என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Balakrishnan"
நாகர்கோவில் பூதப்பாண்டி ஞாலம் பகுதியைச் சேர்ந்த துணை நடிகை சந்தியா கடந்த ஜனவரி மாதம் சென்னையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனே, அவரை கொலை செய்து உடல் பாகங்களை குப்பை தொட்டியில் வீசியது தெரிய வந்தது. சந்தியாவின் உடல் பாகங்களான இடுப்பு பகுதி, கை, கால்கள் கிடைத்த நிலையில் தலையை போலீசார் தேடி வந்தனர்.
ஆனால் 2½ மாதங்களாகியும் சந்தியாவின் தலை மட்டும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சந்தியாவின் உடல் பாகங்களை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து அவரது பெற்றோர் ராமச்சந்திரன், தாய் பிரசன்னகுமாரி, சித்தி உஷா, அவரது மகள் விஜி ஆகியோர் இன்று சென்னை வந்தனர். அவர்களிடம் சந்தியாவின் உடல் பாகங்கள் ஒப்படைக்கப்பட்டது.
இதனை பெற்றுக் கொண்டு அவர்கள் இன்று மாலை ஊருக்கு செல்கிறார்கள். ஞாலம் கிராமத்தில் சந்தியாவின் உடல் பாகங்கள் அடக்கம் செய்யப்பட உள்ளது.
தலை கிடைக்காத நிலையில் கொலையுண்டது சந்தியாதான் என்பதை உறுதி செய்வதற்காக டி.என்.ஏ. சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் இன்னும் அந்த சோதனை நடைபெறவில்லை.
பரபரப்பாக பேசப்பட்ட வழக்கில் இதுவரையில் டி.என்.ஏ. சோதனை நடத்தப்படாதது ஏன்? என்கிற கேள்வியை சந்தியாவின் குடும்பத்தினர் எழுப்பி உள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கோர்ட்டு அனுமதிக்காக காத்திருப்பதாகவும் விரைவில் டி.என்.ஏ. சோதனை நடைபெறும் என்றும் தெரிவித்தனர். #Sandhya #Balakrishnan
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பில், கட்சி சின்னம் சான்றிதழ் படிவத்தில் கையொப்பம் மட்டுமே ஏற்புடையது என்ற விதிக்கு மாறாக, கைரேகையை ஏற்றுக் கொண்டதன் மூலம் தேர்தல் அதிகாரி தவறு செய்துள்ளார் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள கை ரேகையும் உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை என்பதோடு ஜெயலலிதா சுயநினைவு இல்லாத நிலையில் எப்படி கைரேகை வைத்திருக்க முடியும். எனவே, கைரேகை போலியானது என்ற அடிப்படையில் ஏ.கே. போஸின் வெற்றியை ரத்து செய்துள்ளார்.
ஒரு முதலமைச்சரின் கைரேகையையே போலியாக பதிவு செய்தது பல கேள்விகளை எழுப்புகிறது. இத்தகைய தில்லுமுல்லு செய்தது யார் என்பதும், தேர்தல் ஆணையம் இதை எப்படி ஏற்றுக்கொண்டது என்பதும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.
எனவே, தலைமை தேர்தல் ஆணையம் இத்தகைய தில்லுமுல்லுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலத்தில் அவரது கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி அரசு கோப்புகளில் வேறு ஏதும் தில்லுமுல்லுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகங்களை இத்தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளதால், இது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Jayalalithaa #fingerprints
ராமநாதபுரம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில் நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கும் கட்சிகள்தான் இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி காணாமல் போய் விடும். சட்டசபை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்கும்.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை பாராளுமன்ற தொகுதி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்.
பாராளுமன்ற தேர்தல் முறைகேடு இல்லாமல் நடைபெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று சொல்ல முடியாது. முறைகேடு இல்லாமல் தேர்தலைநடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த பிரச்சினையில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவரை கைது செய்ததோடு வழக்கை முடித்துவிடக் கூடாது.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #Balakrishnan
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் தமிழக மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும். மக்களை ஏமாற்றுவதற்காக வெத்து வேட்டு அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுள்ளனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் கூட்டணி குறித்து தி.மு.க.வுடன் பேசி வருகிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இறுதி முடிவு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #TNBudget #Budget2019 #Balakrishnan
சென்னையில் துணை நடிகை சந்தியா கொலை வழக்கில் அவரது கணவர் பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் விசாரணையின்போது பாலகிருஷ்ணன் பதட்டம் இல்லாமல் இருந்தார். அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் போலீசாருக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.
