என் மலர்
நீங்கள் தேடியது "acid attack"
- ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு
- இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் கருத்து
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள ஆசிட் வீச்சு வழக்குகள் தொடர்பான விவரங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிட் வீச்சில் இருந்து தப்பிய ஷாஹீன் மாலிக் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மாலிக்கின் வழக்கு தற்போது வரை விசாரணையில் இருப்பது வெட்கக்கேடானது எனவும் கருத்து தெரிவித்தனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மாலிக் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, "சட்ட அமைப்பை எவ்வளவு கேலிக்கூத்தாக்குவது இது. 16 வருடம் இப்படிப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது வெட்கக்கேடானது. ஒரு நாட்டின் தேசிய தலைநகராலேயே இதை கையாள முடியவில்லை என்றால், வேறு யார் செய்வார்கள்? இது தேசத்திற்கே அவமானம்" என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு ஏன் முடிவுக்கு வரவில்லை என்பதை விளக்கி, பொதுநல மனுவிலேயே ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கும் உத்தரவிட்டார். விசாரணையின்போது, ஆசிட் வீச்சில் இருந்து தப்பியவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை மாலிக் விவரித்தார். அவர்களில் பலர் நிரந்தர காயங்களுடன் வாழ்கின்றனர். செயற்கை உணவு குழாய்கள் தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், அதனால் சில நலத்திட்டங்களை பெறமுடியும் எனவும் வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க சட்டம் அல்லது தேவைப்பட்டால் அவசரச் சட்டம் மூலம் சட்டத்தை திருத்துவது குறித்து பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி மத்திய அரசை வலியுறுத்தினார். மேலும் சரியான நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
- விசாரணையின் போது மற்றொரு முக்கிய விஷயமும் வெளிச்சத்துக்கு வந்தது.
- சதியில் ஈடுபட்ட அகில் கானை ஏற்கனவே கைது செய்துள்ளோம்.
வடக்கு டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதி தன் மீது ஆசிட் வீசப்பட்டதாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்தார்.
ஓவியர் ஜிதேந்தர் மற்றும் அவரது உதவியாளர்கள் இஷான் மற்றும் அர்மான் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர்.
அவர்கள் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் ஆசிட் வீச்சு உண்மையில் நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டதாகக் கூறும் இளம் பெண், பழைய பகை காரணமாக குற்றம் சாட்டப்பட்டவரை சிக்க வைக்க தனது குடும்பத்தினருடன் இந்த நாடகத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது
சிறப்பு காவல் ஆணையர் ரவீந்திர சிங் யாதவ் கூறுகையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, சம்பவம் நடந்தபோது குற்றம்சாட்டப்பட்ட மூவரும் அந்த இடத்தில் இல்லை என்பது தெளிவாகியது. பெண்ணின் தந்தை அகில் கானுக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே தொடர்பாக பழைய தகராறு இருந்தது.
இந்தச் சூழலில், அந்தப் பெண், அவரது தந்தை, சகோதரர் மற்றும் மாமா ஆகியோர் இணைந்து ஒரு பொய்யான வழக்கில் ஓவியர் மற்றும் உதவியாளர்களை சிக்க வைக்க இந்த சதித்திட்டத்தை தீட்டினர்.
விசாரணையின் போது மற்றொரு முக்கிய விஷயமும் வெளிச்சத்துக்கு வந்தது. ஆசிட் வீச்சு சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜிதேந்தரின் மனைவி, பெண்ணின் தந்தை அகில் கான் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார்.
இதற்கு பழிவாங்க ஆசிட் வீச்சு நாடகம் நடத்தப்பட்டதாக நம்புகிறோம். சதியில் ஈடுபட்ட அகில் கானை ஏற்கனவே கைது செய்துள்ளோம்.
தன் மீது ஆசிட் வீசப்பட்டதாக நம்ப வைக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேண்டி, தனது கைகளில் கழிப்பறை கிளீனரை ஊற்றியதாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.
