search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "constituency"

    • கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
    • தொகுதிகளில் வேலைகளையும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பலமான கூட்டணியை அமைக்கும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் வகையில் கட்சிகள் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

    எனவே கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். தொகுதி பங்கீடு பற்றியும் அப்போது பார்த்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    கூட்டணி அமைந்தாலும் சரி. அமையாவிட்டாலும் சரி தேர்தலை சந்திக்கும் வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    தொகுதி நிலவரம், செல்வாக்கு, தி.மு.க.வுடன் நேரடி போட்டி ஏற்பட்டா லும் வெற்றி பெறும் ஆற்றல் ஆகியவற்றை ஆராய்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது.

    இதுவரை 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டாராம். அதில் டாக்டர் ஜெயவர்தன் (தென்சென்னை), எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை), ராயபுரம் மனோ (வடசென்னை), மா.பா.பாண்டியராஜன் (விருது நகர்), செம்மலை (சேலம்), சந்திரசேகர் (கோவை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு), ராஜ்சத்யன் (மதுரை), கண்ணன் (திண்டுக்கல்), கே.பி.எம்.சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி), ராதா கிருஷ்ணன் (கள்ளக்குறிச்சி), சண்முகநாதன் அல்லது சரவண பெருமாள் (தூத்துக்குடி) உள்பட 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்து விட்டாராம்.

    தான் வேட்பாளராக முடிவு செய்திருப்பவர்களை அந்த அந்த தொகுதிகளில் தேர்தல் வேலையை தொடங்கும்படி ரகசியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

    இதையடுத்து தொகுதி களில் வேலைகளையும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    • தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்து விட்டு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
    • உத்தர பிரதேசத்தில் சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை தர இயலாது என்று கைவிரித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க பாரதிய ஜனதா கட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டது.

    ஜனவரி 15-ந்தேதிக்கு பிறகு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடவும் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

    பா.ஜ.க. சவாலை சமாளிக்க காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, கம்யூனிஸ்டுகள் உள்பட 27 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இதுவரை 4 முறை சந்தித்து பேசி உள்ளனர்.

    கூட்டணிக்கு பெயர் வைத்த பிறகு தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, குறைந்தபட்ச பொது செயல்திட்டம் போன்ற நடவடிக்கைகளில் தலைவர்கள் ஈடுபட்டாலும் இன்னமும் அதற்கு முடிவு எதுவும் கிடைக்கவில்லை. தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்து விட்டு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

    ஜனவரி 17-ந்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரில் இருந்து மும்பைக்கு பாத யாத்திரை மேற் கொள்ள இருக்கிறார். அதற்கு முன்பாக இந்தியா கூட்டணியில் உள்ள செல்வாக்குமிக்க மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிக்க அவர் விரும்புகிறார். இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக டெல்லியில் கூடி ஆலோசித்தனர்.

    அடுத்த கட்டமாக வருகிற 4-ந்தேதி மீண்டும் கூட உள்ளனர். அதற்கு பிறகு தான் மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உறுதியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதற்கு முன்னதாக தொடக்கத்திலேயே காங்கிரஸ் தலைவர்கள் தொகுதி பங்கீடு விசயத்தில் கடும் சிக்கலையும், இழுபறியையும் சந்திக்க தொடங்கி உள்ளனர்.

    மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை விட்டு தரமாட்டோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி திட்ட வட்டமாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி தனக்கு நிபந்தனை விதிக்கும்பட்சத்தில் தனித்து போட்டியிடுவோம் என்றும் அவர் மிரட்டல் விடுத்து உள்ளார்.

    இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை தர இயலாது என்று கைவிரித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 எம்.பி. தொகுதிகள் இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 4 அல்லது 5 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என்று அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியும் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. அங்கு மொத்தம் 48 தொகுதிகளில் சுமார் 25 முதல் 30 தொகுதிகள் வரை போட்டியிட சிவசேனா விரும்புகிறது. மீதமுள்ள 18 தொகுதிகளை காங்கிரசுக்கும், தேசியவாத காங்கிரசுக்கும் விட்டு தருவதாக அறிவித்துள்ளது.

