search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress candidate"

    • வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    • தேர்தல் விதிகளை மீறிய அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சசிகுமார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பாராளுமன்ற தேர்தலின் போது, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் முகவர்களும், கூட்டணி கட்சியினரும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர். பணப்பட்டுவாடா தொடர்பாக மாணிக்கம் தாகூரின் முகவர்கள் காமராஜ், சீனி, கருப்பையா, பாண்டி ஆகியோருக்கு எதிராக விருதுநகர், மதுரை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் விதிகளை மீறிய அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவின் அடிப்படையில் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் மனு ஏற்கனவே பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    • தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
    • மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    இதில், ஏற்கனவே தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

    அதன்படி, திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி- கே. கோபிநாத், கரூர்- ஜோதிமணி, கடலூர்- எம்.கே. விஷ்னு பிரசாத், சிவகங்கை- கார்த்தி சிதம்பரம், விருதுநகர்- மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி- விஜய் வசந்த்,

    நெல்லை - ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுவதாக அறிவித்தார்.

    விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிடுகிறார்.

    ஆனால், மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்நிலையில், மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மயிலாகுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வழங்கறிஞர் ஆர்.சுதா போட்டியிடுகிறார்.

    வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் ஆர்.சுதா நாளை மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கரைவேட்டி கட்டாத அதிமுக செயலாளர் போல் கலெக்டர் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மீண்டும் புகார் கூறியுள்ளார். #congressjothimani #karurcollector

    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதையொட்டி அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கரூர் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறித்து வேட்பாளர்கள், அவர்களது முகவர்களுடனான கருத்து கேட்பு கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் முடிந்ததும், கூடு தல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் மற்றும் க லெக்டர் அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உள்ளிட்டோர் கரூர் தளவாபாளையத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கார்களில் சென்றனர்.

    அப்போது மையத்தின் வெளிப்புறத்திலேயே கார்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் நடந்தே உள்ளே சென்றனர். பின்னர் வாக்கு எண்ணும் அறைக்குள் யாரும் நுழைந்து விடாதபடி அமைக்கப்பட்டுள்ள கம்பி வலை மற்றும் துணை ராணுவம் மற்றும் போலீசாரின் சுழற்சி முறை பாதுகாப்பு பணி, அனைத்து நடவடிக்கைகளும் சி.சி..டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பு உள்ளிட்டவற்றை நீண்ட நேரமாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் அறிவு றுத்தலின் பேரில் பாதுகாப் பினை மேலும் பலப்படுத்தக் கூடிய நடவடிக்கை, எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்பட வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் உடன் இருந்தனர்.

    அதிகாரி ஆய்வை தொடர்ந்து ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி (கலெக்டர்) மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட தேர்தல் அதிகாரி தொலைபேசியில் என்னிடம் தேர்தலை நான் நிறுத்துவேன் என கூறும் அளவுக்கு மோசமான நிலை இருந்தது. மாவட்ட அதிகாரியே இப்படி இருக்கும் போது அவருக்கு கீழே உள்ள அதிகாரிகள் பாதுகாப்பு குறைபாடுடன் இருப்பது ஆச்சரியம் இல்லை. வாக்கு எண்ணிக்கையை இவர்கள் தலைமையில் நடத்தக்கூடாது. வாக்கு எண்ணிக்கையை இந்த அதிகாரிகள் நடத்தினால் நியாயமாக இருக்காது.

    கலெக்டர் எங்கள் மீது கொடுத்த பொய் புகாரில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தோம். விசாரணையில் கலெக்டர் அளித்த புகாருக்கு ஆதாரமாக சிசி டிவி. புட்டேஜை அவர் காட்ட வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    விரைவில் கலெக்டர் கூறியது மிகப்பொய் குற்றச்சாட்டு என்பதும், தேர்தல் அதிகாரி வழக்கத்தில் இல்லாத அளவில் ஒரு கலெக்டர் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து, வேட்பாளர் மீதும், முகவர் மீதும் பொய் புகார் அளித்துள்ளார். எவ்வளவு தூரம் அவர் ஆளும் கட்சியின் ஊதுகுழலாக கரை வேட்டி கட்டாத மாவட்ட செயலாளராக செயல்பட்டிருக்கிறார் என்பது கோர்ட்டில் நிரூபிக்கப்படும்.

    தேர்தல் கமி‌ஷன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. புகார் மீது உடனே அதிகாரியை அனுப்பி விசாரணை நடத்தி யிருக்கின்றனர்.

    கலெக்டரும், எஸ்.பி.யும் ஒரு தலைப்பட்சமாக நடந்து வருவதால் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் பி.எஸ்.எப். படை வீரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். கலெக்டரை மாற்றி விட்டு நியாயமான நேர்மையான ஒரு அதிகாரியை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்தி வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம் என்றார். #congressjothimani #karurcollector

    மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ஆதரவு தெரிவித்து உள்ளார். #MukeshAmbani #Congress

    மும்பை:

    காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி முரளி தியோரா. கடந்த 2014-ம் ஆண்டு இவர் மரணம் அடைந்தார்.

    இவரது மகன் மிலிந்த் தியோரா. இவரும் மத்திய மந்திரியாக இருந்து உள்ளார்.

    தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் 42 வயதான மிலிந்த் தியோரா மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

    2004, 2009 தேர்தலில் அந்த தொகுதியில் வெற்றி பெற்ற அவர் கடந்த தேர்தலில் சிவசேனாவிடம் தோற்றார். 4-வது முறையாக அவர் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    ரிலையன்ஸ் குழும அதிபரான அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-


    தெற்கு மும்பை என்றாலே தொழில் என்கிறார்கள். மும்பையின் தொழில்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 10 ஆண்டுகளாக மிலிந்த் தியோரா மும்பை தெற்கு தொகுதி எம்.பி.யாக இருந்துள்ளார். தெற்கு மும்பையில் உள்ள பொருளாதாரம், சமூகம், சுற்றுச் சூழல் ஆகியவற்றை ஆழமாக அறிந்தவர். அவரது தலைமையில் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் வளம் பெறும்.

    இவ்வாறு முகேஷ் அம்பானி வீடியோவில் கூறி தியோராவுக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.

    ரபெல் விவகாரத்தில் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது ஆச்சரியமான ஒன்றாகும். அதே நேரத்தில் முகேஷ் அம்பானி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததால் பா.ஜனதாவும், சிவசேனாவும் அதிர்ச்சி அடைந்து உள்ளன.

    இதே போல ஆசியாவின் மிகப் பெரிய கோடீசுவரர்களில் ஒருவரான உதய் கோடக்கும் காங்கிரஸ் வேட்பாளர் தியோராவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். #MukeshAmbani #Congress

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #LSPolls #RajendraBalaji
    விருதுநகர்:

    விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் பாராளுமன்ற தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமி, சாத்தூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மன் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி வலிமையான, எளிமையான, தூய்மையான பிரதமர். பயங்கரவாதத்தை வேரறுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    மன்மோகன்சிங் ஆட்சியின்போது மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் பதில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

    தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பான ஆட்சி நடத்தி வருகின்றனர். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி சாதனை கூட்டணியாக இருந்தது. எதிர்க்கட்சியே இல்லாத நிலையை இந்த கூட்டணி உருவாக்கியது. இந்த கூட்டணி தொடர வேண்டும்.

    விஜயகாந்த் தேசப்பற்று மிக்கவர். அவருடைய படத்தில் நல்ல கருத்துக்கள் இடம்பெற்றன. எம்.ஜி.ஆரை போல அவரும் சாமானிய வேட்பாளரைத்தான் விருதுநகர் தொகுதிக்கு அறிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மாணிக்தாகூர் போட்டியிடுகிறார். அவர் பணக்காரர். சாமானியர்கள் சாம்ராஜ்யத்தை சரித்ததாக வரலாறு உண்டு.

    எளிமையான அழகர் சாமி இந்த தேர்தலில் மாணிக் தாகூரை தோற்கடிப்பார். மாணிக்தாகூர் இங்கு ஏன் போட்டியிடுகிறார்? உ.பி.யில் போய் நிற்க வேண்டியதுதானே. மாணிக் தாகூரை காங்கிரஸ்காரர்களே தோற்கடித்து விடுவார்கள்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் கந்துவட்டிக்காரர். ஓட்டுக்கு பணம் கொடுப்பார். தேர்தலில் தோற்றுவிட்டால் மீண்டும் வாக்காளர்கள் வீட்டுக்கு வந்து கொடுத்த பணத்தை கேட்பார். அந்த பணத்தை வட்டி போட்டு வசூலிப்பார்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    மாணிக்தாகூர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது பெயர் வடமாநில பெயர் போல இருப்பதால் உ.பி.க்கு செல்ல வேண்டியதுதானே என்று அமைச்சர் பேசியுள்ளார். வேட்பாளரை அமைச்சர் விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #LSPolls #RajendraBalaji
    கர்நாடகா மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலில் தும்குர் பகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் இனாயத்துல்லா கானின் வெற்றி கொண்டாட்டத்தில் ஆசிட் வீசப்பட்டதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். #KarnatakaLocalBodyElections
    பெங்களூரு:

    கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை சுமார் 60 சதவிகிதம் முன்னிலை பெற்று விளங்குகிறது. இன்று மாலை 4 மணி வரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 982 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

    பாஜக 927 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில், தும்குர் பகுதியில் வெற்றி பெற்ற இனாயத்துல்லா கான் என்ற காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி கொண்டாட்டத்தில் மர்ம நபர்கள் ஆசிட் வீசினர்.

    இந்த ஆசிட் வீச்சில் இனாயத்துல்லாவின் ஆதரவாளர்கள் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #KarnatakaLocalBodyElections 
    நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #BypollResults #BypollCongressWin
    புதுடெல்லி:

    உறுப்பினர்கள் மறைவு, பதவி விலகல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் காலியான 11 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

    இதில், உத்தர பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர், பந்தாரா மற்றும் நாகாலாந்து ஆகிய மக்களவைத் தொகுதியின் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

    கைரானா தொகுதியில் பா.ஜ.க. எம்பி. ஹூக்கும் சிங் மறைந்ததையடுத்து நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் அவரது மகள் மிரிங்கா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தபசும் ஹசன் போட்டியிட்டார். இவருக்கு காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சிகள் ஆதரவு அளித்தன.

    வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்கப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக, 73 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதேபோல் உ.பி.யின் நூர்பூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. லோகேந்திர சிங் சாலை விபத்தில் இறந்ததால் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தொகுதியில் லோகேந்திர சிங்கின் மனைவி அவானி சிங் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சமாஜ்வாடி கட்சி சார்பில் நீமுல் ஹசன் போட்டியிட்டார்.



    இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், மகாராஷ்டிர மாநிலம் பலாஸ் கதேகான் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்வஜீத் பதாங்ரோவ் கதம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. #BypollResults #BypollCongressWin

    ×