாரும் மனுக்களை சமர்ப்பிக்கவில்லை.

    ஆனால் நாளை மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெற்று ஒப்படைப்பதற்கு அவகாசம் உள்ளது. 4-ந்தேதி மாலை 5 மணி அளவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. #ThiruvarurByElection #DMK #ADMK
    திருவாரூர் இடைத்தேர்தலில், அ.ம.மு.க.விற்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #SupremeCourt #TTVDhinakaran #Cooker
    புதுடெல்லி:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.

    அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருக்கும் தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாக இருக்கிறார். அவர் ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

    அவரது ஆதரவாளர்கள் குக்கர்களை கையில் ஏந்திய படி பிரசாரம் செய்தது பெரும் வரவேற்பைபெற்றது. அ.தி.மு.க, தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார்.

    இந்தநிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலிலும் தினகரன் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று அவர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.


    அத்துடன் திருவாரூர் தொகுதியில் தனது கட்சி வேட்பாளர் குக்கர் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தினகரன் விருப்பம் தெரிவித்து உள்ளார். குக்கர் சின்னமானது சுயேட்சை சின்னம் என்பதால் தேர்தலின் போது வேறு யாருக்கும் ஒதுக்க கூடாது என்றும், தனது கட்சிக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மனுவில் அவர் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க.த்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் கமி‌ஷனுக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது வக்கீல் நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டார். அது ஏற்கப்படவில்லை. இந்த மனு வருகிற 7-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? என்பது தெரியவரும். #SupremeCourt #TTVDhinakaran #Cooker
    திருவாரூர் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்பது குறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரி தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection
    நாகப்பட்டினம்:

    மனிதநேய ஜனநாயகக் கட்சின் பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்து மிகப்பெரிய சுற்று சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அடுத்த 10 ஆண்டு காலத்தில் இழந்த பசுமையை மீட்கும் நோக்கத்தோடு கஜா புயல் பாதித்த 4 மாவட்டத்திலும் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் 2019-ம் ஆண்டை பசுமையாண்டு என்று பெயரிட்டு பசுமை திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் மரக்கன்றுகளை 4 மாவட்டத்தில் வினியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு வந்த நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் சிவகங்கை மாவட்டம் இளையாங் குடியில்நடைபெற்றது.

    திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். திருவாரூர் இடைத்தேர்தலில் எந்த கூட்டணியையும், எந்த கட்சியையும் ஆதரிப்பது இல்லை என்று முடிவு எடுத்திருக்கிறோம்.

    திருவாரூர் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி தான் இருக்கும். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ, 2-வது இடத்திற்கு யார் வருகிறார்களோ அவர்கள் தான் தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக திகழ்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThiruvarurByElection
    திருவாரூர் தொகுதியில் வருகிற 28-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளதால் உதயநிதி ஸ்டாலினை களம் இறக்க ஆலோசனை நடந்து வருகிறது. #thiruvarurbyelection #UdhayanidhiStalin #mkstalin

    சென்னை:

    திருவாரூர் தொகுதியில் வருகிற 28-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தி.மு.க.வும், அ.தி. மு.க.வும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இன்றும் நாளையும் இரு கட்சிகளும் விருப்ப மனுக்களை வாங்குகின்றன.

    விருப்ப மனு கொடுப்பவர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார். அன்றே தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பதும் விரைவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திருவாரூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் யாரை களம் இறக்குவது என்பது குறித்து நேற்று மு.க.ஸ்டாலின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று காலை அண்ணா அறிவாலயத்திலும், மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டிலும் இந்த ஆலோசனை நடந்தது.

    திருவாரூர் தொகுதியில் இருந்து கருணாநிதி 2 முறை தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. மூத்த தலைவர்களில் சிலர் கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கருணாநிதியின் மகள்கள் செல்வி, கனிமொழி ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.

    ஆனால் அவர்களை இடைத்தேர்தலில் நிறுத்த வேண்டாம் என்று சில மூத்த உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.


    இதைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலினை திருவாரூர் தொகுதியில் போட்டியிட செய்யலாமா? என்று 2 மூத்த உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்த கருத்து எழுந்த உடனே மு.க.ஸ்டாலின் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

    கொளத்தூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் நிலையில் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு இன்னொரு தொகுதி இடைத்தேர்தலில் நிற்பது நல்லதல்ல என்று அவர் கூறியதாக தெரிகிறது. மேலும் தேவையில்லாமல் கொளத்தூர் தொகுதிக்கு ஏன் இடைத்தேர்தல் நடத்த செய்ய வேண்டும் என்று அவர் அந்த திட்டத்துக்கு ஆரம்பத்திலேயே முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.

    இந்த நிலையில் திருவாரூர் தொகுதி வேட்பாளர் பற்றி இன்றும் தி.மு.க. மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இன்று மாலை மு.க.ஸ்டாலினை மீண்டும் சந்தித்து பேச உள்ளனர். அப்போது திருவாரூரில் போட்டியிட ஸ்டாலினை வலியுறுத்துவோம் என்று மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அந்த மூத்த தலைவர் மேலும் கூறியதாவது:-

    திருவாரூர் தொகுதியில் கலைஞர் போட்டியிட்ட 2 தடவையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். அந்த தொகுதியில் மீண்டும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது எங்களது விருப்பமாகும்.

    திருவாரூரில் தற்போதைய சூழ்நிலையில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்றால் அதற்கு தகுதியான வேட்பாளர் மு.க.ஸ்டாலின் ஒருவர்தான். எனவேதான் அவரை களம் இறக்க நாங்கள் விரும்புகிறோம். அவர் பெறும் இமாலய வெற்றி பாராளுமன்ற தேர்தலுக்கு புத்துணர்ச்சியுடன் பணியாற்ற உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருசாரார் மனநிலை இவ்வாறு இருக்க மற்றொரு சாரார் இதை ஏற்க மறுத்தனர். மு.க.ஸ்டாலினை திருவாரூர் தொகுதியில் போட்டியிட சொல்வது அவசியம் இல்லாதது என்று கூறி உள்ளனர். இதையே மு.க.ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டு இருப்பதாக தெரியவந்து உள்ளது.

    மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை அவர் முக்கியமான ஒரு வேட்பாளரை தேர்வு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. அது பற்றிய விவரங்கள் 4-ந்தேதி மாலை வேட்பாளர் நேர்காணல் முடிந்த பிறகு முழுமையாக தெரிந்து விடும்.

    இதற்கிடையே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினை திருவாரூர் தொகுதியில் களம் இறக்கலாம் என்ற யோசனை தி.மு.க. மூத்த தலைவர்கள் முன் எழுந்து உள்ளது. உதயநிதி ஸ்டாலின் படங்களில் நடித்து மக்கள் மனதில் அறிமுகமாகி இருப்பதால் அவருக்கு திருவாரூர் தொகுதியில் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது.

    உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக இளைஞர் அணி நிர்வாகிகள் உள்பட பல்வேறு அணிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தி.மு.க.வின் அடுத்த தலைமுறை தலைவர் என்பதால் இப்போதே உதயநிதிக்கு அந்த வாய்ப்பை வழங்கலாம் என்றும் சில மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் தற்போது உதயநிதிக்கு தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. எனவே அவரை திருவாரூர்தொகுதி இடைத்தேர்தலில் களம் இறக்கும் யோசனைக்கு ஆதரவு பெருகி உள்ளது.

