search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karur Collector"

    • 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியையொட்டி கரூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் போட்டியை தொடங்கி வைத்து, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத்துடன் செஸ் விளையாடினார்

    கரூர்:

    மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியையொட்டி கரூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு கட்டமாக அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் போட்டியை தொடங்கி வைத்து, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத்துடன் செஸ் விளையாடினார். மேலும், அலுவலர்கள் போட்டியில் பங்கேற்று விளையாடுவதை பார்வையிட்டார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர்கள் ம.லியாகத், கவிதா (நிலம் எடுப்பு), சமூக பாதுகாப்பு திட்ட தனித்துனை ஆட்சியர் சைபுதின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, கரூர் கோட்டைமேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரில் வரையப்பட்டுள்ள செஸ் போட்டி விழிப்புணர்வு மற்றும் கரூர் அமராவதி புதிய பால த்தின் தென்கிழக்கு பகுதியில் வரையப்பட்டுள்ள செஸ் பலகை போன்ற கருப்பு, வெள்ளை கட் டங்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேர்வில், கலெக்டர் ஆக விரும்புவதாக பதில் எழுதிய பள்ளி மாணவியை நேரில் அழைத்து வாழ்த்திய கரூர் கலெக்டர் அன்பழகன், அந்த மாணவியை தனது இருக்கையில் அமரவைத்து ஊக்கப்படுத்தினார்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட ஆண்டுத்தேர்வில், ஆங்கில பாடத்திற்கான தேர்வில் “நீங்கள் எதிர்காலத்தில் யாராக ஆசைப்படுகிறீர்கள்? உங்களின் முன்மாதிரி மனிதர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்விக்கு பதில் அளித்த 6-ம் வகுப்பு மாணவி மனோபிரியா, “எதிர்காலத்தில் நான் மாவட்ட கலெக்டராக விரும்புகிறேன். எனது முன்மாதிரி மனிதர் எங்களது மாவட்ட கலெக்டர் தான்” என்று விடை எழுதியிருக்கிறார். விடைத்தாளை திருத்தும்போது, மாணவி அளித்திருந்த அந்த பதில் ஆசிரியரை பெருமிதம் கொள்ள செய்யும் வகையில் இருந்தது.

    மேலும் இந்த தகவலை பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பூபதி, மாவட்ட கலெக்டர் அன்பழகனின் எண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’ வாயிலாக தெரிவித்துள்ளார். இதனைப்பார்த்த மாவட்ட கலெக்டர், அந்த மாணவியை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வாருங்கள், என்றார்.

    இதையடுத்து ஆசிரியர் பூபதி, மாணவி மனோபிரியா மற்றும் விளையாட்டு, கலை, இலக்கிய போட்டிகளில் சிறந்து விளங்கி பதக்கம் பெற்ற அப்பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து வந்து மாவட்ட கலெக்டரிடம் அறிமுகப்படுத்தினார்.

    மாவட்ட கலெக்டராக விரும்பிய மாணவியை கலெக்டர் அன்பழகன் அழைத்துப் பாராட்டி, தேர்வில் அந்த மாணவி எழுதிய விடைத்தாளையும் பார்த்தார். பின்னர் அவர், யாரும் எதிர்பாராத வகையில், தான் அமர்ந்திருந்த இருக்கையில் அந்த மாணவியை அமரவைத்து, “நன்கு படித்து எதிர்காலத்தில் நீங்கள் நினைத்ததைப்போல் ஒரு மாவட்ட கலெக்டராக உருவாகி இதுபோன்ற இருக்கையில் அமர்ந்து ஏழை, எளிய மக்களுக்கும் நமது நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

    பின்னர் மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு அவர்களுக்கு புரியும் வகையில் எளிய நடையில் பதிலளித்தார். அதனைத்தொடர்ந்து வருகை தந்த அனைவருக்கும் இனிப்புகளை மாவட்ட கலெக்டர் வழங்கி வாழ்த்தினார்.
    கரைவேட்டி கட்டாத அதிமுக செயலாளர் போல் கலெக்டர் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மீண்டும் புகார் கூறியுள்ளார். #congressjothimani #karurcollector

    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதையொட்டி அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கரூர் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறித்து வேட்பாளர்கள், அவர்களது முகவர்களுடனான கருத்து கேட்பு கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் முடிந்ததும், கூடு தல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் மற்றும் க லெக்டர் அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உள்ளிட்டோர் கரூர் தளவாபாளையத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கார்களில் சென்றனர்.

