search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் ஆணையம்"

    • வட கர்நாடகாவின் 14 பாராளுமன்ற தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடியின் பெயரை சேர்த்த மணமகன் சிக்கலில் தவிக்கிறார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளில் 14 தொகுதிகளுக்குதான் கடந்த 26-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வட கர்நாடகாவின் 14 பாராளுமன்ற தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு உட்பட்ட புத்தூர் தாலுகாவை சேர்ந்த உப்பினங்கடி போலீசாருக்கு புகார் ஒன்று வந்தது. இதில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட மணமகன் ஒருவர் தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு எதிராக நடந்து கொண்டார் என சர்ச்சை எழுந்தது.

    பிரதமர் மோடியை மீண்டும் தேர்ந்தெடுப்பதே தம்பதிக்கு நீங்கள் அளிக்கும் சிறந்த பரிசாக இருக்கும் என்ற வரியை திருமண அழைப்பிதழில் இடம்பெறச் செய்திருந்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்திடம் மணமகன் உறவினர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மணமகனின் வீட்டுக்கு நேரில் சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, மார்ச் 1-ம் தேதி திருமண வரவேற்பிதழ் அச்சடிக்கப்பட்டது. அந்த வரியானது பிரதமர் மோடி மற்றும் நாட்டின் மீது கொண்ட அன்பால் சேர்க்கப்பட்டது என விளக்கம் அளித்திருக்கிறார்.

    அந்நபருக்கு கடந்த 18-ம் தேதி திருமணம் நடந்தது. அவர் விளக்கம் அளித்தபோதும் கடந்த 26-ம் தேதி போலீசில் தேர்தல் ஆணையம் புகார் ஒன்றை அளித்தது. இதனை தொடர்ந்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. திருமண அழைப்பிதழை அச்சடித்த உரிமையாளரிடம் தேர்தல் ஆணையமும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு கட்சியின் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பது இதுவே முதல் முறை
    • பாஜக சர்வாதிகாரம் செய்தால், அது சரியானது. ஆனால் யாராவது அதைப் பற்றி பேசினால், அது தவறு. இது ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதைக் காட்டுகிறது

    ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு நிமிட தேர்தல் பிரச்சாரப் பாடலை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ திலீப் பாண்டே எழுதி பாடியுள்ளார். இந்த பாடல் ஏப்ரல் 25-ம் தேதி கட்சி தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி இன்று தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ஒரு கட்சியின் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பது இதுவே முதல் முறை. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, இந்த பாடல் ஆளும் கட்சியையும் விசாரணை நிறுவனங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

    எங்கள் கட்சியின் பிரசார பாடலில் பாஜகவை குறிப்பிடவில்லை மற்றும் தேர்தல் நடத்தை நடத்தை விதிகளை மீறவில்லை. இதில் உண்மை வீடியோக்கள் மற்றும் சம்பவங்கள் உள்ளன.

    பாஜக சர்வாதிகாரம் செய்தால், அது சரியானது. ஆனால் யாராவது அதைப் பற்றி பேசினால், அது தவறு. இது ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதைக் காட்டுகிறது.

    பாஜக செய்த தேர்தல் விதிமுறை மீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. பாஜக செய்த தேர்தல் விதிமுறை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை நிறுத்த வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.

    ஆம் ஆத்மின் குற்றசாட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "விதிகளை மீறி இருந்ததால் பரப்புரை பாடலில் சில வரிகளை மட்டுமே மாற்ற பரிந்துரைத்தோம். கெஜ்ரிவால் சிறையில் இருப்பது போன்று இடம்பெற்றுள்ள வரிகள் நீதித்துறையை அவதூறு செய்வதாக உள்ளது. விதிகளுக்கு முரணான இந்த சொற்கள் விளம்பரத்தில் பலமுறை வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தில் வாக்காளர்களின் பெயர்கள் பல இடங்களில் விடுபட்டுள்ளது.
    • வாக்குப்பதிவு இ.வி.எம். எந்திரத்தில் எதுவும் முறைகேடு செய்ய முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக பலமுறை விளக்கி இருக்கிறார்கள்.

    கோவை:

    மத்திய மந்திரி எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நீலகிரி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் கேமரா காட்சிகள் நேற்று திரையில் தெரியாமல் போய் உள்ளது. அதற்கு தொழில்நுட்ப கோளாறு என்று சொல்கிறார்கள். இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு வராமல் பார்த்துக் கொள்வது தேர்தல் ஆணையத்தின் முறையான பணியாக இருக்க வேண்டும்.

