என் மலர்
நீங்கள் தேடியது "திருமாவளவன்"
- தமிழகத்தில் 1 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடிய நிலைமை இருக்கிறது.
- மக்கள் ஆதரவே இல்லாத மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர்கள் எந்த தைரியத்தில் பேசுகிறார்கள் என்று விளங்கவில்லை.
தூத்துக்குடி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.
பின்னர் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குளிர்கால கூட்டத்தொடர் பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எஸ்.ஐ.ஆர். குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்திருக்கிறோம். வாக்கு திருட்டு பீகாரிலேயே பா.ஜ.க. அணியினருக்கு வெற்றி வாகையை தந்திருக்கிறது. 47 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த 47 லட்சம் பேரும் அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவியவர்களா என்றால் இல்லை. ஒருவர் கூட அப்படி இல்லை என்பதுதான் வேதனைக்குரியது.
இந்த நாட்டின் மக்களின் வாக்குரிமை பறிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாக எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை அமைந்துள்ளது. அவர்களுடைய நோக்கம் என்னவென்று விளங்கவில்லை. எஸ்.ஐ.ஆர். திருத்தத்தை பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் 1 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடிய நிலைமை இருக்கிறது. அந்த 1 கோடி பேர் வாக்குரிமையை பறி கொடுப்பதோடு குடியுரிமையையும் பறிகொடுக்கக் கூடிய அச்சம் ஏற்படுகிறது. தேர்தல் ஆணையம் பா.ஜ.க. அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறது. சுதந்திரமாக இயங்க முடியாத நிலை இருக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்கட்சி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட மக்களவையில் பதிவு செய்திருக்கிறோம்.
ஆனால் ஆளுங்கட்சி அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது கவலை அளிக்கிறது. குடிமக்களின் வாக்குரிமை மட்டுமின்றி குடியுரிமையும் பறிக்கக்கூடிய ஆபத்தான அரசியல் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. நாடு எந்த திசையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று கவலை மேலோங்கி உள்ளது.
பீகாரில் வாக்கு திருட்டு மூலம் வெற்றி பெற்றது போல் தமிழகத்திலும் வெற்றி பெறுவதற்கு சதி திட்டங்களை தீட்டி வருகிறார்கள். அமித்ஷா மக்களவையிலேயே உரத்து பேசுகிறார். தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்போம் என்பது விதைக்காமல் அறுவடை செய்கிற ஒரு முயற்சி அது.
மக்கள் ஆதரவே இல்லாத மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர்கள் எந்த தைரியத்தில் பேசுகிறார்கள் என்று விளங்கவில்லை. எனவே வாக்கு திருட்டு என்பதை மட்டுமே மூலதனமாக வைத்து எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் மூலம் எதிர்ப்பு வாக்குகளை எல்லாம் பட்டியலில் இருந்து வெளியேற்றிவிட்டு அவர்கள் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டியது, தமிழ்நாட்டின் ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும். குடிமக்களின் கடமையாகும் என்றார்.
- மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு இதில் என்ன பங்கு உள்ளது?
- அவர் தொடர்ந்து வழக்குகளை விசாரித்தால் தமிழ்நாட்டில் மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்துவார்.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என்றும், தற்போதைய சூழலில் அவருக்கு எந்த வழக்கையும் ஒதுக்கக்கூடாது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களைப் பதவி நீக்கம் செய்யவேண்டுமென ( இம்பீச்மெண்ட் ) நாடாளுமன்ற மக்களவைத் தலைவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையொப்பமிட்டு மனு ஒன்றை நேற்று அளித்துள்ளோம். இதனையடுத்து நாடாளுமன்ற நடைமுறைப்படி மக்களவைத் தலைவர், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஒரு சட்ட வல்லுநர் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவை உடனே அமைக்க வேண்டும். எனவே, மக்களவைத் தலைவர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான 'இம்பீச்மெண்ட் நோட்டீஸில்', அவர் ஒருதலைச் சார்போடும் ,அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகவும் நடந்துகொள்கிறார்; ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் ; ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாகத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்பவை உள்ளிட்டக் குற்றச்சாட்டுகளைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.