    அப்போது மையத்தின் வெளிப்புறத்திலேயே கார்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் நடந்தே உள்ளே சென்றனர். பின்னர் வாக்கு எண்ணும் அறைக்குள் யாரும் நுழைந்து விடாதபடி அமைக்கப்பட்டுள்ள கம்பி வலை மற்றும் துணை ராணுவம் மற்றும் போலீசாரின் சுழற்சி முறை பாதுகாப்பு பணி, அனைத்து நடவடிக்கைகளும் சி.சி..டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பு உள்ளிட்டவற்றை நீண்ட நேரமாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் அறிவு றுத்தலின் பேரில் பாதுகாப் பினை மேலும் பலப்படுத்தக் கூடிய நடவடிக்கை, எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்பட வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் உடன் இருந்தனர்.

    அதிகாரி ஆய்வை தொடர்ந்து ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி (கலெக்டர்) மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட தேர்தல் அதிகாரி தொலைபேசியில் என்னிடம் தேர்தலை நான் நிறுத்துவேன் என கூறும் அளவுக்கு மோசமான நிலை இருந்தது. மாவட்ட அதிகாரியே இப்படி இருக்கும் போது அவருக்கு கீழே உள்ள அதிகாரிகள் பாதுகாப்பு குறைபாடுடன் இருப்பது ஆச்சரியம் இல்லை. வாக்கு எண்ணிக்கையை இவர்கள் தலைமையில் நடத்தக்கூடாது. வாக்கு எண்ணிக்கையை இந்த அதிகாரிகள் நடத்தினால் நியாயமாக இருக்காது.

    கலெக்டர் எங்கள் மீது கொடுத்த பொய் புகாரில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தோம். விசாரணையில் கலெக்டர் அளித்த புகாருக்கு ஆதாரமாக சிசி டிவி. புட்டேஜை அவர் காட்ட வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    விரைவில் கலெக்டர் கூறியது மிகப்பொய் குற்றச்சாட்டு என்பதும், தேர்தல் அதிகாரி வழக்கத்தில் இல்லாத அளவில் ஒரு கலெக்டர் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து, வேட்பாளர் மீதும், முகவர் மீதும் பொய் புகார் அளித்துள்ளார். எவ்வளவு தூரம் அவர் ஆளும் கட்சியின் ஊதுகுழலாக கரை வேட்டி கட்டாத மாவட்ட செயலாளராக செயல்பட்டிருக்கிறார் என்பது கோர்ட்டில் நிரூபிக்கப்படும்.

    தேர்தல் கமி‌ஷன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. புகார் மீது உடனே அதிகாரியை அனுப்பி விசாரணை நடத்தி யிருக்கின்றனர்.

    கலெக்டரும், எஸ்.பி.யும் ஒரு தலைப்பட்சமாக நடந்து வருவதால் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் பி.எஸ்.எப். படை வீரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். கலெக்டரை மாற்றி விட்டு நியாயமான நேர்மையான ஒரு அதிகாரியை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்தி வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம் என்றார். #congressjothimani #karurcollector

    கரூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து ஆணையம் தான் முடிவு எடுக்கும் என்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் தெரிவித்தார். #KarurPolls #CollectorAnbazhagan
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிந்தது. இதற்கிடையே அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒரே இடத்தில் பிரசாரத்தை நிறைவு செய்வதில் போட்டி ஏற்பட்டு பெரும் வன்முறை வெடித்தது.

    இதில் போலீசார் மற்றும் பொதுமக்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி கூறுகையில், கரூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய சதி நடப்பதாக தெரிவித்தார்.

    மேலும் கரூர் மாவட்ட கலெக்டர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் கூறி டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் வக்கீல் மூலம் புகார் மனு அளித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக கரூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் கூறுகையில், கரூர் பாராளுமன்ற தொகுதி நிலவரம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்தேன். கரூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து ஆணையம் தான் முடிவு எடுக்கும்.