    இதற்கு காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கடும் அதிருப்தியயை தெரிவித்துள்ளன. இந்நிலையில் டெல்லி, பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி 90 சதவீத இடங்களில் போட்டியிடப் போவதாகவும் 10 சதவீத இடத்தை மட்டுமே கூட்ட ணிக்கு ஒதுக்க முடியும் என்று கூறியுள்ளது.

    கேரளாவிலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அதிக இடங்களை காங்கிரசுக்கு கொடுக்க விரும்பவில்லை. பீகாரில் நிதிஷ்குமாரும், லல்லு பிரசாத் யாதவும் தங்களுக்குரிய இடங் களை வைத்துக் கொண்டு தான் மீதமுள்ள இடங்களை காங்கிரசுக்கு கொடுக்கும் நிலையில் உள்ளனர்.

    இதன் காரணமாக உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், கேரளா, மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்களில் சுமூகமான தொகுதி பங்கீட்டை செய்ய முடியாத நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் மேலிட தலைவர்களை தவிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    இந்நிலையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் அதிக தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இடையே பங்கீட்டில் சிக்கல் வர வாய்ப்பு இல்லை. தி.மு.க. கொடுக்கும் தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுக் கொள்ளும் நிலையில்தான் உள்ளது.

    ஒடிசா, குஜராத் உள்பட சில மாநிலங்களில் செல்வாக்கு இல்லாத நிலையில் காங்கிரஸ் அங்கு தனித்து விடப்படும் நிலையில் இருக்கிறது. இதனால் காங்கிரசுக்கு தோழமைக் கட்சிகள் மூலம் அதிக இடங்கள் கிடைக்குமா? என்பதில் சிக்கல் நிலவுகிறது.

    5 மாநில தேர்தலில் தெலுங்கானா தவிர மற்ற 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளிடம் அதிக தொகுதிகள் கேட்டு பேரம் பேச முடியாத நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரசின் சூழ்நிலையை புரிந்து கொண்டு மாநில கட்சி தலைவர்களும் நிபந்தனை விதிப்பதால் "இப்பவே கண்ணைக் கட்டுதே" என்ற நிலையில்தான் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர்.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் பா.ஜ.க.வை வீழ்த்த 400 தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதுவும் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இத னால் இந்தியா கூட்டணியில் எதிர்பார்த்தபடி தொகுதி பங்கீடு குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிக்க முடியுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெற்ற வெற்றி, தோல்வி அந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
    • தமிழக காங்கிரஸ் நிலவரம் பற்றி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முழுமையான அறிக்கை தயாரித்து உள்ளார்.

    பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா கூட்டணியை மேலும் வலிமைப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதற்கு வசதியாக 10 மாநிலங்களில் செல்வாக்கு மிக்க மாநில கட்சிகளுடன் சுமூகமான தொகுதி பங்கீட்டை நடத்தி முடிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    தமிழ்நாடு, பீகார், உத்தர பிரசேதம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், காஷ்மீர், பஞ்சாப், மராட்டியம், டெல்லி ஆகிய மாநிலங்களில் சுமூகமான தொகுதி பங்கீடு செய்தால் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் பொது வேட்பாளரை நிறுத்த முடியும் என்று கருதுகிறது.

    எனவே இந்த 10 மாநிலங்களிலும் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும், மாநில கட்சிகளுக்கு எத்தனை தொகுதி கொடுக்க வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்ய தீர்மானித்துள்ளனர். இதற்காக டெல்லியில் வருகிற 29, 30-ந் தேதிகளில் 2 நாட்கள் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம் உள்பட 10 மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. 10 மாநில தலைவர்களிடமும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்த உள்ளனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெற்ற வெற்றி, தோல்வி அந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. கடந்த தேர்தலில் போட்டியிடும் இடங்கள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் மாநில கட்சிகளிடம் தொகுதிகளை பெற பட்டியல் தயாரிக்கப்படும்.

