என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல்"

    • பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள எதிர் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது
    • தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தேர்தல் சீர்திருத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதில் புதிய விதிமுறைகளை ஏற்க மறுக்கும் கட்சி இனிவரும் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியது.

    ஆனால் பிரதான எதிர்க்கட்சியான சடேமாவின் தலைவர் டுண்டு லிசு அதில் கையெழுத்திடவில்லை. பின்னர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள சடேமா கட்சிக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த விவகாரம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹாசனின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மீண்டும் வெற்றி பெற்று சாமியா சுலுஹு ஹாசன் மீண்டும் அதிபராக தேர்வானார்.

    அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததாக முக்கிய எதிர்க்கட்சியான சடேமா குற்றம் சாட்டியது. இதையடுத்து அதிபர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வன்முறை வெடித்தது.

    இந்த வன்முறையில் கடந்த 3 நாட்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வன்முறையால் தான்சானியா நாட்டில் இணையத்தை முடக்கிய ஆளும் அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

    • பீகார் சட்டமன்றத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
    • தேர்தலுக்காக வெளியிடும் விளம்பரங்களுக்கு சான்றிதழ் பெறவேண்டும்.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    இந்நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக வெளியிடும் விளம்பரங்களுக்கு ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (MCMC) சான்றிதழ் பெறவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள், சம்பந்தப்பட்ட ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் இருந்து சான்றிதழ் பெறாமல், சமூக ஊடக வலைத்தளங்கள் உட்பட, எதிலும் அரசியல் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மேலும், வேட்பாளர்கள் தங்கள் உண்மையான சமூக ஊடகக் கணக்குகள் குறித்து வேட்புமனு தாக்கல் செய்யும்போது தெரிவிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • நெடுஞ்சாலை, ரயில் திட்டங்களுக்காக இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இன்னும் சில மாதங்களில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ளது.

    பீகாரில் ரூ.7,616 கோடி மதிப்புள்ள முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

    நெடுஞ்சாலை, ரயில் திட்டங்களுக்காக இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பீகார் தேர்தலை மனதில் கொண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

    முன்னதாக கடந்த மாதம் பிரதமர் மோடி பீகார் மாநிலம் கயாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு சுதந்திரமான அமைப்பு மட்டும் தான்.
    • சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு சரியான வாக்காளர் பட்டியல் அவசியம்.

    புதுடெல்லி:

    தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான சுதந்திரமான அமைப்பு மட்டும்தான். அது கோர்ட்டு அல்ல என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    வாக்காளர் பட்டியல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடந்த வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது கடந்த காலங்களில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கட்சி வாக்குகளை திருடித்தான் ஆட்சியைப் பிடித்தது.

    குறிப்பாக கர்நாடகாவின் மத்திய தொகுதியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் ஓட்டுப்போட்டதாகவும், ஒருவரே 2 முறை வாக்களித்ததாகவும் ஆதாரங்களுடன் விளக்கினார்.

    இந்த வாக்கு திருட்டில் பா.ஜ.க.விற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக செயல்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக குற்றம் சுமத்தி பேசியிருந்தார்.

    ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கட்சியினரிடம் இருந்தும், தேர்தல் ஆணையத்திடம் இருந்தும் எதிர்ப்பு குரல் வந்தன. பெங்களூருவில் ராகுல் காந்தி சமீபத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையத்தின் தரவுகள் என சில ஆவணங்களை காட்டினார். அதில் ஒரு வாக்காளர் 2 முறை வாக்களித்ததாக அந்த தரவில் கூறப்பட்டுள்ளது.


    தேர்தலில் போலி வாக்குப் பதிவு நடந்திருப்பது உண்மையென்றால், வாக்கு திருட்டு நடந்திருப்பது உண்மை என்றால் ராகுல் காந்தி அவரது குற்றச்சாட்டுகளுடன் உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு சுதந்திரமான அமைப்பு மட்டும் தான். அதற்கு நியாமான முறையில் தேர்தல் நடத்துவதற்கான பொறுப்பு உள்ளது. மாறாக கேள்வி கேட்பதற்கு அது கோர்ட்டு அல்ல.