    காய்ந்த மரம் தான் கல்லடி படும், நேர்மையாக இருப்பவர்கள் மீது புகார் கூறுவது இயல்புதான்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarurPolls #CollectorAnbazhagan
    ஒரே இடத்தில் இறுதி கட்ட பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக தி.மு.க.வினர் வீடு புகுந்து தன்னை மிரட்டியதாக கரூர் மாவட்ட கலெக்டர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KarurCollector #DMK
    கரூர்:

    கரூரில் இன்று மாலை பாராளுமன்ற தேர்தல் இறுதி கட்ட பிரசாரம் நடக்கிறது. மனோகரா கார்னரில் இறுதிக்கட்ட பிரசாரத்தினை நிறைவு செய்வதில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி, மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் தங்களுக்கு முதலில் வழங்கிய இறுதி கட்ட பிரசார நேர அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி கரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி தேர்தல் அதிகாரி சரவணமூர்த்தியை சந்தித்து முறையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் இது தொடர்பாக தேர்தல் பார்வையாளர் விசாரணை நடத்தி காங்கிரஸ் வேட்பாளருக்கு அனுமதி வழங்கினார்.

    இந்த நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட கட்சியினர் திரண்டு சென்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகனிடம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பிரசார நேரத்தில் பிரசாரத்தை நடத்த அனுமதிக்குமாறு மனு கொடுத்தனர்.

    இந்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் இன்று கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    கடந்த சில தினங்களாக அதிகாரிகளுக்கு அதிகமாக அச்சுறுத்தல் வந்து கொண்டிருக்கிறது. நேற்று நள்ளிரவில் 12.45 மணிக்கு கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உத்தரவின்பேரில் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் அறிவுரையின் பேரில் வக்கீல் செந்தில் என்பவர் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருடன் எனது வீட்டிற்கு வந்தார்.

    மேலும் தகராறு செய்து வீட்டிற்குள் நுழைய முற்பட்டார்கள். நான் உடனே செந்தில் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். இறுதி கட்ட பிரசாரம் தொடர்பாக இன்று காலை அலுவலகத்திற்கு வந்து மனு கொடுங்கள் என்றேன். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் 20 முதல் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து எனது உயிருக்கும், எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே நுழைய முயன்றனர்.

    நான் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் புகார் செய்தேன். மாவட்ட போலீஸ் எஸ்.பி. சம்பவ இடத்திற்கு வந்து எங்களை பாதுகாத்தார். நடுநிலையோடு பணியாற்றும் எங்களை தடுப்பது எந்த விதத்தில் நியாயம். செந்தில் பாலாஜி, ஜோதிமணி மற்றும் தி.மு.க.வினர் நேற்று முன்தினம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை சுமார் 6 மணி நேரம் சிறைப்பிடித்து வைத்திருந்தனர். அவரும் மனிதர் தானே.

    சிறைப்பிடித்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் தர்மசங்கடமான நிலையில் பிரசாரத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார். நேற்று இரவு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து இறுதிகட்ட பிரசாரத்திற்கு அனுமதி கேட்டிருந்தார். அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தேன்.

    இந்த அனுமதி விவகாரம் மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவரான எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு. எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarurCollector #DMK
    கரூர் மாவட்டம் அருகே நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி குமரேசன், ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி, மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் மீனாட்சி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அரவக்குறிச்சி தாலுகா வல்லா குளத்துப்பாளையம், வெள்ளியம்பாளையம், வளையபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்து மனுவில், எங்கள் பகுதி வழியாக ஓடும் நொய்யல் ஆறு மற்றும் அதன் கிளைவாய்க்கால்களில் திருப்பூரில் இருந்து  சாயக்கழிவு நீர் சேர்ந்து வருவதால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது.