இந்நிலையில், அவர் தொடர்ந்து வழக்குகளை விசாரித்தால் தமிழ்நாட்டில் மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்துவார். அதற்கு நேற்று அவர் பிறப்பித்துள்ள உத்தரவே சாட்சியாகவுள்ளது. 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கின் வரம்புகளை மீறி, அதற்குத் தொடர்பில்லாத தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் இந்திய ஒன்றிய அரசின் உள்துறைச் செயலாளர் ஆகியோரை இந்த வழக்கில் சேர்த்து விசாரணைக்கு அழைத்துள்ளார்.
இது சட்டத்தை மீறுவதோடு மட்டுமின்றி, மாநில-மத்திய அரசுகளை அவமதிப்பதுமாகும். குறிப்பாக, இந்திய அரசின் உள்துறை செயலாளரை இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இணைத்திருப்பது உள்நோக்கம்கொண்டதாகவுள்ளது. இந்திய மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு இதில் என்ன பங்கு உள்ளது? அவரிடம் இவர் என்ன எதிர்பார்க்கிறார்? நீதிமன்ற அவமதிப்புக்கு அவர் என்ன செய்ய வேண்டுமென இவர் விரும்புகிறார்? அதிகார வரம்பை மீறி இந்த மூவருக்கும் அழைப்பு அனுப்பியிருப்பது இவரே எடுத்த முடிவாகத் தெரியவில்லை.
இவருக்குப் பின்னணியில் ஒரு சதிக்கும்பல் வேலை செய்வதாகத் தெரிகிறது. திருப்பரங்குன்றம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி மதவெறி அரசியலைத் தூபமிட்டு வளர்க்கப் பார்க்கிறார் என கருத வேண்டியுள்ளது. எனவே, தற்போதைய சூழலில் அவருக்கு எந்த வழக்கையும் ஒதுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை கேட்டுக்கொள்கிறோம்.
அவருக்கு எதிராக 'இம்பீச்மெண்ட் நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தன்மீதான விசாரணை தடையின்றி நடப்பதற்கு ஏதுவாக, தானே முன்வந்து பதவி வில வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்." என தெரிவித்துள்ளார்.
- 6 தொகுதிகளுக்கு 3 மண்டல துணை செயலாளர்கள் பொறுப்பு புதிதாக உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
- 156 பொறுப்புகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 39 பாராளுமன்ற தொகுதிகள் அடிப்படையில் மண்டல செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரையில் பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மண்டல செயலாளர் வீதம் இருந்தனர். அந்த கட்டமைப்பை மாற்றி தற்போது ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மண்டல செயலாளரும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மண்டல துணை செயலாளரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அந்த வகையில் 6 தொகுதிகளுக்கு 3 மண்டல துணை செயலாளர்கள் பொறுப்பு புதிதாக உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கட்சி தலைவர் தொல். திருமாவளவன் புதிய மண்டல செயலாளர்கள், துணை செயலாளர்கள் பட்டியலை அமெரிக்காவில் இருந்து வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் 156 பொறுப்புகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
திருவள்ளூர் மண்டல செயலாளர் தளபதி சுந்தர், மண்டல துணை செயலாளர்கள் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி-ஏகாம்பரம், மாதவரம், ஆவடி-ராமதாஸ், பூந்தமல்லி, திருவள்ளூர் தொகுதிகள்-செஞ்சி செல்வம்.
வட சென்னை
மண்டல செயலாளர்-அம்பேத் வளவன், துணை செயலாளர்களாக திருவொற்றியூர், ராயபுரம் தொகுதி நீல மேகவண்ணன், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளுக்கு எஸ்.எம். மணி, திரு.வி.க. நகர், கொளத்தூர் தொகுதிகளுக்கு புரசை அன்பு.