    1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள் 20(3)(பி) கீழ் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான உரிமைக் கோரலை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது குறித்த வழக்குக்கு மட்டுமே இது பொருந்தும்.

    ஒரு முழு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் பட்சத்தில் இது பொருந்தாது என்று பதிவிட்டுள்ளார்.

    தேர்தல் ஆணையத்தின் கருத்துக்கு ராகுல் காந்தியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு சரியான வாக்காளர் பட்டியல் அவசியம். தேர்தல் ஆணையத்திடம் எங்கள் கோரிக்கை தெளிவாக உள்ளது. வெளிப்படையாக இருங்கள், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுங்கள், இதனால் மக்களும் கட்சிகளும் அவற்றைத் தணிக்கை செய்ய முடியும்" என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    • மிகக் குறைந்த பெரும்பான்மையுடனே இந்தியாவின் பிரதமராகியுள்ளார் மோடி.
    • மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு மோசடி செய்தது

    காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர சட்ட மாநாடு டெல்லியில் இன்று நடை பெற்றது.

    பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி இதில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தேர்தல் ஆணையத்தை மீண்டும் கடுமையாக சாடினார். இது தொடர்பாக ராகுல்காந்தி பேசியதாவது:-

    தேர்தல் முறையை பற்றி நான் சமீப காலமாகப் பேசி வருகிறேன். 2014 முதலே ஏதோ தவறு இருப்பதாக எனக்கு சந்தேகம் இருந்து வந்தது.

    குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதில் எனக்கு சந்தேகம் இருந்தது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    பின்னர் மராட்டியத்தில் ஏதோ நடந்தது. பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். 4 மாதங்களுக்குப் பிறகு நடை பெற்ற சட்டசபை தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை, அழிக்கப்பட்டோம். அங்கு 3 வலிமையான கட்சிகள் திடீரென்று காணாமல் போய் விட்டன.

    மராட்டிய தேர்தல் தோல்விக்கு பிறகு தேர்தல் முறைகேடு குறித்து உன்னிப்பாக கவனிக்க தொடங்கி னோம்.

    பாராளுமன்ற தேர்தலுக்கும், சட்டசபை தேர்தலுக்கும் இடையே ஒரு கோடி புதிய வாக்காளர்கள் தோன்றினார்கள். அந்த வாக்குகளில் பெரும் பகுதி பா.ஜ.க.வுக்கு சென்றது.

    தற்போது எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்கிறேன், எங்களிடம் ஆதாரம் உள்ளது. தேர்தல் ஆணையம் செயல்படவில்லை என்பதை நிரூபிக்க எங்களிடம் ஆதாரம் உள்ளது. அது சமரசம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆதாரத்தைக் கண்டுபிடிக்க நாங்கள் 6 மாதங்கள் இடைவிடாமல் உழைத்தோம். சில நாட்களில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மோசடி செய்து வெற்றி பெற்ற தற்கான ஆதாரத்தை வெளியிடுவோம். 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் பேர் போலியானவர்கள்.

    உண்மை என்னவென்றால், இந்தியாவில் தேர்தல் முறை ஏற்கனவே இறந்துவிட்டது. நாட்டில் தேர்தல் ஆணையம் என்ற நிறுவனம் இல்லை. மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் இந்தியாவின் பிரதமராகி இருக்கிறார் மோடி. 15 இடங்கள் மோசடி செய்யப்படாமல் இருந்திருந்தால், அவர் இந்தியாவின் பிரதமராக இருந்திருக்க மாட்டார்.

    15 தொகுதி மோசடியால் பிரதமராகி விட்டார். 15 முதல் 100 தொகுதிகள் வரை முறைகேடு நடந்ததாக கருதுகிறேன்.