சந்தியாவின் உடலை ஏன் துண்டு, துண்டாக வெட்டினீர்கள் என்று கேட்டபோது, அதற்கு மட்டும் பதில் அளிக்காமல் அமைதி ஆனார். அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
என் மனைவி மீது எனக்கு எந்த அளவுக்கு பாசம், அன்பு, காதல் இருந்ததோ அதே அளவுக்கு அவர் மீது வெறுப்பு, ஆத்திரம் இருந்தது. 2000-ம் ஆண்டில் எங்களுக்கு திருமணம் நடந்தது. அவளுக்கு இப்போது 35 வயது. எனக்கு 51 வயது. அவள் நல்ல அழகு. நானோ சுமாரான அழகுதான். நான் 10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளேன். என் மனைவி பட்டப்படிப்பு படித்துள்ளார்.
எனக்கு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. சந்தியாவும் நடிகை ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தார். எங்களுக்கு 2 குழந்தைகள் இருந்தன. ஆனாலும் இல்லற வாழ்வு திருப்தியாக இல்லை.
எங்கள் இருவருக்கும் 16 வயது வித்தியாசம் என்பதால் கிழவனை திருமணம் செய்து வைத்துவிட்டதாக தன் பெற்றோரிடம் சந்தியா கூறி வந்தாள். படுக்கைக்கு அழைக்கும் போதெல்லாம் கிழவன் என்று கிண்டல் செய்தாள். தாம்பத்திய உறவால் அழகு சிதைந்துவிடும் என்று கூறி என்னுடன் உறவு வைத்துக் கொள்வதை நிறுத்திவிட்டாள். இதனால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு சென்னையில்தான் நாங்கள் இருவரும் தங்கியிருந்தோம். ஆனால் அவர் சில நாள்கள் வீட்டுக்கு வரமாட்டாள். தன் விருப்பம் போல வாழ்ந்தாள். அதை தட்டிக்கேட்டால் நான் உங்களுடன் வாழ விரும்பவில்லை என விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேனே. அதன் பிறகு என்னைக் கேள்வி கேட்க நீங்கள் யார் என்று எதிர்த்துப் பேசினாள்.
அவள் அழகாக இருப்பதை காரணம் காட்டி பல வகையில் நிராகரித்தாள். இதுதான் எனக்கும் மனைவிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம். சந்தியாவின் ஒவ்வொரு கேள்வியும் என்னை அவமானப்படுத்தியதால் அவளை கொலை செய்த பிறகும் உடலைத் துண்டு, துண்டாகக் கூறுபோட்டேன்.’’
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
சந்தியா கொலை செய்யப்பட்ட தகவலை அறிந்து அவரின் பெற்றோர், தங்கை மற்றும் உறவினர்கள் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.
அவர்களிடம் சந்தியாவின் உடல் பாகங்களை போலீசார் காண்பித்த போது சந்தியாவின் அம்மா பிரசன்னா, ‘உன்னை இந்த நிலைமையில் பார்க்கவா சென்னைக்கு அனுப்பி வைத்தேன்’ என்று கதறி உள்ளார். அவருக்கு போலீசாரும் உறவினர்களும் ஆறுதல் கூறியுள்ளனர். #Sandhya #Balakrishnan
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி வருமாறு:-
பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குழுக்கள் அமைக்கப்படுகிறது. வீடு வீடாக வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள்.
பா. ஜனதா- அ.தி.மு.க. அரசுக்கு வருகிற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். பா.ஜனதா அரசுக்கு எதிரான 3-வது அணியை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். ஏனென்றால் அது பா.ஜனதா நிறுத்தும் மற்றொரு அணியாகதான் கருத முடியும்.
மத சார்பற்ற கட்சிகளுக்கு தான் எங்கள் ஆதரவு உண்டு. அந்த வகையில் தி.மு.க.- காங்கிரஸ் ஒன்றாகபாடுபடுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எங்களது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணிக்கு ரூ.1கோடியை நிவாரணமாக அரசு வழங்க வேண்டும். அந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதை கண்டுபிடித்த பிறகும் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் மாத்திரைகள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.
வெளி உலகுக்கு தெரிந்த பிறகே ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். இந்த விசயத்தை திட்டமிட்டு மறைத்த டாக்டர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Kbalakrishnan #BJP
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடகொண்டபள்ளியைச் சேர்ந்த நந்திஸ்-சுவேதா என்ற புதுமண காதல் தம்பதியினரை சுவேதியின் குடும்பத்தார் ஆணவ படுகொலை செய்தனர்.
அவர்களது உடல்களை கர்நாடக மாநிலம் மாண்டிய அருகே சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி காவரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுவேதாவின் தந்தை, பெரியப்பா மற்றும் உறவினர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆணவ படுகொலை நெஞ்சை உலுக்கும் வகையில் நடந்துள்ளது. இதுபோன்ற ஆணவ கொலைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.