தென் சென்னை மண்டல செயலாளர் ஸ்ரீதர் கார்த்திக், துணை செயலாளர்கள் கதிர் ராவணன், அசோக், வீரமணி. மைய சென்னை மண்டல செயலாளராக இரா.செல்வம், துணை செயலாளர்களாக தலித் நூர் செல்வம், அர்ஜன், ராவண சங்கு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் அசோகன், துணை செலயாளர்கள் ஜிம் மோகன், தங்க தியாகு, மாயவன், தர்மபுரி மண்டல செயலாளர்-தமிழண்பன், துணை செலயாளர்கள் செந்தில்குமார், மின்னல் சக்தி ஜானகிராமன்.
திருவண்ணாமலை மண்டல செயலாளர் அம்பேத் வளவன், துணை செயலாளர்கள்-சின்ன பையன், ஜெயமூர்த்தி, முருகேசன், திண்டுக்கல் மண்டல செயலாளர்-ஜான்சன்கிறிஸ்டோபர், துணை செயலாளர்கள் சந்திரன், ஜனா முகமது, அன்பரசு, கரூர் மண்டல செயலாளர்கள்-வேலுசாமி, துணை செயலாளர்கள் கதிரேசன், ஜெயராமன், செல்வராஜ்.
மண்டல செயலாளர்-தமிழாதன், துணை செயலாளர்கள்-பொன் முருகேசன், பிரபாகரன், திருமறவன், பெரம்பலூர் மண்டல செயலாளர்கள் ஸ்டாலின், துணை செயலாளர்கள் நீலவாணன், பெரியசாமி, லெனின்.
கடலூர் மண்டல செயலாளர்-பரச. முருகையன், துணை செயலாளர்கள் இரா.செம்மல், அதியமான், ஆலப்பாக்கம் ஜெயகுமார், சிதம்பரம் மண்டல செயலாளர்-செல்லப்பன், துணை செலயாளர்களாக தடா கதிரவன், செல்வராஜ், கருப்பசாமி,
மயிலாடுதுறை மண்டல செயலாளர்-அறிவழகன், துணை செயலாளர்கள் காமராஜ், முருகதாஸ், ராஜ்குமார், நாகப்பட்டினம் மண்டல செயலாளர் எம்.டி. இளவரசு துணை செய லாளர்கள் ஜாகீர் சாதிக் விதா செல்வம், சீமா மகேந்திரன், தஞ்சாவூர் மண்டல செயலாளர்-சிவக்குமார். துணை செயலாளர்கள்-மன்னை ரமணி, சொக்கா ரவி, ஆத்மா ஆனந்தகுமார்.
ஆரணி மண்டல செயலாளர்கள்-நன்மாறன், துணை செயலாளர்கள் ஜெய்சங்கர், குப்பன், தனஞ்செழியன், விழுப்புரம் மண்டல செயலாளர்- திலீபன். துணை செயலாளர்கள்-இரணியன், ஆதித் தமிழன், ஓவியர் இளங்கோவன், கள்ளக்குறிச்சி மண்டல செயலாளர்-சீதா துணை செயலாளர்கள்-பொன்னி வளவன், ராமமூர்த்தி, நாராயணன்.
ஸ்ரீபெரும்புதூர் மண்டல செயலாளர்-கதிர்நிலவன், துணை செயலாளர்கள்-ரூபஸ், கண்ணன், தேவ அருண்பிரகாசம், காஞ்சீ புரம் மண்டல செயலாளர்-இரா.தமிழரசன், துணை செலயாளர்கள், மதி. ஆதவன், பொன்னி வளவன், இளைய வளவன்.
அரக்கோணம் மண்டல செயலாளர் தமிழ்மாறன். துணை செயலாளர்கள்-பிரபா இளையநிலா, வெற்றி வளவன், தமிழ். வேலூர் மண்டல செயலாளர்-சந்திரன், துணை செயலாளர் சஜின் குமார், செல்வன், கோவேந்தர்.