    நான் ஒரு ராஜாவாக இருக்க விரும்பவில்லை. நான் ஒரு ராஜா என்ற கருத்துக்கு எதிரானவன் இந்த ராகுல்காந்தி.

    மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நான் போராடிக் கொண்டிருந்தபோது அருண் ஜெட்லியிடம் இருந்து எனக்கு மிரட்டல் வந்தது. போராடினால் என்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. யாருடம் பேசுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியவில்லை என பதிலளித்தேன்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    இந்த மாநாட்டில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்த் சிங் சுக்லா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

    • தேர்தலை ஒட்டி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
    • அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

    பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலுக்காக முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

    தேர்தலை ஒட்டி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன் என்றும் வாக்கு கொடுத்துள்ளார்.

    இந்நிலையில்,பீகார் மாநிலத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை முதலமைச்சர் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ளார். 

    • தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தை கொண்டு வந்தது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளீனிக் திட்டத்தை தி.மு.க முடக்கியது.

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் நடந்த திருமண விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    அதிமுக ஆட்சிக்காலத்தில் 11 மருத்துவமனைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 6 சட்டக் கல்லூரிகள் கொண்டுவந்தோம்.

    ஏராளமான கலைக் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளை ஏழை எளிய மக்களுக்காக கொண்டு வந்தோம். தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தை கொண்டு வந்தது.

    தி.மு.க ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வருவார்கள். அந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுகிறார்கள். ஏற்கனவே அறிவித்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தி.மு.க செயல்பட்டு வருகிறது.

    ஏழை எளிய விவசாயிகளுக்காக குடிமராமத்து பணி திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளீனிக் திட்டத்தை தி.மு.க முடக்கியது.

    தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியின் போது தடுப்பணைகள் ஏராளமாக கட்டப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டது.

    தி.மு.க.வின் குடும்ப அரசியலாக குடும்ப ஆட்சியாக ஸ்டாலின் அமைத்திருக்கிறார். எதில் எடுத்தாலும் கரெக்ஷன் கரப்ஷன்என தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது.

    காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க தான்.

    2010-ம் ஆண்டு தி.மு.க கூட்டணியில் இருந்த பொழுது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.

    நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருவது அ.தி.மு.க.

    41 சதவீதம் ஏழை மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.

    7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர்.

    அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழகம் முழுவதும் சிறப்பான சாலைகள், மற்றும் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

    ஆரம்ப சுகாதார நிலையங்கள் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அதிக அளவு தொடங்கப்பட்டது.

    அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்ற 2026 தேர்தலில் உங்களுடைய தேர்தலாக நினைத்து பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
    • வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் என்றார்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக, பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, அங்கு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

    அதன்பின், ராணுவத்தின் கண்காணிப்பில் முகமது யூனுஸ் இடைக்கால தலைவராக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இடைக்கால அரசு அங்கு அமைந்தது.

    ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் ஒரே பெரிய கட்சியான வங்கதேச தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தேர்தலை உடனே நடத்தாமல் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள யூனுஸ் விரும்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்நிலையில், 2026-ம் ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால தலைவர் யூனுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் எந்த நாளிலும் தேர்தல் நடைபெறும் என்பதை குடிமக்களுக்கு அறிவிக்கிறேன். தேர்தல் ஆணையம் அதற்கான அனைத்து அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

    • வருகிற அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • புதிய விதிமுறைகளை ஏற்க மறுக்கும் கட்சி இனிவரும் தேர்தலில் போட்டியிட முடியாது.

    டோடோமா:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் முடிய உள்ளதால் வருகிற அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    இதையொட்டி தேர்தல் சீர்திருத்தத்துக்கு அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. அதில் புதிய விதிமுறைகளை ஏற்க மறுக்கும் கட்சி இனிவரும் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியது.