    இந்த நிலையில் அத்திப்பாளையம் அருகேயுள்ள பகுதியில் சாலை பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தார் கலவை செய்யும் ஆலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்தால் காற்று மாசுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆலை அமைப்பதற்கு அனுமதியை வழங்க கூடாது  என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    கரூர் அருகே ஜெகதாபி ஊராட்சி மோளகவுண்டனூரை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இந்த நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மின்மோட்டார் பழுது ஏற்பட்டிருப்பதாலும், ஊரில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாத சூழல் உள்ளதாலும் கடந்த சில மாதங்களாக குடிநீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றோம். எனவே இதனை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதேபோல தமிழக மக்கள் முன்னேற்ற கழக கரூர் மாவட்ட தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கொடுத்த மனுவில், குடும்பர், பண்ணாடி, தேவேந்திரகுலத்தார் உள்ளிட்ட 7 பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும். எனவே அதனை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர். கரூர் நகரில் சமூக நல்லிணக்கம் ஏற்படும் வகையில் அரசு சார்பில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என ஆதிதமிழர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முல்லையரசு உள்ளிட்டோர் மனு கொடுத்தனர்.  
    கடவூர் வாழ்வார் மங்கலம் கிராமமக்கள், மக்கள் பாதை அமைப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், நீர்நிலைகளை  பாதுகாக்கும் பொருட்டு வாழ்வார் மங்கலத்திலுள்ள ஏரியை தூர்வாரிபனை விதைகளை நட்டு வருகிறோம். இந்த நிலையில் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனர். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரவக்குறிச்சி தாலுகா துக்காச்சி புதூர் மக்கள் அளித்த மனுவில், நொய்யல் ஆற்றை ஒட்டி குடியிருந்து வரும் எங்களது வீடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளனர். எனவே எங்களுக்கு குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தினர் கொடுத்த மனுவில், கரூரிலுள்ள 125 ஆண்டு பழமையான சி.எஸ்.ஐ. தேவாலயத்தை சுற்றிலும் சிலர் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகைகளை வைக்கின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். #tamilnews
    கரூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து 48 வார்டுகளை கண்காணிக்க 225 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் பற்றியும், எவ்வாறு அவை பரவுகின்றது என்பது குறித்தும், டெங்கு கொசுக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கரூர் நகராட்சிக்குட்பட்ட பாரதிதாசன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வீடு, வீடாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் ஊரக பகுதிகளுக்கும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும், குறு வட்ட அளவிலும் வார்டு வாரியாகவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கண்காணித்திட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அனைத்து பகுதிகளிலும் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் எவ்வாறு பரவுகின்றது என்பது குறித்தும், டெங்கு வராமல் தடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. கரூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் நிரந்தர பணியாளர்களும், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தினக்கூலி அடிப்படையில் 225 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 50 வீடுகள் வீதம் ஒரு நாளைக்கு 11,250 வீடுகளில் ஆய்வு செய்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறார்கள். இப்பணியாளர்கள் சுழற்சி முறையில் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    டெங்கு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்கள் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குடிநீரை மூடி வைத்து தூய்மையாகப் பயன்படுத்துகிறார்களா? என்று ஆய்வு செய்கின்றனர். நீர்த்தொட்டிகளில் குளோரின் பவுடர் தெளித்தும், மருந்துகள் தெளித்தும் வருகின்றனர்.

    நீரை முறையாக மூடி வைக்காமல் இருந்தாலோ, சுற்றுப்புறங்களில் நீர் தேங்கியிருந்தாலோ அதுகுறித்து போதிய விழிப்புணர்வு வழங்கி வருகிறார்கள். ஏடிஎஸ் கொசு குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் பொது மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது. மேலும் அப்பகுதியில் வழங்கப்படும் குடிநீரில் உள்ள குளோரிநேசன் அளவு பரிசோதிக்கப்படுகிறது.

    பொதுமக்களும் தங்களால் இயன்ற அளவு முழு ஒத்துழைப்பு கொடுத்து தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாகப் பராமரிக்க முன்வர வேண்டும். வீடு கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருபவர்கள் கான் கீரிட்டுக்காக பயன்படுத்தும் தண்ணீர் 3 நாள்களுக்கு மேல் தேங்கி இருக்காத வகையில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். தங்கள் வீட்டைச்சுற்றி தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உடைந்த மண் பானை உள்ளிட்ட தண்ணீர் தேங்கக் கூடிய பொருட்கள் இருந்தால் உடனயாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். குளிர்சாதனப் பெட்டிக்கு பின்புறம் உள்ள பெட்டியில் தேங்கும் நீரை அவ்வப்போது வெளியேற்ற வேண்டும்.

    வீட்டில் உள்ள நபர்களுக்கோ, குழந்தைகளுக்கோ காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பின் சுய வைத்தியம் மேற்கொள்ளாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று முறையாக மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொண்டு அவரின் அறிவுரைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் நிர்மல்சன், நகர் நல அலுவலர் டாக்டர் ஆனந்தகண்ணன், வட்டாட் சியர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். #KarurCollector
    மனையை வரன்முறை படுத்த தவறினால் குடிநீர், மின்சார இணைப்புகள் வழங்கப்பட மாட்டாது என்று கலெக்டர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கரூர்:

    கரூர் நகராட்சி ஆணையர் அலுவலக வளாகத்தில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

     20.10.2016-க்கு முன் ஏற்படுத்தப்பட்ட மனைகள் அல்லது அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்திக்கொள்ள குறைந்த அவகாசமே உள்ளதால் இந்த முகாமில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மனையின் கிரைய பத்திரம், பட்டா, சிட்டா, வில்லங்க சான்றிதழ், புலப்பட நகல், மனைப்பிரிவு வரைபடம் ஆகியவற்றின் நகல்களும் கரூர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