    உதயநிதியின் இந்த அரசியல் பிரவேசத்துக்கு மு.க. ஸ்டாலின் பச்சை கொடி காட்டுவாரா? நாளை மறுநாள் தெரிந்துவிடும். #thiruvarurbyelection #UdhayanidhiStalin #mkstalin

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிடப்போவதாக தகவல் பரவி வரும் நிலையில், நேற்று ஆலோசனை பற்றி துரைமுருகன் தகவல் தெரிவித்தார். #ThiruvarurByElection #MKStalin #DuraiMurugan
    சென்னை:

    கருணாநிதி மறைவு காரணமாக அவர் போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு வரும் 28-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, எதிர்க்கட்சித்தலைவராக இருந்து வரும்நிலையில், அவர் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதற்கிடையே, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், மகளிர் அணி செயலாளர் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



    இந்த கூட்டத்திற்கு பிறகு வெளியே வந்த துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மு.க.ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த துரைமுருகன், ‘நாளை (இன்று) தொடங்க இருக்கும் சட்டசபை கூட்டம் தொடர்பாக விவாதித்தோம். நீங்கள் கூறும் விஷயம் குறித்து நாங்கள் பேசவில்லை’ என்றார். #ThiruvarurByElection #MKStalin #DuraiMurugan

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுமா? என்பது குறித்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார். #ThiruvarurByElection #BJP #tamilisai soundararajan
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை கமலாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்வோம் என்று நாங்கள் இன்னும் அறிவிக்கவில்லை. இப்போது எங்களுடைய முழு கவனம் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை, நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதில் இருக்கிறது. எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டுமா? தேவை ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வது குறித்து முடிவு செய்வோம்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருக் கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். அதுமட்டுமின்றி தனி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. மதுரை ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகிற போது கருப்புக்கொடி காட்டப்போவதாக வைகோ கூறி உள்ளாரே? என்று கேட்டதற்கு வைகோவால் ஒன்றுமே செய்ய முடியாது. அவரை அறிவாலயத்துக்குள் (தி.மு.க. கட்சி அலுவலகம்) விடுவார்களா? மாட்டார்களா? என்ற சந்தேகம் இருக்கிறது. அதனை போக்குவதற்கு எதையாவது செய்ய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புகொடி காட்டினால் ராகுல்காந்தி மகிழ்வார். அதனால் கூட்டணியில் சேர்த்துக்கொள்வார்கள் என்று வைகோ கணக்கு போடுகிறார். அவருடைய கணக்கு எப்போதும் தப்பு கணக்கு தான் என்றார்.#ThiruvarurByElection #BJP #tamilisai soundararajan
    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. அமோகமாக வெற்றி பெறுவதற்கு ம.தி.மு.க. துணை நிற்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection #DMK #MDMK #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எழும்பூர் தாயகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் அங்கு தி.மு.க. வேட்பாளர் நிறுத்தப்படுவார். யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் தி.மு.க. வெற்றிக்காக ம.தி.மு.க. பாடுபடும்.

    திருவாரூர் தொகுதியில் தி.மு.க.வுக்காக ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வேன். எங்கள் கட்சி தொண்டர்களும் தி.மு.க. வெற்றிக்காக அயராது உழைப்பார்கள்.


    இந்த தேர்தலில் தி.மு.க. அமோகமாக வெற்றி பெறும். அதற்கு ம.தி.மு.க. துணை நிற்கும்.

    எங்கள் இயக்கத்துக்கு என்னோடு இருந்து எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எண்ணற்ற தொண்டர்கள் உள்ளனர்.

    நாங்கள் நடத்திய ஈரோடு மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு வந்திருந்தனர். என் கட்சி பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அங்கு கூடிய தொண்டர்களின் கட்டுப்பாடு, ஒழுக்கத்தை பார்த்து அறிந்து கொள்ள முடிந்தது.

    இந்த தோழர்களை கொண்டு கட்சியின் கட்டுமான அடிப்படை வேலையை வலுப்படுத்துவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

    ம.தி.மு.க. கட்சியின் அடித்தளத்தை 100 மடங்கு வலுப்படுத்தும் வேலையில் 3 மாதமாக ஈடுபட்டு உள்ளோம். தமிழ்நாட்டில் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளது. அத்தனை வாக்கு சாவடிக்கும் தேர்தல் பணிக்குழு அமைக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்தோம். அதன்படி 70 சதவீத பணிகள் முடிந்து விட்டது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThiruvarurByElection #DMK #MDMK #Vaiko
    ×