    இதற்காக முழு அளவில் அறிக்கைகள் தயாரித்து தயாராக வருமாறு மாநில தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக காங்கிரஸ் நிலவரம் பற்றி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முழுமையான அறிக்கை தயாரித்து உள்ளார்.

    டெல்லியில் 29, 30-ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கும்போது தமிழக காங்கிரசின் செல்வாக்கு மற்றும் எத்தனை தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றி கே.எஸ்.அழகிரி விரிவாக தெரிவிப்பார். அதன் அடிப்படையில் தி.மு.க.விடம் தொகுதிகளை பெறுவது பற்றி காங்கிரஸ் மேலிடம் இறுதி முடிவு செய்யும்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு புகார்
    • சாலை ஆக்கிரமிப்பை நகராட்சி கண்டு கொள்ளாமல் இருப்பதால் பாதசாரிகள் நடக்க முடியாமலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் விபத்துகள் நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    உருளையான்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, புஸ்சி வீதி, காந்தி வீதி, நேரு வீதி, காமராஜர் சாலை, திருவள்ளுவர் சாலை உட்பட்ட பிரதான சாலை ஆக்கிரமிப்பை நகராட்சி கண்டு கொள்ளாமல் இருப்பதால் பாதசாரிகள் நடக்க முடியாமலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் விபத்துகள் நடைபெறுகிறது.

    அதேபோல் தொகுதியின் உட்புற சாலைகளில் ஆக்கிரமிப்பு, கட்டிட குப்பை கழிவுகள், வாய்க்காலில் தேங்கும் சேறு, சகதிகளை அகற்றாமல் இருப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கெடுகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு நோய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்து வருகிறார்கள்.

    இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் புதுவை நகராட்சி அதிகாரியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    • 2026-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.

    சென்னை:

    மக்கள் தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அடுத்த ஆண்டு பாராளு மன்ற தேர்தல் முடிந்ததும், புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசு இதற்கான நடவடிக்கைகளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அப்போது தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. உத்தரபிரதேசம் உள்பட வடமாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கார்னேஜ் மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தென் மாநிலங்களை விட, வடமாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. 2026-ம் ஆண்டுக்குப்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்பு தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.

    அப்போது உத்தரபிரதேசத்துக்கு 11 பாராளுமன்ற தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். தமிழகத்தில் 8 பாராளுமன்ற தொகுதிகள் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால் தற்போது இருக்கும் தமிழக எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 31 பாராளுமன்ற தொகுதிகளாக மாறலாம். 42 தொகுதிகள் உள்ள ஆந்திரா, தெலுங்கானாவில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 34 ஆக குறையலாம்.

    இதேபோல் கேரளாவிலும் பாராளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை 20-ல் இருந்து 12ஆக குறையலாம். கர்நாடகாவில் பாராளுமன்ற தொகுதிகள் 28-ல் இருந்து 26 ஆக குறையலாம்.

    தொகுதி மறுவரையறையின் முக்கிய நோக்கமே, ஒவ்வொரு தொகுதியிலும், ஓரளவு சமமான எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்வது தான். அப்போதுதான் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும்.

    தொகுதி மறுவரையால் உ.பி.க்கு 11 தொகுதிகளும், பீகாருக்கு 10 தொகுதிகளும், ராஜஸ்தானுக்கு 6 தொகுதிகளும், மத்திய பிரதேசத்துக்கு 4 தொகுதிகளும், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகள் அதிகரிக்கலாம்.

    தொகுதி வாக்காளர்கள் அடிப்படையில் உத்தரபிரதேசத்தில் தற்போது ஒரு எம்.பி. 30 லட்சம் பேரின் பிரதிநிதியாக உள்ளார். ஆனால் தமிழகத்தில் ஒரு எம்.பி. 18 லட்சம் பேரின் பிரதிநிதியாக உள்ளார். தொகுதி மறுவரையறைக்கு மத்திய அரசு கடந்த 1976-ம் ஆண்டு தடைவிதித்தது. இந்த தடை தற்போது 2026-ம் ஆண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தடை காரணமாக பாராளுமன்றத்தில் சம நிலையற்ற பிரதிநிதித்துவம் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • எதிர்க்கட்சி தொகுதியை புறக்கணித்தால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • 99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று ஸ்டாலின் கூறுகிறார்.