சேலம் மண்டல செயலாளர்-நாவரசு, துணை செயலாளர்கள்-ஓமலூர் ஆறுமுகம், ஜெயச்சந்திரன், வேணுநாயகன், நாமக்கல் மண்டல செயலாளர் பழனிமாறன், துணை செயலாளர்கள்-அரசன், காமராஜ் பெருமாவளவன், ஈரோடு மண்டல செயலாளர்-ஜாபர் அலி. துணை செயலாளர்கள்-சவுமியா, செம்மணி, பிரீத் ஜான் நாட், திருப்பூர் மண்டல செயலாளர்-சிறுத்தை வள்ளுவன், துணை செயலாளர்கள்-திருமாவளவன், அம்பேத்கர், துறைவளவன்.
ராமநாதபுரம் மண்டல செயலாளர்-விடுதலைசேகரன், துணை செயலாளர்கள்-ஜெயபாண்டி, பழனிகுமார், பாலகிருஷ்ணன், தூத்துக்குடி மண்டல செயலாளர்கள்-திருள்ளூவன், அர்ஜூன் கதிரேசன்.
தென்காசி மண்டல செயலாளர்-இசக்கி பாண்டியன், துணை செயலாளர்கள்-லிங்கவளவன், சித்திக், தாமஸ், திருநெல்வேலி மண்டல செயலாளர்கள்-களக்காடு சுந்தர், துணை செயலாளர் கள்-கரிசல் சுரேஷ், வெற்றி மாறன், ராஜ்குமார், கன்னியாகுமரி மண்டல செயலாளர்-பகலவன், துணை செயலாளர்கள், திருமாவேந்தன், மாத்தூர் ஜெயன், டேவிட் மேரி.
சிவகங்கை மண்டல செயலாளர்-பெரியசாமி, துணை செயலாளர்கள்-சின்னுபழகு, சங்கு உதய குமார், முத்துராஜ், மதுரை மண்டல செயலாளர்-இன்குலாப், துணை செயலாளர்-மூர்த்தி மோகனா, கதிரவன்.
தேனி மண்டல செயலாளர்-ரபீக் முகமது, துணை செயலாளர்கள்-முருகன், நாகரத்தினம், சுருளி.
விருதுநகர் மண்டல செயலாளர்-முருகன், துணை செயலாளர்கள் கலைச் செல்வன், போத்தி ராஜன், சதுரகிரி, நீலகிரி மண்டல செயலாளர்-ராஜேந்திர பிரபு, துணை செயலாளர்கள் மன்னரசன், சகாதேவன், ஜெகன் மோகன்.
கோவை மண்டல செயலாளர்-கலையரசன், துணை செயலாளர்கள்-தங்கவளவன், துறை செயலாளர்கள்-இளங்கோ, குமணன். பொள்ளாச்சி மண்டல செயலாளர்-கேசவ் முருகன், துணை செயலாளர்கள்-நிலா மணிமாறன், பிரபு, முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அடுத்த கட்டமாக ஓரிரு நாட்களில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகிறது.
- வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள்.
- சுவாமிநாதன் மீது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் ஒற்றை உத்தரவால் நேற்று திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு, கலரவம் உண்டாகும் சூழல் நிலவியதாக பல்வேறு தரப்பினரும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் 'இம்பீச்மெண்ட்' செய்யவேண்டும் என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும், கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றிய திருப்பரங்குன்றம் பொதுமக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் பயங்கரவாதிகள் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தை விட்டு விட்டு, வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள். அவர்களது ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி சுமூகமான முறையில் தீபத் திருவிழாவை தமிழ்நாடு அரசு நடத்தியது.
இந்நிலையில் அங்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு வெளியூர்களில் இருந்து வந்த சனாதனப் பயங்கரவாதக் கும்பல் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு பொதுச் சொத்துகளையும் நாசப்படுத்தியது. கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
திருப்பரங்குன்றத்துக்கு வெளியூர்களிலிருந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்த நிலையில் அங்கு வன்முறையைத் தூண்டும் விதமாக தீபம் ஏற்றுவதற்குப் பயங்கரவாதிகளை அனுமதித்தது மட்டுமின்றி அவர்களுக்குத் துணையாக உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்பியுள்ளார்.
