search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் தேர்தல்- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
    X

    திருவாரூர் தேர்தல்- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

    திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர். #ThiruvarurByElection #SC
    புதுடெல்லி:

    தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது.

    இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. 10-ந் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்ககோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கஜா புயலால் திருவாரூர் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இதே போல சுப்ரீம் கோர்ட்டிலும் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி வைக்ககோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மாரிமுத்து என்பவர் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபில் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் முறையிட்டார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டோ அவசரமாக விசாரிக்க மறுத்து விட்டது.


    இதேபோல இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளரும், மேல்சபை எம்.பி.யுமான டி.ராஜா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இடைத்தேர்தல் அறிவிப்பு தொடர்பாக மத்திய அரசு வெளியிட உள்ள அரசாணைக்கு தடை விதிக்க கோரியும் அவர் கோரி இருந்தார்.

    டி.ராஜா சார்பில் சல்மான் குர்ஷித் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

    ஏற்கனவே அவசரமாக விசாரிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ள நிலையில் மீண்டும் அவசரமாக விசாரிக்க கோருவதா? என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. #ThiruvarurByElection #SC
    Next Story
    ×