    கண்காணிப்பு கேமரா காட்சிகள் தெரியாமல் போனதற்கு காரணம் கால சூழ்நிலை, கடும் வெயில் என்றெல்லாம் சொல்கிறார்கள். நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் அடிக்கும் வெயிலை போன்று ஊட்டியில் வெயில் தாக்கம் இருப்பதில்லை. எனவே எதாவது காரணம் சொல்வதை விட்டுவிட்டு முறையாக தொழில்நுட்பத்தை சரிசெய்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும். எந்தவித சந்தேகத்துக்கும் இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் முறையான பணி செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் வாக்காளர்களின் பெயர்கள் பல இடங்களில் விடுபட்டுள்ளது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியினர் அல்லது பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் வாக்குகள் எல்லாமே விடுபட்டுள்ளது. நீலகிரி, கோவை, தென்சென்னை என தமிழகம் முழுவதுமே வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வினர் தோல்வியை மறைப்பதற்காக அவர்கள் எங்களுடைய வாக்காளர்களை நீக்கி உள்ளனர்.

    வாக்குப்பதிவு இ.வி.எம். எந்திரத்தில் எதுவும் முறைகேடு செய்ய முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக பலமுறை விளக்கி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையமும் விளக்கி உள்ளது. தோல்வி பயத்தில் காங்கிரசும், இந்தியா கூட்டணி கட்சியினரும் இதனை கையில் எடுத்துள்ளனர்.

    அயோத்தி ராமர் கோவில் மக்களின் ஒவ்வொருவரின் எண்ணம். இந்தியர்கள் ஒவ்வொருவரின் கனவு இன்று நிறைவேறி உள்ளது. அனைவரும் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராகுல்காந்தி அங்கு செல்லவில்லை என்பது அவர் ராமரை வெறுக்கிறாரா, அல்லது கடவுளை வெறுக்கிறாரா அல்லது இந்து மதத்தை வெறுக்கிறாரா என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • சந்தேஷ்காலியில் உள்ள ஒரு காலி இடத்தில் சிபிஐ வேண்டுமென்றே சோதனை.

    தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சிபிஐ சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

    இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்களவைத் தேர்தலின் போது அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் (AITC) நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தேர்தல் நாளன்று, மேற்கு வங்க மாநிலம், சந்தேஷ்காலியில் உள்ள வெற்று இடத்தில், சிபிஐ நேர்மையற்ற சோதனையை நடத்தியுள்ளது.

    பலமுறை பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட போதிலும், மத்திய புலனாய்வு அமைப்புகள் நாடு முழுவதும், குறிப்பாக தேர்தல் காலத்தில் சோதனை மேற்கொண்டு வருகிறது. அவற்தை தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் உள்ளது.

    2ம் கட்ட வாக்குப்பதிவான நேற்று, குறிப்பாக மேற்கு வங்கத்தில், டார்ஜிலிங், ராய்கஞ்ச் ஆகிய மூன்று பாராளுமன்றத் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிக்கத் திரண்டிருந்தனர்.

    தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, சந்தேஷ்காலியில் உள்ள ஒரு காலி இடத்தில் சிபிஐ வேண்டுமென்றே கண்ணியமற்ற சோதனையை நடத்தியது.

    தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) வெடிகுண்டு படை உள்ளிட்ட கூடுதல் படைகளை சிபிஐ வரவழைத்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சோதனையின் போது வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது சம்பந்தமாக, "சட்டம் ஒழுங்கு" என்பது முற்றிலும் மாநில அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்றாலும், சிபிஐ அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன் மாநில அரசு மற்றும்/அல்லது காவல்துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆனால் வெளியிடவில்லை.

    மேலும், மாநில காவல்துறையில் முழுமையாக செயல்படும் வெடிகுண்டு செயலிழக்கும் குழு உள்ளது. இது போன்ற சோதனையின் போது வெடிகுண்டு படை தேவை என்று சிபிஐ கூறியிருந்தால், முழு நடவடிக்கைக்கும் உதவியிருக்க முடியும்.

    இருப்பினும், அத்தகைய உதவி எதுவும் கோரப்படவில்லை.

    அரசு நிர்வாகம் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே இதுபோன்ற சோதனையின்போது ஊடகவியலாளர்கள் உடனிருந்தனர் என்பது மேலும் ஆச்சரியமாக உள்ளது.

    இந்த நேரத்தில், சோதனையின் போது ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக ஏற்கனவே நாடு முழுவதும் செய்தியாக இருந்தது. இந்த ஆயுதங்கள் உண்மையில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையின் போது மீட்கப்பட்டதா அல்லது சிபிஐ/என்எஸ்ஜியால் ரகசியமாக புதைக்கப்பட்டதா என்பதை உறுதியாக அறிய வழி இல்லை.

