search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meets"

    இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். #MonaccoPrince #PMModi #SushmaSwaraj
    புதுடெல்லி:

    மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் அரசுமுறை பயணமாக இந்தியாவில் நேற்று முதல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தலைநகர் டெல்லியில் மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.



    மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் இன்று சந்தித்துப் பேசினார். இருதரப்பை சேர்ந்த அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான விசா விதிகள் குறித்தும் மற்றும் இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    மேலும், காலநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் தில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. #MonaccoPrince #PMModi #SushmaSwaraj
    டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சந்தித்து பேசினர். #RahulGandhi #KSAlagiri
    புதுடெல்லி:

    தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டு இருக்கும் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நேற்று மாலை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள்.

    அப்போது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது.

    இச்சந்திப்பு குறித்து புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராகுல்காந்தியை சந்தித்து தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் பற்றி பேசினோம். தேர்தலில் எப்படி பணியாற்றுவது, கட்சி அமைப்பை எப்படி பலப்படுத்துவது என்பது பற்றி விவாதித்தோம்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தமிழக அரசு நசுக்கி விட்டது என்று ராகுல்காந்தியிடம் கூறினோம். அரசு ஊழியர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவை வழங்கி இருப்பதாக ராகுல்காந்தி சொல்ல சொன்னார். எனவே, அரசு ஊழியர்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.

    நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெற வேண்டும், அதற்கான பணிகளை செய்யுங்கள் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டு இருக்கிறார். தேர்தலில் எங்களுக்கு 100 சதவீத வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

    கோஷ்டி பூசல் என்பதை நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்) நினைவூட்டி வருகிறீர்கள். நான் கேட்பது என்னவென்றால், கருத்து வேறுபாடு இல்லாத அரசியல் இயக்கம் எங்காவது இருக்கிறதா?. சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதை கோஷ்டி பூசல் என்று சொல்ல முடியாது.

    திருநாவுக்கரசர் 2½ வருடம் தலைவராக பணியாற்றி இருக்கிறார். அவருக்கு வேறு வாய்ப்புகள் வழங்கப்பட இருக்கின்றன. காங்கிரசில் நிச்சயமாக கோஷ்டி பூசல் இல்லை. கருத்து வேறுபாடு இருப்பதில் எந்த தவறும் இல்லை.

    நாங்கள் நிதர்சனமான அரசியல் கட்சி. தேர்தலில் எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ? எங்கெல்லாம் தொண்டர்கள் வேகமாக பணியாற்றுகிறார்களோ? அந்த தொகுதிகளைத்தான் கேட்போம்.

    கூட்டணிக்கு இன்னும் அதிகமான கட்சிகள் வருவார்களானால் அவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டியிருக்கும். நாங்களும், தி.மு.க.வும் மட்டுமே கூட்டணி என்றால் பிரித்துக்கொள்ளலாம். கூட்டணிக்கு இன்னும் ஏராளமான கட்சிகள் வர விரும்புகின்றன. 4 மாநில தேர்தல் வெற்றிக்கு பிறகு தமிழ்நாட்டில் பல கட்சிகள் எங்கள் கூட்டணியல் சேர விருப்பமாக இருக்கின்றன.

    ராகுல்காந்தி இந்த மாதம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. திருநாவுக்கரசர் தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

    வருகிற 7-ந்தேதி நான் பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறேன். அதற்கு முன்னதாக தலைவர்களை சந்திப்பேன். பதவி ஏற்ற பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் நிருபர்கள் “தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. சேர இருப்பதாக கூறப்படுகிறதே, அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?” என்று கேட்டனர்.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், “கூட்டணிக்கு யார்- யார்? வருவார்கள் என்பதையெல்லாம் இப்போதே நாங்கள் சொல்லி விட்டால் நீங்கள் (பத்திரிகையாளர்கள்) சென்று தடுத்து விடுவீர்கள். அதனால் இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது அவர்கள் வருவார்கள்” என்று கூறினார்.

    முன்னதாக டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில் ‘தமிழகத்தில் ஊழல் அற்ற, மக்களை மேம்படுத்துகிற ஆட்சியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்’ என்று கூறினார்.
    தன்னை சந்தித்ததை மலிவான விளம்பரத்துக்கு பயன்படுத்துவதா என கேள்வி எழுப்பிய கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். #Parrikar #RahulGandhi
    புதுடெல்லி:

    சமீபத்தில் ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தியுடன் தனிப்பட்ட பயணமாக ஓய்வுக்காக கோவா சென்றிருந்தார்.