- கல்லூரி மாணவி ஒருதலைக் காதலை ஏற்க மறுத்தார்.
- இதனால் அந்த மாணவி மீது திராவகம் வீசப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லி அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் அவர் நேற்று காலை கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து நிறுத்தினர்.
அப்போது அந்த மாணவி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்து அவர் விலகி செல்ல முயன்றார்.
அப்போது நொடிப்பொழுதில் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை மோட்டார் சைக்கிளில் இருந்த வாலிபர் ஒருவர் அந்த இளம்பெண்ணின் முகத்தை நோக்கி வீசினார்.
அப்போது தனது முகத்தை அந்த இளம்பெண் தனது கைகளால் மறைத்துக் கொண்டார். இதில் அவருடைய கைகள் வெந்து கருகின. இதனால் வலியில் அலறி துடித்த அந்த மாணவி சாலையில் சரிந்தார். அதற்குள் மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர்கள் தப்பிச் சென்றனர்.
படுகாயம் அடைந்த அந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் மாணவியுடன் அதே கல்லூரியில் படித்து வரும் ஜிதேந்தர் என்பவர்தான் திராவகத்தை வீசியது தெரிந்தது. ஜிதேந்தர் அந்த மாணவியை கடந்த 7 மாதமாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தக் காதலை மாணவி ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும் அவரை எப்படியாவது காதலில் விழ வைக்க வேண்டும் என்னும் முயற்சி தோல்வியில் முடிய இந்த பயங்கரமான சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
தலைமறைவான ஜிதேந்தர், அவருடைய நண்பர்கள் அர்மான், இஷான் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
- டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று கூறுகிறார்.
- தன்னை கொடூரமாக நடத்தியவர்கள் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்
அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள புதானா கிராமத்தை சேர்ந்தவர் 17 வயதான கஃபி (Kafi).2011 ஆம் ஆண்டு தனது மூன்று வயதில் கஃபி ஆசிட் வீச்சுக்கு ஆளாகி பார்வையை இழந்தார்.
மூன்று வயதில் இருந்தே பல்வேறு சிரமங்களை சந்தித்த கஃபி தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண்களுடன் தனது பள்ளியில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
சண்டிகரில் செக்டார் 26 இல் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் அவர் பயின்று வந்தார். ஆடியோ புக்குகள் மூலம் அங்கு கற்பிக்கப்பட்டது.
கடினமான பாதைகளை கடந்து சாதனை புரிந்துள்ள கஃபி டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று கூறுகிறார்.
ஏற்கனவே டெல்லி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுதி முடித்த கஃபி சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
ஊடகத்துக்குப் பேட்டியளித்த கஃபி தன் மீதான ஆசிட் தாக்குதல் குறித்து பேசுகையில், மூன்று அண்டை வீட்டார் தன் மீது அமிலத்தை ஊற்றியதாகத் தெரிவித்தார்.
மேலும் "மருத்துவர்கள் என் உயிரைக் காப்பாற்றினர், ஆனால் அவர்கள் என் பார்வையைக் காப்பாற்றவில்லை. ஆசிட் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. தன்னை கொடூரமாக நடத்தியவர்கள் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்" என்று கஃபி கூறினார்.
- அவரை காதலித்த ராம் ஜனம் சிங் படேலால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
- 60 சதவீத தீக்காயங்களுடன் அசாம்கரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரப் பிரதேசத்தின் மௌ மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அவரை காதலித்த ராம் ஜனம் சிங் படேல், வேறொரு ஆணுடன் அவரது திருமணம் உறுதி செய்யப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வியாழக்கிழமை, பெண் வங்கியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, தனது நண்பனுடன் பைக்கில் வந்த ராம் பெண் மீது ஆசிட் ஊற்றினான். "நீ எனக்கு கிடைக்காவில்லை என்றால் யாருக்கும் கிடைக்க கூடாது" என்று கூறிக்கொண்டே ராம் அந்த பெண் மீது ஆசிட் வீசினான்.
