search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவிபாட்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இவிஎம் , விவிபாட் இயந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர் உள்ளன.
    • அனைத்து மைக்ரோ கண்ட்ரோலர்களும் ஒரு முறை நிரல்படுத்தக் கூடியவை.

    விவிபாட் வழக்கு, சந்தேகங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும் எண்ணக் கோரிய வழக்கில்,  உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இவிஎம் , விவிபாட் இயந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர் உள்ளன.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பேலட் இயந்திரம், இவிஎம், விவிபாட் ஆகிய மூன்றும் சீல் வைக்கப்படும். 45 நாட்கள் இந்த தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.

    தேர்தல் வழக்கு தொடரப்பட்டால் சம்மந்தப்பட்ட இயந்திரம் மட்டும் தனியாக பாதுகாத்து வைக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    மேலும், கண்ட்ரோல் யூனிட், பாலட் யூனிட் மற்றும் விவிபாட் ஆகிய மூன்றும் அவற்றின் சொந்த மைக்ரோ கண்ட்ரோலரைக் கொண்டுள்ளன.

    இவற்றை தாமாக அணுக முடியாது. அனைத்து மைக்ரோ கண்ட்ரோலர்களும் ஒரு முறை நிரல்படுத்தக் கூடியவை. அவற்றை மாற்ற முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தரப்பில் வாதாடுகையில், " மைக்ரோ கண்ட்ரோல் யூனிட் பிளாஷ் மெமரியை கொண்டுள்ளதால் மீண்டும் புரோகிராம் எழுத முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது.

    விவிபாடில் பிளாஷ் மெமரி இருக்கும்போது முறைகேடு செய்வதற்கான புரோகிராம் இருக்க முடியும். " என்றார்.

    அப்போது, "தேர்தல் ஆணையத்தை நம்ப வேண்டும். இதுவரை முறைகேடு நடக்கவில்லை. அரசியலமைப்பு சாசனத்தின் அங்கமாகவுள்ள தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது. " என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

    • ரேண்டம் அடிப்படையில் ஒரு தொகுதியில் ஐந்து வாக்குச்சாவடியில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.
    • அனைத்து விவிபாட் ரசீதுகளும் எண்ணப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

    சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்கு EVMs இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு செய்யும்போது யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரியாது. இதனால் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள விவிபாட் (Voter Verifiable Paper Audit Trail) இயந்திரம் செயல்படுத்தப்பட்டது.

    வாக்களிக்கும் ஒரு நபர் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார் என்பதை ஒரு ரசீது மூலம் இந்த இயந்திரம் காட்டும். ஆனால் இந்த இயந்திரம் காட்டப்படும் ரசீது வாக்காளர்களுக்கு காட்டப்பட்ட பின் அவர்களிடம் வழங்கப்படாது. ஒரு பாக்ஸில் சேகரிக்கப்படும்.

    தேவைப்பட்டால் இந்த ரீதுகள் ஒரு தொகுதிக்கு ஐந்து வாக்குச்சாவடிகள் என்ற அடிப்படையில் ரேண்டம் முறையில் எண்ணப்படும்.

    ஆனால், இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஏவிஎம் இயந்திரம் 100% நம்பகத்தன்மை கொண்டது. அதனால் 100 சதவீதம் எண்ணப்பட வேண்டியதில்லை என தேர்தல் ஆணைய தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் விவிபாட் இயந்திரம் மூலம் பெறப்படும் ரசீதுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கோவாய் மற்றும் சந்தீப் மேக்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி விசாரணையை மே 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இது தொடர்பாக இந்தியா கூட்டணி தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை சந்தித்து வலியுறுத்த நேரம் கேட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது முக்கியமான முதல்படி. தேர்தலுக்கு முன்னதாக இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டால் அது பயனுள்ளதாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • வாக்கு செலுத்தியதற்கான ரசீது வாக்காளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சேகரிக்க வேண்டும்.
    • அந்த ரசீதுகள் 100 சதவீதம் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட வேண்டும்.

    வாக்கு எந்திரம் (EVM), வாக்கு செலுத்தியதற்கான ரசீது வழங்கும் இயந்திரம் (VVPAT) ஆகியவை மீது சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் நீண்ட காலமாக கூறிவருகின்றன.

    இதுகுறித்து தங்களிடம் விரிவான வகையில் விவரிக்க நேரம் ஒதுக்கி தருமாறு தேர்தல் ஆணையத் தலைவருக்கு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால், தேர்தல் ஆணையர் எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதினார். அதில் "இந்தியா கூட்டணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து குறிப்பிட்டு, கூட்டணியின் மூன்று பிரதிநிதிகளை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு" குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வாக்கு எந்திரம் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது என பதில் அளித்துள்ளது.

    தேர்தல் ஆணையம் இணைய தளத்தில் கேள்வி பதில்கள் பக்கத்தில் வாக்கு இயந்திரம் தொடர்பான பதில்கள் போதுமான மற்றும் விரிவான அளவிற்கு உள்ளது. 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விவிபாட் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், ஏற்கனவே எழுதப்பட்ட கடிதத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதில் கடிதத்தில் வாக்கு எந்திரம், விவிபாட் ஆகியவை குறித்த பல்வேறு சந்தேகங்களை கருத்தில் எடுத்துக் கொண்டு வரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் வரும்போது, சரிபார்க்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    30-12-2023-ந்தேதி குறிப்பிட்டு எழுதப்பட்ட கடிதத்தில் பதில் அளிக்காத எந்த பிரச்சனை குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

    ×