ஆனால் சட்டமன்றத்தில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழத்தில் ஆணவ படுகொலை நடக்கவில்லை என்று கூறி உள்ளார்.
இறந்துபோன நந்திஸ் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை மட்டும் கைது செய்துள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் ஒரு கூட்டமே சதி செய்து உள்ளது. அவர்களை கண்டுபிடித்து போலீசார் கைது செய்யவேண்டும்.
ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. உடனடியாக ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #HonourKilling
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு போடுவது மிகவும் கண்டனத்துக்குரியது.
காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்றாமல் கிடப்பில் போட்ட போது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.
எனவே பண்டிகை காலமான தீபாவளிக்கு மகிழ்ச்சி பொங்க குடும்பத்துடன், குழந்தைகளுடன் பட்டாசு வெடித்தவர்களை குற்றவாளி போல் தேடி பிடித்து வழக்கு பதிவு செய்வதும், போலீஸ் வாகனத்தில் பிடித்துச் சென்று அவமானப்படுத்துவதையும் மக்கள் விரும்புவதில்லை.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் பிரச்சனைகள் அதிகம் உள்ள நிலையில் அதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமல் பொது மக்களிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்வதும், பொது மக்களை போலீஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து காலை முதல் மாலை வரை உட்கார வைப்பதையும் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது அநியாயம்.
எனவே பட்டாசு போடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது. போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரை, சர்வாதிகார பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தின் கழுத்தில் ஏறி அமர்ந்து சவாரி செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசும், தமிழக ஆளுநரும் எண்ணுவது, தமிழ்நாட்டில் நடப்பது பா.ஜ.க. ஆட்சியே என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.
அ.தி.மு.க ஆட்சியின் அனைத்து வகை ஊழல்களுக்கும், சட்டத்திற்குப் புறம்பாக முட்டுக் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள ஆளுநரும் “பொம்மை” எடப்பாடி பழனிசாமி அரசைப்பயன்படுத்தி, ஜனநாயகத்தைக் குழி தோண்டிப்புதைக்கும் வேலையில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.
ஆளுநர் கொடுத்த புகாரின் பேரில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. சென்னை உயர்நீதி மன்றத்தையே கொச்சைப்படுத்திப் பேசிய எச்.ராஜாவை கைது செய்யவில்லை. போலீஸ் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஆளுநரே அவரை சந்தித்துப் பேசுகிறார். இன்னொரு பக்கம் “பாசிச பா.ஜ.க” என்றதால் மாணவி சோபியா கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை பற்றி, தொடர் எழுதினால் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். என்னதான் நடக்கிறது தமிழகத்தில்?
தமிழ்நாடு என்ன ஜனநாயக நாடா என்றே கேட்கத்தோன்றுகிறது. ஊழல் அ.தி.மு.க அரசும், பாசிச பா.ஜ.க. அரசின் முகவராக இருக்கும் ஆளுநரும் தமிழ்நாட்டில் ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்தி, பத்திரிகைச் சுதந்திரத்திற்கு பகிரங்கமான அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.
பொம்மை அரசை வைத்துக் கொண்டு தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத்தூண்டும் மத்திய பா.ஜ.க. அரசும், மாநில ஆளுநரும் இந்த அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு நேரடியாகவே பா.ஜ.க. வழிகாட்டுதலில் மாநில அரசை நடத்தலாம். அதை விடுத்து விட்டு, கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அரசைப் பயன்படுத்துவது வெட்கக்கேடானது.
பொறுப்பான மாநில ஆளுநர் பதவியில் இருப்பவர் மறைமுகமாக அரசியல் செய்ய நினைக்கும் போது, விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும். அப்படி பொறுத்துக்கொள்ள இயலாமல், முதலமைச்சரை ராஜ்பவனுக்கே அழைத்து, நக்கீரன் கோபாலை கைது செய்யச் சொல்லியிருப்பது ஒரு மாநில ஆளுநருக்கு அதுவும் அரசியல் சட்டப் பதவியை வகிப்பவருக்கு அழகா?
ஆகவே, கைது செய்யப்பட்ட திரு நக்கீரன் கோபாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கினை நிபந்தனையின்றி திரும்பபெற வேண்டும் என்றும் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருந்து வருகிறது. அதனால் தான் நக்கீரன் கோபாலை விமான நிலையத்தின் உள்ளேயே போலீசார் கைது செய்து இருக்கிறார்.
