என் மலர்tooltip icon

    இந்தியா

    எல்லாமே நாடகமா?.. டெல்லியில் இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் தடாலடி திருப்பம்!
    X

    எல்லாமே நாடகமா?.. டெல்லியில் இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் தடாலடி திருப்பம்!

    • விசாரணையின் போது மற்றொரு முக்கிய விஷயமும் வெளிச்சத்துக்கு வந்தது.
    • சதியில் ஈடுபட்ட அகில் கானை ஏற்கனவே கைது செய்துள்ளோம்.

    வடக்கு டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதி தன் மீது ஆசிட் வீசப்பட்டதாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்தார்.

    ஓவியர் ஜிதேந்தர் மற்றும் அவரது உதவியாளர்கள் இஷான் மற்றும் அர்மான் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர்.

    அவர்கள் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் ஆசிட் வீச்சு உண்மையில் நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

    பாதிக்கப்பட்டதாகக் கூறும் இளம் பெண், பழைய பகை காரணமாக குற்றம் சாட்டப்பட்டவரை சிக்க வைக்க தனது குடும்பத்தினருடன் இந்த நாடகத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது

    சிறப்பு காவல் ஆணையர் ரவீந்திர சிங் யாதவ் கூறுகையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, சம்பவம் நடந்தபோது குற்றம்சாட்டப்பட்ட மூவரும் அந்த இடத்தில் இல்லை என்பது தெளிவாகியது. பெண்ணின் தந்தை அகில் கானுக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே தொடர்பாக பழைய தகராறு இருந்தது.

    இந்தச் சூழலில், அந்தப் பெண், அவரது தந்தை, சகோதரர் மற்றும் மாமா ஆகியோர் இணைந்து ஒரு பொய்யான வழக்கில் ஓவியர் மற்றும் உதவியாளர்களை சிக்க வைக்க இந்த சதித்திட்டத்தை தீட்டினர்.

    விசாரணையின் போது மற்றொரு முக்கிய விஷயமும் வெளிச்சத்துக்கு வந்தது. ஆசிட் வீச்சு சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜிதேந்தரின் மனைவி, பெண்ணின் தந்தை அகில் கான் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார்.

    இதற்கு பழிவாங்க ஆசிட் வீச்சு நாடகம் நடத்தப்பட்டதாக நம்புகிறோம். சதியில் ஈடுபட்ட அகில் கானை ஏற்கனவே கைது செய்துள்ளோம்.

    தன் மீது ஆசிட் வீசப்பட்டதாக நம்ப வைக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேண்டி, தனது கைகளில் கழிப்பறை கிளீனரை ஊற்றியதாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×