இது அப்பட்டமான அதிகார மீறல் மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்துக்கும், வழிபாட்டுத் தலங்கள் ( சிறப்பு விதிகள் ) சட்டம் 1991 க்கும் எதிரானதாகும். இப்படி சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதோடு, நேற்று முழுவதும் மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில் தேவையில்லாத சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மட்டுமல்லாது பல்வேறு பிரச்சனைகளிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகத் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.
- தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர்.
- சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆதரவு வழக்கறிஞர்கள் மட்டுமே இடம்பெறுவது நீதி நிர்வாக அமைப்பு சனாதன மயம் ஆகி வருவதைக் காட்டுகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தற்போது நீதிபதி நியமனத்துக்காக சென்னை உயர்நீதிமன்றக் கொலேஜியத்தின் பரிசீலனையில் உள்ள பட்டியலில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. இது மிகப்பெரிய அநீதியாகும்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக பா.ஜ.க. ஆதரவாளர்கள் மட்டுமே தொடர்ந்து நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். தற்போது சென்னை உயர்நீதிமன்ற கொலேஜியத்தின் பரிசீலனையில் உள்ளவர்களில் ஏழு பேர் ஒன்றிய அரசின் வழக்கறிஞர்களாகவும், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வழக்கறிஞர்களாகவும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் உள்ளவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
தகுதி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது சாதி மத அரசியல் சார்பு அடிப்படையிலேயே இருக்கிறது. சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும்.
தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் நீதிபதிகள் நியமனத்தில் ஆதி திராவிடர் மற்றும் இதுவரை நீதிபதி நியமனங்களில் இடம்பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். சமூக நீதிக்கு எதிராகத் தொடர்ந்து நீதிபதிகள் நியமனம் செய்வதை கொலேஜியம் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தேர்தல் ஆணையத்தின், பா.ஜ.க. அரசின் கூட்டு சதியை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு மேலானது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளன.
இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
எஸ்.ஐ.ஆர். வேண்டாம் எனவும் இது குடியுரிமையை பறிக்கும் செயலாகும் என்றும் கண்டனம் முழக்கங்களை திருமாவளவன் வாசித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
எல்லோரும் தேர்தல் காலத்தில் தீவிரமாக பம்பரம் போல் சுற்றி சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். தேர்தல் ஆணையத்தின், பா.ஜ.க. அரசின் கூட்டு சதியை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு மேலானது.
இந்த ஆட்சியாளர்கள் உள்நோக்கத்தோடுதான் இதை கையாளுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் எஸ்.ஐ.ஆர். என்ற இந்த நடவடிக்கையை உடனே நிறுத்தி விட முடியுமா? என்றால் முடியாது. எஸ்.ஐ. ஆர். என்பது எவ்வளவு தீவிரமான உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை என்பதை மக்களுக்கு அம்பலப்படுத்துவதே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்.
எஸ்.ஐ.ஆர்.-ஐ நிறுத்த வேண்டும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரி நமது கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். தேர்தல் வரப்போகிறது வாக்காளர் பட்டியலில் நமது பெயர்கள் இடம் பெற்றால்தான் வாக்களிக்க முடியும். நம்முடைய வாக்குகளை பறிகொடுத்துவிட்டு நடுத்தெருவில் நிற்க முடியாது.
எனவே நாமும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் இறங்கித்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு நெருக்கடியை பா.ஜ.க. அரசு அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் இதை அறிவித்தால் இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பெரிதாக எதுவும் செய்து விட முடியாது. கட்டாயம் அவர்கள் விமர்சனங்களை செய்து கொண்டே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுத்தான் ஆக வேண்டம். நான் கூட என் பெயரை பதிவு செய்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. தேர்தலில் நான் ஓட்டு போட்டே ஆக வேண்டும்.