பாஷிச அதிகாரத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நக்கீரன் கோபாலுக்கு தெரியும். பத்திரிக்கை மற்றும் ஊடகத்தின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலில் கவர்னர் ஈடுபட்டு வருகிறார்.
கவர்னர் மாளிகையில் இருந்து எந்த ஒரு அதிகாரியும் உத்தரவு போட முடியாது. நக்கீரன் கோபாலை கைது செய்யக்கோரி கவர்னர் தான் சொல்லி இருக்கிறார்.
நக்கீரன் கோபாலை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசையும், காவல்துறையையும் கவர்னர் தனக்காக பயன்படுத்துகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்:-
உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீதான புகார்கள், குற்றச்சாட்டுகள் எழும் போது அதை வெளியுலகத்திற்கு கொண்டு வருவதும், அதன் மீது முறையான நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவதும் பத்திரிகை சுதந்திரத்தின் உயிர் நாடியாகும்.
அதை பறிக்கும் வகையில் இன்று நக்கீரன் கோபால் கைது செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் மீது இத்தகைய தாக்குதல்கள் தொடுப்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும். எனவே, ஆளுநர் தமிழகத்திலிருந்து திரும்ப அழைக்கப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் எதிர்கட்சியினர் மற்றும் மக்கள் உரிமைகளுக்காக போராடுகிற பல அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அலைக்கழிக்கப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது அன்றாட நடவடிக்கைகளாக மாறியுள்ளது.
இத்தகைய தாக்குதல்களின் மூலம் தமிழக மக்களின் உரிமை போராட்டங்களை முடக்கி விட நினைப்பது பகல் கனவாகவே முடியும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே, கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால்லை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தமிழக ஆளுநர் மூலம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக் கிறோம். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
ஆளுநர் அலுவலகத்திலிருந்து பத்திரிகையாளர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்படுவது இந்தியாவில் வேறெங்குமே நடந்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இப்படி ஒரு மிக மோசமான முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டிருப்பது வேதனைக்குரியது.
பல்கலைகழகத்துணை வேந்தர் நியமனங்களில் முறைகேடு நடந்ததாக ஆளுநர் கூறியிருந்தார். துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் கொண்ட ஆளுநரே அப்படி சொன்னது எல்லோருக்கும் வியப்பளித்தது. அது குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதை திசை திருப்புவதற்காகவே இப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருகிறதோ என்ற அய்யம் நமக்கு எழுகிறது.
தமிழ்நாட்டில் ஊடகங்களுக்கு ஆளும் தரப்பினரால் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து நெருக்கடிகள் தரப்படுகின்றன. இதைப்பற்றி பிரதமரிடமே சென்று ஊடக வியலாளர்கள் முறையிட்டு உள்ளனர்.
இந்தச் சூழலில் பத்திரிக்கை சுதந்திரத்தை நெரிக்கும் செயலில் ஆளுநர் அலுவலகமே ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது. இது கருத்துரிமைக்குப் பேராபத்தாகும். இதை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் குரலெழுப்ப முன்வரவேண்டும் என்று அழைக்கிறோம்.
பத்திரிகை சுதந்திரத்திற்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. நக்கீரன் கோபாலை தமிழக காவல்துறை கைது செய்து, வழக்கும் பதிவு செய்திருக்கிறது. இது கண்டிக்கத் தக்கது.
அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கினை வாபஸ் பெற வேண்டும். பத்திரிக்கையாளர்களை அடக்கினால் அது பத்திரிக்கை சுதந்திரத்தை முடக்கும் செயலாகும்.
நக்கீரன் ஆசிரியர் கோபால் புனே செல்லுவதற்காக சென்னை விமான நிலையத்திற்குச் சென்றபோது, காவல்துறையினரால் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அவரிடம் என்ன குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
நக்கீரன் கோபாலின் கைதினைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு விரைந்தார். வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்கவேண்டும் என்று வைகோ கூறியதையும் காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
வேறு வழியின்றி வைகோ காவல் நிலையத்திலேயே அமர்ந்து மறியல் செய்தார். அதனைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடக்கின்ற நடவடிக்கைகளை பார்த்தால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளதா? பத்திரிகையாளர்களையும், கருத்துக்கூறக் கூடியவர்களையும் நசுக்கலாம், ஒடுக்கலாம், அச்சுறுத்தலாம் என்று நினைப்பது ஜனநாயக நாட்டில் அனுமதிக்கப்படாதவையாகும்.
அண்ணா பெயரில் உள்ள ஆட்சிக்கு இது அழகல்ல; கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவா ஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது ஆளுநர் அலுவலகத்தின் பதட்டத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கோபால் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்ச நிலையாக அமைந்துள்ளது.