    மேற்குறிப்பிட்ட சம்பவங்களின் முழு வரம்பும், சிபிஐ வேண்டுமென்றே ஊடகங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்ததைக் குறிக்கிறது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அதன் வேட்பாளர்களுக்கு எதிராக நாடு முழுவதும் அவமதிப்பு உள்ளது.

    அதனால், தேர்தல் காலத்தில் சிபிஐ உட்பட எந்த ஒரு மத்திய புலனாய்வு நிறுவனத்தாலும் அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் செயல்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத வகையில் உடனடி வழிகாட்டுதல்கள்/கட்டமைப்பை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • பிரதமர் மோடி மீது காங்கிரசும், ராகுல்காந்தி மீது பாஜகவும் நோட்டீஸ்.
    • நோட்டீஸ் தொடர்பாக வரும் 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவு.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    அப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் சொத்துக்கள், நிலங்கள், தங்கம் ஆகியவற்றை முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும் என்று பேசினார்.

    பிரதமரின் இந்த பேச்சு வெறுப்பை தூண்டுகின்றன என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கொண்ட குழு தேர்தல் ஆணையத்தில் கடந்த திங்கட்கிழமை புகார் மனு அளித்தது.

    பிரதமருக்கு எதிரான புகார் குறித்து தேர்தல் ஆணையம் முதலில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இதே குற்றச்சாட்டை பிரதமர் மோடி தொடர்ந்து தேர்தல் பிரசார கூட்டங்களில் காங்கிரஸ் மீது சுமத்தினார். இது காங்கிரஸ் கட்சியை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

    இதற்கிடையே பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் அளித்த புகாரை ஆய்வு செய்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    பிரதமரின் பேச்சு தொடர்பான புகார் பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன. அதே நேரத்தில் பிரதமருக்கு எதிராக வழக்கு தொடரவும் காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

    இந்த நிலையில் முஸ்லிம்கள் குறித்து பேசியது தொடர்பாக காங்கிரஸ் அளித்த புகார் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டது.

    அவதூறாக பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகும். இது தொடர்பாக வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்குள் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாகவும் அவர் மீது பா.ஜனதா தேர்தல் ஆணயைத்தில் புகார் அளித்து இருந்தது. பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாக தெரிவித்தது.

    ராகுல்காந்தியின் பேச்சும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையம் கருதியது. இதைத்தொடர்ந்து ராகுல்காந்தியும் வருகிற 29-ந் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக பா.ஜனதா, காங்கிரஸ் தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

    பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    முக்கிய தலைவர்களின் பேச்சு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    • தேர்தல் விதிகளை மீறிய அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சசிகுமார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பாராளுமன்ற தேர்தலின் போது, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் முகவர்களும், கூட்டணி கட்சியினரும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர். பணப்பட்டுவாடா தொடர்பாக மாணிக்கம் தாகூரின் முகவர்கள் காமராஜ், சீனி, கருப்பையா, பாண்டி ஆகியோருக்கு எதிராக விருதுநகர், மதுரை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் விதிகளை மீறிய அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவின் அடிப்படையில் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் மனு ஏற்கனவே பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    • முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 14 தொகுதிகளில் உள்ள 30,602 வாக்குச்சாவடிகளில் 1.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.
    • 50,000 போலீசார், 65 கம்பெனி துணை ராணுவ படை மற்றும் பிற மாநிலங்களின் மாநில ஆயுதப்படை போலீசார் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த 19-ந்தேதி தமிழகம், புதுவை உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், கர்நாடகாவில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.

    மேலும் பெங்களூரு ஊரக மற்றும் மைசூர் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளின் நிகழ்வுகள் இணையதளத்தில் ஒளிபரப்பப்படும். முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 14 தொகுதிகளில் உள்ள 30,602 வாக்குச்சாவடிகளில் 1.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். 50,000 போலீசார், 65 கம்பெனி துணை ராணுவ படை மற்றும் பிற மாநிலங்களின் மாநில ஆயுதப்படை போலீசார் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என கூறினார்.

    முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள உடுப்பி-சிக்மகளூர், ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூர், சாமராஜநகர், பெங்களூர் ரூரல், பெங்களூர் வடக்கு, பெங்களூர் மத்திய, பெங்களூரு தெற்கு, சிக்பல்லாபூர் மற்றும் கோலார் ஆகிய 14 தொகுதிகளில் 2,88,19,342 வாக்காளர்கள் உள்ளனர். 1,44,28,099 பேர் ஆண்கள், 1,43,88,176 பேர் பெண்கள் மற்றும் 3,067 மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இவிஎம் , விவிபாட் இயந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர் உள்ளன.
    • அனைத்து மைக்ரோ கண்ட்ரோலர்களும் ஒரு முறை நிரல்படுத்தக் கூடியவை.