    மதுரை

    பேரறிஞர் அண்ணாவின் 115 -வது பிறந்த நாளை முன்னிட்டு, திருமங்கலம் தொகுதியில் உள்ள செக்கானூரணியில் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

    அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி தந்த ஸ்டாலின். தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று கூறுகிறார்.

    இன்றைக்கு 28 மாத

    தி.மு.க. ஆட்சியில் 150 சதவீதம் சொத்து வரி உயர்ந்துவிட்டது. மின் கட்டணம் உயர்ந்து விட்டது, பால் விலை உயர்ந்துவிட்டது நெய் விலை எட்டு முறை உயர்ந்து விட்டது, வேட்டி முதல் காலணி வரை உள்ள அனைத்து பொருள்களும் 40 சதவீதம் விலைவாசி உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் சேலம், கோவை, மதுரை ஆகிய 3 இடங்களில் பஸ் போர்ட் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அதில் திருமங்க லத்தில் பாஸ்போர்ட் அமைத்திட இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த திட்டத்தை காணோம்., அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் திருமங்கலத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் ஒதுக்க் பட்டு நிதி ஒதுக்கப்பட்டது அந்த திட்டமும் காணோம்.

    அதே போல் திருமங்கலம் ெரயில்வே மேம்பாலம் திட்ட பணியை கொண்டு வந்தோம். அந்தத் திட்டத்தை யும் காணோம். அதேபோல் இந்த செக்கா னூரணி பகுதியில் பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்ய செய்யப்பட்டு வருகிறது.ஆனால் மக்கள் எதிர்ப்பை மீறி மின் மயானத்தை கொண்டு வருகிறார்கள்.

    தொடர்ந்து மக்கள் இதற்காக போராடி வருகிறார்கள். இந்தத் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.இது போன்ற மக்கள் பிரச்சி னையில் எதிர்க்கட்சி தொகு திகளை புறக்கணித்தால் மக்களின் பிரச்சினைக்காக என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். மக்களுக்காக தான் பதவி, பதவிக்காக மக்கள் அல்ல.

    99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். இந்த கூட்டத் தின் வாயிலாக சவால் விடுகிறேன். மக்கள் மத்தியில் இது குறித்து விவாதிப்போம். அப்படி மக்கள் 99 சதவீத வாக்குறுதி நிறைவேற்றி விட்டார்கள் என்று கூறினால் நாங்கள் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.
    • லாஸ்பேட்டை தொகுதிக் குட்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக தேசிய கொடியை செல்வகணபதி எம்.பி. வழங்கினார்.

    புதுச்சேரி:

    76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்று வேண்டும்என்ற பிரதமர் மோடியின் ஆணைக்கிணங்க லாஸ்பேட்டை தொகுதிக் குட்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக தேசிய கொடியை செல்வகணபதி எம்.பி. வழங்கினார்.

    சுதந்திர தினத்தை போற்றி கொண்டாடிட பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படி சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனை வரது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றிடுவோம் என்று புதுச்சேரி பா.ஜனதா தலைமை அறிவித்திருந்தது.