நாட்டின் நீதி பரிபாலன சபையான உயர்நீதி மன்றத்தையும், காவல் துறையையும் மிக மோசமாக விமர்சித்த பா.ஜ.கவின் தேசிய செய லாளர் எச். ராஜாவை கைது செய்யாத காவல்துறை, ஆளுநர் அலுவலகம் புகார் அளித்த உடனேயே நக்கீரன் கோபாலை கைதுச் செய்திருப்பது தமிழக அரசின் பாரபட்சப் போக்கை அம்பலப்டுத்தியுள்ளது.
தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஜனநாயக நாட்டில் ஆளுநரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்தான். ஆளுநரின் செயல்பாட்டை விமர்சித்தால் அது அவரது பணியில் தலையிடுவதாக குறிப்பிடுவது தமிழகத்தில் ஜனநாயகம் கேள்வி குறியாக்கப்ட்டுள்ளது என்பதன் அடையாளமாக அமைந்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முத்தரசன் கூறியதாவது:-
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதை மிக வன்மையாக கண்டிப்பதுடன் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற்று, உடனடியாக அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், ‘ஜனநாயக குரலை அடக்க நினைக்கும் ஆளுநர் மற்றும் மாநில அரசின் செயலை ஊடகத் துறையினரும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து முறியடிக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #NakheeranGopal #MKStalin #Thirumavalavan
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு தற்போது தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மேலும் சில இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு இந்த திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருணாசை பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே பழைய வழக்குகளை கிளறுகின்றனர். அரசை விமர்சிப்பவர்கள் மீது வழக்கு, கைது நடவடிக்கை என பேச்சுரிமை, எழுத்துரிமை, ஜனநாயகம் நசுக்கப்படுகிறது.
நாக்கை அறுப்பேன் என கூறிய அமைச்சர் மீது நடவடிக்கை இல்லை. தனிப்படையால் தேடப்படும் எச்.ராஜா போலீசார் பாதுகாப்பில் சுற்றி வருகிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கருணாஸ், மாணவி ஷோபியா போன்றோர் மீது அரசு அடக்குமுறையை கையாள்கிறது. நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். மேலும் ஜாமீன் பெற முடியாமல் தவிக்கும் விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். மணல் திருட்டு, அரசு அனுமதியுடன் தனியார் கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.
ஆனால் காவல் துறையினர் நியாயமாக போராடும் மாற்றுத் திறனாளிகள் மீது கூட அடக்குமுறையை கையாள்கின்றனர். இதனை அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் மக்களை ஒன்றாக திரட்டி வலிமைமிக்க மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாநில குழு உறுப்பினர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி விழுப்புரம் வடக்கு மாவட்ட குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். மத்திய குழு வாசுகி, மாநில செயற்குழு நூர்முகம்மது, அரசியல் தலைமை குழு ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பரையாற்றினர். கூட்டத்தில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடனே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ.க.வினர் சிலரை பேசவிட்டு பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றனர். பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருகிறார். ஆனால் இதுவரை அவரை தமிழக அரசு கைது செய்யவில்லை.
ஆனால் பா.ஜ.க.வை விமர்சிப்பவர்கள் மட்டும் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். எச்.ராஜாவை போலீசார் கைது செய்யாவிட்டால் நாங்களே அவரை பிடித்து போலீசில் ஒப்படைக்கும் நிலை ஏற்படும்.
தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. பதவியை காப்பாற்றி கொள்ளவே முனைப்பாக உள்ளது. தமிழக அரசின் சுகாதாரதுறை, மின்துறை உள்ளிட்ட பல துறைகளில் ஊழல் புகார்கள் கூறப்படுகின்றன. இந்த ஊழல் முறைகேடுகளை கண்டித்து மக்களை திரட்டி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சி செய்ய முடியாது என்று டி.டி.வி. தினகரன் கூறி வருவது கண்டிக்கத்தக்கது.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. எதிர்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்களும் நடந்தன.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூட்டத்தில் தங்க வைத்தனர்.
கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் கூறும்போது, மோடி ஆட்சியில் பெட்ரோல்-டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் உற்பத்தி வரியையும், மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியை குறைத்தாலே போதும். பெட்ரோல் விலையும் டீசல் விலையும் குறையும் என்றார்.
முத்தரசன் கூறும்போது, ‘‘மத்திய-மாநில அரசுகள் பெட்ரோலிய பொருள்கள் மீதான வரியை குறைந்தாலே போதும்’’ என்றார்.
காசிமேடு சிக்னல் அருகே மீனவர் மக்கள் முன்னணி கட்சி தலைவர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். #BharathBandh #PetrolDieselPriceHike
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்