    ரபேல் ஒப்பந்தத்தின்போது ராணுவ மந்திரியாக முன்னர் பொறுப்பு வகித்து தற்போது கோவா முதல் மந்திரியாக பதவி வகிக்கும் மனோகர் பாரிக்கர் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கோவா சென்றிருந்த ராகுல் காந்தி நேற்று திடீரென்று மனோகர் பரிக்கரை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘ரபேல் போர் விமானம் கொள்முதல் செய்வது தொடர்பான புதிய ஒப்பந்தத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை. அனில் அம்பானிக்கு ஆதாயம் தேடித்தரும் வகையில் எல்லாவற்றையும் பிரதமர் மோடிதான் நடத்தினார் என்று முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தெளிவாக தெரிவித்து விட்டார்’ என்று கூறினார். ராகுலின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.



    இதற்கிடையே, ரபேல் விவகாரம் தொடர்பாக மனோகர் பாரிக்கர் தன்னிடம் தெளிவான விளக்கம் அளித்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மனோகர் பாரிக்கர் கடிதம் எழுதியுள்ளார்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மனோகர் பாரிக்கருக்கு  கடிதம் எழுதியுள்ளார். அதில்,  உங்களை சந்தித்து பேசியது தொடர்பான எந்த தகவலையும் நான் பகிர்ந்து கொள்ளவில்லை.  சந்திப்புக்கு பிறகான உங்களது அழுத்தம் எனக்கு நன்கு புரிகிறது என தெரிவித்துள்ளார். #Parrikar #RahulGandhi
    எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். #ChandrababuNaidu #RahulGandhi
    புதுடெல்லி:

    பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார்.

    இதேபோல பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் வரும் பாராளுன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளார். இதற்காக அவர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசிவருகிறார். 

    இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்துப் பேசினார். 

    ஆந்திராவில் காங்கிரசும், தெலுங்கு தேசமும் எதிர்துருவங்களாக இருக்கும் கட்சிகளாகும். பா.ஜ.க.வுக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்க இந்த இரு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சந்திப்பைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசவுள்ளார். #ChandrababuNaidu #RahulGandhi
    பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணிக்கு ஆதரவு திரட்டும் வகையில், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இன்று சந்தித்தார். #ChandrasekharRao #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ், அதே வேகத்தோடு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மீதும், ராகுல்காந்தி மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
     
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடும் நிலை உள்ளது.

    இதற்கிடையே, பா.ஜ.க அணியிலும், காங்கிரஸ் அணியிலும் சேராமல், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து 3-வது அணி ஒன்றை அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் யோசனை தெரிவித்தார்.

    இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியையும் சந்தித்தார்.



    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்ட போதிலும், 3-வது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் பா.ஜ.க மற்றும் காங்கிரசுக்கு எதிராக 3-வது அணி அமைத்து போட்டியிட்டால் அந்த அணியை மக்கள் ஆதரிப்பார்கள் என்று அவர் நம்புகிறார். இதுதொடர்பாக அவர் முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்திக்க இருக்கிறார்.

    இந்நிலையில், தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இன்று ஒடிசாவிற்கு சென்றார். தலைநகர் புவனேஷ்வரில் ஒடிசா முதல் மந்திரியை நேரில் சந்தித்தார். அவருக்கு நினைவு பரிசு அளித்தார். அப்போது மூன்றாவது அணி தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து, மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, உ.பி.யில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #ChandrasekharRao #NaveenPatnaik
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், திமுக உடனான கூட்டணி காலத்தை வென்றது, பலமானது என தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi #DMK #Stalin
    புதுடெல்லி:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.
     
    அன்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான விழா அழைப்பிதழை சோனியா காந்தியிடம் நேரில் வழங்குவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவரது வீட்டுக்கு நேரில் சென்று முக ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கி விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். அதை சோனியா காந்தி ஏற்றுக் கொண்டார்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் டெல்லி வந்து சோனியாஜியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின்னர் நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது என பதிவிட்டுள்ளார். #Congress #RahulGandhi #DMK #Stalin
    தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #MekedatuDam #Modi #BanwarilalPurohit #RajnathSingh
    புதுடெல்லி:

    கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் வழங்கியது. அந்த ஆணையம் அதை ஏற்றுக்கொண்டு, விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
    தமிழக சட்டசபையில் நேற்று கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளக்குழுமம் வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.



    இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை கொடி நாள் நிகழ்ச்சிகளை கவர்னர் மாளிகையில் முடித்து விட்டு, மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் டெல்லி சென்றார். அதைத்தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை பிரச்சினையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமரிடம், அவர் விளக்கினார்.

    இதையடுத்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். #MekedatuDam #Governor #Modi #RajnathSingh
    இந்த வாரம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பது உறுதியானது என கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது. #G20Summit #Trump #Putin
    மாஸ்கோ:

    உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து கடல் பிராந்தியத்தில் போர் பதற்றம் உருவாகி உள்ளது. 
     
    உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் உக்ரைன் நாட்டுக்கு அதிக ஆதரவு அளிக்கும்படி ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தி உள்ளது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், இந்த வாரம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பது உறுதியானது என கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அந்த மாளிகையின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி 20 மாநாட்டின்போது புதினை டிரம்ப் சந்திக்கிறார். இந்த சந்திப்பை வெள்ளை மாளிகையும் உறுதி செய்துள்ளது. #G20Summit #Trump #Putin
    சென்னை வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். #DMK #Stalin #SitaramYechury
    சென்னை:

    மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் வீட்டுக்கு இன்று நேரில் சென்றார்.



    அவரை திமுக தலைவர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். அப்போது, எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இந்த சந்திப்பு குறித்து யெச்சூரி கூறுகையில், தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து எதிர் வரும் தேர்தலை சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார். #DMK #Stalin #SitaramYechury
    ம.தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு வருமாறு முன்னாள் மத்திய மந்திரி சரத்பவார் மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி யஷ்வந்த் சின்காவை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து அழைப்பு விடுத்தார்
    சென்னை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவாரை நேற்று காலை அவரது இல்லத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து, செப்டம்பர் 15-ந் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கும் ம.தி.மு.க. முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். சரத்பவார் வருவதாகக் கூறி வைகோவிடம் ஒப்புதல் தந்தார்.

    முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, முன்னாள் மத்திய நிதி மந்திரியும், வெளியுறவுத் துறை மந்திரியுமான யஷ்வந்த் சின்காவை அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து, ம.தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்தார். அவரும் வருவதாக ஒப்புதல் தந்தார்.

    மேற்கண்ட தகவல் ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். #JactoGeoProtest #StalinMeetsJactoGeo
    சென்னை:

    பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும், 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான  ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை எழிலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது.



    இந்த உண்ணாவிரதத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், இரா.தாஸ், செ.முத்துசாமி, வெங்கடேசன், அன்பரசு, தாமோதரன், சுரேஷ், செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் மற்றும் மோசஸ் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

    இந்நிலையில், போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை தி.மு.க செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் பேசுவதாக கூறினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை குறித்து சட்டப்பேரவையில் பேச உள்ளதாகவும் கூறினார்.

    எம்.எல்.ஏ.க்களுக்கு மாமூல் கொடுத்து ஆட்சியை தக்க வைப்பதில் அ.தி.மு.க. அரசு தீவிரமாக உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார். #JactoGeoProtest #StalinMeetsJactoGeo
    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை இன்று சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். #Kamalhaasan #Kumaraswamy
    பெங்களூர்:

    தமிழகம்-கர்நாடகம் இடையே 40 ஆண்டுகளாக காவிரி பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்ததால் இருமாநில நல்லுறவு பாதிக்கப்பட்டது.

    காவிரி பிரச்சினை எழும் போதெல்லாம் பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதற்கு இரு மாநிலங்கள் இடையே நல்லிணக்கம் மற்றும் சுமூக நிலை இல்லாததே காரணம். இதற்கான முயற்சிகளில் எந்த அரசியல் தலைவர்களும் ஈடுபடவில்லை.



    இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியதும் நடிகர் கமல்ஹாசன் காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே கசப்புணர்வை தீர்க்க பாடுபடுவேன், கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து பேசுவேன் என்று அறிவித்தார்.

    கர்நாடக முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றபோது அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

    சோனியா, ராகுல், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை அந்த நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசினார். முதல்-மந்திரி குமாரசாமியையும் தனியாக சந்தித்து பேசினார்.

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கமல்ஹாசனை வரவேற்று அவர் தோள் மீது கைபோட்டு பேசும் அளவுக்கு சகஜமாக பழகினார். கமல்ஹாசனின் இந்த சந்திப்பு தமிழர்-கன்னடர் உறவை மேம்படுத்துவதாக இருந்தது.

    இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை மீண்டும் சந்திக்க கமல்ஹாசன் முடிவு செய்தார். சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படி கடிதம் எழுதினார். அதை ஏற்று குமாரசாமி இன்று கமல்ஹாசனை சந்திப்பதாக பதில் அனுப்பினார்.

    இதை ஏற்று கமல்ஹாசன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்றார். இரவு ஓட்டலில் தங்கினார்.

    இன்று அவர் பெங்களூரில் முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வமான கிருஷ்ணா இல்லம் சென்றார். அவரை குமாரசாமி வரவேற்று அழைத்துச் சென்றார். குமாரசாமிக்கு கமல்ஹாசன் பூங்கொத்து வழங்கினார். பதிலுக்கு குமாரசாமியும் பூங்கொத்து வழங்கினார்.

    குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து இருப்பதை கர்நாடகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் வரவேற்றுள்ளன. #Kamalhaasan #Kumaraswamy


    ×