search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bypoll results"

    • இடைத்தேர்தல் முடிவு வெளியானவுடன் காங்கிரஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல்.
    • மோதலில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அகர்தலா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுதிப் ராய் பர்மன் வெற்றி பெற்றார்.

    இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த பாஜக, காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. இதில் 19 பேர் காயம் அடைந்தனர்.

    திரிபுராக மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்ஹா செங்கல்லால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பாஜக ஆதரவாளர்களால் கத்தியால் குத்தப்பட்டதாகவும், அம்மாநில காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளர் ஆசிஷ் குமார் சாஹா தெரிவித்துள்ளார்.

    மோதலில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. மோதலுக்குப் பிறகு காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலில் பாஜக  ஆதரவாளர்கள் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக திரிபுரா தகவல் மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், திரிபுராவில் காங்கிரசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது பாஜக குண்டர்கள் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். மக்கள் எங்களுடன் உள்ளனர். இந்த தாக்குதலை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தது வெட்கக்கேடு. அந்த குண்டர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். இவ்வாறு தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இடைத்தேர்தல்களில் பெற்ற தோல்வி, பாஜகவின் அழிவு ஆரம்பமாகி விட்டதை உணர்த்துவதாக உள்ளது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #CMMamataBanerjee #BypollResults
    கொல்கத்தா:

    சமீபத்தில் நடந்த நான்கு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் மற்றும் 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக கணிசமான தொகுதிகளை இழந்துள்ளது.

    இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    இடைத்தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சிகளுக்கும் தக்க பாடத்தை கற்றுத் தந்துள்ளது. இதில் மாநில கட்சிகள் தான் அதிகம் வெற்றி பெற்றுள்ளன. எனவே மாநில கட்சிகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். அதற்கான வேலைகளை தொடங்க வேண்டும்.

    ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், மேகாலயாவில் காங்கிரஸ், மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் உபியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.

    இதேபோல், பெங்காலில் மஹேஷ்தலா திரிணாமுல், பாஜக மற்றும் சிபிஐ எம் ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது.

    இதில் பாஜக, சிபிஐ எம் பெற்ற வாக்குகளை விட அதிகளவில் வாக்களித்து திரிணாமுல் கட்சியை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றிகள். இது மக்களின் வெற்றி. கடந்த முறை நடந்த தேர்தலில் 12000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். ஆனால், இப்போது 62000 வாக்குகள் வித்தியாசத்தி வெற்றி கிடைத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

    எனவே, மாநில கட்சிகள் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதுதான் வெற்றிக்கான பார்முலா. இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி, அது மரணத்தின் விளிம்பில் இருப்பதையே காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
    #CMMamataBanerjee #BypollResults
    எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி என்பது, நீண்ட தூரம் தாண்டுவதற்கு இரண்டு அடி பின்னால் செல்வதற்கு நிகரானது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #RajnathSingh #BypollResults
    போபால்:

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மத்தியப்பிரதேசம் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அங்கு போலீசாருக்கான பயிற்சி மையம் திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டார்.



    அங்கு பாஜக ஆட்சியின் நான்கு ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசினார். அப்போது, இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு ராஜ்நாத் சிங் சமாளிப்பாக பதிலளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜக பெற்ற தோல்வி என்பது, நீண்ட தொலைவை தாண்டுவதற்கு ஒருவர் இரண்டடி பின்னால் செல்வது போலாகும் என குறிப்பிட்டுள்ளார். #RajnathSingh #BypollResults
    நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #BypollResults #BypollCongressWin
    புதுடெல்லி:

    உறுப்பினர்கள் மறைவு, பதவி விலகல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் காலியான 11 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

    இதில், உத்தர பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர், பந்தாரா மற்றும் நாகாலாந்து ஆகிய மக்களவைத் தொகுதியின் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

    கைரானா தொகுதியில் பா.ஜ.க. எம்பி. ஹூக்கும் சிங் மறைந்ததையடுத்து நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் அவரது மகள் மிரிங்கா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தபசும் ஹசன் போட்டியிட்டார். இவருக்கு காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சிகள் ஆதரவு அளித்தன.

    வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்கப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக, 73 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதேபோல் உ.பி.யின் நூர்பூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. லோகேந்திர சிங் சாலை விபத்தில் இறந்ததால் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தொகுதியில் லோகேந்திர சிங்கின் மனைவி அவானி சிங் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சமாஜ்வாடி கட்சி சார்பில் நீமுல் ஹசன் போட்டியிட்டார்.



    இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், மகாராஷ்டிர மாநிலம் பலாஸ் கதேகான் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்வஜீத் பதாங்ரோவ் கதம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. #BypollResults #BypollCongressWin

    ×