இதில் பெண்ணின் முகம், தோள்பட்டை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் 60 சதவீத தீக்காயங்களுடன் அசாம்கரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பெண்ணுக்கு மே 27 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
பெண்ணின் குடும்பத்தினரின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் ராம் ஜனம் சிங் படேல் மற்றும் இருவரை கைது செய்தனர்.
- பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
- டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என வியாபாரிகள் உறுதி,
டெல்லியின் தெற்கு துவாரகா பகுதியில் பள்ளிக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மீது பைக்கில் வந்த இருவர் ஆசிட்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். வலி பொறுக்க முடியாமல் கதறியபடி அந்த மாணவி சாலையில் கீழே விழுந்தார். இந்த கொடூர தாக்குதலில் அவரது முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆசிட் வீசிய சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதன் அடிப்படையில் முக்கிய குற்றவாளி உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் நைட்ரிக் அமிலத்தை வாங்கி அந்த குற்றவாளிகள் மாணவி மீது வீசியிருக்கலாம் என்றும், தடயவியல் பரிசோதனையின் பின்னரே அது உறுதிப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு டெல்லி வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.ஆசிட் விற்பனையைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும், ஆசிட் வாங்க வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பள்ளி மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வெறும் வார்த்தைகளால் எந்த நீதியையும் நம்மால் வழங்க முடியாது, இந்த மிருகங்களுக்கு அளவிட முடியாத வலியைப் பற்றிய பயத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய இளைஞர்களை பொதுவெளியில் பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் மோட்டார் சைக்கிள் எண்ணை கண்டுபிடித்து ஆசிட் வீசிய வாலிபரை கண்டுபிடித்தனர்.
- மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார்.
டெல்லியில் உத்தம் நகர் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் தனது சகோதரியுடன் பள்ளிக்கு சென்றார். வீட்டை விட்டு வெளியே வந்த மாணவியும், அவரது சகோதரியும் சாலையில் நடந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மாஸ்க் அணிந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென மாணவி மீது ஆசிட் வீசினர்.
இதில் முகத்தில் காயம்பட்ட சிறுமி அலறினார். அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி மீது ஆசிட் வீசியவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் மோட்டார் சைக்கிள் எண்ணை கண்டுபிடித்து ஆசிட் வீசிய வாலிபரை கண்டுபிடித்தனர். இதில் அவர்கள் சச்சின் அரோரா மற்றும் அவரது நண்பர்கள் ஹர்சித் அகர்வால், வீரேந்திர சிங் என தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சச்சின் அரோராவும் மாணவியும் அருகருகே வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே நட்பு இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சச்சின் அரோராவுடனான நட்பை மாணவி முறித்து கொண்டார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மாணவி மீது ஆசிட் வீசியதாக அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார். இதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதுபோல மகளிர் அமைப்புகளும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.
- தான் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும், மனைவி தன்னுடன் வர மறுப்பதால் சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
- பட்டப்பகலில் கோர்ட்டுக்குள் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:
கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார்.
இவருக்கு கவிதா (வயது33) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு கவிதா பஸ்சில் சென்ற போது, அதே பஸ்சில் பயணித்த பயணி ஒருவரிடம் நகையை திருடியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்.1 கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் ஜெயிலிலில் இருந்து வெளியில் வந்த கவிதாவுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து கவிதா தனது கணவரை பிரிந்து, கோவை சூலூர் கண்ணம்பாளையம் பிரிவில் வசித்து வந்துள்ளார்.
கணவர் பலமுறை தன்னுடன் வந்து சேர்ந்து வாழுமாறு கவிதாவிடம் கூறியும் அவர் மறுத்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், கவிதா 2016-ல் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக ஆஜராவதற்காக இன்று கோவை கோர்ட்டிற்கு வந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து அவரது கணவர் சிவக்குமார் வந்துள்ளார்.