    அதன்படி தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி லாஸ் பேட்டை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இல்லத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாடாளு மன்ற உறுப்பினர் செல்வ கணபதி தேசிய கொடியை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் லாஸ்பேட்டை தொகுதிக்குட் பட்டபொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லாஸ்பேட்டை தொகுதி பா.ஜனதா பிரமுகர்கள், ஜேயபிரகாஷ், மௌலி தேவன், சந்துரு, வேலு, கலியபெருமாள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • ஈரோடு இடைத்தேர்தல் அனைத்து அமைச்சர்களும் தொகுதியில் முகாமிட்டிருப்பது தவறான நடைமுறை என்று மாநில செயலாளர் கூறினார்.
    • அதானி குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பொதுக் கூட்டத்தில் பேசுவதுபோல் பேசி உள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பால கிருஷ்ணன் இன்று நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    மத்தியில் அதானி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அதானியை அழைத்து செல்கிறார். மோடி அரசு அதானிக்கு சலுகைகளை வாரி வழங்குகிறது. பாராளு மன்றத்தில் மோடி அதானி குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பொதுக் கூட்டத்தில் பேசுவதுபோல் பேசி உள்ளார்.

    ஈரோடு இடைத்தேர்தலில் பிரசாரத்திற்காக அனைத்து அமைச்சர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்த நடைமுறையை கொண்டு வந்தது அ.தி.மு.க.தான். இதை தவிர்க்க வேண்டும்.

    தமிழகத்தில் பெண்கள் காப்பகத்தில் விதிமுறைகள் மீறப்படுகின்றன. மேலும் அங்கு பாலியல் தொல்லை களும் கொடுக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காப்பகங்களை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவார்.

    நிலக்கரி ஆலைகளால் கடுமையாக மாசு ஏற்படுகி றது. ஆனால் அதைபற்றி எதுவும் சொல்லாமல் பட்டாசு ஆலைகளை குறைகூறுவது தவறான நடைமுறை. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிர மணியன், சி.ஐ.டி.யூ. செயலாளர் தேவா ஆகி யோர் உடன் இருந்தனர்.

    திருவண்ணாமலை மற்றும் ஆரணி, அரக்கோணம் மக்களவை தொகுதியில் 53 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

    திருவண்ணாமலை:

    மக்களவை தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் பதிவான வாக்குகளில், 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றிருந்தால் செலுத்தப்பட்ட டெபாசிட் தொகையை வேட்பாளர் தக்க வைத்துக் கொள்வார்கள்.

    திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ்பாபு (27,503) வாக்குகள்), மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அருள் (14,654 வாக்குகள்), அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஞானசேகர் (38,639 வாக்குகள்) உட்பட 23 வேட்பாளர்கள், தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

    6,66,272 வாக்குகளை பெற்று தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையும், 3,62,085 வாக்குகளை பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும் டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டனர்.

    ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழரசி (32,409 வாக்குகள்), மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஷாஜி (14,776 வாக்குகள்) அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தமிழன் (46,383 வாக்குகள்) உட்பட 13 வேட்பாளர்கள், டெபாசிட் தொகை இழந்துள்ளனர்.

    6,17,760 வாக்குகளை பெற்று காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தும், 3,86,954 வாக்குகளை பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் ஏழுமலையும் டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டனர்.

    ஆரணி மக்களவை தொகுதியில் பதிவான 11,14,699 வாக்குகளில் 1,90,284 வாக்குகளை பெற்றிருந்தால் டெபாசிட் தொகை திரும்ப கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 6 லட்சத்து 72 ஆயிரத்து 190 வாக்கு பெற்று வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி 3 லட்சத்து 43 ஆயிரத்து 234 ஓட்டு பெற்று தோல்வியடைந்தார்.

    இவர்களை தவிர இந்த தொகுதியில் போட்டியிட்ட 17 வேட்பாளர்கள் டெபாசிட் இழுந்தனர்.

    பாராளுமன்றத்துக்கு இறுதிக் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டது.

    அதன்படி கடந்த மாதம் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கும், 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

    கடந்த 6-ந்தேதி 51 தொகுதிகளுக்கும், 12-ந் தேதி 6-வது கட்டமாக 59 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இறுதிக் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து இருந்தது.

    பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்குவங்காளம் (9), சண்டிகர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலபிரதேசம் (4) ஆகிய மாநிலங்களில் இந்த 59 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த மாதம் 30-ந்தேதி இந்த 59 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது.