    ஆனால் பிரதான எதிர்க்கட்சியான சடேமாவின் தலைவர் டுண்டு லிசு அதில் கையெழுத்திடவில்லை. பின்னர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்தநிலையில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள சடேமா கட்சிக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் 2030-ம் ஆண்டு வரை நடைபெறும் எந்தவொரு இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணைய இயக்குனர் ராமதானி கைலிமா அறிவித்துள்ளார்.

    • அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம்.
    • லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.

    எனது தந்தை படப்பிடிப்புக்கு செல்லும் போதும், அரசியல் நிகழ்ச்சி சென்றாலும் என்னை எப்போதும் அழைத்து செல்வார். அன்று முதல் இன்று வரை எனக்கு தொண்டர்கள் தான் பாதுகாப்பு.

    இன்று என்னை வாரிசு அரசியல் என கூறுகிறார்கள். ஆனால், ஒருகாலத்தில் விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், தொண்டர்கள் அழைத்ததின் பேரில், எனது கனவுகளை தள்ளிவிட்டு தான் அரசியலுக்கு வந்தேன். கேப்டனின் வாரிசான நான் தைரியமாக, நேர்மையாக மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். இதை யாராலும் மாற்ற முடியாது.

    லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான். 25 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் பொருள் வீடு தேடி வரும் என்று அறிவித்தவர் கேப்டன் விஜயகாந்த்.

    தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக உறுதியேற்று, தனது சொந்த பணத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர் விஜயகாந்த் தான். அதேபோல் நானும், தொண்டர்களும் 'இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு' என்பதில் உறுதியாக உள்ளோம்.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம். தே.மு.தி.க. இன்னும் பலப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • செய்தியாளர் சந்திப்பு அரங்கில் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
    • எல்இடி திரையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அருகில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது.

    இதில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, இன்று சென்னைக்கு வருகைத்தர உள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். செய்தியாளர் சந்திப்பு அரங்கில் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    மேலும், எல்இடி திரையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அருகில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக பாஜக தலைவர் பதவிக்கான பணிகளை ஒப்படைப்பது குறித்து அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அப்போது, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர ரெட்டியுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

    • பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.
    • பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த 9-ந்தேதி ஆளும் லிபரல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.

    இந்த நிலையில் கனடாவுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் புதிய அதிபராக பதவி ஏற்ற பிறகு கனடாவுக்கான அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டது. மேலும் கனடாவுக்கு அதிக வரி விதிக்கப்போவதாகவும், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா சேர்க்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.

    அதிபர் டிரம்பின் இந்த நியாயமற்ற வரிகளை எதிர்கொள்ள கனடாவில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 28ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்த இருப்பதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். நேற்று அவர் ஒட்டாவில் உள்ள ரிடோ ஹாலில் ஆளுநர் ஜெனரல் மேரி சைமனை சந்தித்தார். பாராளுமன்றத்தை கலைக்க அவர் பரிந்துரை செய்தார்.

    கனடா பாராளுமன்றத்தின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 20-ந்தேதி வரை இருக்கிறது. ஆனால் மார்க் கார்னிக்கு கட்சிக்குள்ளும், பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவு பெருகி வருவதால் அவர் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார்.

    இது குறித்து கவர்னர் ஜெனரலை சந்தித்த பிறகு பிரதமர் மார்க் கார்னி பேசும் போது, "கனடாவில் ஏப்ரல் மாதம் 28ம் தேதி தேர்தல் நடத்த கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளித்து உள்ளார். அமெரிக்கா நம்மை சொந்தமாக்கி கொள்ள விரும்புகிறது.

    டிரம்ப் நம்மை பிரிக்க நினைக்கிறார். அதை நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நாம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் கனடா உள்ளது. இது போன்ற முக்கியமான தருணங்களில் நாட்டை யார் வழி நடத்த வேண்டும் என்பதில் கனடா மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.

    ×