அவர் தனது மனைவியிடம், நீ பிரிந்து சென்றுவிட்டாய். நானும், குழந்தைகளும் மிகவும் கஷ்டப்படுகிறோம்.
எனவே நீ எங்களுடன் வந்துவிடு என கூறினார். ஆனால் அவர் பதில் எதுவும் பேசாமல் நின்று கொண்டே இருந்தார்.
சிவக்குமார் தொடர்ந்து பேசியும், அவர் எனக்கு கோர்ட்டிற்கு நேரமாகிறது என கூறி விட்டு கோர்ட்டிற்குள் சென்றார். சிவக்குமாரும் அவரை பின் தொடர்ந்து கோர்ட்டிற்குள் சென்றார். அங்கு 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இங்கு பேசினால் பிரச்சினை பெரிதாகிவிடும் என நினைத்த கவிதா கணவரை விட்டு நகர்ந்து, ஜே.எம்.1 கோர்ட்டு அருகே சென்று நின்று கொண்டார்.
தான் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும், மனைவி தன்னுடன் வர மறுப்பதால் சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற சிவக்குமார் தான் ஏற்கனவே பாட்டிலில் மறைத்து எடுத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கொண்டு மனைவி நின்ற இடம் நோக்கி நடந்து சென்றார்.

அவரின் அருகில் சென்றதும் தான் வைத்திருந்த ஆசிட்டை மனைவியின் மீது ஊற்றினார். இதில் அவர் உடல் முழுவதும் ஆசிட் பற்றி அவரது சேலை முழுவதுமாக எரிந்தது.
இதனை அருகே நின்ற பெண் வக்கீல் ஒருவர் பார்த்து வேகமாக ஓடி சென்று தான் அணிந்திருந்த கருப்பு கோட்டை கழற்றி பெண்ணிண் மீது போட்டார். ஆனால் அதுவும் எரிந்ததுடன், வக்கீலின் கையிலும் காயம் ஏற்பட்டது.
ஆசிட் வீச்சில் காயம் அடைந்த கவிதா வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகே நின்றிருந்த வக்கீல்கள் அனைவரும் ஓடி வந்தனர்.
அவர்கள் காயத்துடன் உயிருக்கு போராடிய கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே சிவக்குமார் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை அங்கு இருந்த பெண் போலீஸ்காரர் பார்த்து அவரை பிடியுங்கள் என கூறவே வக்கீல்கள் துரத்தி சென்று அவரை பிடித்து சரமாரியாக தாக்கி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் எதற்காக ஆசிட் வீசினாய் என விசாரணை நடத்தினர். அதற்கு அவர் தனது மனைவி என்னையும், எனது குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்றதால் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்தும் அறிந்ததும் மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, அங்கு இருந்தவர்களிடம் விசாணை நடத்தினர்.
பட்டப்பகலில் கோர்ட்டுக்குள் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோர்ட்டு அருகே ரவுடி ஒருவரை 5 பேர் கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அடங்குவதற்குள், தற்போது கோர்ட்டுக்குள்ளாகவே பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவமும் கோவை மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
- கவிதா திருட்டு வழக்கு தொடர்பாக ஆஜராவதற்காக நேற்று கோவை கோர்ட்டிற்கு வந்தார்.
- ஆசிட் வீசியதில் கவிதாவின் கழுத்துக்கு கீழ் அனைத்து பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
கோவை:
கோவை சூலூர் கண்ணம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் சிவா (வயது40). லாரி டிரைவர். இவருக்கு கவிதா(35) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு கவிதா மீது ஆர்.எஸ்புரம் போலீசில் 2 திருட்டு வழக்குகள் பதிவானது. இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
பின்னர் வெளியில் வந்த அவருக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த கவிதாவின் கணவர் மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கவிதா குழந்தைகள் மற்றும் கணவரை தவிக்க விட்டு விட்டு பிரிந்து சென்று விட்டார். அவரை சிவா தேடி வந்தார்.