    வரன்முறைப்படுத்த தவறும் மனைப்பிரிவுகளில் அனுமதியற்ற மனைகளாக அமைவதுடன் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி, மின்சார வசதி போன்ற வசதிகள் வழங்க இயலாது. மேலும், கட்டிட அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதால் மனை உரிமையாளர்கள் வங்கிகளில் கடன் பெற இயலாது.  பத்திரப்பதிவு அலுவலகத்தில் மனையின் கிரையப்பதிவு மேற்கொள்ள இயலாது. எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் மனைகளை வரன்முறைப்படுத்திக்கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு கரூர் நகராட்சி அலுவலகத்தில் நகர அமைப்பு பகுதியினை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.  

    இவ்வாறு அவர் கூறினார். 

    முகாமில், நகராட்சி ஆணையர் அசோக்குமார், தாசில்தார் கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கரூரிலுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டதுடன் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நிலவேம்பு கசாயம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள் மற்றும் தண்ணீர் தேங்கிய இடங்களில் தூவுவதற்கான பிளீச்சிங் பவுடர் போன்றவைகள் தேவையான அளவில் இருப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீர் குளோரினே‌ஷன் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பொதுமக்கள் காய்ச்சி வடிகட்டிய குடிநீரையே பருகவேண்டும்.

    மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். தற்போது 7 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களில் தண்ணீர், மழைநீர், போன்றவைகள் தேங்காத வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து தங்களை பாதுகாத்துக்கொள்வதுடன் மாவட்ட நிர்வாகத்திற்கும் ஒத்துழைக்கவேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு டெங்கு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனின் உத்தரவின் பேரில் வேலாயுதம் பாளையத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குநர் ஆலோசனையின் படி வேலாயுதம் பாளையத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் சக்தியேந்திரன் கலந்துக் கொண்டு மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கு பெற்று பயன் பெறுவது குறித்து திட்ட விளக்க உரையாற்றினர். அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கூறப்பட்டது. 

    நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் சத்தியேந்திரன் தலைமையில் செவிலியர்கள் ஜெயந்தி, பாப்பாத்தி, உதவியாளர்கள் ராஜமாணிக்கம், குமார் கொண்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள். மேலும் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, காய்ச்சல், சளி,வயிற்றுப் போக்கு,தோல் வியாதிகள், ரத்த சோகை, வயிற்று வலி, குடற்புழு நீக்க மாத்திரை கள் வழங்கப்பட்டது. இதில் வேலாயுதம்பாளையம், சுற்றுவட்டார பகுதிகளைசேர்ந்த சுமார் 300-க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்குநில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
    புதிய தொழில் முனைவோர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்று வங்கியாளர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் அன்பழகன் கூறினார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் பொருட்டு தாட்கோ மூலம் வங்கிகளுக்கு பரிந்துரை செய்த நிலுவை விண்ணப்பதாரர்கள் மற்றும் வங்கியாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    வாழ்வில் பின்தங்கிய நிலையிலுள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு தாட்கோ மூலம் பல்வேறு பயிற்சி மற்றும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதில், குறிப்பாக புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்காக தனி நிதி ஒதுக்கீடுகளை வழங்கி அதிகப்படியான மானியங்களுடன் கூடிய வங்கி கடனுதவிகளை வழங்கி வருகிறது.

    அதனடிப்படையில், தையல், ஆயத்த ஆடை தயாரித்தல், உணவகத்தொழில் அரிசி ஆலை, பால்பண்ணை, துறைவாரியாக பண்டக சாலை, சுற்றுலா வாகனம், இரும்புக்கடை, டிஜிட்டல் ஸ்டூடியோ உள்ளிட்ட வருமானம் தரக்கூடிய தொழில்களை மேற்கொள்வதற்கான தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதி சேவை வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

    கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெறப்பட்ட 89 மனுக்கள் மீது நிலுவை தொடர்பான கலந்தாய்வு கூட்டம் விண்ணப்பதாரர்கள் முன்னிலையில் வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அலுவலர்களும் மனுதார்கள் நிலையிலிருந்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு புதிய தொழில் முனைவோர்களை அதிக அளவில் உருவாக்கிட உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவிச்சந்திரன், தாட்கோ திட்ட மேலாளர் எம்.பி.முரளிதரன் மற்றும் அனைத்து வங்கியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×