     


    கடந்த 2 வாரங்களாக இந்த 59 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வந்தது. பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் 8 மாநிலங்களிலும் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார்கள். அதுபோல காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா ஆகியோரும் அதிரடி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே மாநில கட்சிகளின் தலைவர்களான மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரும் இறுதி கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர். மேற்கு வங்காளத்தில் கலவரம் ஏற்பட்டதால் அங்குள்ள 9 தொகுதிகளிலும் நேற்று முன்தினமே பிரசாரம் ஓய்ந்தது.

    மற்ற 50 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் கடந்த 2 மாதமாக பரபரப்பாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றுள்ளது.

    நாளை (ஞாற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. இதற்காக 59 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டமான தொகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முதல் 6 கட்ட தேர்தல் மூலம் 483 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. நாளை 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் 542 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவு பெறும். பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள வேலூர் தொகுதிக்கு மட்டும் பின்னர் தேர்தல் நடைபெறும்.

    நாளை நடக்கும் தேர்தலில் சுமார் 10 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற் காக 59 தொகுதிகளிலும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 986 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    59 தொகுதிகளில் மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாளை சத்ருகன்சின்கா, ரவிசங்கர்பிரசாத், நிஷா பாரதி, பவன்குமார் பன்சால், சன்னி தியோல் ஆகியோர் தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் இந்த 50 தொகுதிகளிலும் 33 தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றி இருந்தது. இந்த தடவை மாநில கட்சிகளின் கடுமையான சவால் காரணமாக பாரதிய ஜனதா நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோவில் நகரமான வாரணாசி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த தொகுதியில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் அஜய் ராயை ஆதரித்து  வாரணாசி நகர வீதிகளில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.



    கடந்த தேர்தலில் இங்கு சுமார் 10.28 லட்சம் வாக்குகள் பதிவாகின. அதில் பிரதமர் மோடி 5 லட்சத்து 16 ஆயிரத்து 593 வாக்குகளை பெற்றிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 793 வாக்குகளை பெற்றார்.

    மூன்றாவது இடத்தில் வந்த காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் உள்பட அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
    80 தொகுதியிலும் போட்டியிட முடியுமா? என்று காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சவால் விடுத்துள்ளார். #Mayawati

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா, சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டு இருக்கிறது.

    என்றாலும் மரியாதை நிமித்தமாக சோனியா போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும், ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியிலும் வேட்பாளர்களை சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி நிறுத்தவில்லை.

    இந்த நிலையில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் போட்டியிடும் 7 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் அறிவித்தது. நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

    இதற்கு சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் நாங்கள் கூட்டணியில் சேர்க்காததால் எங்கள் மீது காங்கிரஸ் தலைவர்கள் கோபத்துடன் உள்ளனர். எங்கள் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே 7 தொகுதியில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளனர்.

    இப்படி குழப்பத்தை பரப்புவதை காங்கிரஸ் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களுக்குள் நல்ல நட்புறவு உள்ளது. அதை கெடுப்பதற்கு காங்கிரஸ் முயற்சி செய்ய வேண்டாம்.

    காங்கிரஸ் பரப்பும் வதந்திகளையும் குழப்பத்தையும் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் நம்ப வேண்டாம். காங்கிரஸ் கட்சி இனி தினமும் ஒரு வதந்தியை பரப்பும். எனவே நமது கூட்டணி தொண்டர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சிக்கு உத்தரபிரதேசத்தில் போட்டியிட ஆள் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு துணிவு இருந்தால் 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? அந்த துணிவு காங்கிரசுக்கும் இல்லை.

    80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியால் பாரதிய ஜனதாவை தோற்கடித்து விட முடியுமா? எனது இந்த சவாலுக்கு காங்கிரசார் முதலில் பதில் சொல்லட்டும்.

    இவ்வாறு மாயாவதி கூறினார்.

    மாயாவதியின் கருத்தை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வழிமொழிவதாக கூறியுள்ளார். #Mayawati

    ×