search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எல்.ஏ. பதவி"

    • எதிர்க்கட்சி தொகுதியை புறக்கணித்தால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • 99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று ஸ்டாலின் கூறுகிறார்.

    மதுரை

    பேரறிஞர் அண்ணாவின் 115 -வது பிறந்த நாளை முன்னிட்டு, திருமங்கலம் தொகுதியில் உள்ள செக்கானூரணியில் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

    அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி தந்த ஸ்டாலின். தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று கூறுகிறார்.

    இன்றைக்கு 28 மாத

    தி.மு.க. ஆட்சியில் 150 சதவீதம் சொத்து வரி உயர்ந்துவிட்டது. மின் கட்டணம் உயர்ந்து விட்டது, பால் விலை உயர்ந்துவிட்டது நெய் விலை எட்டு முறை உயர்ந்து விட்டது, வேட்டி முதல் காலணி வரை உள்ள அனைத்து பொருள்களும் 40 சதவீதம் விலைவாசி உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் சேலம், கோவை, மதுரை ஆகிய 3 இடங்களில் பஸ் போர்ட் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அதில் திருமங்க லத்தில் பாஸ்போர்ட் அமைத்திட இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த திட்டத்தை காணோம்., அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் திருமங்கலத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் ஒதுக்க் பட்டு நிதி ஒதுக்கப்பட்டது அந்த திட்டமும் காணோம்.

    அதே போல் திருமங்கலம் ெரயில்வே மேம்பாலம் திட்ட பணியை கொண்டு வந்தோம். அந்தத் திட்டத்தை யும் காணோம். அதேபோல் இந்த செக்கா னூரணி பகுதியில் பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்ய செய்யப்பட்டு வருகிறது.ஆனால் மக்கள் எதிர்ப்பை மீறி மின் மயானத்தை கொண்டு வருகிறார்கள்.

    தொடர்ந்து மக்கள் இதற்காக போராடி வருகிறார்கள். இந்தத் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.இது போன்ற மக்கள் பிரச்சி னையில் எதிர்க்கட்சி தொகு திகளை புறக்கணித்தால் மக்களின் பிரச்சினைக்காக என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். மக்களுக்காக தான் பதவி, பதவிக்காக மக்கள் அல்ல.

    99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். இந்த கூட்டத் தின் வாயிலாக சவால் விடுகிறேன். மக்கள் மத்தியில் இது குறித்து விவாதிப்போம். அப்படி மக்கள் 99 சதவீத வாக்குறுதி நிறைவேற்றி விட்டார்கள் என்று கூறினால் நாங்கள் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×