    விவிபாட் வழக்கு, சந்தேகங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும் எண்ணக் கோரிய வழக்கில்,  உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இவிஎம் , விவிபாட் இயந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர் உள்ளன.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பேலட் இயந்திரம், இவிஎம், விவிபாட் ஆகிய மூன்றும் சீல் வைக்கப்படும். 45 நாட்கள் இந்த தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.

    தேர்தல் வழக்கு தொடரப்பட்டால் சம்மந்தப்பட்ட இயந்திரம் மட்டும் தனியாக பாதுகாத்து வைக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    மேலும், கண்ட்ரோல் யூனிட், பாலட் யூனிட் மற்றும் விவிபாட் ஆகிய மூன்றும் அவற்றின் சொந்த மைக்ரோ கண்ட்ரோலரைக் கொண்டுள்ளன.

    இவற்றை தாமாக அணுக முடியாது. அனைத்து மைக்ரோ கண்ட்ரோலர்களும் ஒரு முறை நிரல்படுத்தக் கூடியவை. அவற்றை மாற்ற முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தரப்பில் வாதாடுகையில், " மைக்ரோ கண்ட்ரோல் யூனிட் பிளாஷ் மெமரியை கொண்டுள்ளதால் மீண்டும் புரோகிராம் எழுத முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது.

    விவிபாடில் பிளாஷ் மெமரி இருக்கும்போது முறைகேடு செய்வதற்கான புரோகிராம் இருக்க முடியும். " என்றார்.

    அப்போது, "தேர்தல் ஆணையத்தை நம்ப வேண்டும். இதுவரை முறைகேடு நடக்கவில்லை. அரசியலமைப்பு சாசனத்தின் அங்கமாகவுள்ள தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது. " என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

    • தேர்தல் ஆணையம் இத்தகைய குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.
    • விவிபேட் தொடர்பான வழக்கில் சில கேள்விகள் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று காலை கருத்து தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.

    எந்த பட்டனை அழுத்தினாலும் குறிப்பிட்ட சின்னத்துக்கு வாக்குகள் செல்லும் வகையில் எந்திரத்தை மாற்றி அமைக்க இயலும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் இத்தகைய குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இதற்கிடையே தேர்தல் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகை சீட்டையும் முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற தன்னர்வ அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை கடந்த 18-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது.

    வாக்கு எந்திரங்களுடன், 100 சதவீத ஒப்புகை சீட்டை சரி பார்க்க கோரிய விவிபேட் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விவிபேட் தொடர்பான வழக்கில் சில கேள்விகள் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று காலை கருத்து தெரிவித்துள்ளனர். மைக்ரோ கண்ட்ரோலர் கருவி கண்ட்ரோலிங் யூனிட்டில் உள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா? என்று நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

    தங்கள் கேள்விகளுக்கான விளக்கத்தை அளிக்க தேர்தல் ஆணைய அதிகாரி பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும்.

    • ராகுல் காந்தி தனது பிரசாரத்தின் போது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை அதிகமாக தாக்கி பேசினார்.
    • காந்தி என்ற குடும்ப பெயருடன் அழைக்க தகுதியற்ற நான்காம் தர குடிமகனாக ராகுல் காந்தி மாறிவிட்டார் என அன்வர் எம்.எல்.ஏ. பேசினார்.

    திருவனந்தபுரம்:

    தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், கேரள மாநிலத்தில் தற்போதைய மக்களவை தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. அவர்கள் அனைத்து தொகுதிகளிலும் இரு கூட்டணிகளாக இருந்து களம் காணுகின்றனர்.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். இதனால் இரு கட்சியினரும் எதிரும் புதிருமாக இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

    மேலும் இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பிரசாரம் செய்தார்கள். ராகுல் காந்தி தனது பிரசாரத்தின் போது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை அதிகமாக தாக்கி பேசினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில் கேரள மாநிலம் நீலம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான அன்வர் தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். காந்தி என்ற குடும்ப பெயருடன் அழைக்க தகுதியற்ற நான்காம் தர குடிமகனாக ராகுல் காந்தி மாறிவிட்டார். காந்தி என்ற குடும்ப பெயரை விடுவித்து ராகுல் என்று தான் அவரை அழைக்க வேண்டும். ராகுலின் டி.என்.ஏ.வை ஆய்வு செய்யவேண்டும் என்று பேசினார்.

