search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி தொகுதியில் பிரியங்கா காந்தி உச்சக்கட்ட பிரசாரம்
    X

    மோடி தொகுதியில் பிரியங்கா காந்தி உச்சக்கட்ட பிரசாரம்

    பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோவில் நகரமான வாரணாசி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த தொகுதியில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் அஜய் ராயை ஆதரித்து  வாரணாசி நகர வீதிகளில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.



    கடந்த தேர்தலில் இங்கு சுமார் 10.28 லட்சம் வாக்குகள் பதிவாகின. அதில் பிரதமர் மோடி 5 லட்சத்து 16 ஆயிரத்து 593 வாக்குகளை பெற்றிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 793 வாக்குகளை பெற்றார்.

    மூன்றாவது இடத்தில் வந்த காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் உள்பட அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
    Next Story
    ×