இதுவரை நாடாண்டவர்களுக்கும், இப்போது நாடாண்டு கொண்டு இருக்கும் பா.ஜ.க.வினருக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. இவர்கள் வழக்கமான சராசரியான அரசியல்வாதிகள் இல்லை. மோடி, அமித்ஷா, அவர்களை வழி நடத்தக்கூடிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வெறுமனே தனி நபர்களுக்கான அதிகார வெறியர்களாக இருக்கிறார்கள் என்று கணக்கு போட்டு விடக்கூடாது.
அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய தேசத்தையே அடியோடு புரட்ட பார்க்கிறார்கள். அதிகாரத்தை தக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்கிறார்கள். எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவது, காங்கிரசே இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்குவது, இடது சாரிகளே இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்குவது, திராவிட அரசியல் பேசக் கூடிய கட்சிகளே இல்லை என்கிற நிலையை எதிர்காலத்தில் உருவாக்குவது என்பதெல்லாம் பா.ஜ.க.வின் அரசியல் செயல் திட்டங்களில் ஒன்றாகும்.
இந்தியாவில் ஒரே மதம்தான் இருக்க வேண்டும், இந்தியாவில் ஒரே மொழிதான் ஆள வேண்டும், இந்தியாவில் மனுதர்மம் தான் ஆட்சியியல் கோட்பாடாக இருக்க வேண்டும் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த அவர்கள் விரும்பும் இந்தியாவை படைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அம்பேத்கர் கனவை சிதைப்பதே பா.ஜ.க.வின் திட்டம் ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை பாஜக அரசு வழங்கியுள்ளது.
- தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை பாஜக அரசு நிராகரித்திருக்கிறது.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களான மதுரை , கோயம்புத்தூர் ஆகியவற்றுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குமாறு விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்திருந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த இரண்டு நகரங்களை விட சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்கியிருக்கும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை நிராகரித்திருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்ததும் ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் அதற்கு விளக்கமளித்திருக்கிறார். அதாவது, " 2011 -ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகராட்சியின் மக்கள் தொகை (257 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட சி.எம்.சி) 15.85 இலட்சம் கொண்டுள்ளது மற்றும் உள்ளூர் திட்டமிடல் பகுதி (1287 சதுர கி.மீ கொண்ட எல்.பி.ஏ)
7.7 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. ஆனால், பயணிகள் எண்ணிக்கை கணிப்புகள் அதிகமாக செய்யப்பட்டுள்ளன. அதனைத் தமிழ்நாடு அரசு நிரூபிக்க வேண்டும்" என்பதாக அவர் கூறியிருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையாக வைத்து இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என்ற காரணத்தை ஒன்றிய அரசு கூறி இருப்பது வியப்பளிக்கிறது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படாததால் அந்தப் புள்ளி விவரங்களை வைத்து இந்த திட்டங்களை நிராகரித்திருப்பது சரியானது அல்ல. இடைப்பட்ட 14 ஆண்டுகளில் இந்த இரு நகரங்களிலும் மக்கள் தொகை பல மடங்கு கூடியிருக்கிறது. இதை ஒன்றிய அரசு தெரிந்திருந்தோம் கவனத்தில் கொள்ளாதது அவர்களுடைய பாரபட்சமான அணுகுமுறையையே காட்டுகிறது.
மதுரை, கோயம்புத்தூர் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படாதது பாஜகவின் தமிழ்நாடு விரோத நிலைப்பாடே காரணம். இதை மூடி மறைப்பது போல் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக பொய் செய்தியை பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.