    அவரது இந்த பேச்சுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆதரித்திருக்கிறார். மேலும் அவர், 'ராகுல் முதிர்ச்சியற்றவர், சுதந்திரமாக சிந்திக்க முடியாதவர். உள்ளூர் தலைவர்களின் வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்கிறார். அதனால் தான் தனது பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று ராகுலிடம் கேட்டுக்கொண்டேன்' என்றார்.

    இந்நிலையில் அன்வர் எம்.எல்.ஏ. மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கருத்து தெரிவித்த அன்வர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஹாசன் புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் அவர் தனது புகாரில், 'மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்டேவின் மறு அவதாரம் அன்வர். கோட்சேவின் தோட்டாக்களை விட அன்வரின் வார்த்தைகள் பெரிய ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. அன்வரின் கருத்துக்கள் பினராயி விஜயனின் ஆதரவுடன் கூறப்பட்டவை. ராகுல் காந்தியை அவமதித்தது மட்டுமின்றி ராஜீவ்காந்தியின் தியாகத்தையும் அவர் அவமதித்துள்ளார்' என்று கூறியிருக்கிறார்.

    • வெளிநாட்டிலிருந்து ஊடுருவி வந்தவர்கள் என இஸ்லாமியர்களை குறிப்பிட்டிருக்கும் மோடி மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?
    • மக்கள் தங்கள் வாக்கு மூலம் பாஜகவிற்கு தக்க பதிலை வழங்குவார்கள்.

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "தேர்தல் ஆணையத்திடம் 3 கேள்விகள் கேட்கிறேன்.

    1. வெளிநாட்டிலிருந்து ஊடுருவி இந்தியாவுக்குள் வந்தவர்கள் என இஸ்லாமியர்களை குறிப்பிட்டிருக்கும் மோடி மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?

    2. மன்மோகன் சிங் சொன்னதை திரித்து, மதத்தின் பேரில் மக்களை பிரிக்கும் மோடியின் மீது என்ன நடவடிக்கை பாயும்?

    3. ஒரு சமூகத்தின் மீது துவேஷத்தைக் கொட்டி இன்னொரு சமூகத்தின் மனங்களில் நச்சை விதைக்கும் மோடி மீது ஏன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை?

    10 ஆண்டுகால பாஜகவின் ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லாததால், பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் கூட பழைய வகுப்புவாத அஜெண்டாவை நாடியுள்ளார். மக்கள் தங்கள் வாக்கு மூலம் பாஜகவிற்கு தக்க பதிலை வழங்குவார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    • நாட்டின் சொத்துக்களை அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே காங்கிரஸ் பகிர்ந்து கொடுக்கும் - மோடி
    • அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இந்நிலையில் "அதிக குழந்தைகள் பெற்றவர்கள், மக்களின் சொத்துகளை அள்ளிக்கொண்டு போவார்கள் என விமர்சித்த மோடி மற்றும் அவரது கூட்டணியின் நிலை குறித்து பீகார் மாநில முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    1. சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸுக்கு 13 சகோதர சகோதரிகள் இருந்தனர்.

    2. அரசியலமைப்பை உருவாக்கியவர், பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கருக்கு 13 உடன்பிறந்தவர்கள் இருந்தனர்.

    3. பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் குடியரசுத் தலைவருமான வி.வி.கிரிக்கு 13 குழந்தைகள் உள்ளனர்

    4. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு 6 சகோதர சகோதரிகள் இருந்தனர்.

    5. முதல்வர் நிதிஷ்குமாருக்கு 4 சகோதர சகோதரிகள் உள்ளனர்.

    6. பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 சகோதர சகோதரிகள் உள்ளனர்.

    7 பிரதமர் மோடியின் தந்தை தாமோதர் தாஸ்க்கு 6 சகோதர சகோதரிகள் இருந்தனர்.

    8 பிரதமர் மோடியின் மாமா நரசிங் தாஸ்க்கு 8 குழந்தைகள் உள்ளனர்.

    9. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு 6 சகோதரிகள் உள்ளனர்.

    10. முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத்துக்கு 6 சகோதர சகோதரிகள் உள்ளனர்.

    11: தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ்க்கு 9 சகோதர சகோதரிகள் உள்ளனர்

    12. தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூருக்கு 6 சகோதர சகோதரிகள் இருந்தனர்.

    13. முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.

    14. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு 8 குழந்தைகள் உள்ளனர்.

    என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    ×