search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrested In Anna Salai"

    அண்ணா சாலையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர். #BharathBandh #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. எதிர்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்களும் நடந்தன.

    சென்னை அண்ணா சாலையில் இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.



    ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூட்டத்தில் தங்க வைத்தனர்.

    கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் கூறும்போது, மோடி ஆட்சியில் பெட்ரோல்-டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் உற்பத்தி வரியையும், மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியை குறைத்தாலே போதும். பெட்ரோல் விலையும் டீசல் விலையும் குறையும் என்றார்.

    முத்தரசன் கூறும்போது, ‘‘மத்திய-மாநில அரசுகள் பெட்ரோலிய பொருள்கள் மீதான வரியை குறைந்தாலே போதும்’’ என்றார்.

    காசிமேடு சிக்னல் அருகே மீனவர் மக்கள் முன்னணி கட்சி தலைவர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.   #BharathBandh #PetrolDieselPriceHike

    ×