கூட்டாட்சி முறையை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாட்டைப் புறக்கணித்து வருகின்ற ஒன்றிய பாஜக அரசு, தனது போக்கைத் திருத்திக் கொள்ள வேண்டுமென்றும்; இல்லையேல் தமிழ்நாடு மக்களின் கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது
- வாக்குகள் நீக்கப்பட்டதால்தான் பாஜக கூட்டணி இவ்வளவு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது
பீகார் தேர்தல் முடிவுகள் பாஜக மற்றும் தேர்தல் ஆணயம் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன. நேர்மையாக நடந்த தேர்தல்தானா என்கிற அய்யத்தை எழுப்புகிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பலத்தால் பெற்ற வெற்றியா? அல்லது அக்கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையிலான கூட்டணி பலத்தால் கிடைத்த வெற்றியா? என்கிற கேள்வியை எழுப்புவதாக உள்ளது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர் என்னும் நடவடிக்கைதான் இத்தகு அய்யங்களை எழுப்புவதற்கு அடிப்படையாக உள்ளது.
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வாக்களிக்ககூடிய வாக்காளர்கள் கணிசமான அளவில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது, பீகாரில் தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர் எனப்படும் 'சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு' நடவடிக்கையின் போது தகுதி வாய்ந்த சுமார் 65 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்டனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
ஆனால், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே, அது தொடர்ந்து நடைபெற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின்னும், சுமார் 47 இலட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டின. ஆயினும், அதனைத் தேர்தல் ஆணையம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
எஸ். ஐ.ஆர் நடவடிக்கைக்குப் பிறகு தேர்தல் நடைபெற்று வெளிவந்துள்ள முடிவுகள், எஸ்.ஐ.ஆர் மூலம் பெருமளவில் வாக்குகள் நீக்கப்பட்டதால்தான் பாஜக கூட்டணி இவ்வளவு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது என்பதை உறுதிபட உணர்த்துகின்றன.
பாஜக கூட்டணி வெற்றி பெற்ற 202 தொகுதிகளில் 128 தொகுதிகளில், நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை விட வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. அவ்வாக்குகள் நீக்கப்படாதிருந்தால் அத்தொகுதிகளில் 'காங்கிரஸ் -ஆர்ஜேடி' கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் என்பது உறுதியாகிறது.
இந்நிலையில், பீகாரில் செய்ததைப் போலவே தங்களுக்கு எதிரான இலட்சக்கணக்கான வாக்குகளை நீக்கிவிட்டுத் தங்களுக்கு ஏற்றபடி தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு தமிழ்நாட்டிலும் பாஜக முயற்சிக்கலாம். பாஜகவின் இத்தகைய வாக்குத் திருட்டைத் தடுப்பதற்குத் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிய வந்திருப்பதால், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை நிறுத்தும்படி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை அளிக்கும் என்று நம்புகிறோம்.
இந்நிலையில், பீகாரில் நடந்தேறியுள்ளதைப்போல தமிழ்நாட்டிலும் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படாமல் தடுக்க, சனநாயகத்தைப் பாதுகாக்க, பாஜக- தேர்தல் ஆணையம் இணைந்து அரகேற்றவுள்ள கூட்டுச் சதியை முறியடிக்க, அனைத்து ஜனநாயக சக்திகளும் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும் என்றும்; மக்கள் நலன்கருதி தொலைநோக்குப் பார்வையோடு ஒருங்கிணைந்து செயல்படவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது அவ்வப்போது நடந்து கொண்டிருக்கும் ஒன்று தான்.
- ஒரே நேரத்தில் பல மாங்காய்களை அடிக்கக்கூடிய வேலைகளை RSS செய்கிறது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மிண்ட் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:
* SIR குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிய முதல் மாநிலம் தமிழ்நாடு.
* வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது அவ்வப்போது நடந்து கொண்டிருக்கும் ஒன்று தான்.
* SIR என்பது தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய வேலைதிட்டம் அல்ல.
* SIR என்பது நமது குடியுரிமையை ஆய்வு செய்யும் செயல் நடவடிக்கை, இது ஒரு மறைமுக செயல் திட்டம்.
* தற்போது செயல்படுத்துவது பா.ஜ.க.வின் திட்டம் அல்ல, RSS-ன் செயல் திட்டம்.