இதற்கிடையே கவிதா திருட்டு வழக்கு தொடர்பாக ஆஜராவதற்காக நேற்று கோவை கோர்ட்டிற்கு வந்தார். இதனை அறிந்ததும் சிவா தனது பெற்றோர், குழந்தைகளுடன் கோர்ட்டிற்கு வந்தார்.
அங்கு நின்ற தனது மனைவியிடம் நீ இல்லாமல் நமது குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுகிறது. நீ எங்களுடன் வந்துவிடு சந்தோஷமாக வாழலாம் என தெரிவித்தார். ஆனால் அவர் வருவதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இதனால் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கவிதா முதலாவது தளத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்றார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற சிவா, தான் பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த ஆசிட்டை கவிதா மீது ஊற்றினார். பின்னர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை வக்கீல்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிட் வீசியதில் கவிதாவின் கழுத்துக்கு கீழ் அனைத்து பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆசிட் வீசியதில் அவர் 80 முதல் 85 சதவீத தீக்காயம் அடைந்துள்ளது. அவருக்கு டாக்டர்கள் இன்று 2-வது நாளாக தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இருந்த போதிலும் அவரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறும் போது, ஆசிட் வீசியதில் கவிதாவுக்கு 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளோம். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்.
ஆசிட் என்பதால் அவரது உடல் முழுவதும் அரித்துள்ளது. இதுவரை 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டவர்கள் யாரும் உயிர் பிழைத்தது இல்லை. இருப்பினும் அவரது உயிரை காப்பாற்ற போராடி வருகிறோம். இருந்தபோதிலும் தற்போது வரை அவர் கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளார். தொடர்ந்து அவரை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.
- சம்பவத்தன்று கவிதா, கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றார்.
- ஆத்திரமடைந்த சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து கவிதா மீது வீசினார்.
கோவை:
கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது42), லாரி டிரைவர். இவருடைய மனைவி கவிதா (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்து குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை பறித்ததாக கவிதா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு சென்று வந்த பின்னர் அவருக்கு பலருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சிவக்குமார் கண்டித்தும், கவிதா கேட்கவில்லை. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று கவிதா, கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றார். இதனால் கவிதா மீது சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் கவிதா வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 23-ந்தேதி கோவை கோர்ட்டுக்கு ஆஜராக வந்தார். இதனை அறிந்த சிவக்குமாரும் அங்கு வந்தார். தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் கவிதாவை பார்த்த, சிவக்குமார் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து கவிதா மீது வீசினார். இதில் பலத்த காயமடைந்த கவிதா கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
திராவகம் வீச்சில் 85 சதவீதம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கவிதாவுக்கு தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சுமார் ஒரு மாதமாக கவிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
திராவகம் வீச்சில் காயமடைந்த கவிதா இறந்துவிட்டதால், கொலை முயற்சி வழக்கை, ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூங்காவில் ஏற்பட்ட சிறிய சண்டை ஆசிட் வீசும் அளவிற்கு சென்றுள்ளது
- தாய் கொடுத்த ஆசிட்டை சிறுமி மற்றொரு சிறுமி மீது வீசியுள்ளார்
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள டெட்ராய்ட் நகரில் அதிர்ச்சி தரும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள வெர்னர் ஆரம்பநிலை பள்ளி மைதானத்தில் குழந்தைகளின் சண்டையின்போது 12-வயது சிறுமி மற்றொரு 11-வயதான சிறுமியின் மீது ஆசிட் ஊற்றியுள்ளார்.
