search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perungudi woman murder"

    சென்னையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் அவருடைய பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. #Sandhya #Balakrishnan
    சென்னை:

    நாகர்கோவில் பூதப்பாண்டி ஞாலம் பகுதியைச் சேர்ந்த துணை நடிகை சந்தியா கடந்த ஜனவரி மாதம் சென்னையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனே, அவரை கொலை செய்து உடல் பாகங்களை குப்பை தொட்டியில் வீசியது தெரிய வந்தது. சந்தியாவின் உடல் பாகங்களான இடுப்பு பகுதி, கை, கால்கள் கிடைத்த நிலையில் தலையை போலீசார் தேடி வந்தனர்.

    ஆனால் 2½ மாதங்களாகியும் சந்தியாவின் தலை மட்டும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில், சந்தியாவின் உடல் பாகங்களை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து அவரது பெற்றோர் ராமச்சந்திரன், தாய் பிரசன்னகுமாரி, சித்தி உஷா, அவரது மகள் விஜி ஆகியோர் இன்று சென்னை வந்தனர். அவர்களிடம் சந்தியாவின் உடல் பாகங்கள் ஒப்படைக்கப்பட்டது.

    இதனை பெற்றுக் கொண்டு அவர்கள் இன்று மாலை ஊருக்கு செல்கிறார்கள். ஞாலம் கிராமத்தில் சந்தியாவின் உடல் பாகங்கள் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    தலை கிடைக்காத நிலையில் கொலையுண்டது சந்தியாதான் என்பதை உறுதி செய்வதற்காக டி.என்.ஏ. சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் இன்னும் அந்த சோதனை நடைபெறவில்லை.

    பரபரப்பாக பேசப்பட்ட வழக்கில் இதுவரையில் டி.என்.ஏ. சோதனை நடத்தப்படாதது ஏன்? என்கிற கேள்வியை சந்தியாவின் குடும்பத்தினர் எழுப்பி உள்ளனர்.

    இதுபற்றி போலீஸ் தரப்பில் கோர்ட்டு அனுமதிக்காக காத்திருப்பதாகவும் விரைவில் டி.என்.ஏ. சோதனை நடைபெறும் என்றும் தெரிவித்தனர். #Sandhya #Balakrishnan
    பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல்- தலையை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னையை அடுத்துள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 20-ந்தேதி ஒரு பெண்ணின் வலது கையும் 2 கால்களும் கிடைத்தன. நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் எதிரே உள்ள குப்பை சேகரிப்பு மையத்தில் இருந்து கொட்டப்பட்ட குப்பையிலேயே கையும், கால்களும் பார்சலில் இருந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பள்ளிக்கரணை போலீசார் விரைந்து சென்று கை, கால்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

    துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட இளம் பெண் யார்? என்பதை கண்டுபிடிப்பதற்காக போலீஸ் வேட்டை முடுக்கி விடப்பட்டது. கடந்த 5 நாட்களாக சென்னை மாநகர் முழுவதும் போலீசார் தலையை தேடிப்பார்த்தனர். குப்பை மேடுகளிலும், புதர் மண்டிய பகுதிகளிலும் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இளம்பெண்ணின் தலையையும் உடலையும் தேடிக்கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து சென்னை மாநகர் முழுவதும் மாயமான பெண்களின் பட்டியலை போலீசார் சேகரித்தனர். மொத்தம் 60 பேர் காணாமல் போனது தெரிந்தது. இவர்கள் அனைவரும் 25 வயதில் இருந்து 40 வயதுக்குட்பட்டவர்கள். காணாமல் போன இந்த பெண்களின் போட்டோ மற்றும் செல்போன் நம்பரை வைத்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, இளம்பெண் கொலை வழக்கு சவாலாகவே உள்ளது. 3 தனிப்படையினர் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

    இதில் துப்பு துலங்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார். கொலையுண்ட பெண்ணை கண்டுபிடிப்பதற்காக போஸ்டர்களையும் போலீசார் அச்சடித்து ஒட்டியுள்ளனர்.
    சென்னை அடுத்த பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை போலீசார் தேடி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னையை அடுத்த பெருங்குடி குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் ஒரு பெண்ணின் வலது கை மற்றும் 2 கால்கள் கிடைத்தன.

    நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் எதிரில் உள்ள குப்பை சேகரிப்பு மையத்தில் இருந்து லாரியில் கொண்டு செல்லப்பட்ட குப்பைகளை கொட்டியபோதுதான் இளம்பெண்ணின் கை, கால்கள் ஒரு பையில் வைத்து வீசப்பட்டது தெரிய வந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பள்ளிக்கரணை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கொலையுண்ட பெண்ணின் கையில் வளையல் ஒன்று கழற்றாமல் அப்படியே இருந்தது. கையில் டிராகன் படம் பச்சை குத்தப்பட்டு உள்ளது. இரண்டு சிறிய பொம்மைகளும் பச்சை குத்தப்பட்டு இருக்கிறது. காலில் மெட்டி அணிந்ததற்கான அடையாளம் காணப்பட்டன.

    கை, கால்களை மட்டும் மீட்டு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கொலையுண்ட பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். துண்டு துண்டாக அவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

    பெண்ணின் தலை மற்றும் உடல் பாகங்களை காணவில்லை. கொலையாளிகள் அவற்றை வேறு எங்காவது வீசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    நுங்கம்பாக்கம்- கோடம்பாக்கம் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் கை, கால்களை வீசிய கும்பல் உடலையும், தலையையும் சென்னையில் வேறு எங்காவது குப்பை தொட்டியிலேயே வீசி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து சென்னை மாநகர பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    வடசென்னை பகுதியில் உடலும், தலையும் வீசப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கு பெண்ணின் உடலோ, தலையோ கிடைக்கவில்லை.

    இதையடுத்து சென்னையில் உள்ள மற்ற குப்பை கிடங்குகளிலும் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

    மீட்கப்பட்ட கை, கால்களை வைத்து பார்க்கும்போது கொலையுண்ட பெண் பணக்கார வீட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கள்ளக்காதல் தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    அவர் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்ணாக இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சவுகார்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையுண்ட பெண் கோடம்பாக்கம் அல்லது நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் அல்லது மத்திய சென்னை பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் முதலில் கருதப்பட்டது.

    இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை மாநகர் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் மாயமான பெண்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அதில் போலீசுக்கு உருப்படியான துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

    இதன் காரணமாக கொலையுண்ட பெண்ணை கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் பள்ளிக்கரணை போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

    வெளி மாவட்டங்களில் வசித்து வந்த பெண்ணை யாராவது கடத்தி வந்து சென்னையில் கொலை செய்து விட்டு உடலை துண்டு துண்டாக வீசி சென்றார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரிமுனை பகுதியில் கொடுங்கையூரைச் சேர்ந்த நகை கடை ஊழியர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார். ஆனால் அவரது உடல் பாகங்கள் அந்த பகுதியிலேயே தனித்தனியாக வீசப்பட்டு இருந்தது. இதனால் ஒரே நாளில் அனைத்து உடல் பாகங்களையும் போலீசார் சேகரித்து விட்டனர்.

    ஆனால் பெருங்குடியில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் கை, கால்கள் கிடைத்து 3 நாட்கள் ஆகியும் மற்ற உடல் பாகங்கள் கிடைக்காமலேயே உள்ளது. இதனால் போலீசார் இந்த வழக்கை சவாலாக எடுத்து துப்பு துலக்கி வருகிறார்கள்.
    பெருங்குடி குப்பையில் கை, கால் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிக்கரணை:

    பெருங்குடி பகுதியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. நேற்று மாலை கோடம்பாக்கம், பவர்அவுஸ் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை லாரியில் கொண்டு சென்று தொழிலாளர்கள் அங்கு கொட்டினர்.

    அப்போது குப்பையுடன் பெண்ணின் துண்டிக்கப்பட்ட வலது கை மற்றும் 2 கால்கள் தனித்தனியாக விழுந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் துண்டிக்கப்பட்ட கை, 2 கால்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த கையில் ‘டிராகன்’ படம், மற்றும் சிவன்-பார்வதி உருவம் பச்சை குத்தப்பட்டு இருந்தது. கால் விரலில் மெட்டி காணப்பட்டது.

    மர்ம கும்பல் அவரை கடத்தி சென்று துண்டு, துண்டாக வெட்டி குப்பையில் வீசி உள்ளனர். கொலையுண்ட பெண்ணின் தலை மற்றும் மற்ற உடல் பாகங்கள் இதுவரை சிக்கவில்லை. அதனை கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோடம்பாக்கம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட குப்பையில் பெண்ணின் கை, கால் கிடந்தததால் அவர் அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த வாரத்தில் மாயமான பெண்கள் பற்றிய விவரத்தை சேகரித்து வருகின்றனர்.

    கொலையுண்ட பெண்ணை அடையாளம் காண்பது போலீசாருக்கு பெரிய சவாலாக உள்ளது.
    ×