* ஒரே நேரத்தில் பல மாங்காய்களை அடிக்கக்கூடிய வேலைகளை RSS செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
- ஏற்கனவே இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தேர்தல் காலங்களில் நடந்தேறியுள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்து பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாட்டின் தலைநகரிலேயே, அதுவும் அதிஉயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட பகுதியிலேயே காரில் வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு எப்படி ஊடுருவ முடிந்தது?
உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள 'மோடி-அமித்ஷா-அம்பானி' கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்?
பீகார் சட்டமன்றப் பொதுத்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு முதல் நாளில் இப்படி நடந்திருப்பதால் இதனை அத்தேர்லோடு முடிச்சுப்போட்டுப் பார்க்கும் நிலை உருவாகிறது. ஏற்கனவே இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தேர்தல் காலங்களில் நடந்தேறியுள்ளன.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வி.சி.க. சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் .
பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய கொடூரப் போக்குகளை வி.சி.க. மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
குற்றவாளிகள் ஒருவரும் தப்பிவிடக் கூடாது. அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
- இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் மதுபோதையில் இருப்பவர்களாலேயே நிகழ்கின்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை போலீசார் விரைந்து கைது செய்துள்ளனர். எனினும் தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 3,407-ல் இருந்து 5,319-ஆகவும், பாலியல் வன்கொடுமை வழக்குகள் 406-ல் இருந்து 471-ஆகவும் அதிகரித்துள்ளது. இது பெண்களின் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது. இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் மதுபோதையில் இருப்பவர்களாலேயே நிகழ்கின்றன.
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்தன. இனியும் தாமதிக்காமல், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு நடவடிக்கையை அறிவித்து இருப்பது நீதியை மறுப்பதாகும்.
- எவ்வளவுதான் முயற்சித்தாலும் 10 முதல் 20 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்கள் இதில் விடுபட்டுப் போகும்.
சென்னை:
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் தொடர்பாக சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது கூறியதாவது:-
பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் புலம் பெயர்ந்து சென்று வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க பல நூறு அல்லது பல்லாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும். அந்த அளவுக்குப் பணம் செலவு செய்து வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்ப்பதற்கு அவர்கள் முயற்சி செய்வார்கள் என்று கூற முடியாது.
பழங்குடி மக்கள் குறிப்பாக பழங்குடி இருளர், நரிக்குறவர் உள்ளிட்ட அலைந்து திரிந்து வாழும் பழங்குடி மக்கள் பலருக்குத் தேர்தல் ஆணையம் கேட்டிருக்கும் ஆவணங்கள் எதுவுமே கையில் இருக்க வாய்ப்பு இல்லை.
ஒவ்வொரு வாக்காளரும் 2002-2004 சிறப்பு வாக்காளர் பட்டியலில் இருந்த தன்னுடைய பதிவை அடையாளம் கண்டு இப்போதைய விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொருவருக்கும் நீண்ட நேரம் தேவைப்படும்.
இந்த சட்ட விரோத நடவடிக்கையை எதிர்த்துத்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளோம். அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு நடவடிக்கையை அறிவித்து இருப்பது நீதியை மறுப்பதாகும்.
தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை 2002-2004-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலோடு உத்தேசமாக பொருத்திப் பார்த்ததில் சுமார் 40 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்களே முழுமையாகப் பொருந்துகின்றன எனக் கூறப்படுகிறது. எவ்வளவுதான் முயற்சித்தாலும் 10 முதல் 20 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்கள் இதில் விடுபட்டுப் போகும்.
அதாவது தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் விடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது தமிழ்நாடு சட்டசபை தேர்தலை சீர்குலைப்பதற்கான திட்டமிட்ட சதி என்று கருத வேண்டி உள்ளது.
மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை எதிர்க்கிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்பு வரும் வரை இந்த எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் அதை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கிடையில் எஸ்.ஐ.ஆர். குறித்து இங்கே பங்கேற்றிருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