ஜூலை 9-ம்தேதி டியரா சம்மர்ஸ் எனும் 11 வயது சிறுமி தன் இளைய சகோதரிகளுடனும், உறவுக்கார சிறுமிகளுடனும் பூங்காவில் விளையாடி கொண்டிருந்திருக்கிறாள். அப்போது, அவளை விட மூத்த ஒரு அடையாளம் தெரியாத சிறுமிக்கும், டியராவின் உறவுக்கார சிறுமி ஒருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அந்த அடையாளம் தெரியாத சிறுமிக்கு ஆயுதமாக அவள் தாயாரே திராவகத்தை கொண்டு வந்துள்ளார். அப்போது டியராவும் அவளுடன் வந்தவர்களும் புறப்பட்டு சென்று விட்டனர். ஆனால், தனது பர்ஸை பூங்காவில் தவற விட்டதால் அதனை எடுக்க டியரா மீண்டும் பூங்காவிற்கு திரும்பி வர நேர்ந்தது. அப்போது அந்த அடையாளம் தெரியாத சிறுமி டியரா மீது ஆசிட் வீசியுள்ளார்.
இதில் டியராவிற்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை காயங்கள் உண்டாகியது. இதில் அவரின் கைகள், கால்கள் மற்றும் முதுகுப்புறம் ஆகியவற்றில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது.
''வீசப்பட்ட 2 நிமிடங்களில் எரிய ஆரம்பித்தது. நான் அலறி அழுதேன்'' என டியரா தெரிவித்தார்.
திராவகம் வீசிய அந்த 12 வயது சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிந்தே ஒரு நடவடிக்கையில் ஈடுபடும் பெருங்குற்ற பிரிவில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். சுமார் ரூ.8,00,000 ($10,000) பிணையில் அவர் வெளியே வந்துள்ளார். மீண்டும் ஆகஸ்ட் 1 அன்று ஆஜர்படுத்தப்படுவார்.
டியராவின் மருத்துவ செலவிற்காக "கோ ஃப்ண்ட் மீ" சமூக வலைதளத்தில் நிதியுதவி கோரியுள்ள அவளின் பாட்டி டெப்ரா கோல்ஸ்டன் இதுகுறித்து கூறுகையில், "டியராவிற்கு முதுகிலிருந்து கீழ்பகுதி வரை கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள் நல மருத்துவமனையில் அவள் 4 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றாள். அவள் உயிருடன் இருப்பதே அதிசயம். அவள் உடல்நிலை சரியாகும் வரை அவளுக்கு நீண்டகால சிகிச்சை தேவைப்படுகிறது" என தெரிவித்தார்.
- மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுதீர்கான் சேர்க்கப்பட்டார்.
- திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சுதீர்கானின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாற நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதீர்கான் (வயது45). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் செயலாளரான இவர், மாறநல்லூர் பஞ்சாயத்தின் நிலைக்குழு தலைவராகவும் இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை சுதீர்கான் தனது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சஜிகுமார் வீட்டுக்குள் புகுந்து, சுதீர்கானின் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றார். இதில் அவருக்கு முகம், கண்கள், மார்பு, வயிறு மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது.
அவரை அவருடைய மனைவி ஹிருனிசா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கட்டக்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்பு மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுதீர்கான் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
வெள்ளூர்கோணம் பால் கூட்டுறவு சங்க தலைவராக சுதீர்கான் இருந்து வரும் நிலையில், அங்கு சஜிகுமார் செயலாளராக இருந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சஜிகுமார், சில பொறுப்புகளை வகித்து வந்திருக்கிறார்.
சங்கத்தின் சில பண பரிவர்த்தனைகளில் சுதீர்கான் மற்றும் சஜிகுமார் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அவர் ஆசிட் வீச்சில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் தலைமறைவாகிவிட்ட சஜிகுமாரை போலீசார் தீவிரமாக தேடினர்.
அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல இடங்களுக்கு சென்று அவரை தேடிவந்தனர். மேலும் அவரது செல்போனை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டறியும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர். இந்நிலையில் திருவனந்த புரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சுதீர்கானின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






